Jump to content

ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்..வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது.

ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். 

தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது

மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு  டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது.  

எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா?

தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்:

1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு.

2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன.  

இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது?

டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன.

ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன)

கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன.

 "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல்.

எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது.

மேலதிக மூலங்கள்:

https://www.nature.com/articles/d41587-021-00025-3

https://www.nature.com/articles/s41586-021-04232-5

சொற்பட்டியல்:

நோயெதிர்ப்பு - immunity

பிறபொருளெதிரிகள் - antibodies

மாறி வைரஸ் – variant virus

 நிணநீர்க்குழியம் – lymphocyte

 "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell

"ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell

என்பு மச்சை- bone marrow

நிணநீர்க்கணு- lymph node

மண்ணீரல் - spleen

தைமஸ் சுரப்பி- thymus gland

கொலைக் கலம்- Killer T-cell

உதவிக் கலம் – Helper T-cell

 

தொகுப்பு: ஜஸ்ரின்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மிஸ்டர் கொரோனாவுடன் வாழப்பழக வேண்டியதுதான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆக மிஸ்டர் கொரோனாவுடன் வாழப்பழக வேண்டியதுதான் .

Link to comment
Share on other sites

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

கலந்து எடுப்பது தான் மிகவும் நன்று என்கிறார்கள்.
நான் மூன்றும் பைசரே போட்டேன்.

எனது மனைவி மக்கள் முதல் இரண்டும் பைசரையும் மூன்றாவதாக மொடோனாவையும் எடுத்திருக்கிறார்கள்.

1 minute ago, Eppothum Thamizhan said:

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

இலங்கையில் கூடுதலாக முதல் இரண்டும் சினோபாம்(எல்லா வயதினருக்கும்)மூன்றாவதாக பைசரையும் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

விஞ்ஞானத்தை ஜஸ்டின் அண்ணாவிடம் விட்டு விடுகிறேன்( ஏன்னா என்னால ஏலாது🤣). 

அனுபவத்தில், நான் ரெண்டு ஓக்ஸ்போர்ட், ஒரு பைசர். நலமே.

ஊசி அடித்தவரிடம் ஒண்டு வெக்டர் வக்சீன், மற்றது MRNA பிரச்சனை இல்லையே? எண்டு கேட்டேன். பிரச்சனை இல்லை மேலும் mixing vaccines likes this is recommended எண்டு சொன்னார்  (முன்பே வாசித்ததுதான் - எண்டாலும் டொக்டரிட்ட போனால் கேள்வி கேட்க வேண்டும் எண்ட சம்பிரதாயதுக்காக கேட்டது🤣).

 

On 27/12/2021 at 18:30, Justin said:

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்..வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது.

ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். 

தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது

மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு  டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது.  

எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா?

தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்:

1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு.

2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன.  

இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது?

டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன.

ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன)

கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன.

 "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல்.

எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது.

மேலதிக மூலங்கள்:

https://www.nature.com/articles/d41587-021-00025-3

https://www.nature.com/articles/s41586-021-04232-5

சொற்பட்டியல்:

நோயெதிர்ப்பு - immunity

பிறபொருளெதிரிகள் - antibodies

மாறி வைரஸ் – variant virus

 நிணநீர்க்குழியம் – lymphocyte

 "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell

"ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell

என்பு மச்சை- bone marrow

நிணநீர்க்கணு- lymph node

மண்ணீரல் - spleen

தைமஸ் சுரப்பி- thymus gland

கொலைக் கலம்- Killer T-cell

உதவிக் கலம் – Helper T-cell

 

தொகுப்பு: ஜஸ்ரின்.

நன்றி ஜஸ்டீன் அண்ணா.

இதனால்தான் நீங்கள் யாழில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கருத்தாளர்🙏🏾.

ஆ…. அப்புறம் கொவிட்டின் போக்கை கடந்த இரெண்டு வருடமாக முடிந்தளவு விஞ்ஞான ரீதியில் அவதானித்து வந்தவன் என்ற ரீதியில்….ஒமிக்ரோனோடு…நாங்கள் pandemic இன் beginning of the end இல் நிற்கிறோம் என்றே நான் உணர்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 27/12/2021 at 13:30, Justin said:

ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?

தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பைப் பலவீனப் படுத்தும் எச்..வி வைரசின் தொற்றுடையோரின் விகிதாசாரமும் தென்னாபிரிக்காவில் அதிகம் - இந்த இரு காரணிகளும் ஒமிக்ரோன் என்ற ஏராளமான விகாரங்கள் கொண்ட ஒரு வைரஸ் தடையின்றி உருவாகப் பங்களித்திருக்கலாம் என்று ஒரு சந்தேகம் பரவலாக இருக்கிறது.

ஒமிக்ரோன் உருவான கதையை விட்டு விடலாம். இனி என்ன செய்யலாம்? வைரஸ் எங்களைத் தீர்த்து விடுமா அல்லது வைரசை நாம் கட்டுப் படுத்தலாமா? எதிர்காலம் (2022) எப்படியிருக்கும்? இவை மட்டும் பற்றிப் பார்க்கலாம். 

தடுப்பூசியின் இலக்கு மாறியிருக்கிறது

மேற்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் நான்கு தடுப்பூசிகளின் பலம் ஒமிக்ரோனுக்கெதிராகக் குறைந்திருக்கிறது. வெறுமனே "குறைந்திருக்கிறது" என்பதை சற்று விரிவாகப் பார்ப்பது முக்கியமானது: ஒமிக்ரோன் தொற்றை தற்போதுள்ள தடுப்பூசிகளின் இரண்டு  டோஸ்கள் தடுப்பது குறைந்து விட்டது. மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டோரிலும் தொற்றுத் தடுப்பு சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், மிக முக்கியமானது, மூன்றாவாது டோஸ் எடுத்துக் கொண்டோரில் ஒமிக்ரோனால் தீவிர நோய் ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப் படுகிறது. எனவே, தான் தடுப்பூசியின் நோக்கம் தற்போது தொற்றை முற்றாகத் தடுத்தல் என்பதில் இருந்து மாறி, தொற்றினால் தீவிர நோய் ஏற்படாமல் தடுத்தல் என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால், மருத்துமனைகள் மீதான சுமையும், மரணங்களும் குறைக்கப் படுகின்றன. எனவே, தடுப்பூசியின் மூன்றாம் டோஸ் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ ரீதியான காரணம் இருக்கிறது.  

எனவே ஒமிக்ரோன் தொற்றலை வேறு வழிகளால் தடுப்பது தேவையற்றதா?

தற்போது பல நாடுகளில் ஒமிக்ரோன் வந்த பின்னர் உள்ளக நிகழ்வுகள், கூட்டம் கூடுதல், முகக் கவசம் என்பன பற்றிய விதிகள் இறுக்கப் பட்டிருக்கின்றன. வேகமாகப் பரவும் ஒமிக்ரோன், தீவிர நோயை உருவாக்குவதாகத் தெரியவில்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இரண்டு காரணங்கள்:

1. தீவிர நோய்க்குள்ளாகும் ஆட்களின் விகிதாசாரம் குறைவாக இருந்தாலும், மிக அதிக நோயாளிகளை ஒமிக்ரோன் உருவாக்குகிறது - அவர்களுள் தீவிர நோய்க்குள்ளாகி மருத்துவமனை வரை செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சாதாரணமான தொகுதியெண் , பகுதியெண் கணக்கு.

2. வழமையான காரணம் - வைரசைப் பல்கிப் பெருக அனுமதித்தால், ஒமிக்ரோன் போல மேலும் மாறி வைரசுகள் உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

எனவே, சாதாரண வாழ்க்கையைப் பாதிக்காதவாறு, முகக் கவசம், கூட்டம் கூடுதல் குறைத்தல் போன்ற தொற்றல் கட்டுப் பாடுகளை தடுப்பூசி முற்றாக எடுத்துக் கொண்டோரும் பின்பற்றுவதற்கு காரணங்களாக இவை இருக்கின்றன.  

இனி என்ன செய்யலாம்? விஞ்ஞானம் என்ன தீர்வை வைத்திருக்கிறது?

டெல்ரா மாறி உருவாகிப் பரவிய போதே கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பு பற்றிய ஆய்வுகளில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் "பிறபொருளெதிரிகள்" என அழைக்கப் படும் அன்ரிபொடிகளின் பங்கு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். எங்கள் உடலின் என்பு மச்சைகளில் உருவாகி, நிணநீர்க்கணுக்களிலும், மண்ணீரலிலும் வளரும் "பி" வகை நிணநீர்க்குழியங்கள் கோவிட் வைரசுக்கெதிரான அன்ரிபொடியை உருவாக்குகின்றன.

ஆனால், கோவிட்டுக்கு எதிராக மட்டுமன்றி பல வைரசுகளுக்கெதிராக வேறுவழிகளில் பாதுகாப்பை வழங்கும் இன்னொரு வகை நிணநீர்க்குழியத்தின் மீது கடந்த வருடம் டெல்ரா அலையோடு கவனம் திரும்பியது. என்பு மச்சையில் பிறந்து, தைமஸ் சுரப்பியில் வளரும் நிணநீர்க்குழியங்களை "ரி" வகை நிணநீர்க்குழியங்கள் என்போம். இந்த "ரி" வகை நிணநீர்க்குழியங்களில் ஒரு பகுதி, நேரடியாகவே வைரசுகள் தொற்றிய உடற்கலங்களை தாக்கியழிக்கும் (எனவே கொலைக் குழியங்கள் -killer T-cells எனப் படுகின்றன). அது மட்டுமல்லாமல், இந்த "ரி' வகை நிணநீர்க்குழியங்களில் இன்னொரு வகை, அன்ரிபொடிகளை உருவாக்கும் "பி" வகை நிணநீர்க்குழியங்களை ஊக்குவிக்கும் தொழிலைச் செய்கின்றன (இதனால் "உதவிக் குழியங்கள்" -helper T-cells என அழைக்கப் படுகின்றன)

கோவிட்டுக்கெதிரான நோயெதிர்ப்பை தடுப்பூசி மூலமோ, இயற்கையான தொற்றல் மூலமோ எமது உடல் பெறும் போது, இந்த "ரி" வகைக் கலங்களும் கோவிட் வைரஸ் குறித்த அடையாளத்தை எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் குறித்து வைத்துக் கொள்கின்றன. பின்னர், மீள கோவிட் வைரசை உடல் எதிர் கொண்டால், இந்த "ரி" வகைக் கலங்களும் நேரடியாக தொற்றுக்குள்ளான உடற்கலங்களைக் கொல்வதன் மூலமோ, "பி" வகைக் கலங்களைத் தூண்டுவதன் மூலமோ உடலின் நோயெதிர்ப்பை தட்டியெழுப்பும் வேலையைச் செய்கின்றன.

 "ரி" வகைக் கலங்களின் வைரசுகளுக்கெதிரான பணி பல காலமாகத் தெரிந்த விடயம். ஆனால், விஞ்ஞானிகள் தற்போது நவீன நுட்பங்கள் மூலம் "ரி" வகைக் கலங்களின் பணியை நீண்டகால கோவிட் தடுப்பிற்குப் பயன்படுத்த முயல்வது தான் புதிய விடயம். பல்வேறு முயற்சிகள் நடைபெற்றாலும்,"ரி" வகைக் கலங்களை, "பி" வகைக் கலங்களோடு சேர்த்துத் தூண்டும் வகையிலான தடுப்பூசிகள் பரீட்சிக்கப் படுகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய நோக்கம்: கோவிட் தொற்றை முற்றாகத் தடுக்காமல், தடுப்பூசி மூலமும், தடுக்கவியலாத தொற்றுக்கள் மூலமும் எங்கள் உடலின் நோயெதிர்ப்பை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க செய்தல்.

எனவே, எதிர்காலம் இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்: கோவிட் எங்களோடு இருக்கப் போகிறது, ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி பேணல் என்பன அவசியமில்லாத தீவிரமற்ற நோய் தரும் ஒரு வைரசாக இருக்கப் போகிறது.

மேலதிக மூலங்கள்:

https://www.nature.com/articles/d41587-021-00025-3

https://www.nature.com/articles/s41586-021-04232-5

சொற்பட்டியல்:

நோயெதிர்ப்பு - immunity

பிறபொருளெதிரிகள் - antibodies

மாறி வைரஸ் – variant virus

 நிணநீர்க்குழியம் – lymphocyte

 "பி" வகை நிணநீர்க்குழியம்/ "பி" வகைக் கலம்: B-lymphocyte/ B- cell

"ரி" வகை நிணநீர்க்குழியம்/"ரி" வகைக் கலம்: T-lymphocyte/T-cell

என்பு மச்சை- bone marrow

நிணநீர்க்கணு- lymph node

மண்ணீரல் - spleen

தைமஸ் சுரப்பி- thymus gland

கொலைக் கலம்- Killer T-cell

உதவிக் கலம் – Helper T-cell

 

தொகுப்பு: ஜஸ்ரின்.

மிக்க நன்றி ஐயனே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

 

30 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்க வேற நிழலி, அவனவன் 2 சினோபாம் ஊசியை போட்டுட்டே பூஸ்டரா பைசர் ஊசி போடுறாங்கள். பயப்படாதைங்கோ!!

 

30 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் கூடுதலாக முதல் இரண்டும் சினோபாம்(எல்லா வயதினருக்கும்)மூன்றாவதாக பைசரையும் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு (20 வயதுக்குட்பட்ட) பைசர் தான் முதலாவது தடுப்பூசியாக செலுத்தப்பட்டது.
ஏனையோருக்கு முதல் இரண்டும் சினோபாம் இப்ப மூன்றாவது பைசர் பூஸ்ரர் தடுப்பூசி செலுத்துகிறார்கள்.
எனது சகோதரர் இன்று பைசர் பூஸ்ரர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
கனடாவில் இருந்து வந்த அத்தான் இங்கு எல்லோரும் முகக்கவசம் அணிந்து வெளியே நடமாடுவதை ஆச்சரியமாக கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?
கனடாவில் இருந்து வந்த அத்தான் இங்கு எல்லோரும் முகக்கவசம் அணிந்து வெளியே நடமாடுவதை ஆச்சரியமாக கூறினார்.

தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்

கனடாவின்  நிலை  அவ்வாறல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் குடும்பம் முதல் இரண்டு பைசர் மூன்றாவது மொடோனா போட்டுக்கொண்டிருக்கின்றோம்.......நலமாக இருக்கின்றோம்........!  

விளக்கங்களுக்கு நன்றி ஜஸ்டின்.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்????

கூர்ப்பின் படி ஒரு உயிரி தன்னை தொடர்ந்தும் நிலை நிறுத்த கடுமையாக முயலும். கொவிட்டின் வாழிடங்களாகிய எம்மை அழித்துவிட்டு கொவிட்டும் அழிவதிலும் பார்க்க நாம் வாழ அதில் தான் வாழும் நிலையே கொவிட்டின் நீண்ட கால இருப்புக்கு நல்லது.

தென்னாபிரிக்காவின் நுண்ணுயிராளர்கள், கணிதவியல் மாதிரி வல்லுனர்கள், தொற்று நோய் நிபுணர்கள் சிலரை சமூகவலையில் பிந்தொடர்கிறேன். அவர்களின் கருத்துப்படி, வேகமாக பரவினாலும், மூன்று டோசின் பின்னும் தொற்று வந்தாலும் ஆஸ்பத்திரிக்கு போகும் அளவு குறைவாகவே இருக்கிறதாம்.  யூகேயின் பூர்வாங்க ஆராய்ச்சிகள் காட்டுவதும் இதையே.

தனிபட்டு மிக மோசமான காலத்தை நாம் கடந்து விட்டோம் என்றே என் மனதுக்கு படுகிறது.

வரும் காலம் - வீரியம் குறைந்த ஆனால் இப்போதும் ஆபத்தான வைரசுடன் தகுந்த பாதுகாப்பு எடுத்தபடி வாழும் காலமாக இருக்கும். இது என் எதிர்வுகூறலும், எதிர்பார்ப்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்

கனடாவின்  நிலை  அவ்வாறல்ல?

அண்ணை இங்கு என்பதை இலங்கை என புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

அண்ணை இங்கு என்பதை இலங்கை என புரிந்து கொள்ளுங்கள்.

 

அதைத்தான்  குறிப்பிட்டேன் சகோ

கனடாவில் நிலமை  மோசம்

அவர்  பிழையான நிலமையை விதைக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேற்று மூன்று ஊசிகளையும் பெற்றுக் கொண்ட எனது குடும்ப நண்பரின் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வீட்டுவாசலில் வைத்துவிட்டு வந்தேன்.

ஊசிகள் போட்டுக் கொண்டதாலோ என்னவோ லேசான காய்ச்சல் இருமல் தான்.

ஆனாலும் எல்லோருக்கும் பொசிரிவ் என்று காட்டுகிறது.

ஒமிக்ரோன் சேதாரம் இல்லாதுவிடினும் அதிவேகமாக பரவுகிறது.

மூன்று எடுத்தவர்களுக்கு பொசிட்டிவ் காட்டும் அநேகமா நாலா நாளே சுகமாகிவிடுகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு ஊசிகளும் போட்டுக்கொண்ட என மகளுக்குத் தொற்று இருப்பது வீட்டில் செய்த டெஸ்ட் மூலம் கண்டுபிடித்தோம். அவரை பத்து நாட்கள் மற்றவர்களுடன் பழகவிடாது தனியாகவே விட்டோம். ஒரே ஒருநாள் தலை வலியும் தடிமனும் அதன்பின் ஒன்றுமே இல்லை.

எமக்கும் தொற்றவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தனிபட்டு மிக மோசமான காலத்தை நாம் கடந்து விட்டோம் என்றே என் மனதுக்கு படுகிறது.

அப்படியானால் நல்லதே ஆனால் இப்போது தானே  கொரோனா தொற்றிவிட்டதாக பேச்சுகள் அதிகமாக உள்ளது.

4 hours ago, விசுகு said:

இங்கே 2  பைசர் ஊசியையும் 3வது ஊசியும்  போட்டுக்கொண்ட எனது குடும்பம் ஒன்றில் தொற்று  ஏற்பட்ட பலரை தாக்கிக்கொண்டிருக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியானால் நல்லதே ஆனால் இப்போது தானே  கொரோனா தொற்றிவிட்டதாக பேச்சுகள் அதிகமாக உள்ளது.

 

இன்று யூகேயில் வரலாற்றில் இல்லாத அளவு தொற்று. கடந்த ஒரு கிழமையாகவே 90,000 நாளொன்றுக்கு, ஆயினும் ஆஸ்பத்திரி அனுமதிகள், முந்தைய அலைகளோடு ஒப்பிட்டால் அதிகமில்லை.

தென்னாபிரிக்காவின் ஜோனஸ்பேர்க் உள்ள மாநிலத்தில்தான் இது நவம்பரில் ஆரம்பித்தது, அங்கே தொற்றுகள் மிக அதிகமாக கூடி, ஒரு peak ஐ அடைந்து பின் சடுதியாக குறைந்ததாக வரைபுகள் காட்டுகிறன. முந்தைய டெல்டா அலையோடு ஒப்பிட்டால் ஆஸ்பத்திரி அனுமதியும் 1/3 வீதம் என்கிறார்கள்.

அதே போல் தென்னாபிரிக்காவில் டெல்டா பாதிப்பு அதிகம், ஊசி அடித்தோர் வீதமும் வேறு ஆகவே அதை வைத்து மட்டும் நேரடியாக சொல்ல முடியாது.

யூகேயின் கிறிஸ் விட்டி சொன்னது போல்,  பாதிப்பு குறைந்த விகாரி என்றாலும் ஒமிகிரோன் தொற்றும் வீதம் அதிகம் என்பதால், மிகபெரும்பாலானோர் இந்த அலையில் ஆஸ்பத்திரி போக வாய்ப்பு அதிகம். 

ஆனால் யூகேயில் வரும் பூர்வாங்க தரவுகள் நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

எது எப்படியோ நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை. ஆகவே தொடர்ந்தும் சமூக இடைவெளி பேணல் அவசியமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் பற்றிய புரிதல் இன்னும் உலகத்தாரிடம் சரியாகப்போய் சேரவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

வக்சீன் எந்த வைரஸிற்கும் முடிவாகாது. அது.. வைரஸ் கடுந்தொற்றை குறைக்கலாமே தவிர.  

The combination of Delta and Omicron variants is driving a dangerous tsunami of Covid-19 cases, the World Health Organization (WHO) chief has said.

https://www.bbc.co.uk/news/world-59822209

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்கிரோன் வந்தால் எப்படி உணரலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

@Justin

இந்த திரிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி.

இங்கு மூன்றாவது தடுப்பூசி - Booster shot-கொடுக்கின்றனர். இன்று மூன்றாவது தடுப்பூசி போட நேரம் பதிந்துள்ளேன். நான் கடந்த இரு தடவைகளும் Pfizer தடுப்பூசி தான் போட்டுக் கொண்டேன். ஆனால் இப்ப Moderna தான் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கு என்கின்றனர். இவ்வாறு vaccine களை கலப்பது உடலுக்கு சரியாக இருக்குமா? இரு தடவைகள் Pfizer போட்டு விட்டு, மூன்றாவதாக Moderna போடுவதால் பிரச்சனை  வரக்கூடிய விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் உள்ளதா? இரண்டும் mRNA  வகையைச் சார்ந்தெது என்பதால் இரண்டும் ஒன்றா?

நிழலி, ஆம். வெவ்வேறு தடுப்பூசி வகைகளைக் கலப்பதில் ஆபத்தில்லை. அது மட்டுமன்றி கலக்கும் போது உருவாகும் நோயெதிர்ப்பின் வலுவும் சிறிது அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. 

வக்சீன்களைக் கலப்பது பற்றிய தமிழினியின் கேள்விக்கு, நெடுக்கரின் திரியில் நான் அளித்த பதில் கீழே: 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.