Jump to content

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராக போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20211228-WA0016.jpg

யாழ் மாநகர சபை அமர்வு  இன்று (28) இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VideoCapture_20211228-124522.jpg

இதன்போது, முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பிழம்பு said:

 

VideoCapture_20211228-124522.jpg

இதன்போது, முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk

வர்த்தகர்களின் வயிற்றில் அடிச்சா அவங்கள் தானே ஆர்ப்பாட்டம் செய்யவேணும்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியின் வளர்ச்சியையும் புகழையும் கஜேக்களின் கட்சியும் கூட்டமைப்பும் ஒருபோதும் விரும்பப்போவதில்லை.  இவ்வாறான செயல்கள் இப்போது அங்கிளின் ஆள்களின் துணையுடன் மேயராக இருக்கும் மணியை ஈபிடிபியை நேக்கி மேலும் நகரவைக்கும். பிறகு இலகுவாக மணியையும் துரோகியாக்கி விடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடுறது இருக்கட்டும்.. போராட்டத்தின் நோக்கம் என்ன..??!

வெறும் காழ்ப்புணர்ச்சி என்றால்.. இவர்கள் அடுத்த தடவை மக்களிடம் தான் தீர்ப்புக் கேட்க வேண்டும். 

மணிவண்ணன்.. சமூகத்துக்கு ஆற்றும் பணிக்காக.. மக்களால் எதிர்க்கப்படுவதாகத் தெரியவில்லை. 

ஆகவே.. இந்த வெற்றுக் கோசங்களை விட்டுவிட்டு.. தனிப்பட்ட அரசியல் செல்வாக்குகளை முன்னிறுத்துவதை விட்டு.. மணிவண்ணனிடம்.. உள்ள சமூகத்துக்கு அவசியமான சிந்தனைகள் செயல்வடிவம் பெற உதவலாமே..?!

அதுதானே தமிழினத்திற்குத் தேவை.! ஈபிடிபி ஒட்டுக்குழு அரசியல் ரீதியாக அதன் போட்டியாளர்களை எதிர்க்க மணிவண்ணனை ஆதரித்து நிற்கும் போது.. தமிழ் தேசியப் பரப்பில் இன்றும் உணர்வோடு இருக்கும் மணிவண்ணனுக்கு ஏன் தமிழ் தேசிய தலைப்பிட்டுள்ள கட்சிகள்.. ஆதரவளிக்க முடியவில்லை..??! கட்சித் சித்தாந்தங்களுக்கு அவர் ஒத்துவராட்டிலும்.. தமிழ் தேசிய சிந்தனையில் ஒன்றாத்தானே இருக்கிறார்.. மக்கள்... மண்.. பொருண்மியம்.. சமூகம்.. அதன் வளர்ச்சி.. என்ற நோக்கில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எமது சாபகக் கேடு.ஒரு நல்ல விடையம் நடந்தால் பொறுக்காதே.😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.