Jump to content

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.


Recommended Posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட தீர்வு.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நசீர் அகமட்..சம்பந்தர் ஐயாவின் வண்டியைத் தடவி (ஆதார புகைப்படம்  யாழிணையத்தில் இப்பவும் இருக்கு)கிழக்கு மாகாணமுதல்வர் பதவி எடுத்தபின் ...கிழக்கில் செய்த அநீதி கணக்கில் அடங்காது..அதுவும் புல்லாவுடன் சேர்ந்து பறித்த காணிகள்  அதிகம் ..பதவி பறிப்பும் அதிகம்....இதிலை பெரிய அளவிலை படம் அடித்து...அதுக்கு கலர்  அடித்து...கலர் காட்டி வாக்கு ,துவேசம் பரப்ப முனைகின்றார்...அதைவிட புலிப் பூச்சாண்டிகாட்டவும் முனைகின்றார்...போதாக்குறைக்கு..நடுவரும் சாணாக்கியனை சாடமுனைகின்றர்...சாணக்கியனனின் சாணக்கியமான விவாதத்தினால் அதிகம் அடக்கப்படுகிறார்...இந்த விடையத்தில் சாணக்கியனுக்கு சபாஸ்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அவரை 12 வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் எந்தவித இனவாதமோ, மதவாதமோயின்றி செயற்படும் ஒரு மேலதிக அரசாங்க அதிபர். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார். எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.

சந்திரிகா பண்டார நாயக்க அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும். அது வர்த்தமானியல்ல. முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார். அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.

பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம்.


அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்டம். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள். அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும், காராமுனையும் உள்ளது. அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது. இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர். இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ன போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.

அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன. கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி. தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும். அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்க விரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள். அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.

தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது. ஆனால் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார்.

இது கூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டு தெரிந்தாவது பேசியிருக்க வேண்டும்.

நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார்.

காணிக்களவு  காணிக்களவு என்று அடிக்கடி கத்திய நசீரு அகமதுவுக்கு..இது நல்ல பதிலடி...(வியாழேந்திரன் பேச்சில் இருந்து)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, lusu said:

 

அற்புதமான கருத்துக்கள். 

இவர் போன்று சிந்திக்கும் தமிழ்பேசும் சமூகம் உருவாகவேண்டும்.இவரின் உண்மையான பேச்சு இலங்கை இஸ்லாமிய  தமிழர்கள் தொடர்பான என் தனிப்பட்ட நிலைப்பாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழ்பேசும் சமூகமாக ஒன்றிணைவோம். அடிமட்ட சாதாரண மக்களின் மனங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டங்கள் தொடங்கப்படல் வேண்டும். என்னால் முடிந்த அத்தனை உதவிகளும் இருக்கும். 

 

நேற்றும் கூட பேரினவாதி கோட்டா தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டதாக அவருக்கு ஒரு விருது வழங்கும் நிகழ்வில் தெரிவித்து இருக்கின்றார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.