Jump to content

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

 

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

 

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

32 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

இவரைப் பார்த்தால் நித்தியானந்த சுவாமிகளின் சீடர்போலவும் தெரியவில்லையே.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

ஐயோ இந்த டிசைன் எல்லாம் எங்கிருந்து  கிளம்புறாங்கள் எண்டு தெரியலையே அல்லா காப்பாற்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pho__9_.JPG

அந்த மனம் தான் கடவுள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

 

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

 

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!


ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

Link to comment
Share on other sites

20 minutes ago, satan said:

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா தர்மப்பிரபுவே…நீங்கள் வாழும் ஊரிலா இப்படி வெயில் வாட்டுகிறது…🤭

5 hours ago, பிழம்பு said:

 

pho__9_.JPG

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

மனநல மருத்துவம். அங்கொடையில் அமைந்து இருப்பதால் அவ்வாறே அழைக்கிறார்கள். அங்கு வேறு பல முக்கியத்துவம் இருக்கலாம் ஆனால் இதை வைத்தே அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!


ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

மூச்சு காட்டாமல் இருங்கோ பொடியா 🤣 அந்தாள் இலங்கைப்பிசரை நீங்களும் உதவுங்கோ என்று போராடப்போகுது🤭😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்திலை மீன் சந்தேக்கை பாருங்க உவரின்ரை மனிசிகாரி நிண்டு விலை கூடிட்டெண்டு மீன்விக்கிறவையோட மல்லுகட்டி மீன்வாங்கிகொண்டு நிப்பா. இந்தாள் கிறெடிற் காட்டில உருவி கடனை கட்டிறமாதிரி கதைக்கிறார். கடனை அடைக்கிறதெண்டா அடைக்கவேண்டியதுதானே அதற்கேன் இவ்வளவு கூத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  வரவேற்கவேண்டிய  விடயம்

கனவு காண்பதில்  எதற்கு  கஞ்சத்தனம்??🤣

அவரது புத்திசாலித்தனம்  பிடித்திருக்கிறது?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

இதை, ஒரு தமிழ் அரசியல் தலைவர் சொன்னால், வலு இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னரும் இது குறித்து நானும் பகிடியாக எழுதி இருந்தேன்.

5 பில்லியன் டாலரை தருகிறோம். உங்கள் கடனை கட்டி நிம்மதியாக இருங்கள். அதேவேளை, ஐநாவுக்கு அறிவித்து, எங்களுக்கு எங்கள் நாட்டினை தந்து விடுங்கள். என்று... (இந்தாள் யாழ் வாசிக்கிறாரோ தெரியவில்லை).

எமில் சௌந்தரநாயகம் என்று ஒருவர், 1950களில் லண்டனுக்கு வந்தவர். இன்சூரன்ஸ் கொம்பனி ஆரம்பித்து அப்போதே மில்லியன் கணக்கில் சுத்தினவர். அவரது வீடியோ யூடூப்பில் உள்ளது.

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

அது சரி, சிங்கள அரசு இதனை கண்டுகொள்ளுமா?

பணம், அய்யா... பணம்... அவர்களுக்கு நாட்டினை அடைவு வைப்பதிலும், விடுதலை முக்கியம்.

சரி, பணத்தினை நாம் எங்கே பெறுவது. பெறலாம். பெறும் வழி குறித்து, ஓணாண்டியார் சொல்லுவார்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

அத்துடன் சேர்த்து, தென்பகுதியில் புகுந்த சீனத்து டிராகன், கிளப்ப வேண்டுமாயின், சிங்களத்துக்கு பணம் தேவை.

சிங்களத்துக்கு, இந்தியாவோ, அமெரிக்காவோ நேரடியாக பணம் கொடுக்காது. காரணம் தேவையில்லாத ராஜதந்திர சிக்கல்.

அங்கே இருக்கிறது... விசயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

இங்கே பதிந்த பலரும்... நகைச்சுவையா எழுதினர்.... நீங்களும் அந்த வழியே தான் போகிறீர்கள்.

பரவாயில்லை.... அந்த மனிதரை விடுங்கள்.

ஒரு விடயத்தினை சொல்லி விட்டு நகர்கிறேன். வெளியே போகவேணும்.

அசைக்க முடியாத, உலகே முன்னர் எப்போதுமே கண்டிராத மாபெரும் பேரரசு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விழுந்த கதை.... எங்கோ ஆஸ்திரியாவில் பிறந்த, ஜெர்மனியில் அதிகாரத்துக்கு வந்த ஒரு மனிதரால் தொடங்கியது. 

இன்று அந்த சாம்ராஜ்யத்தினை நடாத்திய நாட்டினுள், பிரிவினை குரல் கேட்க்கிறது.

1400 மைல்களுக்கு அப்பால் இருந்த அந்தமான் தீவுகளை, மலேசிய / சிலோன் கவர்னர் கீழ் இல்லாமல், டெல்லி கவனேர் ஜெனரல் கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசு அதே போல, 18 மைல் தொலைவில் இருந்த இலங்கையும் கொண்டு போயிருந்தால், நம்ம நாடு, இந்தியாவின் இன்னோரு மாநிலமாக இருந்திருக்கும். 

அதேபோல, ஜின்னா இல்லாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானோ, பங்களாதேசோ இருந்திருக்க முடியாது. 

உண்மையில் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மானா அல்லது ஜின்னாவா என்பது விவாதத்துக்கு உரியது. முன்னவர் பாகிஸ்தானில் இருந்து விடுவித்தார், பின்னவர், இந்தியாவில் இருந்து விடுவித்தார்.

1983 இனக்கலவரத்தின் பின்னர், குமுதம் இதழில் ஒரு கேள்வி. பங்களாதேஷ் போல, இந்திரா அம்மையார் இலங்கைக்கு இராணுவத்தினை, அனுப்பி, தமிழர்களுக்கு உதவ முடியாதா என்ற கேள்விக்கு, அரசு பதில்: ஒரு 250 மில்லி அடித்தால்.... இன்று கனவில் அப்படி நடக்கும்.

ஆனால் 1987ல் இந்தியா ராணுவத்தினை அனுப்பியது.

ஆகவே, எதனையும் நிராகரிக்க முடியாது.

இன்று ஒரு காத்திரமான தலைமை, தமிழருக்கு இல்லாமை ஒரு பெரும் குறை என்பதை ஏற்றுக் கொண்டு, எமது விடுதலை ஏதோ ஒரு சிறு பொறிக்காக காத்திருக்கின்றது, அது எங்கே இருந்து வரும் என்று தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டு நகர்வோம்.

Link to comment
Share on other sites

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

 

Link to comment
Share on other sites

10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

🤔

Link to comment
Share on other sites

3 hours ago, shanthy said:

 

 

10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

 

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

 

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

விடுதலைப்புலிகள் காலத்தில் இயற்கையால் பாதிக்கப்பட சிங்கள மக்கள் பகுதிகளுக்கு நிவாரண  உதவிகள் சென்றதாக செய்திகளும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார்

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

Link to comment
Share on other sites

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

திரைப்படத்தின் பெயரை சொன்னதுக்கு நன்றி @அக்னியஷ்த்ரா. அந்தப்படத்தில் ஒரு நீதிமன்றக்காட்சி வரும் அதில் விஜய் சொல்வார். 

"நான் அணையின் தீக்குச்சி இல்லை எரிகிற சூரியன்" இதையும் ஒருக்கா அந்த புண்ணியவானுக்கு சொல்லிவாட்டால் நல்லது.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

இப்படித்தான் நாதம்ஸ் இடைக்கிடை அடிச்சுவிடுவார்! எமில் சவுந்தரநாயகம்தான் தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோடி என்று வரலாறு எழுதினாலும் எழுதுவார்கள்🤪

எமில் தனது மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலபுலன்களை அமெரிக்க விமானப்படைத்தளம் அமைக்க லீஸுக்குத் தருவதாகவும் அதற்கு அவரின் மனைவியை யாழ்ப்பாணத்தின் இராணியாக்க உதவவேண்டும் என்று டீல் பேச முனைந்தார். திருகோணமலையை அவர் பிரஸ்தாபிக்கவேயில்லை.  எமில் 1968 இல் சிறையில் அடைக்கப்பட்டு 1974 கிறிஸ்மஸ் நேரம் வெளியே வந்தார். அதன் பின்னர்தான் அவர் இப்படியான டீலுக்கு வெளிக்கிட்டார். ஆனால் தனது 53 ஆவது வயசிலேயே 1976 இல் இறந்துவிட்டார்..

அவரைப் பற்றிய விவரணப்படம் 👇🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் நாதம்ஸ் இடைக்கிடை அடிச்சுவிடுவார்! எமில் சவுந்தரநாயகம்தான் தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோடி என்று வரலாறு எழுதினாலும் எழுதுவார்கள்🤪

எமில் தனது மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலபுலன்களை அமெரிக்க விமானப்படைத்தளம் அமைக்க லீஸுக்குத் தருவதாகவும் அதற்கு அவரின் மனைவியை யாழ்ப்பாணத்தின் இராணியாக்க உதவவேண்டும் என்று டீல் பேச முனைந்தார். திருகோணமலையை அவர் பிரஸ்தாபிக்கவேயில்லை.  எமில் 1968 இல் சிறையில் அடைக்கப்பட்டு 1974 கிறிஸ்மஸ் நேரம் வெளியே வந்தார். அதன் பின்னர்தான் அவர் இப்படியான டீலுக்கு வெளிக்கிட்டார். ஆனால் தனது 53 ஆவது வயசிலேயே 1976 இல் இறந்துவிட்டார்..

அவரைப் பற்றிய விவரணப்படம் 👇🏾

 

இஞ்ச பாருங்கோவன்....

எங்க வந்து, முட்டையில ஏதோ பிடுங்க நிக்கிறீர்கள்.....

யூரியூப்பில இருக்குது என்றேன்..... இரவு முழுக்க தேடி......

விடயம் அதுவல்ல...... அப்படி ஒரு டீல் போடு்ம் தில் இருந்திருக்கிறது.....

அதுவே இன்றைய தேவை..... அதனையே நான் சொல்ல வந்தேன். எமில் சரித்திரம் இல்லை.... நான் சொல்ல முணைந்தது...

புறோபைல் படத்து சின்னப் பொடி வேலை மாதிரி தான் இருக்குது..... இந்த குறிப்பு.... 🤦‍♂️🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.