Jump to content

புதிய ஆண்டிலாவது நற்செய்திகள் கிடைக்குமா? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டிலாவது நற்செய்திகள் கிடைக்குமா? நிலாந்தன்

இரண்டாவது பெரும் தொற்றுநோய் ஆண்டு நம்மை கடந்து சென்றிருக்கிறது. உலகம் முழுவதுக்கும் அது ஒரு பொதுவான தோற்றப்பாடு. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை பெரும் தொற்றுநோய் மட்டும் பிரச்சினை அல்ல.அதற்கும் அப்பால் பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த ஒரு ஆண்டு அது எனலாம்.

மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஓர் அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதிலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றிகள் எதனையும் பெறவில்லை. ஒரே ஒரு விடயத்தில் மட்டும் துலக்கமான வெற்றியை காட்டியது. அது என்னவென்றால் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகளில் உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் அது வினைத்திறனோடு செயல்பட்டிருக்கிறது. அண்மையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் ருவிற் பண்ணியது போல, வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளை விடவும் முன்னேற்றகரமான விதத்தில் இலங்கைத்தீவு தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. அதாவது அரசாங்கத்தின் ராணுவ மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் கிடைத்த ஒரே ஒரு வெற்றி அதுதான். தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை படைத்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம் அப்படி ஒரு வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற எல்லா விடயங்களிலும் கடந்த ஆண்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு தோல்வி ஆண்டாகவே காணப்படுகிறது.

முழுச் சமூக முடக்கம், அரைச்சமூக முடக்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பயணத் தடை போன்றவற்றின் கீழ் நாட்டின் பொருளாதாரம் மேலும் முடங்கிய ஓராண்டு அது. தவிர இராணுவமயமாக்கல், மோசமான நிர்வாகம், அடிக்கடி நிர்வாகிகளை மாற்றுவது போன்ற காரணங்களின் விளைவாகவும் நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிந்தது. நாட்டின் நவீன வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலர் நெருக்கடியும் ஏனைய நெருக்கடிகளும் ஏற்பட்டன. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடின. செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் ஒரு போக பயிற்செய்கை பெருமளவுக்கு பாதிப்புற்றது. இதன் விளைவுகளை வரும் மாதங்களில் அனுபவிக்க வேண்டி வரும் என்று துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். நாட்டில் நிச்சயமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். அரிசியின் விலை இப்போது இருப்பதை விடவும் பல மடங்காக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா வைரஸ் அரசாங்கத்துக்கு ஒருவிதத்தில் உதவியது. நாட்டை இராணுவ மயப்படுத்த அது உதவியது. அனர்த்த காலங்களில் படைத்தரப்பு எல்லா நாடுகளிலும் முன்னுக்கு வரும். அதுவே இலங்கைத் தீவிலும் நடந்தது. ஆனால் இலங்கை தீவில் போரில் வெற்றிபெற்ற படைத்தரப்பானது நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுவிட்டது. அதே சமயம் ராஜபக்சக்களுக்கும் படைத் தரப்புக்கும் இடையிலான உறவு நிரந்தரமான ஒரு தங்கு நிலை உறவு எனலாம். இதனால் பெரும் தொற்று நோய் காலத்தை நன்கு பயன்படுத்தி நாட்டை அதிகம் படை மையப்படுத்திய ஓர் அரசாங்கம் இது அதுபோலவே பெருந்தொற்றுச் சூழலைப் பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரங்களை ஒரு மையத்தில் குவித்த அரசாங்கமும் இது. போரை வெற்றி கொண்ட படைத்தரப்பு வைரசையும் வெற்றிகொள்ளும் என்று சிங்கள மக்களும் தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் டெல்டா திரிபு வைரஸானது போரும் வைரஸ் ஒன்று அல்ல என்பதை நிரூபித்தது. அதைப்போலவே போரும் பொருளாதார நெருக்கடிகளும் ஒன்று அல்ல என்பது கடந்த ஆண்டில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது எந்த ஒரு வைரஸ் தொடக்கத்தில் அரசாங்கத்துக்கு உதவியதோ அதே வைரஸ் பின் வந்த மாதங்களில் அரசாங்கத்தை கீழ்ப்படிய வைத்திருக்கிறது. அரசாங்கத்தை சிங்கள மக்கள் முன் தலைகுனிய வைத்திருக்கிறது..

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது பெருமளவுக்கு அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் இணக்கம் இல்லாத ஒரு போக்கையே காட்டியது. கொள்கையளவில் இந்தியா முதலில் என்று கூறிக்கொண்டாலும் நடைமுறையில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது. ஆனால் வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் மேலும் சரிந்தது. தடுப்பூசி அரசியலாக மாறியது. ஐரோப்பிய யூனியன் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப் போவதாக எச்சரித்தது. ஐநா சான்றுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வாறாக பெருந்தொற்று நோய், ராஜதந்திர நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடி ஆகிய மூன்று நெருக்கடிகளோடு மேலதிகமாக ஆளும் கட்சிக்குள் பங்காளிகளும் பிரச்சினைப்படத் தொடங்கினார்கள். போதாக்குறைக்கு சமூக முடக்கம் நீக்கப்படும் காலங்களில் எதிர்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் போராடத் தொடங்கின. செயற்கை உரம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் போராடினார்கள்.

இவ்வாறாக நெருக்கடிக்குப் பின் நெருக்கடிகளாக வரத் தொடங்கிய பொழுது அரசாங்கம் முதலாவதாக வெளியுறவுப்பரப்பில் தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்பட்டது. அதன் விளைவாக பசில் ராஜபக்சவை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக வெளியுறவு பரப்பில் ஒரு தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தியது.அதன்மூலம் மேற்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் அரசாங்கம் உறவுகளை சுதாகரிக்க தொடங்கியது. ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எதிராக காணப்பட்ட அரசாங்கம் அதன் வெளியுறவு நிலைப்பாட்டிலிருந்து கீழே இறங்கி வந்தது. ஆட்சிக்கு வந்த புதிதில் அமெரிக்காவின் மில்லீனியம் சலேஞ் உதவியை நிராகரித்த ஓர் அரசாங்கம், அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை,குறுக்குச் சேவைகள் உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த ஓர் அரசாங்கம், ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்திற்கு முன்னைய அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஓர் அரசாங்கம், அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்ததன் மூலம் தனது நிலைப்பாடுகளில் தளர்வு போக்கை காட்டிய ஓராண்டு கடந்த ஆண்டாகும். அதாவது அரசாங்கம் தான் நினைத்தபடி வெளியரசுகளை அணுக முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக்கொண்ட ஓராண்டு.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த ஆண்டு எனப்படுவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வந்த ஓர் ஆண்டு எனலாம். எனினும் வெளியுறவு நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்த பின்னரும் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை என்பதைத்தான் புத்தாண்டு நிரூபித்திருக்கிறது.பசில் ராஜபக்ச ஒரு மந்திரவாதி அல்ல என்பதனை ஆண்டிறுதி நிருபித்திருக்கிறது.

பால் டீ இல்லாத ஒரு புது வருடப்பிறப்பு. சமையல் எரிவாயு இல்லாத அதே சமயம் சமையலறை பாதுகாப்பற்ற இடமாக மாறிய புத்தாண்டு இது. புத்தாண்டு பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொழில் அமைச்சரான பந்துல குணவர்த்தன கூறுகிறார் “வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளை பயிரிடுங்கள். அடுத்த ஏப்ரல் மாதம் அவற்றை அறுவடை செய்யக் கூடியதாக இருக்கும்” என்று. அதாவது அடுத்த ஏப்ரலில் மரக்கறிகளும் உட்பட சாப்பாட்டுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரலாம் என்று அமைச்சர் கூறுகிறாரா?

அதேபோல அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகிய விஜயதாச ராஜபக்ச பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.…..” அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதமளவில் நாடாளுமன்றத்தில் பெரிய ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறும். அவ்வாறு இல்லையென்றால் அரசுக்குள் அதிகார மாற்ற புரட்சி ஒன்று நிச்சயமாக இடம்பெறும் ”

இவை தவிர ஜனாதிபதியின் விசேட செயலணியான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவரான ஞானசார தேரர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்…..” எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால் நாட்டை அடுத்த சில ஆண்டுகளுக்கு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான் நாட்டை மீட்டெடுக்க முடியும் ”

மேற்கண்ட கூற்றுக்கள் யாவும் வருஷப் பிறப்புக்கு முன் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளாகும். இவை யாவும் பீதியூட்டும் செய்திகள் அல்லது கெட்ட செய்திகள். நிச்சயமாக நற்செய்திகள் அல்ல. அதாவது ஒரு புதிய ஆண்டு பிறந்தபோது நாட்டில் அரசியல் ரீதியாக நற்செய்திகள் எவையும் இருக்கவில்லை.

 

https://athavannews.com/2022/1259509

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.