Jump to content

இந்தியப் பிரதமருக்கான கடிதம்; முஸ்லிம் கட்சிகள் இழுபறிநிலையால் கையொப்பமிடல் பின்செல்லும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

13ம் சட்டம் 1987 இல் நிறைவேறாமல் போக புலிகள் ஒரு பெரும் காரணம் ஆனால் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல.

13 ம் திருத்தத்தை வலுவாக எதிர்த்தோர் இருவர். புலிகள், சிங்கள இனவாத அரசு. இருவரும் எதிர்க்க உண்டான காரணங்கள் எதிரும் புதிருமானவை ஆனால் இருவரும் 13ஐ சரி சமனாக எதிர்த்தார்கள்.

புலிகளோடு அவர்கள் எதிர்த்த (எதிர்பார்த்த) காரணமும் அழிந்து விட்டது. ஆனால் இனவாதிகள் இன்னும் அப்படியே இருப்பதால், முன்பை விட வலுவாக இருப்பதாலும், இதை அமல்படுத்துவது பற்றி இந்தியா அதிக கரிசனை அற்று இருப்பதாலும் - இன்றும் இதை அமல்படுத்த கோரி கடிதம் எழுதும் பால நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்லாமல், சிங்கள இடதுசாரிகள் கூடக் கடுமையாக எதிர்த்தார்கள். தெற்கின் இரண்டாவது ஜனதா விமுக்தி பெரமுனவின் ரோஹண விஜேவீர இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்துத்தான் கலகத்தினை ஆரம்பித்தார். உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்ட ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவரின் அந்நாள் பிரதமர் பிரேமதாஸா கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, நன்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பு தெற்கில் அன்று இருந்தது, இன்றும் அது இருக்கிறது.

ஆகவே புலிகளை மட்டுமே ஒப்பந்தத்தின் தோல்விக்கான காரணமாக தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்றும் சாடிவருவது தவறு. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்ததன் நோக்கம் இவ்வொப்பந்தம் தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைத் தரப்போவதில்லை என்பதானாலேயன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நிச்சயமாக இதுவரை தமிழர் தரப்பை இந்தியா taken for granted ஆக நடத்தி வருகிறது என்பது தெளிவு.

அப்படி செய்யாமல் எம்மை கொஞ்சமாவது கனம் பண்ணி நடக்க, 3 உபாயங்களை கையாளலாம்.

1. தமிழ் நாட்டின் மூலம் டெல்லியை நெருக்குதல்

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இதில் 1,2 ஐ செய்யும் தமிழ் கட்சி 3 ஐ செய்ய முடியாது.

ஆனால் மூன்றில் ஒன்றைதானும் செய்யாத கஜன்ஸ், 3 ஐ செய்வது போல் பாசாங்காவது செய்யலாம். ஆனால் எதுவும் செய்வதில்லை.

சுமந்திரன் அட்லீஸ்ட் வெளிநாடு வந்து சின்ன சின்ன தலைவர்களை சந்திகிறார், புலம் கூட்டங்களை நடத்துகிறார்.

கஜன்ஸ்? 

மூன்று தலைமுறையாக அந்த குடும்பம் ஒரே ஒரு காரணதுக்காகவே அரசியல் செய்கிறது. 

ஒரு எம்பி சீட். 

அதுக்கு ஒரு கட்சி, அதற்கு ஒரு புலம்பெயர் ஆதரவுதளம் கூட.

கீரை கடை, எதிர் கடை எண்டு காரணம் சொல்லி கொண்டு தேர்தல் நேரம் கஜன்சை ஆதரித்து  எழுதியோர் எல்லாம் இப்போ யாழில் கப்சிப்.

தமிழ்நாட்டின் முலம் தில்லியை நெருக்குவது சாத்தியமா? இது தவறான பார்வை என்றே எனக்குப் படுகிறது. தமிழர்களுக்கு மிகவும் சார்பான கொள்கையினைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் அவரால்க் கூட ஒரு சில செயற்பாடுகளைத் தவிர அதிகமாக தில்லியை நெருக்க முடியவில்லை. 1987 இன் சமாதான ஒப்பந்தத்தின்போது புலிகளின் தலைமை மீது தில்லியினால் செலுத்தப்பட்ட அழுத்தத்தைத்தன்னும் அவரால் நீக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் தமிழகத் தலைவர்கள் எம்மீது கொண்டிருக்கும் பரிவு மட்டுமே அன்று எமக்கிருந்தச் ஒரே பலம். இதனைத்தாண்டி மத்தியை அவர்களால் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை.

தமிழகத் தலைவர்களில் தமிழர் மீது அதீத அக்கறை கொண்டிருந்த எம் ஜி ஆர் காலத்திலேயே தில்லிக்கு தமிழகத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்றால், ஏனையவர்களால் நிச்சயமாக அவரளவு கூட செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் 1991 இன் சிறிபெரும்புதூர் இந்த நிலைமைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டது. 

இன்று ஈழத்தமிழர் தொடர்பாக மத்தி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. இதில் அழுத்தம் எல்லாம் எங்கிருந்து கொடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

2. நேரடியாக மேற்கினை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்

 

நேரடியாக மேற்கினை அணுகல். அப்படியொன்று இருக்கிறதா இன்று?

இலங்கையில் நடக்கும் எந்தவிதமான வெளிச் சக்திகளின் செயற்பாடுகளும் ஒன்றில் மேற்கு - இந்திய கூட்டணியினரின் ஏற்பட்டில் அல்லது இக்கூட்டணிக்கெதிரான சீனாவின் ஏற்பாட்டிலேயே நடந்துவருகிறது.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்து சமுத்திரத்தில் மேற்கின் இன்னொரு முகம்தான் இந்தியா. ஆகவே இந்தியாவைத் தவிர்த்து மேற்கிடம் நேரடியாகப் போவதென்பது சாத்தியமற்றது. இன்னும் சொல்லப்போனால் மேற்குடன் நாம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கும் எந்தச் சந்திப்புமே இந்தியாவை நோக்கி அதே மேற்கினால் திருப்பிவிடப்படும் என்பதும் நாம் அறியாதது அல்ல. ஏனென்றால், இலங்கையின் சீனச் சார்புச் செயற்பாடுகளால் தனியே மேற்கோ அல்லது தனியே இந்தியாவோ பாதிக்கப்படப்போவதில்லை. இக்கூட்டே சேர்ந்து பாதிக்கப்படப்போகிறது. ஆகவே, இந்தியாவை மீறி மேற்கு எமது விடயத்தில் தனியாகச் செயற்படப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கின் சமாதானத் தூதுவர் சொல்கெயிம்கூட ஒரு செவ்வியில் தமிழர்கள் இந்தியா நோக்கித் தமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றுதான் கூறினாரே ஒழிய, மேற்கிடம் நேரடியாக வாருங்கள் என்று கூறவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

3. இந்தியாவின் எதிரிகளை அணுகுவதன் மூலம் டெல்லியை நெருக்குதல்.

இது  ஒரு நல்ல தெரிவுதான்.

ஆனால், அந்த சக்தி யார்? நிச்சயம் சீனாவாக இருக்க முடியாது. இலங்கையில் பலத்துடன் இருக்கும் தரப்பான சிங்களவருடன் சேர்ந்து இருப்பதன் மூலம் தனக்கான நலன்களை அது தேடிக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், சிங்களவர் சரித்திரகாலம் தொட்டு இந்தியா மீது கொண்டிருக்கும் தீராத வெறுப்பும் சந்தேகமும், சீனர்களுக்கு தமது நண்பர்கள் சிங்களவர்களே என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான, ஆனால் பலமான சக்தியென்று பார்த்தால், சீனா இல்லையென்று ஆகிவிடுகிறது. அடுத்து வருவது பாக்கிஸ்த்தான். இவர்கள் தமிழர்களுக்கு இயற்கையாகவே எதிரானவர்கள். தமிழர்கள் என்றால் இந்துக்கள், இந்தியாவின் ஆதரவாளர்கள், வந்தேறிகள் எனும் காரணத்தினாலேயே இலங்கைக்கு தமிழருக்கெதிரான உதவிகளை நெடுங்காலமாக பாக்கிஸ்த்தான் செய்துவருகிறது. மேலும், இவர்கள் கூட இலங்கையில் பலத்துடன் அதிகாரத்தில் இருக்கும் தரப்பைத்தான் தமது நலன்களுக்காகவும் ஆதரிப்பார்கள் என்பது திண்ணம்.

இவர்களைத் தவிர, தமது நலன்களை முன்னிறுத்தாமல், தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்கக் கூடிய , ஆனால் இந்தியாவுக்கு எதிரான பலமான நாடு ஒன்று இருக்கிறதா? பனிப்போர் காலத்திலேயே சாத்தியப்படாத இவ்விடயம் இன்றும் மேற்கும் இந்தியாவும் ஒரு கூட்டிற்குள் வந்தபின்னர் சாத்தியமா? 

முதலில் அப்படியான ஒரு சக்தி எதுவென்பதைக் கண்டறிய வேண்டும். அடுத்ததாக தமிழ் அரசியல்வாதிகளில் இந்தியாவைத் தவிர்த்து வேறு சக்திநோக்கிச் செல்லும் அரசியல் அமைப்பொன்றும் உருவாக்கப்படல் வேண்டும். ஆனால், இன்றிருப்பதோ 99 வீதம் இந்தியச் சார்பு அரசியல் அமைப்புக்கள்தான். இதை அறிந்துதான் இந்தியாவும் எம்மை தான் விரும்பியவாறு உதைந்து விளையாடி வருகிறது. 

இந்தியா எனும் அகம்பாவம் கொண்ட பிராந்திய சக்தியொன்றிற்கு அருகில் நாம் வாழ்வதால் நாம் கொடுக்கும் விலைதான் இவையெல்லாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

நீங்கள் சொல்வதும் உண்மைதான்.  தமிழன் எதையும் விட்டுக்கொடுக்காததால்த்தான் இன்று ஒன்றுமில்லாமல் அனாதையாய் நிக்கிறான். "கைப்பற்றினவன் சரக்கு மிடுக்கு கூட" அடி வாங்கி வாங்கி முடியாதவிடத்து அடங்கி ஏங்கி நிக்கிறோம். கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தும் பழிவாங்கப்படுகிறோம். பறிக்கிறவன் விட்டுக்கொடுக்கிறவனிடம் இருந்து பறித்ததுபோக இருக்கிறதையும் உருவ நிக்கிறான். இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்று தெரிந்தும் நெருக்குகிறான்.  பகிடியும் வேதனையும்  என்னவென்றால் நம்மை நாமே ஏளனம் செய்வதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஆனால் முஸ்லீமோடு நாம் அதிகாரத்தை பகிர விரும்பவில்லை என்பதற்காக கிழக்கு தமிழனை அதே முஸ்லிம்+சிங்கள மேலாண்மைக்குள் பெட்டி கட்டி அனுப்பவும் முடியாது. அப்படி நடந்தால் இராசதுரை-கருணா சொன்னது அனைத்தும் உண்மை என்றாகி விடும்.

Eastern Tamils are not expendables. They are not a bargaining chip. வடக்கு தமிழருக்கு வரும் அதே தீர்வு அவர்களுக்கும் வர வேண்டும்.  இழப்புகளில் அவர்களுக்கு சம பங்கை கொடுத்து விட்டு, பலனை வடக்கு மட்டும் அனுபவிக்க முடியாது.

 

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நான் எழுதியதன் சுருக்கமும் இன்னம் சில விளக்கங்களும் கீழே 

1. வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

2. வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

3. தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

4. கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

கோஷான், எதையும் விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவதை விட விடாக்கொண்டானாக இறுதிவரை மார்தட்டி இருந்துவிட்டு,  நிலமை கைமீறிச்சென்றவுடன் குய்யோ முறையோ உலகம் முழுவதும் எம்மை வஞ்சித்துவிட்டது என்று ஒப்பாரி  வைப்பதில் எமக்கு ஒரு தனி சுகம். So,  we are enjoying our desires. 😂

தமிழர் தரப்பு இது வரைக்கும் எதை விட்டுக்கொடுக்கவில்லை?

இனியும் விட்டுக்கொடுத்தால் ஈழத்தமிழினம் காங்கேசன் துறை கடல் வரைக்கும் சென்று விழுந்து சாக வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்லாமல், சிங்கள இடதுசாரிகள் கூடக் கடுமையாக எதிர்த்தார்கள். தெற்கின் இரண்டாவது ஜனதா விமுக்தி பெரமுனவின் ரோஹண விஜேவீர இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்துத்தான் கலகத்தினை ஆரம்பித்தார். உடன்படிக்கையினைக் கைச்சாத்திட்ட ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவரின் அந்நாள் பிரதமர் பிரேமதாஸா கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, நன்கு அரசியல் மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பு தெற்கில் அன்று இருந்தது, இன்றும் அது இருக்கிறது.

ஆகவே புலிகளை மட்டுமே ஒப்பந்தத்தின் தோல்விக்கான காரணமாக தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்றும் சாடிவருவது தவறு. 

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புலிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்ததன் நோக்கம் இவ்வொப்பந்தம் தமிழர்களுக்கான நியாயமான தீர்வினைத் தரப்போவதில்லை என்பதானாலேயன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை. 

ரஞ்சித்,

இந்த புலிகள் தவறு செய்தார்கள்/இல்லை என்ற சகதிக்குள் இறங்க நான் விரும்பவில்லை.

ஆனால் ஒன்றை சொல்கிறேன்.

இந்திய இலங்கை ஒப்பத்தம் தமிழர்களுக்கு வாய்ப்பானது இல்லை என்பதை ஏற்கும் அதே வேளை - அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களை விட அதிகம் தீமை அடைய இருந்தவர்கள் நிச்சயம் இனவாதிகளே.

நீங்கள் மேலே சொன்னது போல, ஜேவிபி, பிரேமதாச, ஜேஆர் அவரவர் தமக்குரிய வழியில், வெளிப்படையாக தெரியாமல் ஆனால் மிக இரகசியமாக ஒன்றிணைந்து, 86-90 சவாலை மிக நேர்தியாக கையாண்டனர்.

1. ஜேவிபி கலகம் செய்தது

2. பிரேமதாச அரசியல் ரீதியில் எதிர்த்தார் 

3. ஜே ஆர் தந்திரமாக புலிகளையும் இந்தியாவையும் சிண்டு முடிந்து விட்டார்.

ஆனால் அனைவரின் நோக்கமும் இலங்கையில் இருந்து இந்தியாவை வெளியேற்றி பெளத்த சிங்கள மேலாண்மையை பேணுவதே.

அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

ஒரு தமிழனாக, தலைவரின் தனிமனித விழுமியத்தால், தலைமைத்துவ பண்பால், கண்ணியத்தால், ஊழல் அற்ற தன்மையால் ஈர்க்க பட்டவனாக,

இந்தியாவின் நண்பனாக பத்மநாபா இருந்த இடத்தில் தலைவர் தன்னை அமர்த்தி, ஜெரி அடம்ஸ் போன்ற ஒரு வகிபாகத்தை பாலா அண்ணைக்கும், மார்ட்டின் மெகினஸ் போன்ற ஒரு நிலையை தளபதி கிட்டுவுக்கும் கொடுத்திருந்தால்.

இன்றைக்கும் ஒரு நிழல் “தமிழரசு” வட-கிழக்கில் ஓடிக்கொண்டிருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

தியாகி திலீபன், பன்னிரு வேங்கைகள், அக்டோபர் 10,  87 க்கு பின்னான இந்திய படைகளின் வெறியாட்டம் இவற்றை எல்லாம் நான் சொல்லவில்லை.

இவற்றுக்கு முந்திய காலம் - சுதுமலை பிரகடன காலம், அதற்கு முந்திய 6 மாதம் - என்னை பொறுத்தவரை எமது இனத்தின் நீண்டகால இராஜதந்திர நன் நகர்வை செய்ய கூடிய ஒரு வாய்ப்பை நாம் தவற விட்ட காலம் என்றே கருதுகிறேன்.

இது எனது கருத்து மட்டுமே.

இதை எதிர்வளமாகவும் இல்லை இந்தியா ஏனைய இயக்கங்களை இறக்கி நரி வேலை செய்தது என்று வாதாடலம்.

இனி இவை வெறும் விவாத புள்ளிகளே.

நீங்களும் நானும் we can debate about this till the cows come home, ஆனால் ஒரு பயனும் இல்லை.

3 hours ago, ரஞ்சித் said:

தமிழ்நாட்டின் முலம் தில்லியை நெருக்குவது சாத்தியமா? இது தவறான பார்வை என்றே எனக்குப் படுகிறது. தமிழர்களுக்கு மிகவும் சார்பான கொள்கையினைக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் காலத்தில் அவரால்க் கூட ஒரு சில செயற்பாடுகளைத் தவிர அதிகமாக தில்லியை நெருக்க முடியவில்லை. 1987 இன் சமாதான ஒப்பந்தத்தின்போது புலிகளின் தலைமை மீது தில்லியினால் செலுத்தப்பட்ட அழுத்தத்தைத்தன்னும் அவரால் நீக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் தமிழகத் தலைவர்கள் எம்மீது கொண்டிருக்கும் பரிவு மட்டுமே அன்று எமக்கிருந்தச் ஒரே பலம். இதனைத்தாண்டி மத்தியை அவர்களால் வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை.

தமிழகத் தலைவர்களில் தமிழர் மீது அதீத அக்கறை கொண்டிருந்த எம் ஜி ஆர் காலத்திலேயே தில்லிக்கு தமிழகத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது என்றால், ஏனையவர்களால் நிச்சயமாக அவரளவு கூட செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் 1991 இன் சிறிபெரும்புதூர் இந்த நிலைமைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டது. 

இன்று ஈழத்தமிழர் தொடர்பாக மத்தி சொல்வதை தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. இதில் அழுத்தம் எல்லாம் எங்கிருந்து கொடுப்பது? 

நிச்சயமாக நேர்முக அழுத்தம் அதிகம் பயந்தராது.

உங்கள் எம்ஜிஆர் உதாரணம் மட்டுமல்ல புலி அனுதாபியாக அறியபட்ட ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் ஒன்றும் ஆகவில்லை .

ஆனால் இப்போ சீனா வட கிழக்கில் உள்ளே வருவதை வைத்து - இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு கேடு, மோடி அரசு கோட்டை விட்டு விட்டது என்ற வகையில் எதிர்மறையாக அரசியல் செய்து - we can try and force Delhi’s hands (ஒரு அளவுக்கு).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

நேரடியாக மேற்கினை அணுகல். அப்படியொன்று இருக்கிறதா இன்று?

இலங்கையில் நடக்கும் எந்தவிதமான வெளிச் சக்திகளின் செயற்பாடுகளும் ஒன்றில் மேற்கு - இந்திய கூட்டணியினரின் ஏற்பட்டில் அல்லது இக்கூட்டணிக்கெதிரான சீனாவின் ஏற்பாட்டிலேயே நடந்துவருகிறது.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்து சமுத்திரத்தில் மேற்கின் இன்னொரு முகம்தான் இந்தியா. ஆகவே இந்தியாவைத் தவிர்த்து மேற்கிடம் நேரடியாகப் போவதென்பது சாத்தியமற்றது. இன்னும் சொல்லப்போனால் மேற்குடன் நாம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கும் எந்தச் சந்திப்புமே இந்தியாவை நோக்கி அதே மேற்கினால் திருப்பிவிடப்படும் என்பதும் நாம் அறியாதது அல்ல. ஏனென்றால், இலங்கையின் சீனச் சார்புச் செயற்பாடுகளால் தனியே மேற்கோ அல்லது தனியே இந்தியாவோ பாதிக்கப்படப்போவதில்லை. இக்கூட்டே சேர்ந்து பாதிக்கப்படப்போகிறது. ஆகவே, இந்தியாவை மீறி மேற்கு எமது விடயத்தில் தனியாகச் செயற்படப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் மேற்கின் சமாதானத் தூதுவர் சொல்கெயிம்கூட ஒரு செவ்வியில் தமிழர்கள் இந்தியா நோக்கித் தமது கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என்றுதான் கூறினாரே ஒழிய, மேற்கிடம் நேரடியாக வாருங்கள் என்று கூறவில்லை. 

உண்மைதான் இதை நான் முன்பே எழுதியுள்ளேன். அமெரிக்கா உள்ளே வருவதெண்டால் சின்ன பகவதி எதுக்கோ முந்திய எதுவோ போல் முன்னால் வருவார்.

அமெரிக்காவும் தனது regional ally ஆன சின்ன பகவதியை விட்டு கொடாது.

ஆனாலும் - தமிழர்களும் சீனா பக்கம் சாய்கிறார்கள், இலங்கையில் இந்தியாவின் பிடி (அதன் வழியே) மேற்கின் பிடி நழுவுகிறது என்ற பீதியை நாம் மேற்கில் கிளப்பினால் - நிச்சயம் பெரிய பகவதி, சின்ன பகவதியை “என்னப்பா அங்க சத்தம்? நீ ஒழுங்கா பாக்கிறியா? அல்லது நான் பாக்கவா?” எண்டு கேட்பார். அது சின்ன பகவதியை உள்ளே இறங்க வைக்கும்.

சின்ன பகவதியை முடிந்தளவு மேலும் உள்ளே இழுத்து விட்டு - இனவாதிகள் 86-90 விளையாடிய அதே ராஜதந்திர விளையாட்டை இம்முறை நாம் விளையாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நிச்சயமாக நீங்களோ, @வாலி எழுதியதை பிரதேசவாத கண்ணோட்டம் என நான் கருதவில்லை. உங்கள் இருவர் பற்றியும் நான் அறிவேன்.

அது போல் முஸ்லீம்களுடன் ஒரு அலகில் அடங்கினால் பூரண ஆயுசு, நித்திய கண்டம் என்பதும் சரிதான் - ஆனால் ஒட்டு மொத்த வடக்கு- கிழக்கை அப்படியே பிரித்து விடுவது கிழக்கு தமிழர்கள் மீது தாரை வார்த்து மண்ணை போடுவதை போல என்பதை மட்டுமே நான் சுட்டினேன்.

3 hours ago, ரஞ்சித் said:

வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

 வடக்கில் இருக்கும் அதே சதவீதத்தில் கிழக்கிலும் தமிழர்கள் இதே நிலைப்பாட்டிலே உள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.

3 hours ago, ரஞ்சித் said:

வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

  வடக்கு தமிழரின் நோக்கம் இது என நான் சொல்லவில்லை. ஆனால் கிழக்கை அப்படியே (இப்போதுள்ளமாதிரியே) தனி அலகாக ஏன் விட முடியாது என்பதை விளக்கவே அப்படி எழுதினேன்.

3 hours ago, ரஞ்சித் said:

தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

பேசி தீர்க்க வேண்டிய கஸ்டமான விடயம் ( கல்முனை பிரதேச சபை கண் முன் வருமே?.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 

இது எனக்கான கேள்வி இல்லை என நினைக்கிறேன்🤣.

 

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

தமிழர் தரப்பு இது வரைக்கும் எதை விட்டுக்கொடுக்கவில்லை?

இனியும் விட்டுக்கொடுத்தால் ஈழத்தமிழினம் காங்கேசன் துறை கடல் வரைக்கும் சென்று விழுந்து சாக வேண்டியதுதான்.

எனது  முன்னய கருத்து சுயமாக தாயக  தமிழ்மக்களின் உரிமை தொடர்பாக மட்டும் சிந்திப்பவர்களுக்கானது  காங்கேசந்துறை என்று மக்களை உசுபேற்றிக்கொண்டு  பிராங்பேட்  தாயகத்தில் இருந்து  கட்சி/ இயக்க விசுவாசத்தை மட்டும் வைத்து   அந்தமனப்பாங்கில்  சிந்திப்பவர்களுக்கானதல்ல.

நீங்கள் அப்படி சிந்திப்பது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.  ஆனால் நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விடயம் தாயக மக்களின் உரிமை தொடர்பானது மட்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎12‎-‎2021 at 23:16, ரஞ்சித் said:

நான் எழுதியதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை கோஷான்.

நான் எழுதியதன் சுருக்கமும் இன்னம் சில விளக்கங்களும் கீழே 

1. வடக்கும் கிழக்கும் இணையக்கூடாதென்று விரும்புபவர்கள் முஸ்லீம்களும், கிழக்குத் தமிழர்களின் ஒரு பகுதியினரும் மட்டும்தான். நிச்சயமாக வடக்குத் தமிழர்கள் கிடையாது. வடக்கும் கிழக்கும் இணைந்த தேசமே தமிழர்களின் பூர்வீக தாயகம் எனும் நிலைப்பாட்டிலேயே வடக்குத் தமிழர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

2. வடக்கினைப் பெற்றுக்கொள்ள கிழக்கினை விட்டுக்கொடுத்தோ அல்லது பகடையாகப் பாவிப்பதோ நிச்சயம் வடக்குத் தமிழர்களின் நோக்கமும் அல்ல. வடக்கும் கிழக்கும் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்பும்போது அவர்கள் எதற்காகக் கிழக்கை விலையாகக் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

3. தமிழரின் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளுக்கான அதிகாரத்தினை நாம் கொடுப்பதன் மூலம்  நாம் , முஸ்லீம் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலிருக்கும் தமிழர் பகுதிகளுக்கான் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம், அல்லது தமிழரின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்துடன் இந்தத் தமிழர் சிறுபான்மைப் பகுதிகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் இணைத்துக்கொள்லலாம். 

4. கிழக்குத் தமிழர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லையெனும் காரணம், வடக்குடன் இணைவதை தடுக்கிறதெனும் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வடக்குடன் இணையாது இருப்பதால் மட்டும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழுதல் தடுக்கப்பட்டு விடுமா? இல்லையே? பின்னர் ஏன் இந்த வியாக்கியானம்? வடக்குடன் இணையாது, தனித்து இருந்தால், கிழக்கில் வெறும் 30 வீதத்தினை மட்டுமே கொண்டிருக்கும் தமிழர்கள் அங்கேயே சிறுபான்மையினராக்கப்பட்டுவிடுவார்கள் என்பதனை கிழக்கு தனித்து இருக்கவேண்டும் என்று கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? தமிழ்த் தேசியத்திலிருந்து விலகி, அதிகாரத்தில் இருப்போர் நோக்கிச் செல்லும் புதிய மனோநிலை, கிழக்குத் தனியாகப் போகும் பட்சத்தில் மிக இலகுவாக சிங்களவர்களாலோ அல்லது முஸ்லீம்களாலோ கிழக்கு முற்றாகச் சூறையாடப்பட்டுவிடும் நிலையினை உருவாக்கிவிடும் என்பதனை தனியான கிழக்கினைக் கோருவோர் புரிந்துகொள்ளவில்லையா? 
 

ஏன் வடக்கோடு ,கிழக்கை இணைத்து விட்டு உங்களுக்கு அடிமையாய் வைத்திருக்க பார்க்கிறீர்களா?
கேவலம் ஒரு பாராளுமன்ற எம்பி பதவியை கூட கிழக்குக்கு விட்டு கொடுக்க முடியாத ஆட்கள் தானே நீங்கள் .
தலைவரால் கூட இந்த பிரதேசவாதத்தை கட்டு படுத்த முடியவில்லை .
வந்திட்டார்கள் இவர்கள் வட,கிழக்கை இணைக்க😠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஏன் வடக்கோடு ,கிழக்கை இணைத்து விட்டு உங்களுக்கு அடிமையாய் வைத்திருக்க பார்க்கிறீர்களா?
கேவலம் ஒரு பாராளுமன்ற எம்பி பதவியை கூட கிழக்குக்கு விட்டு கொடுக்க முடியாத ஆட்கள் தானே நீங்கள் .
தலைவரால் கூட இந்த பிரதேசவாதத்தை கட்டு படுத்த முடியவில்லை .
வந்திட்டார்கள் இவர்கள் வட,கிழக்கை இணைக்க😠 

அதுவும் சரிதான்..  பனங்கொட்டையள் எங்களோட சேந்து கேடுகெட்ட சாதிப் பழக்கம் பழகாமல் கிழக்கு மக்களாவது தமிழன் எண்டுர ஒரே இனமா ஒற்றுமையா ஒண்டா நிம்மதியா ஒற்றுமையா இருக்கட்டும்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் ஒரு இனமல்ல ஓரு மதப்பிரிவு. தமிழ் பேசும் மக்கள் என்ற வகைக்குள் அவர்களுக்கு சில மதரீதியான சலுகைகளை வழங்குவது உள்நாட்டு அரசியல். இணைந்த வடக்கு கிழக்கு என்பது தமிழர்தாயகம் என்ற அம்சம் உடன்படடிக்கையில் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் இது சொல்லப்பட்டு இருக்கிறது.புலிகள் இரத்தம் சிந்திப் போராடி ஒருதீர்வு உடன்படிக்கைக்கு இணங்கிய பொழுது அதுவரை புலிகளைக்க் காட்டிக் கொடுத்த முஸ்லிம்கள் தீர்வுத்திட்டத்தில் தங்களுக்கம் பங்கு வேணும் என்று வரவில்லையா.ஆக தீர்வில் பங்கு வேணும் ஆனால்சிங்கள அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். நாளைக்கு அரசாங்கம் மாறி கக்கீமுக்கு அமைச்சர்பதவி என்றால் எல்லாறவற்றையும் விட்டு விட்டுப் போய்விடுவார்.கிழக்கு மாகாண சபையில் அதுதான் நடந்தது. அரசு கூட மாறத் தேவையில்லை. அமைச்சர் பதவி போதும். கக்கீம் மகிந்த >ரணில் இரண்டு அரசாங்ககளிலும் பதவி வகித்தவர். அவர்கள் கையெழுத்துப் போடாவிட்டால் அவர்களைக் கைகழுவிவிட்டு  கடிதத்தை அனுப்ப முயற்சித்தால் அவர்கள் வழிக்கு வருவார்கள். அல்லது அவர்களுக்குத்தான் நட்டம். தற்போதைய இந்திய அரசு முஸ்லிம்களைக் கொண்டாடும் அரசல்ல.தமிழர்கள்ஒரு பலமான சக்தி அதனால்தான் 30 ஆண்டுகாலம் பலநாடுகள்  அதரவுடன் இருந்த சிறிலங்கா அரசை எதிர்த்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்த முடிந்தது. இப்போதும் தமிழர்கள் ஒரு பலமான சக்திதான். ஆனால் சிறிலங்கா முஸ்லிம்களுக்கு எந்த வெளியாதரவும் இல்லை. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் நாடுகள் கூட அவர்களுக்கு உதவாது.தமிழர்கள் சீனாவுடன் பட்டும்படாத ஒரு பேச்சு வார்த்தையில் முனைப்புக் காட்ட வேண்டும். இதுவே இந்தி மேற்கத்தைய ஆரசுகளை வழிக்குக் கொண்டு வர உதவும். அதை விட்டு நாங்கள் இந்தியாவுக்குப் பாதகமாக நடக்க மாட்டோம் என்று அடம் பிடித்து தீவிர இந்திய விசுவாசம் காட்டினால் இந்தியா எங்களைக் கண்டு கொள்ளாது. இவர்கள் நாதியற்றவர்கள் எங்களை விட்டால் இவர்களுக்கு டவேறு வழியில்லை என்று நினைத்து செயல்படுவார்கள். இதுவே காலம் காலமாக நடந்து வருவது.எனவே இந்தியாவுக்கு சார்பு நிலையை எடுப்பதை குறைத்து இந்தியாவின் எதிரியுடன் நட்பு செய்து பார்த்தால் என்ன. இந்தியாவுக்கு சார்புநிலை எடுத்து ஒரு பலனுமில்லை என்பது வரலாறு எதிர்நிலை என்ற விடயத்தை ஏன் பரிசீலித்துப்பார்க்கக் கூடாது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழ்பேசும் மக்களின் தாயகம் அல்லது இதன் அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு தமிழ்பேசும் மக்களின் அரசியல்த் தலைமைகள் முயன்றுவரும் நேரத்தில் இதனைக் குழப்புவதற்கு சிங்களப் பேரினவாதம் தனது காய்களை நகர்த்த ஆரம்பித்திருப்பது தெரிகிரது.

அதன் ஒரு படியாக சிங்கள இனவாதியும், கோத்தாவின் அரசாங்கத்தில் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவை இதுகுறித்து பேச வைத்திருக்கிறது. வடக்குக் கிழக்கு இணைப்பென்கிற பேச்சிற்கே இடமில்லை. தமிழ் மக்கள் முன்னர் தமக்கு நடந்த அழிவுகளை ஒருமுறை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் களம் இறக்கி வடக்குக் கிழக்கு இணைப்பினை அனுமதிக்கப்போவதில்லையென்றும், தமிழர்களுடன் சேர்ந்து வாழுதல் சாத்தியமில்லையென்றும் கூக்குரலிட வைத்திருக்கிறது.

மூன்றாவதாக, கிழக்கின் விடிவெள்ளிகளில் ஒன்றும், வெறும் 50 கோடி ரூபாய்களுக்கு மகிந்தவனால் வாங்கப்பட்டவனும், அவனது வீட்டு வாசலில் கட்டிவைக்கப்பட்டிருப்பவனுமான  நன்றியுள்ள ஜீவன் வியாழேந்திரனைக் களமிறக்கி கிழக்கில் முஸ்லீம்களுடன் எந்த இணக்கப்பட்டிற்கும் இடமில்லையென்றும், வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஒருபோது அனுமதிக்கப்போவதில்லையென்றும் குரைக்க வைத்திருக்கிறது. இது இப்படியிருக்க, இந்த விடிவெள்ளிகளின் பின்னால் திரியும் அறிவற்ற கூட்டமொன்று இதனை வழிமொழிந்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை எதிர்பார்த்து காலத்தை வீணாக்குவதை விட தம்மாலியன்ற முயற்சிகளை எடுப்பது நல்லது. கிழக்கு தமிழர் வடக்கு தமிழருடன் சேர்ந்து வாழ விரும்பாவிட்டால் நிர்பந்திக்க வேண்டாமே. எமக்குரியத்தை எதற்காக விரும்பாதவர்களுக்காக இழக்க வேண்டும். விட்டு விலகினால் மட்டுமே இப்படிபட்டவர்கள் திருந்த இடமுண்டு. இல்லை இவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போவோம் என்று காத்திருந்தால் யாருமே போக வழியிருக்காது, எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிடும். இந்தியா இவர்கள் செய்கிற ஆரவாரத்துக்கு எடுபடப்போவதில்லை. இறுதியாக ஒரு சந்தர்ப்பம் அளித்து பார்ப்பது இல்லையேல் அவர்களை நெருக்கக்கூடிய தெரிவை நாங்கள் நாடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வு விவாதத்தில் .நசீரு சொன்ன விடையம்....தலைவர் கக்கீமுதான்...இப்ப நாங்கள் செய்யிறது இராச தந்திர நகர்வாம் ...கடைசி வரைக்கும்13  ஐ விடமாட்டினமாம்...அப்ப கக்கீமு எப்படி சைன் பண்ணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களுக்கு வேண்டிய நேரம் வைக்கட்டும். இவர்கள் அவர்களுக்காக காத்திருப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் கொப்பு கொப்பாய் தாவி திரிவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.