Jump to content

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!

December 29, 2021
 

index 1080x620 1 இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இணக்கம் ஒன்றை எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சு நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறலாம் என்று அறிய வருகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ முன்னெடுத்தது. இதில் தமிழ்த் தேசிய கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் என 11 கட்சிகள் ஒன்றிணைந்தன.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் வரைவை இந்தக் கட்சிகள் கூடித் தீர்மானித்தன. இந்த வரைவு இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், கட்சித் தலைவர்கள் அநேகமாக இன்று கையொப்பமிடுவர் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளரும் வரைவை தயாரித்தவருமான ரெலோ கட்சியின் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சில விவகாரங்களில் முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பு காட்டின. இதனால், உட்கட்சி முரண்பாட்டை காரணம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடிதத்தில் கையொப்பமிடுவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவித்தது. எனினும், அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதேவிடயத்தையே மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. எனினும், அந்தக் கட்சியின் செயலாளர் தாம் காலஅவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுடனும் பேச்சு நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அறிய வருகின்றது. எனினும், இதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், மற்றொரு முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் தமக்கு இதுவரை அப்படி ஓர் அழைப்பு கிடைக்கவில்லை என்றும் கட்சியின் தலைவருக்கு கிடைத்தால் அது தொடர்பில் அவர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கையொப்பமிடுவதில் தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் இரு நிலைப்பாடு தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா மறுத்துள்ளார். ரெலோவுடன் தமிழ் அரசுக் கட்சி இணைந்து எடுத்த முடிவில் கட்சி உறுதியாக நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

https://www.ilakku.org/இந்தியப்-பிரதமருக்கான-கட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கல்தான்.

நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன கிழக்கில் இப்போ இனத்தொகை விகிதம் 30:30:30 தான்.

இப்போதைக்கு கிழக்கு முஸ்லிம்கள் பெரும்பாலும் (சில தமிழரும் கூட) வட-கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பே.

ஆகவே இன்று கிழக்கில் வட-கிழக்கு இணைப்பு பற்றி ஒரு சர்வசன வாக்கெடுப்பு நிகழ்ந்தால் அது தோற்கும்.

இந்த வகையில் தமது மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை முஸ்லிம் கட்சிகள் எடுப்பது அவர்களின் அரசியல் தற்கொலைக்கு சமன்.

ஆகவே தமிழர் முன் இப்போ உள்ள தெரிவுகள் 2 தான்.

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அதிகாரத்தை பகிர இணங்கல்.

2. வடக்கு-கிழக்கு இணைப்பை மறத்தல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை மடிக்க  விட்டாலும்

விடாவிட்டாலும் எதையும்  உருப்படியாக பெற விடாதுகள்

உலகின் நாசதாரிகள்😭

 

Link to comment
Share on other sites

தலைவரின் பேச்சுவார்த்தையில் இருந்து இற்றை வரை பங்கு பற்றி உருப்படியாக எதையும் இவர்கள் செய்ய விடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவாறு அதிகாரத்தை பகிர இணங்கல்

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

Link to comment
Share on other sites

1 minute ago, வாலி said:

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”,  என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

இதுதான் சரியாக இருக்கும். வடக்குடன் கிழக்கின் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களை இணைத்துக் கொள்வது.

அதற்குக் கூட கிழக்குத் தனிழர்களின் சம்மதம் வேண்டும். 

சிக்கலான விடயம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவனுக்களை கழற்றி விட்டிட்டு நாம் நம் பாட்டில் நகர ஆரம்பித்தால் எல்லாம் நன்றே நடக்கும். சிங்களத்துக்கும் இவர்களுக்கும் தமிழரை விட்டால் அரசியல் செய்ய ஒன்றுமே இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

ஓம்

3 hours ago, வாலி said:

51 % கேட்பானுகள்.

ஆரம்பத்தில் தான் 51 வீதம் கேட்பார்கள் பின்பு ஏறி ஏறி கொண்டு போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

உவனுகள் கடைசி வரைக்கும் ஒப்புக்கொள்ள மாட்டானுகள்.  51 % கேட்பானுகள். இரண்டாவது ஒப்சன் தான் சரி. 

 

3 hours ago, tulpen said:

முடிந்தவரை எல்லைகளை மாற்றி தமிழர் அதிகமாக வாழும்  பகுதிகளை மட்டுமாவது ஒனரு அலகாகஇணைப்பது மற்றொரு ஒப்ஷன். அது சாத்தியமா என்று தெரியவில்லை. 

ஆனால் அது சாத்தியமென்றாலும்,”பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்”,  என்று அடம் பிடித்து காலத்த கடத்திக் கொண்டு நிற்கேக்க மான்றில் உடைஞ்சிடும். 😂

 

2 hours ago, ரஞ்சித் said:

இதுதான் சரியாக இருக்கும். வடக்குடன் கிழக்கின் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களை இணைத்துக் கொள்வது.

அதற்குக் கூட கிழக்குத் தனிழர்களின் சம்மதம் வேண்டும். 

சிக்கலான விடயம்தான்.

 

2வது ஒப்சன் என்பது கிட்டதட்ட கிழக்கு மாகாணத்தையும், அங்கு வாழ் தமிழர்களையும் கை கழுவி விடுவதற்கு சமன் வாலி. வடக்கிலும் கிழக்கிலும் தனிதனியே அலகுகளை உருவாக்குவது, நாம் கஸ்டபட்டு போராடி ஒரு அலகை எடுத்து, மறு அலகை ஈசியாக முஸ்லீம்+சிங்கள மக்களிடம் கொடுப்பது போல. 

அங்கே சில அரசசார் சுயநல அரசியல்வாதிகள் அவர்தம் அடிபொடிகளை தவிர்த்து பெரும்பாலான கிழக்கு தமிழர்கள் வடக்கு தமிழருடன் இணைந்த ஒரு அலகையே விரும்புகிறார்கள் என்பது என் கணிப்பு.

அதே போல் வடக்கு தமிழருக்கும் கிழக்கு தமிழரோடு இணைவதே நீண்டகால நோக்கில் பாதுகாப்பு. அடம்பன் கொடியும்…..

துல்பென் சொல்வது போல் அஷ்ரப் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என ஒரு விடயம் பேசப்பட்டது.

நீலனின் திட்ட வரைபிலும் இருந்ததாக நியாபகம்.

கிழக்கு மாகாணத்தின் 40% (முஸ்லீம் பெரும்பான்மை) நிலப்பரப்புகள், மன்னார் மாவட்டதின் ஒரு பிரதேச சபை போன்றவற்றை இணைத்து அவர்களுக்கு ஒரு தனி அலகும், எஞ்சும் நிலத்தில் வட கிழக்கு அலகையும் உருவாக்குவது சாத்தியப்படலாம். எல்லையோர சிங்கள பகுதிகளை வடமத்தி, மொனராகலயுடன் இணைக்க வேண்டி வரலாம். இதே நிலை வவுனியா தெற்கிலும், மணலாற்றிலும் வரலாம்.

இந்த இழப்புகளை- இப்போ இருக்கும் நிலத்தை (செம்மலை, அலம்பில், நாயாறு, கொக்கிளாய், தென்னமரவாடி,  கரடியனாறு, வாகரை, கொக்கட்டிசோலை, புல்லுமலை, அம்பாறை எல்லை கிராமங்கள்) போன்றவற்றை தக்கவைக்க கொடுக்கும் விலை என்று கருதி தமிழர்கள் safeguard at least what you have now அடிப்படையில் முஸ்லிம்களுடன் ஒரு தீர்வுக்கு போக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

இப்படி ஒரு முஸ்லிம் பெரும்பான்மை அலகை உருவாக்கினால் அதனுள் வரும் தமிழர்களின் உயிர்/உடமை பாதுகாப்பு reciprocal அடிப்படையில் தமிழ் அலகுனுள் வரும் முஸ்லீம்களின் பாதுகாப்பின் பிரகாரம பேணப்படவேண்டும். அதாவது பொத்துவில் தமிழனின் பாதுகாப்பு, முள்ள்ளியவளை முஸ்லீமின் பாதுகாப்பில் தங்கி இருக்கும்.

மேலும் இப்படி ஒரு அலகை உருவாக்கினால் -சிங்கள இனவாதிகளின் கவனம் முழுக்க அவர்கள் மேலேயே இருக்கும். இதையும் நாம் கவனமாக ராஜதந்திரமாக கையாளலாம்.

இல்லாத பட்சத்தில் துல்பென் சொல்வதுபோல், பெற்றோல் மேக்ஸ்தான் வேணும் என்று மெண்டிலை உடைக்கவே வாய்புகள் அதிகம்.

48 இல் இருந்து மெண்டிலை மீள, மீள உடைத்தவர்கள் நாம். இந்த முறையும் அப்படி நடக்க கூடாது என்பது என்வேண்டுதல்.

பிகு

இப்படி ஒரு clean cut solution க்கு தமிழர், முஸ்லீம்கள் உடன்பட்டாலும் இலங்கை உடன்படுவது கஸ்டம். 

அவர்களுக்கு தெரியும் 87 இந்திய இராணுவ வருகை போல, தமிழர், முஸ்லீம்களை விட இப்படி ஒன்று நடந்தால் அதில் அதிகம் பாதிக்க பட போவது தாமே என்று. ஆகவே 86-90 இல் செய்ததை போன்ற இராஜதந்திர நகர்வுகளை செய்ய முனைவர்கள்.

 

 

13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம்

ஆரம்பத்தில் தான் 51 வீதம் கேட்பார்கள் பின்பு ஏறி ஏறி கொண்டு போகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலையே மிகப்பெரிய முஸ்லீம் நாடு இந்தோனேசியா… பணக்கார முஸ்லிம் நாடுகளில் ஒன்று மலேசியா.. இந்த ரெண்டு நாடுகளும் அடைக்கலம் நாடிவந்த நாடில்லாத ரோகிங்கியா முஸ்லீம்களை போட்டு படுத்தும் பாடு.. இண்டைக்கும் ஒரு போட் அகதிகளை இந்தோனேசியா மலேசியாக்கு திருப்பி அனுப்பி இருக்கு.. இவனுகள் எல்லாம் மதம் மதம் எண்டு வெறிபிடித்து அலைவது மற்றவனுக்கு உபத்திரம் கொடுக்கத்தான் ஒழிய யாருக்கும் உதவ அல்ல.. இந்த பூமியில் இயற்கை அனர்த்தங்களுக்கு அப்புறம் அதிகளவு மக்கள் இறந்தது என்றால் இந்த வீனாப்போன மதவெறியர்களால்தான்..

Indonesia rejects Rohingya refugees, sends boat to Malaysia

At least 100 people, mostly women and children, on board a wooden vessel said to be taking on water denied refuge.

A boat carries Rohingya people stranded at sea, Indonesia,
A boat carries Rohingya people stranded at sea off Indonesia [Aditya Setiawan via Reuters]
Published On 28 Dec 202128 Dec 2021
 

Dozens of Rohingya refugees who were intercepted after their boat ran into trouble off the coast of Indonesia’s Aceh province were being sent into Malaysian waters, authorities said.

At least 100 people, mostly women and children, on board a wooden vessel said to be taking on water were denied refuge in Indonesia and instead pushed into the neighbouring Southeast Asian country.

 

https://www.aljazeera.com/news/2021/12/28/indonesia-rejects-rohingya-refugees-sends-boat-to-malaysia?fbclid=IwAR1JTD6JKbTo8efw8yx_WqvETQRdeB1TxPr9hkWm5-OjWU55vpvqGE_3G5o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் போகுமா..?! இல்ல.. கதை தானா..?!

உதில இருக்கிற எல்லாருமே 1989 இல் ஹிந்தியப் படை எடுபிடிகளாக இருந்தவர்கள். இவர்களால் ஹிந்தியாவுக்கு ஒரு கடிதத்தைக் கூட அனுப்ப வக்கில்ல.. இப்ப. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியை பிரிச்சு குடுத்திட்டு நாம் நம்ம பாட்டை பாப்போம். உவனுகளோட சேர்ந்தால் நம்மளை வாழவும் விடான்கள், சாகவும் விடான்கள். சிரங்குமாதிரி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
24 minutes ago, satan said:

காத்தான் குடியை பிரிச்சு குடுத்திட்டு நாம் நம்ம பாட்டை பாப்போம். உவனுகளோட சேர்ந்தால் நம்மளை வாழவும் விடான்கள், சாகவும் விடான்கள். சிரங்குமாதிரி......

உண்மை...

கூட வைத்திருந்தால் எப்பவும் ஏதெனும் ஒரு சிக்கலை தோற்றுவித்துக்கொண்டே இருப்பாங்கள். சைக்🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள் வடக்குக் கிழக்கு இணைப்புப்பற்றி இணங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சிங்களவர்கள் இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இந்தியாவிடம் கேட்டால் உடனேயே பெற்றுக் கொடுத்துவிடுவார்களா? 2009 இலிருந்து 2021 வரை 12 வருடங்களில் செய்ய விரும்பாததை இந்தியா ஏன் இப்போது செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்? 

ஆனால் செய்தால் நன்மையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள் வடக்குக் கிழக்கு இணைப்புப்பற்றி இணங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சிங்களவர்கள் இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இந்தியாவிடம் கேட்டால் உடனேயே பெற்றுக் கொடுத்துவிடுவார்களா? 2009 இலிருந்து 2021 வரை 12 வருடங்களில் செய்ய விரும்பாததை இந்தியா ஏன் இப்போது செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்? 

ஆனால் செய்தால் நன்மையே!

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தீர்வு அடிப்படைக்கு வந்து, ஒத்த குரலில் இந்தியாவை நாடும் போது அது வட கிழக்கின் சனதொகையின் அறுதிபெரும்பான்மை எடுத்த முடிவாகிறது.

முதல் முறையாக இலங்கையை தவிர்த்து தமிழ்-முஸ்லிம்-இந்தியா என்று ஒரு நகர்வு நடப்பது முன்னேற்றம்தான்.

12 வருடத்தில் பல அதி தீவிர தமிழ் தேசியர்களுக்கும் கள யதார்தம் ஓரளவு விளங்கி விட்டது என்பது என் கணிப்பு.

அதே போல் 12 வருடத்தில் இலங்கை முஸ்லீம்களும் ஏன் இலங்கையை நம்ப முடியாது என்ற பாடத்தை கற்றுள்ளார்கள்.

அதே 12 வருடத்தில் இந்தியாவும் இலங்கை பற்றி புரிந்தததா என்பதுதான் சந்தேகம்.

முயலட்டுமே.

13 ஐ கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

13 +, சமஸ்டி கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

கஜன்ஸ் இரு தேசத்துக்கு முயலட்டும்.

சில புலம்பெயர் நபர்கள் தனிநாட்டுக்கு முயலட்டும். 

ஏதாவது சரி வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

13 ஐ கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

13 +, சமஸ்டி கேட்பவர்கள் அதற்கு முயலட்டும்.

கஜன்ஸ் இரு தேசத்துக்கு முயலட்டும்.

சில புலம்பெயர் நபர்கள் தனிநாட்டுக்கு முயலட்டும். 

கோஷான்,

இதிலுள்ள வேதனை என்ன தெரியுமோ? இந்தியாவிட்ட நாங்கள் முன்வைக்கப்போற இந்தக் கோரிக்கை,மேலே நீங்கள் சொன்ன எல்லாத்தையும் விடக் குறைந்த தீர்வுதான் எண்டது. அதுகூட, இந்தியா எடுத்துத் தருமோ எண்டு எங்களுக்குத் தெரியாது. சிலவேளை நூற்றுக்கு 5 வீதம் சந்தர்ப்பம் (இதுகூட அதிகம் தான்) இருக்கெண்டு நாங்கள் எடுத்துக்கொள்ளுவோம் இப்போதைக்கு.

மற்றும்படி, நீங்கள் சொன்னது மெத்தச்சரி.

தனிநாடு - சாத்தியமேயில்லை, புலிகளோட அதுவும் போட்டுது

13 - 1987 இல கைச்சாத்திட்டதோட  அதின்ர  கதை முடிஞ்சுது. ஆனால் என்னட்ட ஒரு கேள்வி இருக்குது. புலிகளாலதான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏலாமல் போட்டுதெண்டு சொன்னவை, இண்டைக்கு என்ன சொல்லப்போகினம்? சிலவேளை புலிகள் இல்லையாம், பிறகு ஆருக்குத் தீர்வு வேணும் எண்டு நெய்க்கினம் போல. 

13 +. - மகிந்தவின்ர புலுடா, நடக்கவே நடக்காது

கஜன் கோஷ்ட்டியின்ர இரு தேசம் - அவையளுக்கே இது நடக்காதெண்டு நிச்சயம் தெரியும்.

ஆனால் ஒண்டு பாத்தியளே, தமிழ்பேசும் கட்சிகள் எண்டு எல்லாரும் சேர்ந்து வரேக்கையும் கஜன் கோஷ்ட்டியிக்கு வர ஏலாமல் இருக்கு. அப்பிடி என்னத்தைத்தான் சாதிக்கப்போயினமோ தெரியேல்லை. அவையள் யாழ்ப்பாண மாநகரசபையோட மல்லுக்கு நிக்கிறதுதான் தங்கட அரசியல் எண்டு நெய்க்கினம் ஆக்கும். 

37 minutes ago, goshan_che said:

12 வருடத்தில் பல அதி தீவிர தமிழ் தேசியர்களுக்கும் கள யதார்தம் ஓரளவு விளங்கி விட்டது என்பது என் கணிப்பு.

இங்கதான் பிரச்சினையே இருக்குது அப்பன்.

கள யதார்த்தம் நல்லா விளங்கி , நாங்கள்  பேசாமலிருப்பம், அவன் செய்யிறதைச் செய்யட்டும், தாரதைத் தரட்டும் எண்டும், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதெண்டும், அபிவிருத்தி காணும், வேறை ஒரு ம--- வேண்டாம் எண்டும் நினைக்க வெளிக்கிட்டுட்டம். 

1990 இல பிரேமதாசா சொன்ன, "வடக்கை எடுத்துக்கொள்ளுங்கோ, கிழக்கு எங்களிட்டை இருக்கட்டும்" எண்ட இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

தமிழர்களும் முஸ்லீம்களும் தமக்குள் வடக்குக் கிழக்கு இணைப்புப்பற்றி இணங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சிங்களவர்கள் இதை எப்படி ஒத்துக்கொள்வார்கள்? இந்தியாவிடம் கேட்டால் உடனேயே பெற்றுக் கொடுத்துவிடுவார்களா? 2009 இலிருந்து 2021 வரை 12 வருடங்களில் செய்ய விரும்பாததை இந்தியா ஏன் இப்போது செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்? 

ஆனால் செய்தால் நன்மையே!

ஆண்டிகள் கூடி மடம் கட்ட நினைக்கிறோம். வேறொன்றுமில்லை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பேறு வீதத்தை % கட்டுபடுத்தாவிட்டால் வடக்கும் பறிபோகும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. . 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

13 - 1987 இல கைச்சாத்திட்டதோட  அதின்ர  கதை முடிஞ்சுது. ஆனால் என்னட்ட ஒரு கேள்வி இருக்குது. புலிகளாலதான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏலாமல் போட்டுதெண்டு சொன்னவை, இண்டைக்கு என்ன சொல்லப்போகினம்? சிலவேளை புலிகள் இல்லையாம், பிறகு ஆருக்குத் தீர்வு வேணும் எண்டு நெய்க்கினம் போல. 

13ம் சட்டம் 1987 இல் நிறைவேறாமல் போக புலிகள் ஒரு பெரும் காரணம் ஆனால் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல.

13 ம் திருத்தத்தை வலுவாக எதிர்த்தோர் இருவர். புலிகள், சிங்கள இனவாத அரசு. இருவரும் எதிர்க்க உண்டான காரணங்கள் எதிரும் புதிருமானவை ஆனால் இருவரும் 13ஐ சரி சமனாக எதிர்த்தார்கள்.

புலிகளோடு அவர்கள் எதிர்த்த (எதிர்பார்த்த) காரணமும் அழிந்து விட்டது. ஆனால் இனவாதிகள் இன்னும் அப்படியே இருப்பதால், முன்பை விட வலுவாக இருப்பதாலும், இதை அமல்படுத்துவது பற்றி இந்தியா அதிக கரிசனை அற்று இருப்பதாலும் - இன்றும் இதை அமல்படுத்த கோரி கடிதம் எழுதும் பால நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஆனால் ஒண்டு பாத்தியளே, தமிழ்பேசும் கட்சிகள் எண்டு எல்லாரும் சேர்ந்து வரேக்கையும் கஜன் கோஷ்ட்டியிக்கு வர ஏலாமல் இருக்கு. அப்பிடி என்னத்தைத்தான் சாதிக்கப்போயினமோ தெரியேல்லை.

நிச்சயமாக இதுவரை தமிழர் தரப்பை இந்தியா taken for granted ஆக நடத்தி வருகிறது என்பது தெளிவு.

அப்படி செய்யாமல் எம்மை கொஞ்சமாவது கனம் பண்ணி நடக்க, 3 உபாயங்களை கையாளலாம்.

1. தமிழ் நாட்டின் மூலம் டெல்லியை நெருக்குதல்

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இதில் 1,2 ஐ செய்யும் தமிழ் கட்சி 3 ஐ செய்ய முடியாது.

ஆனால் மூன்றில் ஒன்றைதானும் செய்யாத கஜன்ஸ், 3 ஐ செய்வது போல் பாசாங்காவது செய்யலாம். ஆனால் எதுவும் செய்வதில்லை.

சுமந்திரன் அட்லீஸ்ட் வெளிநாடு வந்து சின்ன சின்ன தலைவர்களை சந்திகிறார், புலம் கூட்டங்களை நடத்துகிறார்.

கஜன்ஸ்? 

மூன்று தலைமுறையாக அந்த குடும்பம் ஒரே ஒரு காரணதுக்காகவே அரசியல் செய்கிறது. 

ஒரு எம்பி சீட். 

அதுக்கு ஒரு கட்சி, அதற்கு ஒரு புலம்பெயர் ஆதரவுதளம் கூட.

கீரை கடை, எதிர் கடை எண்டு காரணம் சொல்லி கொண்டு தேர்தல் நேரம் கஜன்சை ஆதரித்து  எழுதியோர் எல்லாம் இப்போ யாழில் கப்சிப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

கள யதார்த்தம் நல்லா விளங்கி , நாங்கள்  பேசாமலிருப்பம், அவன் செய்யிறதைச் செய்யட்டும், தாரதைத் தரட்டும் எண்டும், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதெண்டும், அபிவிருத்தி காணும், வேறை ஒரு ம--- வேண்டாம் எண்டும் நினைக்க வெளிக்கிட்டுட்டம். 

1990 இல பிரேமதாசா சொன்ன, "வடக்கை எடுத்துக்கொள்ளுங்கோ, கிழக்கு எங்களிட்டை இருக்கட்டும்" எண்ட இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. 

இல்லை இது கள யதார்த்தம் விளங்கிய நிலை அல்ல. இது ஒருவகையான all or nothing மனநிலை.

ஒன்றில் தனி நாடு அல்லது வடக்கை மட்டும்   ஒரு மாகாண சபையாகவேணும் தாங்கோ எனும் மனநிலை.

இப்படி கிழக்கை சேர்க்க தயங்க காராணம் முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ/ஆள விரும்பாமை. இது நியாயமான நிலைப்பாடுதான். 

ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லீம்களோடு அதிகாரத்தை பகிரல். இதை நாம் விரும்பவில்லை என்றால்.

2. நிலத்தொடர்பற்ற முஸ்லீம் அலகை ஏற்றல். 

இவைதான் தெரிவுகளாக இருக்க முடியும்.

பாப்போம்….இப்பதானே காத்தான்குடியை விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கோம் (எப்ப கையில் வைத்திருந்தோம் விட்டு கொடுக்க🤣). போக, போக களயதார்த உறைப்பு கூடும் போது.   தெரிவு 2 ஐ ஏற்பது இலகுவாகலாம்.

 

Link to comment
Share on other sites

9 minutes ago, goshan_che said:

இல்லை இது கள யதார்த்தம் விளங்கிய நிலை அல்ல. இது ஒருவகையான all or nothing மனநிலை.

ஒன்றில் தனி நாடு அல்லது வடக்கை மட்டும்   ஒரு மாகாண சபையாகவேணும் தாங்கோ எனும் மனநிலை.

இப்படி கிழக்கை சேர்க்க தயங்க காராணம் முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ/ஆள விரும்பாமை. இது நியாயமான நிலைப்பாடுதான். 

ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

1. இணைந்த வட-கிழக்கில் முஸ்லீம்களோடு அதிகாரத்தை பகிரல். இதை நாம் விரும்பவில்லை என்றால்.

2. நிலத்தொடர்பற்ற முஸ்லீம் அலகை ஏற்றல். 

இவைதான் தெரிவுகளாக இருக்க முடியும்.

பாப்போம்….இப்பதானே காத்தான்குடியை விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கோம் (எப்ப கையில் வைத்திருந்தோம் விட்டு கொடுக்க🤣). போக, போக களயதார்த உறைப்பு கூடும் போது.   தெரிவு 2 ஐ ஏற்பது இலகுவாகலாம்.

 

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பிள்ளை பேறு வீதத்தை % கட்டுபடுத்தாவிட்டால் வடக்கும் பறிபோகும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. . 😢

கொஞ்சம் நடப்பது மாரி கதைப்போம் தோழர். 

ஆரிய குளத்துக்கு என்ன கலர் பெயிண்ட் அடிப்பது என்பதை கூட முடிவு செய்யும் பவர் கூட இல்லாத நாம் எப்படி பிள்ளை பேறு வீதத்தை - அதுவும் ஒரு இனத்தினதை மட்டும் கட்டுப்படுத்த முடியும்?

9 minutes ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

இந்த மனநிலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அளவுக்கு ஊரில் இல்லை என்பது பெரும் நிம்மதி.

இங்கே மார்தட்டுவது லேசு, முடிவுகள் நம்மையோ, பிள்ளைகளையோ பாதிக்காதுதானே. 

ஆனால் ஒன்று இந்தமுறையும் பெற்றோல் மேக்ஸ்தான் வேணும் எண்டு அடம்பிடித்து மெண்டிலை உடைத்தால் - அடுத்த முறை கிழக்கை முற்றாக இழந்து, வடக்கில் தமிழருக்கு நில தொடர்பற்ற அலகு கோர வேண்டி வரும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.