Jump to content

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.

January 2, 2022

spacer.png

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

https://globaltamilnews.net/2022/171280

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

Link to comment
Share on other sites

அப்ப மொத்தம் இந்தியாவிலிருந்து எதிர்பார்த்த மூன்று பில்லியன் டொலர் கிடைக்கவில்லை ஆக 50 மில்லியன் டொலர் கிடைக்கிறது மிச்சமெல்லாம் இந்தியாவிலிருந்து வருகிற சாமானுக்கு கடன் இதுக்குள்ள மகாராஜா லிமிடெட் கம்பெனி வடக்கு கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய விடுகிறார்கள் இல்லை தங்களின் பொருளாதார இலாபத்திற்காக இப்படியே போனால் அடுத்த ஐந்து பத்து வருடங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்த அபிவிருத்தியும் செய்யப்படுவதற்கு நிதி இல்லை இதே நேரம் சீனா வந்தால் அவர்களுடைய அரசியல் பொருளாதார நிலைமைகளையும் 
எங்களுடைய பொருளாதார அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு எங்கள் முதலமைச்சர் வடிவாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த அபிவிருத்தி செய்வது நலம்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த திருப்பதி செல்ல பயன்படுத்திய  விமானம் யாருடையது?, பெப்ருவரி 2021 இலங்கையிலிருந்து உகண்டா நாட்டுக்கு அச்சடித்த தாள்கள் என்ற போர்வையில் தனி விமானத்தில் கொன்டுசெல்லப்பட்ட 102 தொன் எடையுள்ள பொதியின் மர்மம் என்ன என்பன போன்ற பல விடயங்களுக்கு பதில் இல்லாமல் மர்மம் நீண்டு கொன்டு போகும் இந்த வேளையில் இலங்கைக்கு புதிய பணப்பரிமாற்றம் நிகழ்வது இராஜபக்சக்களையும் இலங்கை அரசாங்கத்தையும் ஊழல், பணமோசடி பாதையில் தொடர்ந்து பயணிக்கவே தூண்டும்.

உலக வங்கி, சர்வதேசநாணயநிதியம் போன்ற பொது இஸ்தாபனங்களிடம் உதவி பெறாமல் அண்டைநாடுகளிடம் கையேந்துவதிலும் இலங்கை அரசாங்கத்துக்கு இரட்டிப்பு இலாபம்தான். மக்கள் நலன், அபிவிருத்தி சார்ந்த நிபந்தனைகளுக்கு பணியவோ  நாட்டின் கணக்கு விபரங்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் தேவையோ இலங்கை அரசுக்கு இனி இருக்காது.

தமிழரான வேலுப்பிள்ளை கணநாதனை உகண்டாவிற்கான தூதுவராக நியமித்து தூதரகத்தில் பெருமளவிலான டொலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அதுவே முடிவில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட காரணமானது என்ற கதையும் உண்டு.

https://www.colombotelegraph.com/index.php/what-is-the-ugandan-link-and-shady-dealings-with-sri-lankas-kings/

https://www.sundaytimes.lk/210418/news/sla-uplifts-102-tons-of-printed-material-to-uganda-but-refuses-to-give-details-440509.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

27 minutes ago, MEERA said:

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

🤣நல்லவேளை என்ர மருமக்கள் யாரும் யாழ் களத்தை வாசிப்பதில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

👆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

ஓம். நன்றி.

இந்தியா கொடுக்கும் காசுக்கு தன்னிடம்தான் சாமான் வாங்க வேண்டும் (எரிபொருள் தவிர) எண்டு சொல்லி இருக்கு. லாபத்துக்கு லாபம். கடனும் திரும்பி வரும் (வருமா 🤣).

ஆனால் கடன் வாங்குவதிலும் ஒரு இராஜதந்திரம்.

சீனாட்ட 150 vs இந்தியா+கட்டார் 150

அவை கடனை காட்டி சலுகைகள் கேட்டா, இவைய காட்டலாம். இவை கேட்டால் அவைய காட்டலாம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

 

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

கோடி என்ற சொல் வந்தோன்ன, ரூபாய் என்று நினைத்து விட்டேன்.

நன்றி..... அப்ப சிறியர் சொன்னது சரிதான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

இந்த இலட்சம், கோடிகளை விடுமட்டும் நம்பர் குழப்பம் இருக்கும்!

Sri Lanka : Sri Lanka to receive $ 1 billion loan from India to alleviate food and medicine shortages

Jan 01, Colombo: India has reportedly agreed to provide a $ 1 billion loan to Sri Lanka, as a solution to the dollar shortage, for the import of essential food items and medicines.

According to government sources, the loan will be given not as cash but as a loan facility for goods imported from India, Sinhala daily Lankadeepa reported.

It is learned that in addition India has agreed to provide US $ 500 million loan for fuel purchases and US $ 400 million as an exchange loan. 

The loan facility will be provided as a result of a discussion held by the Minister of Finance Basil Rajapaksa with the Indian authorities during his recent visit to India.

Meanwhile, government sources said that a loan of US $ 1.500 billion was received from China recently and that a loan of US $ 500 million is to be received from Qatar on a one-year repayment basis.

 

http://www.colombopage.com/archive_22A/Jan01_1641055594CH.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

நொச்சி,

போராடியது தவறு என எழுதுவதை மறுத்து நாம் ஆயிரம் கருத்தை முன்வைக்கலாம். அதை தவறு என நிறுவலாம். நானும் பலரும் பத்தி பத்தியாக எழுதி உள்ளோம். 

மாறாக அதை எழுதுவதையே தடுத்தால் - அந்த கருத்து வேறு தளங்களில் கேள்வி இல்லாமல் சொல்லபடத்தான் போகிறது. 

யாழில் கூட அதை எதிர்து எழுதவில்லை, அப்படி எழுதுவதே தடை எண்டால் அந்த கருத்து எதிர்க்கப்படாமலே போகும்.

தவிரவும் அரசியல்வாதிகள் சாத்தியமில்லாத தனிநாட்டு கோரிக்கையை சுயநலமாக முந்தள்ளினார்கள் என எழுதுவதும், போராடியதே தவறு என்பதும் ஒன்றல்ல.

நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு நம் எல்லாரின் பதிலும் ஒண்டாக இருக்க வேண்டியதில்லை. எனது பதில் “ஓடி வந்தேன்”, என்று இருக்க இன்னொருவர் பதில் “நான் எதுவும் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன்” எனவும் இருக்கலாம்.

அனைத்தையும் விட சர்வவல்லமையும், தூக்கும் உரிமையும் கையில் இருக்க, அதை இதுகாறும் பெரும்பாலும் சரியாகவே பயன்படுத்தியது போல் தொடர்ந்தும் செய்யலாம்.

கையில் சுத்தியல் இருக்கு என்பதால் ஆணிகளை தேவையில்லாமல் புடுங்கதேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

 

ஐயா கோசான்,

முன்பும் ஒரு முறை நான் இப்படி எழுதியிருந்தேன்.

"" இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக, தன்னை தற்காத்துக்கொண்ட சிங்களம், இன்னும் ஒரு இருபத்தைந்து/ஐம்பது  வருடங்கள் தன்னை தற்காத்துக்கொள்ளாதா""

என எழுதியிருந்தேன். இந்த வசனத்தை  புரிந்துகொண்டவர் மிகச் சிலரே. 

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நான் முதலமைச்சர் என்று சொல்லிவிட்டேன் மாகாண முதல்வர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நொச்சி,

போராடியது தவறு என .................................

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 

இல்லை நொச்சி,

தமிழ் தேசியம் என்பது அற்புதமான, எமக்கு மிகவும் பொருத்தமான, வேறு நிகரான மாற்றுகள் இல்லாத கொள்கை.

ஆனால் அது ஒன்றும் குரானும் அல்ல நாங்கள் முஸ்லிம்களும் அல்ல.

அவர்கள் தமிழ் தேசியத்தை தேவையில்லை என்று எழுதினால் அது ஏன் தேவை என்று பதில் எழுதினால், மறுபக்கம் எஸ்சாகி போவதே இங்கு வழமை. அது தமிழ் தேசியத்தின் கொள்கை வெற்றியே.

அதேபோல் தமிழ் தேசியத்தை வைத்து சிலர் கொள்ளை அடித்தார்கள் என்று எழுதுவதும் கொள்ளையர்களை தவிர வேறு எவரையும் கொச்சைப்படுத்துவதாகாது.

இதே யாழ்களத்தில் தமிழ் தேசியத்துக்கு காவலர்களா சுயநியமனம் செய்து கொண்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்க பட்ட தளபதிகளின் துணைவியரை, இன்னொரு கதையில் இன்னுமொரு தளபதியின் துணைவியை, கீழ்தரமாக எழுதியபோது, கடைசி நேரத்தில் தப்பி வந்த கள உறவை துரோகி என எழுதிய போது - எங்கே போனது இந்த கொச்சை படுத்தலுக்கு எதிரான தார்மீக கோபம்?

வழமையாக மிக லாவகமாக சுழலும் கத்தியை, ஒளிக்க கூடாத இடத்தில் ஒளித்து வைத்திருந்தார்களா🤣.

இன்னுமொன்று நாம் எப்போதும் தமிழ் தேசியத்தை ஒரு அமைப்புடன் மட்டும் தொடர் படுத்தி பார்க்கிறோம். முன்பு கூட்டணி, பின்னர் புலிகள்.

ஒரு அரசியல் தத்துவம் என்பது கோலா மாதிரி. கோக், பெப்சி, தம்ஸப், வேர்ஜின் கோலா, டெஸ்கோ கோலா என பலவகை இருக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை இல்லாமைதான் நாம் நகர முடியாமல் 48 இல் இருந்து ஒரே இடத்தில் நிற்க காரணம் என நான் நினைக்கிறேன்.

நாம் எல்லாருமே 48 இல் இருந்து எதையும் சாதிக்கவில்லை. 48 இல் இருந்த நிலை அல்லது அதையும் கீழான நிலையில்தான் 2021 இல் உள்ளோம். இதற்கான காரண காரியங்களை ஆராயாமல் நாம் இனிமேல் வரும் காலத்தில் முன்னேறி செல்லலாம் என்றால் - அது வெறும் பகற்கனவே.

அதற்காக ஒவ்வொரு திரியிலும் ஒன்றையே சொல்லுவது தேவையில்லைத்தான். ஆனால் அதை கட்டுப்படுத்த இப்போ இருக்கும் சுத்தியலே போதுமானது.

இளையோர் எழுந்தது அவர்களின் தவறில்லை அவர்களை உசுப்பேத்தியோரின் தவறு. அதே வகை உசுப்பேத்தல் இப்போதும் (அதிகமாக வெளிநாட்டில் இருந்து) நடக்கிறது.

நாட்டின் கள நிலமை பற்றி சிறிதும் யோசியாமல், 13 மூன்றெல்லாம் எமக்கு வேண்டாம் என்று இன்றும் எழுதுகிறார்களே?

இதை பழைய தவறை முன்னுதாரணமாக காட்டி, மீளவும் அதே தவறை நாம் விடக்கூடாது என்று எழுதுவதில் என்ன தப்பு.

இதுதானே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பது?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.