Jump to content

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!


Recommended Posts

 

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!
இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது!
இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.
இனிய வாழ்த்துகள் !
 
May be an image of 1 person, standing and indoor
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

“மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கு” என்றால் என்ன அண்ணே… 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

“மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கு” என்றால் என்ன அண்ணே… 😂🤣

சிங்களச் சினிமாக்களின் கட்டவுட்டை பார்த்தாலே.. இதுக்கு விளக்கம் விளங்கிடும். 🤣

Link to comment
Share on other sites

உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது; மலையகத் தமிழ்ப்பெண் நிரஞ்சனிக்கு குவியும் பாராட்டு!

நிரஞ்சனி சண்முகராஜா
News

நிரஞ்சனி சண்முகராஜா ( Photo: Facebook/ Niranjani Shanmugaraja )

  • நடிகை என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறி வருகிறார் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் மழுப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்கிறார்.
ADVERTISEMENT

நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு, இலங்கை திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழ் நடிகையான நிரஞ்சனி சண்முகராஜா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

இலங்கை மலையகத்தில் பிறந்த நிரஞ்சனி சண்முகராஜா, இலங்கை திரைப்பட உலகில் முன்னணி கலைஞராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய வம்சாவளியான நிரஞ்சனி, 1989-ல் பிறந்தவர். சிறு வயது முதல் கலைத்துறை மீது ஆர்வம் அதிகம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் இனிமையாகப் பேசத் தெரிந்தவர்.

கண்டியில் கல்லூரிப் படிப்பை முடித்து 2009-ல் தனியார் வானொலியில் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து வானொலி நாடகத்தில் பின்னணி குரல் கொடுப்பவராகவும், நடிப்பவராகவும் மாறி பின்பு சிங்கள - தமிழ் மேடை நாடகங்களில் தன் முத்திரையைப் பதித்தார் நிரஞ்சனி.

விருது அறிவிப்பு
 
விருது அறிவிப்பு

திரைப்படங்களில் நடிக்க குடும்பத்தினர் முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், நிரஞ்சனியுடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் அவர்களைப் பின்னர் சம்மதிக்க வைத்தது.

 

நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்கு 2011-ல் விருது பெற்றார் நிரஞ்சனி. அதிலிருந்து அவருடைய கலைத்துறை கிராஃப் மேல் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவர தமிழ், சிங்கள படங்களில் நடித்தார்.

`இனி அவன்', `கோமாளி கிங்க்ஸ்' போன்ற திரைப்படங்களில் நடித்த நிரஞ்சனி, இலங்கை திரைப்படத்துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட `கிரிவெசிபுர' என்ற வரலாற்றுப் படத்தில் நாயகியாக நடித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ் - சிங்கள மொழியில் வெளியான `சுனாமி' திரைப்படத்தில் `கல்யாணி' என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததை, இலங்கை ஊடகங்கள் பாராட்டியிருந்தன.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

இந்நிலையில்தான் நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் `சுனாமி' படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை மக்கள், குறிப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளை அடிப்படையாக வைத்து இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களை உணர்வு ரீதியாக பதிவு செய்த படைப்பாக அமைந்த இப்படம் இலங்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விருது அறிவிப்பின் மூலம் தற்போது உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

தமிழ், சிங்கள நாடகங்கள், திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் இலங்கையில் இதுவரை 8 விருதுகளை பெற்றிருக்கும் நிரஞ்சனி, சர்வதேச அளவில் ஏற்கெனவே பூடானில் நடந்த ட்ரக் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார். தற்போது நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளார்.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

நைஜீரியாவில் `பேயல்சா உலக திரைப்பட விழா'வில் 83 நாடுகளின் 1,300 திரைப்படங்கள் கலந்துகொண்டதில், `சுனாமி'க்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.

 

நடிகை என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு அரசியல், சமூகப் பிரச்னைகளில் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறி வருகிறார் நிரஞ்சனி என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் மழுப்பாமல் நேரடியாகவே பதில் அளிக்கிறார்.

இதற்கு முன் மலையகத்திலிருந்து ருக்மணிதேவி என்ற தமிழ் நடிகை இலங்கைத் திரையுலகில் இயங்கியிருக்கிறார். அதற்குப் பின் சிறந்த நடிகையாக நிரஞ்சனி புகழ் பெற்று வருகிறார்.

நிரஞ்சனி சண்முகராஜா
 
நிரஞ்சனி சண்முகராஜா

 

தன் நடிப்புத் திறமையால் இலங்கை மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் நிரஞ்சனி சண்முகராஜா.

https://www.vikatan.com/arts/international/srilankan-tamil-niranjani-won-best-actress-award-in-international-film-festival-2021

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் நிரஞ்சினி சண்முகராஜா. துணிச்சல், தன்னம்பிக்கை கொண்ட தமிழ் பெண்ணாக மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும். 👍👍👍

Link to comment
Share on other sites

On 28/12/2021 at 23:10, nedukkalapoovan said:

தமிழில சொறீலங்காவில் சினிமா வருதா..??! சிங்களத்தில் வருகுது.. இவா அங்கு மாங்கு மாங்கென்று வாங்கின வாங்கிற்கு.. கொடுக்கிறாய்ங்க. 

ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 

 இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார்.  

நல்ல காலம் தப்பித்தோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய், ரஜினிகாந்தை தெரிந்திருந்த எனக்கு இலங்கை தமிழ் கலைஞர் ஒருவரை அறிமுகபடுத்திய நுணாவிலானுக்கு நன்றி. அவருக்கு அதியுயர்வு கௌரவ விருது அரசினால் வழங்கபட்டது மகிழ்ச்சி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்  சகோதரி

5 hours ago, tulpen said:

 

நல்ல காலம் தப்பித்தோம். 

சொறியாட்டி அரிப்படங்காது போல...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நிரஞ்சனி ..........கலைச்சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......!  🌹

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

வாழ்த்துகள்  சகோதரி

சொறியாட்டி அரிப்படங்காது போல...😡

நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே  எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். 

ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய  வேகத்தை  ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது,  காட்டாதது  வெட்கக்கேடு. அவமானகரமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நடைமுறைத் தமிழ் தேசியத்தின் இயங்கு நிலை தொடர்பான எனது கருத்துக்களை நீங்கள் பொய்யாக்கினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அது எதிர்காலத்தில் பொய்யாகவேண்டும் என்பதற்காகவே  எனது கருத்துகளை பூசி மெழுகாமல் வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். 

ஆனால் மூர்ககத்துடன் என்னை கடிந்து கொள்வதில் நீங்கள் காட்டிய  வேகத்தை  ஒரு தமிழ் பெண்ணின் மீது மனித நாகரீகமற்ற கொச்சை வசன வசவுகளை வீசிய, மற்றும் அதனை ஆதரித்து நிற்பவர்கள் மீது,  காட்டாதது  வெட்கக்கேடு. அவமானகரமானது. 

 

ஐயா

இது  கருத்துக்களம்

இங்கே அவரவர்  எழுதுபவைகளுக்கு  அவரவரே பொறுப்பு

எழுதும்  கருத்தாளர்கள்  உங்களுக்கான  பதிலை  தருவார்கள்

அவரை திருத்துங்கள் என்ற  கேள்வியை எதற்காக  என்னிடம்  கேட்கிறீர்கள்???

அதற்குள் நீங்கள் எதற்காக தேசியம் அது  இது என்று  சிண்டு முடிகிறீர்கள்???

முதலில்  உங்களை  திருத்துங்கள் சமுதாயம்  தானாக  திருந்தும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஒரு தமிழ் பெண் உயர் விருதை பெற்றதை கூட சகித்து கொள்ள முடியாமல் அவர் மீது கொச்சையான நாகரீகமற்ற வசவுகள் வீசும் நீங்கள் பேசும் தமிழ் தேசியம் இந்தளவு மலினமானதா? 😡 

 இதுவே உங்கள் வீட்டு உறவுகள் என்றால் நீங்கள் கூறிய கொச்சையான வசனத்தை கூற முடியுமா? அதற்கு வேறொருவர் விளக்கம் வேறு கேட்கிறார்.  

நல்ல காலம் தப்பித்தோம். 

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... கூத்தாடிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும் உருகிற உருக்கம் இருக்கே... சொல்லி வேலையில்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... 

அதே.....

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

அண்ணே.. ஒரு இனத்தின் தேசிய எழுச்சியை மலினப்படுத்த முன் பின் யோசிக்காத நீங்கள்... கூத்தாடிகளுக்கும் காட்டிக்கொடுப்பாளர்களுக்கும் உருகிற உருக்கம் இருக்கே... சொல்லி வேலையில்ல. 

 

2 hours ago, விசுகு said:

அதே.....

இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள்.  இது வழமையாக  நடக்கும் விடயம் தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

 

இருவருக்கும் நேர்மையாக கருத்துக்கு பதிலெழுத முடியவில்லை. ஆகவே தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து தப்பிக்கொள்கின்றீர்கள்.  இது வழமையாக  நடக்கும் விடயம் தானே. 😂

 

தேசியம் என்பது  உயிரினும்  மேலானது

அதை  எவர்  தமது  அரிப்புக்கு  சொறிஞ்சாலும்  கோபம்  வரும்  உணர்வுள்ளவன்  எவனுக்கும்  வரணும்

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

 

தேசியம் என்பது  உயிரினும்  மேலானது

அதை  எவர்  தமது  அரிப்புக்கு  சொறிஞ்சாலும்  கோபம்  வரும்  உணர்வுள்ளவன்  எவனுக்கும்  வரணும்

இப்படியே  வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம்.  இருவரதும் கெட்டித்தனம் தான்.  

“தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இப்படியே  வாய்சவடால் விட்டுக்கொண்டே நமது உயிரைக்காப்பாற்ற விமானமேறி காப்பாற்ற, நான் சுவிற்சர்லாண்டுக்கும், நீங்கள் பிரான்ஸிற்கும் வந்திட்டம்.  இருவரதும் கெட்டித்தனம் தான்.  

“தேசியம் என்பது ஊரான் வீட்டு பிள்ளைகளின் உயிரினும் மேலானது”. 😂

 

சரி ஐயா

அப்போ எதுக்கு  யாழ்  களத்தில்  தமிழர்களுடன்  தமிழில் பேசிக்கொண்டு?????

Link to comment
Share on other sites

36 minutes ago, விசுகு said:

 

சரி ஐயா

அப்போ எதுக்கு  யாழ்  களத்தில்  தமிழர்களுடன்  தமிழில் பேசிக்கொண்டு?????

நீங்களே பேசலாம் எண்டா நாங்களும் பேசலாம் தானே! 

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரனையும் தமிழ் மகன் என்று வாழ்த்திப் பின் துயரப்பட்டவர்கள் நாங்கள்.

 இப்போது சகோதரி நிரஞ்சனி சண்முகராசா அவர்களையும் தமிழ் மகள் என்று வாழ்த்துவோம். அவரது நடவடிக்கைகள்பற்றி நிச்சயம் வெளிவரும். அப்போது, மகிழ்வடைவோமா? துயர்படுவோமா?? பார்க்கலாம். 

வாழ்த்துக்கள் சகோதரி!!.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.