Jump to content

புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை - ஜெஹான் பெரேரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் இலங்கைக்கு மனமாற்றம் தேவை

மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும்  ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது   வீழ்ச்சியடைந்துள்ளன.

எரிவாயு  சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளைகளின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர்

000000000000000000

ஜெஹான் பெரேரா

 நாட்டை  சீரமைப்பதற்கு சில வருடங்கள் இலங்கை இராணுவத்தினர்  தேசத்தை   ஆள வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான  ஜனாதிபதி செயலணிக்  குழுவின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர்,கருத்து தெரிவித்துள்ளார்.

gnasara1-1-300x174.jpg

அவர்தனது  பேட்டியை வழங்கி இருந்த  தமிழ் மொழிமூல  ஊடகத்தால் சரியான முறையில்  தெரிவிக்கப்பட்டிருந்தால் , அவரது வலியுறுத்தலில் மறைமுகமாக இருப்பது ஜனநாயகத்தின் மீது அவருக்கு உள்ள நம்பிக்கையின்மையாகும் ..

மேலும் மறைமுகமாக, மேலிருந்து -கீழாக  முடிவெடுப்பதில் விருப்பம் உள்ளமை  இராணுவத்தில் இயல்பாக மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்துகிறது.

இதுவரை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு மக்களின் மனங்களுக்குள் மவுனமாக இருந்தது, ஆனால் அது காலப்போக்கில் பொருளாதாரத்தில்  செங்குத்தான சரிவு  ஊழல் மற்றும் தண்டனைவிலக்கீடு  அதிகரிப்புடன் வெளியே கசிந்து விடுவதாக உள்ளது .. மக்களின் விரக்திபொது வடிவம் பெறுவதற்கு முன் கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இன்று நாட்டின் நிலைமை குறைந்த அல்லது நிலையான வருமானம் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. சமீப காலம் வரை அவர்களால் முடிந்ததைபோன்று   தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க அவர்கள் சிரமப்படுகிறார்கள்.

அவர்களின் சம்பளம் கடந்த ஆறு மாதங்களாக மாறவில்லை, ஆனால் அரிசி, இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற முக்கிய உணவுகளின் விலைகள் கூட உயர்ந்துள்ளன. அரசாங்கம் தனது கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறினால் மற்றும் அவர்கள் மீதான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், மக்கள் இன்னும் மோசமான அளவில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் உள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என வாட்ஸ்அப் செய்தி மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட விவசாயத்துறை  செயலாளர்  எச்சரித்திருந்தார். ஏற்கனவே துறைமுகங்களில் கப்பல்களும்,கொள்கலன்களும் உள்ளன, அவற்றுக்கு செலுத்தவேண்டிய  அந்நியச் செலாவணிஇல்லாததால், அவற்றை விடுவிக்க  முடியவில்லை.

food1-300x200.jpg

இந்த நெருக்கடிக்கு மத்தியில் செல்வச் செழிப்புடன் வாழும் மக்கள் குழுக்களும் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் நத்தார்  விடுமுறையை அனுபவிக்க ஓய்வு கொடுப்பது  பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். அவர்களில் 60 பேர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை  வெளியிட்டுள்ளன. நாடு எதிர்கொள்ளும் டொலர் பற்றாக்குறையை அவர்கள் எதிர்நோக்கவில்லை . பெருந்தொகையான மக்கள் இவ்வளவு மோசமான  நிலையில் இருக்கும்போது  போது அவர்கள் எப்படி நன்றாக இருக்கிறார்கள் என்பது கேள்வி. ஆட்சியாளர்ககளினதும்  ஆளப்படுபவர்களினதும்  வாழ்க்கை முறைவெகு தொலைதூரத்தில்  உள்ளது என்ற எண்ணப்பாடு அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வெளிப்படும் கேலியும் கூச்சலும் விளக்ககூடும் . ‘அவர்கள் கேக் சாப்பிடட்டும்’ என்பது பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர்  பிரான்சின் ராணியான மேரி-அ ன்டனெட் கூறியிருந்த  மேற்கோள்காட்டப்படும் வார்த்தையாகும்.

நத்தார்  சமாந்தரங்கள்

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நத்தார்  கொண்டாடுவது குறித்து கத்தோலிக்க பாதிரியாரும் இறையியலாளருமான அருட்தந்தை அலோசியஸ் பீரிஸ்  கட்டுரையொன்றை  எழுதியுள்ளார். அவர் இயேசு கிறிஸ்து பிறந்த காலத்தைப் பார்த்து, தனது அவதானிப்புகளை மேற்கொண்டு , வாசகர்களை அவர்களின் தீர்மானங்களுக்கு வரவைக்கிறார். மத்திய கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை, இன்று இலங்கைக்கும், ஏனைய நாடுகளுக்கும் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில்பலதரப்பட்ட  ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டுகளில் , உன்னதமான தனிநபர்கள்  மற்றும் மக்கள் குழுக்களின் போராட்டங்கள், இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நிறுவனரீதியான  வழிமுறைகளை உருவாக்க வழிவகுத்துள்ளன என்பது நம்பிக்கையின் செய்தி. அதை செயற்படுத்தும் சவாலை ஏற்க தலைமைத்துவம் வழங்குவதற்கு  தயாராக உள்ள தலைவர்கள் தேவை.

அருட்தந்தை பீரிஸ்  அவர்களின் நத்தார் பதிவிலிருந்து   நாம் வரையக்கூடிய ஐந்துசமாந்தரங்கள்  உள்ளன. முதலாவதாக, இயேசு வாழ்ந்த அக்கால ஆட்சியாளரான கலிலேயாவின் ஏரோது அந்நிய சக்தியை (ரோம்) சார்ந்து இருந்த ஆட்சியாளர் என்று வர்ணிக்கிறார். அவர் மற்றொரு நாட்டினால் பயன்படுத்தப்பட்டார், அது அவர் மூலம் தனது சொந்த மக்களை அடிமைப்படுத்தியது. இரண்டாவதாக, ஏரோது தனது தந்தையால் தொடங்கப்பட்ட துறைமுகம் மற்றும் ஜெருசலேம் கோவிலைக் கட்டுதல் போன்ற முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டார். அதனால் மத குருமார்களின் ஆதரவைப் பெற முடிந்தது. மூன்றாவதாக, உயிருக்குப் பயந்து வாழ்ந்ததால், ஏராளமான மெய்க்காவலர்களுடன் வாழ்ந்தார்.

நான்காவது சமாந்தரம் , அரசர் அரசியல் ரீதியில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தார், இது அவரை வன்முறையில் ஈடுபட வைத்தது. வேறொரு ராஜா பிறக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டபோது (இயேசு, தன்னைப் போன்ற ஒரு உலக ராஜா என்று தவறாகக் கருதினார்) புதிதாகப் பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, உயிர்த்த ஞாயிறு   குண்டுவெடிப்பு மற்றும் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்குப் பிறகுஇடம்பெற்ற  தேர்தல்களைப் போலவே, நாடு தழுவிய இரத்தக்களரி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் முதல் நத்தார்  நடந்தது.

ஐந்தாவது, ரோமானிய பேரரசர், அகஸ்டஸ், தன்னை ஒரு கடவுள் என்று நம்பினார், மேலும் தனது வளர்ப்பு மகனை தனது வாரிசாக வளர்த்தார். அருட்த ந்தை தனது கட்டுரையை ஊக்கத்துடன் முடிக்கிறார், ‘வன்முறை மற்றும் அடக்குமுறைகளில் இருந்து நம்மை விடுவிப்பதான  வாக்குறுதியுடன் நம் மத்தியில் இருக்கும் சமாதானத்தின் இளவரசர், போர் ஆயுதங்களால் அல்ல, நிராயுதபாணியாக  , தனியாக அல்ல, நல்லெண்ணம் உள்ள அனைத்து மக்களுடனும்,அவர்கள் மத்தியில் இருக்க வேண்டுமென  வெளிப்படையாக நம்மை எதிர்பார்க்கிறார்.

இலங்கை புத்தாண்டை நோக்கிச் செல்லும்போது தண்டனைவிலக்கீடு  மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள்பாரிய  அளவில் உருவாகின்றன.

மக்கள் செய்த   தவறுகளுக்கு பொறுப்புக்கூறுமாறு  கேட்பது அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் அல்லது அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக  ஆதாரங்களில் இல்லை. சில மாதங்களுக்கு முன் உயர் பாதுகாப்பு சிறைச் சாலைக்குள்  நுழைந்து  அமைச்சர் ஒருவர் துப்பாக்கியால் கைதிகளை மிரட்டினார். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டாலும் முடிவு தெரியவில்லை.உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்பு, சீனி ஊழல், மத்திய வங்கி ஊழல் போன்றவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளைத் தேடும் பணி இன்னும் முடங்கிக் கிடக்கிறது. நியூ போர்ட்ரெஸ்  மின் நிலைய ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது. நேர்மையுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றத்தில் சவால் செய்யவோ அல்லது அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவோ முடியாது என்று கூறும் அரசாங்க அதிகாரிகளுக்கான விலக்கீட்டு விதி நீக்கப்பட வேண்டும், அத்துடன்  அவர்கள் சட்டத்தின் நிர்வாகிகளாக பொறுப்பேற்க வேண்டும் மற்றும் தேவையான போது குற்றம்சாட்டப்படவேண்டும்

எரிவாயு  சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் விவகாரத்தை சாதாரணமாக பார்ப்பது தண்டனைவிலக்கீட்டிற்கு மற்றொரு உதாரணம். கடந்த சில மாதங்களில் மக்கள் தங்கள் சமையல் தேவைக்காக பயன்படுத்திய 800 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன. மூன்று சிறு பிள்ளை களின் தாய் உட்பட குறைந்தது ஏழு பேர் பலியாகியுள்ளனர் . ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் கண்டுபிடிப்புகள் சிலிண்டர்களுக்குள் உள்ள வாயுக்களின் கலவை மாற்றப்பட்டது, இது சிலிண்டர்களுக்குள் அழுத்தம் அதிகரிக்க வழிவகுத்தது. ஆனால் பாதுகாப்பிழும் பார்க்க  இலாபத்தை  முன்னிறுத்துபவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு என்பது பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. உயிரிழப்பின் சுமை, அல்லது வீடுகள் எரிந்து சாம்பலானமை போன்றவற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், சக்தியற்றவர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம், இது இன்று நம் நாட்டில் உள்ள உயிர்களின் ஒப்பீட்டு மதிப்பின் அவமானகரமான அறிகுறியாகும்.  வசதி கள் குறைவானோரை   கவனித்துக் கொள்ளும் பாரம்பரிய நெறிமுறைகளில் பெருமை கொள்ளும் ஒரு நாகரிகமான  நாட்டில் இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஏரோது மன்னன் மற்றும் ஏகாதிபத்திய ரோமானியப் படையின் காலத்திலிருந்து, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில்,சிந்தனைகளும் ஆட்சி முறைகளும் உருவாகியுள்ளன. அந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டியதில்லை. தனிநபர்களை குறிவைப்பதை விட, முறைமைகள்  மாற வேண்டும். அதிகாரத்தைச் சரிபார்த்து சமநிலைப்படுத்தும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, தண்டனையிலிருந்து விலக்கப்படுவதைத் தடுக்கும், நேர்மை மற்றும் ஊழலற்ற தரத்தில் அரசாங்கத் தலைவர்களை நிலைநிறுத்தும் நிறுவனங்கள், இந்த வாரம் மறைந்த பிஷப் டெஸ்மண்ட் டுட்டு போன்ற மகத்தான மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்களின் தியாகத்தால் கிடைக்கின்றன. . ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச, அவரது ஆலோசகர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியோரின் மனப்பான்மை இலங்கையின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதுடன்   நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் இன்று மௌனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அறியாதவர்கள் அல்ல மேலும் பல பேரரசுகளும் (மற்றும் அரசாங்கங்களும்) தண்டனைவிலக்கீடும்  ஊழலும் எல்லை மீறிச்செல்லும்போது   வீழ்ச்சியடைந்துள்ளன.

 

https://thinakkural.lk/article/158333

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.