Jump to content

இலங்கையில் உணவு தட்டுப்பாடு: "அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு" - மலையக தமிழர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

''அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு" என மலையக பெண்ணான மாரியம்மா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் ஆரம்பித்துள்ள உணவு நெருக்கடியின் தீவிரம் காரணமாக பட்டினியால் மக்கள் தவிக்கிறார்கள். இந்த பாதிப்பை அதிகம் எதிர்கொள்வது மலையக தமிழர்களாக உள்ளனர்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலத்தில், பஞ்சம் நிலவியது என்றால், அது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்த 1970 - 1977ம் ஆண்டு காலப் பகுதிகள் என வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

வெளிநாட்டு பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நடவடிக்கைகள் காரணமாக, குறித்த காலப் பகுதியில் நாட்டில் பஞ்சம் நிலவியதாக வரலாறு கூறுகின்றது.

இந்த காலப் பகுதியில் கூப்பம் முறையில் (பங்கீட்டு அட்டை முறை), பொருட்களை கொள்வனவு செய்ய மக்களுக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியிருந்த நிலையில், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசை வரிசையாக நின்றதாக கூறப்படுகின்றது.

 

அரசாங்கத்தினால் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கூப்பன்களை கொண்டு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும், மூடிய பொருளாதார கொள்கை காரணமாக பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு அந்த காலப் பகுதியில் நிலவியுள்ளது.

அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் 1970ம் ஆண்டு காலப் பகுதியில் பாரிய தட்டுப்பாடு நிலவியதுடன், அந்த காலப் பகுதி பஞ்சம் நிலவிய காலப் பகுதியாகவே வரலாற்றில் பதிவாகியது.

1970ம் ஆண்டு காலப் பகுதி 2021ல் மீண்டும் ஆரம்பம்

 
இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பெரும்பான்மை சமூகத்தின் வரவேற்பை பெரிதும் வென்ற ராஜபக்ஷ குடும்பம், மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

இவ்வாறு வலுப் பெற்ற கோரிக்கைக்கு அமைவாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.

இவ்வாறு ஆட்சி பீடத்தை கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், விவசாய ரீதியில் முக்கிய தீர்மானமொன்றை எடுத்தது.

விவசாயத்தில் தன்னிறைவு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், விவசாய கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்திருந்தது.

குறிப்பாக ஆட்சி பீடம் ஏறிய காலப் பகுதியில் இந்த அரசாங்கம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள், தானிய வகைகள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், மஞ்சள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விலைகள், அந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்திருந்தன.

இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் திட்டத்தை அரசாங்கம் அதிரடியாக அறிவித்திருந்தது.

இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செய்கை உரத்திற்கு தடை விதித்து, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்குமாறு விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

திடீரென இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் அறிவிப்பு வெளியான நிலையில், விவசாயிகள் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்க ஆரம்பித்தனர்.

விவசாய உற்பத்திகளை அறுவடை செய்வதற்கான காலம் எட்டிய போதிலும், உரிய வகையில் உரம் கிடைக்காமையினால், விவசாய உற்பத்திகள் உரிய வகையில் அறுவடை செய்யப்படவில்லை.

இதையடுத்து, இலங்கையிலுள்ள அனைத்து விவசாயிகளும் வீதிகளில் இறங்கி போட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி

பல மாத கால போராட்டம் தொடர்ந்த போதிலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து பின்வாங்காத நிலையில், இந்தியாவிலிருந்து திரவ உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கியது.

எனினும், அந்த உரத்திலும் திருப்தி கொள்ளாத விவசாயிகள், தொடர்ந்தும் போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

 
இலங்கை தட்டுப்பாடு
 
படக்குறிப்பு,

சமையல் எரிவாயு வாங்க காத்திருக்கும் நுகர்வோர்

இவ்வாறான பின்னணியில், அண்மையில் செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது எனவும் அறிவித்திருந்தது.

பல மாதங்களுக்கு பின்னர், நாட்டிற்கு உரம் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்த நிலையிலும், டொலர் பற்றாக்குறை காரணமாக உரிய வகையில் இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தடை விதிக்கப்படுவதற்கு முன்னர் சுமார் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட செய்கை உரம் , தற்போது 8000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 
இலங்கை தட்டுப்பாடு

விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்னைகளினால், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், சந்தைக்கு வரும் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

மரக்கறி வகைகள் சிலவற்றின் விலைகள் (ஒரு கிலோகிராம்)

பீன்ஸ் (பேஞ்சி) :- 460.00 - 480.00 ரூபா

கேரட் :- 420.00 - 460.00 ரூபா

லீக்ஸ் :- 260.00 - 280.00 ரூபா

கோவா (முட்டைக்கோஸ்) :- 270.00 - 280.00 ரூபா

இதேவேளை, ஒரு கிலோகிராம் அரசியின் விலை 105 ரூபா முதல் 215 ரூபா வரை காணப்படுகின்றன.

 
காய்கறிகள்

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை அண்மையில் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பின்னணியில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 140 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசை வரிசையாக நிற்பதை காண முடிகின்றது.

சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, பால்மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசைகளில் நிற்பதை காண முடிகின்றது.

அன்று சமையல் எரிவாயு அடுப்புக்களில் சமையல் செய்த மக்கள், இன்று மண்ணெண்யை மற்றும் விறகு அடுப்புக்களில் சமையல் செய்யும் காலம் உருவாகியுள்ளது.

பஞ்சத்தில் மக்கள்

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

கேகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை சந்தித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்துக்கொண்டது.

தெஹிஓவிட்ட பகுதியைச் சேர்ந்த மாரியம்மா, தனது வறுமையை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார்.

 
இலங்கை
 
படக்குறிப்பு,

மாரியம்மா

''அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் நாங்க ஐஞ்சு பேர். எங்க ஐஞ்சு பேரையும் எங்க அப்பா ஆதரிச்சாரு. அப்போ எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. அந்த நேரம் உரம் இருந்துச்சு. இந்த நேரத்துல ஒன்னுமே செய்துக்கொள்ள வசதி இல்ல. உரம் இல்ல. இன்னைக்கு, அரை வயிறும், கால் வயிறும் கஞ்சை குடிச்சுக்கிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு. கடைக்கு சாமா வாங்க போனா கட்டுக்கணக்குல காசு வேண்ணு. எங்க போய்ட்டு களவேடுக்குறது? யாரு கொடுப்பா?. ஏன் இந்த மாதிரி பொருட்கள்ட விலைய ஏத்துறீங்க. பஞ்ச காலத்துல கூட நல்லா இருந்தோம். அப்ப கூட வயிறு நிறைய சாப்பிட்டோம். நல்ல உடை உடுத்துனோம். நாகரிகமா இருந்தோம். இப்போது கேவலமா இருக்கு. யார பார்த்தாலும் சோர்ந்து போய் தான் இருக்காங்க. இவ்வளவு காலமாக இப்படி ஒரு பஞ்சம் தெரியல. இப்ப தெரியுது பஞ்சம்" என மாரியம்மா தெரிவித்தார்.

தன்னால் இனி எவ்வாறு வாழ முடியும் என்று தெரியவில்லை என கேகாலை பகுதியைச் சேர்ந்த மோரினா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.

 
இலங்கை
 
படக்குறிப்பு,

மோரினா

''என்ன செய்ய போறோமோ தெரியாது. தோட்டத்துல வேல இருந்தும், வேல இல்லை. எங்களுக்கு 1000 ரூபா சம்பளம் கொடுத்தாலும், அந்த 1000 ரூபாவிற்கு இரண்டு பொருள வாங்க முடியல. ஒரு கொத்து அரிசில எத்தனை நாளுக்கு நாங்க சாப்பிடுவோம். எப்படி தான் பிழைக்க போறமோ, எப்படி தான் வாழ போறோமோ தெரியாது. எங்கட நிலைமைய பார்க்க யாருமே வர மாட்டீங்களா? ஏன் நாளுக்கு நாள் விலைவாசிய இப்படி கூட்டுறாங்க. எப்படி நாங்கள வாழ போறோம்?. எங்க பிள்ளைகள நல்ல நிலைமைக்கு கொண்டு வரனுனு எங்களுக்கும் ஆசை இருக்கு தானே?. உப்பு வாங்கினா, கொச்சிக்காய் (மிளகாய்) வாங்க முடியல, கொச்சிக்காய் வாங்கினா, அரிசி வாங்க முடியல. எல்லாம் விலை. தேங்காய் ஒன்று 100 ரூபானு சொல்லுறாங்க. மா 300 ரூபானு சொல்லுறாங்க. நகர பகுதியில குறைவாக இருக்கு. எங்க தோட்ட பகுதியில விலை அதிகமாக இருக்கு. வாழ முடியல" என கண்ணிருடன், மோரினா தனது துயரங்களை பகிர்ந்துக்கொண்டார்.

நகர பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும், பினதங்கி பகுதிகளில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

 
இலங்கை உணவு தட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இலங்கையில் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்தப்பட்டமையினால், நாடு முழுவதும் உள்ள கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையான அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

பின்தங்கிய பகுதிகளிலுள்ள வியாபாரிகள், நகர் பகுதிக்கு வருகைத் தந்து பொருட்களை கொள்வனவு செய்து, அந்த பகுதிக்கு கொண்டு செல்லும் போது, பொருட்களுக்கான விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்தப்பட்டமையினால், நாடு முழுவதும் உள்ள கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையான அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

எனினும், தமது நாளாந்த சம்பளத்திற்கான இன்றும் போராடி வரும் மலையக மக்கள், இன்று இந்த பிரச்சினை காரணமாக நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளதை கள ஆய்வின் ஊடாக எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

 
KRISHANTHAN

பட மூலாதாரம்,KRISHANTHAN

 
படக்குறிப்பு,

அரசுக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராடும் பொதுமக்கள்

நாட்டில் பொருட்களுக்கான விலையேற்றத்தை கண்டித்தும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் தீபந்தம் ஏந்திய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாகவே நாளாந்தம் இரவு வேளைகளில் தீ பந்தங்களை ஏந்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2022 சித்திரை புத்தாண்டில் கடும் பஞ்சம் - எச்சரிக்கும் ரணில்

 
ரணில்

பட மூலாதாரம்,UNP MEDIA

 
படக்குறிப்பு,

ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர்

நாட்டில் டொலர் பிரச்னை உக்கிரமடைந்துள்ள நிலையில், அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இந்த பிரச்னை காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்து, தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்;.

அத்துடன், மத்திய தர வர்த்தகத்தினர் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளதுடன், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு அவசியம் என அவர் கூறுகின்றார்.

கோவிட் வைரஸ் தாக்கம் இருந்தாலும், 2021ம் ஆண்டு பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை காண்பித்துள்ளன.

தனக்கு கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, எதிவரும் சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறுகின்றார்.

''இந்த பிரச்னைகளை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்று திட்டத்தை அறிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், தற்போது கோபத்திலுள்ள மக்கள், கிளர்ச்சியில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். அந்த கிளர்ச்சியானது, அரசாங்கத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். கடனுக்கு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவுடன் பேசி, அந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்" என ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

அரசாங்கத்திற்குள் மாறுப்பட்ட கருத்துக்கள்

இலங்கையில் உணவுக்கான பஞ்சம் ஏற்படாது என்பதனை தான் உறுதியாக கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

 
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

பட மூலாதாரம்,MAHINDANANDA ALUTHGAMAGE FB

 
படக்குறிப்பு,

மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாய அமைச்சர்

எனினும், அரசாங்கத்தை அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் மாறுப்பட்ட கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வீட்டுத் தோட்டங்களை செய்யுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, இலங்கையில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

நாட்டில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் வகிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அரசாங்கம் உணவுக்காக தட்டுப்பாடு வராது என கூறுகின்ற போதிலும், தாம் இன்றும் ஒரு நேரம் அல்லது இரண்டு நேரம் உணவை உட்கொண்டே வாழ்ந்து வருவதாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உணவு தட்டுப்பாடு: "அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு" - மலையக தமிழர்கள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டு கால போரை ... என்டு வீர "வசனம்" பேசினால் சிங்கள சனம் வயிறு நிறையும்..

பாவம் இந்த சனம் என்னப்பா செய்யும் ? ஒன்று சாப்பாட்டுக்கு வழி செய்யும் இல்லை பசியாற்றும் "வசனத்தை" ரெடி செய்யும் .. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

30 ஆண்டு கால போரை ... என்டு வீர "வசனம்" பேசினால் சிங்கள சனம் வயிறு நிறையும்..

பாவம் இந்த சனம் என்னப்பா செய்யும் ? ஒன்று சாப்பாட்டுக்கு வழி செய்யும் இல்லை பசியாற்றும் "வசனத்தை" ரெடி செய்யும் .. 😢

வெல்ல முடியாது என்று  எல்லோரும் சொன்ன போரை வென்றெடுத்த இராணுவம்  இதனையும் வெல்லும்.                     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழர்களின் நிலைமை முன்பு இருந்தே மோசம் இனி ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.