Jump to content

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை

January 2, 2022
 
AVvXsEhBFIuSCupreaO6vosxGgfHZMfr4qqBHb5LXqcYG8ld8SAStefZMd2EJgBCtG2k7eklX0HxmBpGvTvbUboek1AMhC87-RDzYtpmDbVYrQ_7ud7SUzvV0mcqyFYUXcMnNJ3I-9Zja2PNv_RCRhujm_6LGTIHg1tC-pJSvkLUNQRq1qDzdwH3i9qo48T5Ag=s16000


கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார். அத்தோடு சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பொதுவெளியில் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும், முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அவரை 12 வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் எந்தவித இனவாதமோ, மதவாதமோயின்றி செயற்படும் ஒரு மேலதிக அரசாங்க அதிபர். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார். எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.

சந்திரிகா பண்டார நாயக்க அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும். அது வர்த்தமானியல்ல. முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார். அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.

பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம்.


அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்டம். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள். அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும், காராமுனையும் உள்ளது. அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது. இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர். இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ன போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.

அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன. கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி. தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும். அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்க விரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள். அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.

தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது. ஆனால் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார்.

இது கூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டு தெரிந்தாவது பேசியிருக்க வேண்டும்.

நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார்.

நிலத்தொடர்புபற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையுமில்லை. மட்டக்களப்பில் உள்ள நான்கு கல்வி வலயங்கள் புவியியல் ரீதியாக நிலத்தொடர்புடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலேயே முதன்முறையாக புவியியல் தொடர்பு இல்லாமல் கல்வி வலயம் ஒன்றை உருவாக்கிகாட்டியவர்கள் இவர்கள்தான். முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற நிலையில் ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கை தமிழரசுக்கட்சி இவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும். ஆனால் எமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை. கடந்த 72 வருடமாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த இணக்க அரசியல் என்று சென்று கொண்டிருப்பதனால் கிழக்கு மாகாணத்தில் நில ரீதியாக, வள ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிப்பினை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தியுடன் 240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இணைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலப்பரப்பு எங்குள்ளது. வாகரையின் அரைவாசிப்பகுதியை இணைக்கவேண்டும் என்ற நோக்குடனேயே இவர்களின் செயற்பாடுகள் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களை கோறளைப்பற்றுடன் இணைக்கவேண்டும் என்கின்ற பண்ணம்பல அறிக்கையினை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாரில்லை. நீங்கள் ரிதிதென்ன, ஜயந்தியாய பகுதிகளை கோறளைப்பற்று மத்தியில் நிர்வாகம் செய்கின்றீர்கள். ஆனால் அங்கிருக்கின்ற எட்டுக் கிராமங்களில் ஆறு கிராமங்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ்க் கிராமங்களாகும். இவற்றை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.

240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என இவர்கள் சொல்வது கிட்டத்தட்ட வாகரை பாரம்பரிய தமழர்களின் கிராமங்களை இல்லாமல் செய்கின்ற ஒருவகையான செயற்பாடாகும்.

இப்படித்தான் நாங்கள் அம்பாறையிலும், திருகோணலையிலும் பலவற்றை இழந்தோம். இது பேசித் தீர்க்க வேண்டிய விடயமல்ல, அதற்கு அவசியமும் இல்லை. இது எங்களுக்கென்றே இருக்கின்ற விடயமாகும். விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து நாங்கள் நில ரீதியாகவும், வள ரீதியாகவும் குறைந்துகொண்டே செல்கின்றோம்.

கோறளைப்பற்று வடக்கிற்குள் இருக்கின்ற காரமுனை பகுதி தொடர்பாக அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவர்கள் அதனை விளங்கிக்கொள்கின்றார்கள். அங்கு முஸ்லிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக சாணக்கியன் கூறுகின்றார். காராமுனை பகுதியில் சிங்களவர்கள் இருந்ததற்கான எந்த ஆவனங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

 

http://www.battinews.com/2022/01/blog-post_68.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிரிந்து நின்று, எதிரியின் திட்டங்களை நிறைவேற்றும்வரை எதிரி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டே தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வான். இன்னும் புரியாமல் இவர்களின் வீம்புப் பேச்சால் மாறப்போவது எதுவுமேயில்லை. அடுத்தமுறை இன்னும் பல படிவங்களை தூக்கிக்கொண்டோ அல்லது வண்டியில் ஏற்றிக்கொண்டோ வருவார் நஸீர் அஹமட்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

நீங்கள் பிரிந்து நின்று, எதிரியின் திட்டங்களை நிறைவேற்றும்வரை எதிரி பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டே தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வான். இன்னும் புரியாமல் இவர்களின் வீம்புப் பேச்சால் மாறப்போவது எதுவுமேயில்லை. அடுத்தமுறை இன்னும் பல படிவங்களை தூக்கிக்கொண்டோ அல்லது வண்டியில் ஏற்றிக்கொண்டோ வருவார் நஸீர் அஹமட்!

மிகப்பெரும் அளவுத்திட்டத்தில்..கண்ணுக்கு கவர்ச்சியான கலர் பூசிக்கொண்டு...புலிவேட்டை பற்றி வாய்ப்பாடு பாடமாக்கிக்கொண்டுவருவார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

மிகப்பெரும் அளவுத்திட்டத்தில்..கண்ணுக்கு கவர்ச்சியான கலர் பூசிக்கொண்டு...புலிவேட்டை பற்றி வாய்ப்பாடு பாடமாக்கிக்கொண்டுவருவார்...

கதைக்க வேண்டிய இடத்தில கதைக்க முடியாது, கண்ட இடத்தில கட்டியடிக்க வருவார். அவருக்கு பெரிய ஏமாற்றம்..... சாணக்கியனை சீண்டி ஒரு பெரிய விரிசலை உருவாக்க வந்தவர் முடியாமற்போக இறுதியில்  எவ்வளவு சின்னத்தனமாக நடந்து கொண்டார். தேவைக்கில்லாமல் சிரித்தும், தேவையற்றவிதமாய் விதண்டாவாதம் செய்தும் நினைத்தது நடைபெறவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை

January 2, 2022
 
AVvXsEhBFIuSCupreaO6vosxGgfHZMfr4qqBHb5LXqcYG8ld8SAStefZMd2EJgBCtG2k7eklX0HxmBpGvTvbUboek1AMhC87-RDzYtpmDbVYrQ_7ud7SUzvV0mcqyFYUXcMnNJ3I-9Zja2PNv_RCRhujm_6LGTIHg1tC-pJSvkLUNQRq1qDzdwH3i9qo48T5Ag=s16000


கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார். அத்தோடு சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பொதுவெளியில் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும், முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டுதான் அவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அவரை 12 வருடங்களாக இவ்வாறன செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் எந்தவித இனவாதமோ, மதவாதமோயின்றி செயற்படும் ஒரு மேலதிக அரசாங்க அதிபர். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அடித்துவிரட்டி காணிகளை அபகரித்தாக கூறியிருந்தார். எந்த பாரபட்சமுமின்றி அரச நிர்வாகத்தினை மேற்கொள்கின்ற மாவட்ட நிர்வாகத்தினை இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவது வேதனைக்குரிய விடயம்.

சந்திரிகா பண்டார நாயக்க அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்டது பண்ணம்பல அறிக்கையாகும். அது வர்த்தமானியல்ல. முன்னாள் அமைச்சர் அஸ்ரப் இது தொடர்பான பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தார். அந்த காலப்பகுதியில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி எட்டு கிராம சேவையாளர் பிரிவுடன் உருவாக்கப்பட்டது.

பண்ணம்பல அறிக்கையென்பது யுத்தகாலத்தில் செய்யப்பட்ட ஒன்றாகும். அந்த காலத்தில் ஆளுந்தரப்பில் அதிகாரமிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்த காலகட்டம்.


அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்படும் காலகட்டம். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் அரசாங்கத்திலிருந்த செல்வாக்கினை வைத்துக்கொண்டு இவ்வாறான விடயங்களை நிறைவேற்றினார்கள். அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் புனானை கிழக்கு பகுதியும், காராமுனையும் உள்ளது. அதன் நிர்வாகமும் வாகரை பிரதேச செயலகம் முன்னெடுத்துவருகின்றது. இதனை கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுக்கின்றனர். இன்று புனானை கிழக்கு பிரதேசம் கோறளைப்பற்று வடக்கில் இருந்தாலும் ரிதிதென்ன போன்ற சில கிராமங்களில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்றது.

அதேபோன்று பல தமிழ் கிராமங்கள் அதில் உள்ளன. கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என கூறும் பல பகுதிகள் முழுக்கமுழுக்க தமிழர்கள் வாழும் பகுதி. தமிழ் பகுதிகளையெல்லாம் இணைத்து கோறளைப்பற்று மத்தியுடன் இணைக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

மயிலங்கரச்சி கோறளைப்பற்று மத்தியில் காணப்படும் தமிழ் கிராமமாகும். அப்பகுதி மக்கள் தங்களுக்கு கோறளைப்பற்று மத்தியுடன் நிர்வாக ரீதியாக இருக்க விரும்பம் இல்லையென்று கடிதம் தந்துள்ளார்கள். அதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பகுதிகளின் நிர்வாகத்தினை ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் முன்னெடுக்கின்றது. அதனையே மயிலங்கரைச்சி மக்கள் கோருகின்றனர்.

தியாவட்டுவான் இன்றும் கோறளைப்பற்று மத்தியுடனேயே உள்ளது. ஆனால் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் அது கோறளைப்பற்று வடக்குடன் உள்ளதாக கூறுகின்றார்.

இது கூட தெரியாதவராகவே அவர் இருக்கின்றார். பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் தியாவட்டுவான் கிராம சேவையாளர் பிரிவு எங்கு இருக்கின்றது என்று கேட்டு தெரிந்தாவது பேசியிருக்க வேண்டும்.

நிலத்தொடர்பு இல்லாமல் மட்டக்களப்பில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் கூறியிருந்தார்.

நிலத்தொடர்புபற்றி பேசுவதற்கு இவர்களுக்கு எந்த அருகதையுமில்லை. மட்டக்களப்பில் உள்ள நான்கு கல்வி வலயங்கள் புவியியல் ரீதியாக நிலத்தொடர்புடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலேயே முதன்முறையாக புவியியல் தொடர்பு இல்லாமல் கல்வி வலயம் ஒன்றை உருவாக்கிகாட்டியவர்கள் இவர்கள்தான். முஸ்லிம் பகுதிகளை இணைத்து நிலத்தொடர்பற்ற நிலையில் ஒரு கல்வி வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் என்ற போர்வையில் இலங்கை தமிழரசுக்கட்சி இவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும். ஆனால் எமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை. கடந்த 72 வருடமாக எமது தமிழ் அரசியல் தலைவர்கள் இந்த இணக்க அரசியல் என்று சென்று கொண்டிருப்பதனால் கிழக்கு மாகாணத்தில் நில ரீதியாக, வள ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிப்பினை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தியுடன் 240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இணைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலப்பரப்பு எங்குள்ளது. வாகரையின் அரைவாசிப்பகுதியை இணைக்கவேண்டும் என்ற நோக்குடனேயே இவர்களின் செயற்பாடுகள் உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களை கோறளைப்பற்றுடன் இணைக்கவேண்டும் என்கின்ற பண்ணம்பல அறிக்கையினை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதில் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாரில்லை. நீங்கள் ரிதிதென்ன, ஜயந்தியாய பகுதிகளை கோறளைப்பற்று மத்தியில் நிர்வாகம் செய்கின்றீர்கள். ஆனால் அங்கிருக்கின்ற எட்டுக் கிராமங்களில் ஆறு கிராமங்கள் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ்க் கிராமங்களாகும். இவற்றை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை. மக்களும் அதனை விரும்பமாட்டார்கள்.

240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என இவர்கள் சொல்வது கிட்டத்தட்ட வாகரை பாரம்பரிய தமழர்களின் கிராமங்களை இல்லாமல் செய்கின்ற ஒருவகையான செயற்பாடாகும்.

இப்படித்தான் நாங்கள் அம்பாறையிலும், திருகோணலையிலும் பலவற்றை இழந்தோம். இது பேசித் தீர்க்க வேண்டிய விடயமல்ல, அதற்கு அவசியமும் இல்லை. இது எங்களுக்கென்றே இருக்கின்ற விடயமாகும். விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து நாங்கள் நில ரீதியாகவும், வள ரீதியாகவும் குறைந்துகொண்டே செல்கின்றோம்.

கோறளைப்பற்று வடக்கிற்குள் இருக்கின்ற காரமுனை பகுதி தொடர்பாக அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவர்கள் அதனை விளங்கிக்கொள்கின்றார்கள். அங்கு முஸ்லிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக சாணக்கியன் கூறுகின்றார். காராமுனை பகுதியில் சிங்களவர்கள் இருந்ததற்கான எந்த ஆவனங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

 

http://www.battinews.com/2022/01/blog-post_68.html

அப்பு முதல் தமிழர்கள் முஸ்லீமாக மாற்றப்படுவதை தடுப்பதற்கும் சிங்களவர் மற்றும் முஸ்லீம்களால் காணி அபகரிப்பைத் தடுப்பதற்கும் என்ன செய்தனீங்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம்  விட்டுக்கொடுப்பு அரசியலை  செய்யாது

சிங்களக்கட்சியின்  பிரதிநிதி.

ஒரு  சிங்களவர்  இதைச்சொன்னால்  எப்படி  எடுத்துக்கொள்வோமோ அதேபோல்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

கதைக்க வேண்டிய இடத்தில கதைக்க முடியாது, கண்ட இடத்தில கட்டியடிக்க வருவார். அவருக்கு பெரிய ஏமாற்றம்..... சாணக்கியனை சீண்டி ஒரு பெரிய விரிசலை உருவாக்க வந்தவர் முடியாமற்போக இறுதியில்  எவ்வளவு சின்னத்தனமாக நடந்து கொண்டார். தேவைக்கில்லாமல் சிரித்தும், தேவையற்றவிதமாய் விதண்டாவாதம் செய்தும் நினைத்தது நடைபெறவில்லை.

யாரை சொல்கிறீர்கள் நசீரையா அல்லது அமலையா?
நசீர் என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் காணொளி வடிவாய் பார்க்கவில்லை என்று அர்த்தம் ...தேவையில்லாமல் [அல்லது வேண்டும் என்றே போய்] வேண்டிக் கட்டியது சாணக்கியன் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் பிறப்பதற்கு முன் நிகழ்ந்தவற்றை கொண்டுவந்து அவரிடம் பெற்றுத்தா என்று அடம்பிடிப்பது மூத்த அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்ளும் இவருக்கு அழகில்லை. இத்தனை ஆண்டுகளாய் அரசியலில் இருக்கிறீர்கள், முதலமைச்சராய் இருந்திருக்கிறீர்கள், ஏன் அப்போது அதை பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு சளப்பல் பதில். உங்கள் தலைவர் ஏன் அதற்க்கு முயற்சிக்கவில்லை என்றால் அதை அவரிடந்தான் கேட்கவேண்டுமாம். அங்கே கேட்க வக்கற்றவர்  ஏன் அதை சாணக்கியனிடம் கேட்க்கிறார்? எதை எங்கே எப்போ யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரியாதவர் அல்லது அவர் கேட்பதில் நிஞாயமில்லை என்பதால் இளகின இரும்பை கண்டவுடன் தூக்கியடித்திருக்கிறார். ஏன் நேயர் ஒருவர் கேட்ட கேள்வி; இவ்வளவு நாளும் ஏனிதை நீங்கள் கேட்கவில்லை மேடை கிடைக்கவில்லையா? என்று கேட்டதற்கு பதிலளிக்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்களை சேர்த்து தீர்வு என்பது வெறும் பகற்கனவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நசீர் என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் காணொளி வடிவாய் பார்க்கவில்லை என்று அர்த்தம் ...தேவையில்லாமல் [அல்லது வேண்டும் என்றே போய்] வேண்டிக் கட்டியது சாணக்கியன் தான் 

ஒருவேளை அவர் சொன்னது போல் அவர்களின் நிலங்களை நீங்கள்தான் பறித்து, திருடி வைத்திருக்கிறீர்களோ? நான் சொல்லவில்லை அவர் அப்படி சொன்னார், நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள், அதனால எனக்கொரு சந்தேகம். இருபக்க தவறுகளையும் மன்னித்து, மறந்து நல்லதொரு உறவை கட்டியெழுப்ப   சமாதானமாக அமர்ந்து பேசுவதற்கான ஒரு நல்ல சமிக்கியையை உருவாக்க இந்த மேடையை பயன்படுத்த சாணக்கியன் முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரோ தட்டிப்பறித்ததை உறுதிப்படுத்தி உறவை முறிக்க  முறிக்கவும், தாங்கள் அப்பாவிகள் தமிழர் தான் தவறு செய்தவர்கள் என்றும் சத்தியம் செய்கிறார். நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ தெரியவில்லை,  நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களே பலதடவை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்  விடுதலைப்போர் வெற்றியடைய அரசாங்கத்துக்கு பலவழிகளில் தாங்கள்  உதவியதாலேயே இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என்று. ஆகவே அவரின் திட்டத்தை தொடராமல் சாணக்கியன் தடுத்தாலும் ஒரு உண்மையை விளங்கியிருப்பார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

கிழக்கு மாகாணம்  விட்டுக்கொடுப்பு அரசியலை  செய்யாது

சிங்களக்கட்சியின்  பிரதிநிதி.

ஒரு  சிங்களவர்  இதைச்சொன்னால்  எப்படி  எடுத்துக்கொள்வோமோ அதேபோல்????

நிச்சயமாக.

வடக்கு மாகாணத்தை பற்றி டக்லசும் அங்கயனும் சொல்வது எப்படி அந்த மக்களின் முடிவு அல்லவோ, அதே போல்தான்  கிழக்கு மாகாணத்தை பற்றி சந்திரகாந்தனும், வியாழேந்திரனும் சொல்வதும்.

இது இங்கே எழுதும் வடக்கு, கிழக்கை சார்ந்த கருத்தாளருக்கும் பொருந்தும்.

 வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் தேசியம் மீதான ஈர்ப்பு கிட்டதட்ட ஒரே அளவாக குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இரு இடத்திலும் பெரும்பான்மை தமிழர்கள் தமிழ் தேசிய,  வடக்கு-கிழக்கு இணைப்பு என்பவற்றையே விரும்புகிறார்கள்.

ஆனால் இங்கே இன்னும் என்பது முக்கியமான சொல். இப்படியே கனகாலம் இருக்காது.

இந்த சமநிலை மாற முதல் ஒரு குறைந்த பட்ச தீர்வையாவது அடைய வேண்டும்.

3 hours ago, satan said:

ஒருவேளை அவர் சொன்னது போல் அவர்களின் நிலங்களை நீங்கள்தான் பறித்து, திருடி வைத்திருக்கிறீர்களோ? நான் சொல்லவில்லை அவர் அப்படி சொன்னார், நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள், அதனால எனக்கொரு சந்தேகம். இருபக்க தவறுகளையும் மன்னித்து, மறந்து நல்லதொரு உறவை கட்டியெழுப்ப   சமாதானமாக அமர்ந்து பேசுவதற்கான ஒரு நல்ல சமிக்கியையை உருவாக்க இந்த மேடையை பயன்படுத்த சாணக்கியன் முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரோ தட்டிப்பறித்ததை உறுதிப்படுத்தி உறவை முறிக்க  முறிக்கவும், தாங்கள் அப்பாவிகள் தமிழர் தான் தவறு செய்தவர்கள் என்றும் சத்தியம் செய்கிறார். நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ தெரியவில்லை,  நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களே பலதடவை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்  விடுதலைப்போர் வெற்றியடைய அரசாங்கத்துக்கு பலவழிகளில் தாங்கள்  உதவியதாலேயே இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என்று. ஆகவே அவரின் திட்டத்தை தொடராமல் சாணக்கியன் தடுத்தாலும் ஒரு உண்மையை விளங்கியிருப்பார்.  

இன்னொரு இடத்தில் @ரஞ்சித் வடிவாக எழுதி இருந்தார். 

நசீர் அகமட்டும், வியாழேந்திரனும் ஒரே வில்லில் இருந்து எய்யப்பட்ட அம்புகளே.

இலக்கு - தமிழ் பேசும் மக்கள் என இணைவதை முளையிலேயே கிள்ளி எறிதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை, எங்களில் சிலருக்கும் சாணக்கியனை நசீர் அவமானப்படுத்திவிட்டார் என்பதில் பெரும் மகிழ்ச்சி. மன்னிப்பு கேட்ப்பவன் எல்லாம் தவறு செய்தவன் என்று அர்த்தமில்லை, அவர் அந்த உறவை தொடர விரும்புகிறார் என்பதே உண்மை. அணைத்து பலப்படுத்திக்கொள்ள  நீட்டிய கையை தட்டி விட்டவன் வருந்தும்வரை திரும்பிப்பார்க்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்களை சேர்த்து தீர்வு என்பது வெறும் பகற்கனவே.

உண்மை. ஆனால் அதே அளவு பகல் கனவு முஸ்லீம்களை புறம் தள்ளி, வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை பெற்று விடலாம் என்பதும்.

எப்படியும் வடக்கு கிழக்கு இணைப்பு என்றால் அது கிழக்கில் ஒரு வாக்கெடுப்பு வெல்லுவதில் மட்டுமே சாத்தியமாகும்.

@புலவர் இன்னொரு திரியில் சொன்னார் அவர்கள் ஒரு இனமில்லை, ஒரு மதம் என்றும், மத அடிப்படையான சலுகைகள் அவர்களுக்கு போதும் என்றும்.

இதை ஏற்று கொண்டு முஸ்லீம்கள் ஒரு போதும் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்க போவதில்லை.

எந்த முஸ்லிம் அரசியல்வாதி இதை ஏற்றாலும் அவர் முஸ்லீம்களால் தூக்கி எறிய படுவார். அத்தனை முஸ்லிம் எம்பிகளும் ஆதரித்தாலும் இப்போ இருப்பதை போல் வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லீம் மக்கள் தயாரில்லை.

ஆகவே எந்த மாற்றமும் இன்றி இப்போ இருக்கும் நிலையில் வடக்கு கிழக்கை இணைக்க கோருவது - கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு தோற்பதை 100% உறுதி செய்யும் வழிமுறை.

கிழக்கு தமிழரை  வெட்டி விடுவோம் என நயவஞ்சகமாக சிந்திக்கும் வடக்கு தமிழர் மட்டுமே இப்படி ஒரு நிலையை எடுப்பர். அல்லது கள நிலமை விளங்காத அப்பாவிகளாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை Moor, சோனகர் என்ற தனி இனம் என இலங்கை அரசிகலமைப்பு ஏற்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கூட தனி இனமாக ஏற்கிறது. கிழக்கு மாகாணத்தில் அவர்கள் 1/3 பங்கினர். ஒட்டு மொத்த இலங்கையில் எமக்கும் அவர்களுக்கும் 2% விழுக்காடே வித்தியாசம்.

இந்த நிலையில் - இப்போ இருக்கும் நிலையிலேயே வட கிழக்கை இணைப்பதை விட, முஸ்லீம்களுக்கு தனியாக கிழக்கை பிரித்து வைத்திருப்பதே இலாபம்.

ஆகவே இப்படி ஒரு இணைப்புக்கு அவர்கள் ஒரு போதும் ஓம்பட போவதில்லை.

இந்த இடியப்ப சிக்கலுக்கு, நிலத்தொடர்பற்ற முஸ்லீம் அலகு ஒன்றை உருவாக்குவதே தீர்வாக இருக்க முடியும்.

இல்லை - நீங்கள் ஒரு இனமே இல்லை என்ற 50 வருடத்துக்கு முன் காலவதியாக அரசியலைதான் நாம் கையில் எடுப்போம் என்றால் -

வடக்கு-கிழக்கு இணைப்பையும். கிழக்கு தமிழரையும்  அடியோடு மறக்க வேண்டியதுதான்.

16 minutes ago, satan said:

அதில்லை, எங்களில் சிலருக்கும் சாணக்கியனை நசீர் அவமானப்படுத்திவிட்டார் என்பதில் பெரும் மகிழ்ச்சி. மன்னிப்பு கேட்ப்பவன் எல்லாம் தவறு செய்தவன் என்று அர்த்தமில்லை, அவர் அந்த உறவை தொடர விரும்புகிறார் என்பதே உண்மை. அணைத்து பலப்படுத்திக்கொள்ள  நீட்டிய கையை தட்டி விட்டவன் வருந்தும்வரை திரும்பிப்பார்க்க கூடாது.

சாணக்கியனுக்கு முஸ்லீம்களிடம் உள்ள வரவேற்ப்பு, அதன் மூலம் தமது இடம் பறிபோய்விடுமோ என்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் பயம் + எங்கே இவர்கள் தமிழ் பேசும் தரப்பு என இணைந்து எமக்கு ஆப்பு அடித்து விடுவாகளோ என்ற இனவாதிகளின் வரலாற்றுப்பயம்+ இனவாதிகளின் கிழக்கு தமிழ் ஏஜெண்டுகளின் விசுவாச செயல்பாடு 

இந்த மூன்றின் கூட்டு விழைவே இந்த பேட்டியும், அதற்கான எதிர்வினைகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கிழக்கு தமிழரை  வெட்டி விடுவோம் என நயவஞ்சகமாக சிந்திக்கும் வடக்கு தமிழர் மட்டுமே இப்படி ஒரு நிலையை எடுப்பர். அல்லது கள நிலமை விளங்காத அப்பாவிகளாக இருக்க வேண்டும்

எந்த நயவஞ்சகமுமில்லை, அப்பாவித்தனமுமில்லை. எவ்வளவுதான் பொறுப்பது? கெஞ்சினால் மிஞ்சுகிறார்கள். நாங்கள் களைப்படைந்து விட்டொம். காத்திருப்பதில் பயனில்லையென்றே தோன்றுகிறது. எங்கள் காத்திருப்பெல்லாம் இயலாமையாக விளங்கி  கொச்சைப்படுத்துகிறார்களே. சிங்களத்தின் ஊதுகுழலாய் செயற்படுகிறார்கள். விட்டு விலகினால் என்ன அவியுது எண்டு ஒட்டிக்கொண்டிருந்து எரிக்கிறார்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

எந்த நயவஞ்சகமுமில்லை, அப்பாவித்தனமுமில்லை. எவ்வளவுதான் பொறுப்பது? கெஞ்சினால் மிஞ்சுகிறார்கள். நாங்கள் களைப்படைந்து விட்டொம். காத்திருப்பதில் பயனில்லையென்றே தோன்றுகிறது. எங்கள் காத்திருப்பெல்லாம் இயலாமையாக விளங்கி  கொச்சைப்படுத்துகிறார்களே. சிங்களத்தின் ஊதுகுழலாய் செயற்படுகிறார்கள். விட்டு விலகினால் என்ன அவியுது எண்டு ஒட்டிக்கொண்டிருந்து எரிக்கிறார்களே. 

என்ன செய்வது ஒரு பைத்தியகார வீட்டில் நம்ம தங்கச்சி (கிழக்கு தமிழர்) வாழ்க்கை பட்டிருக்கே, நிதானமாக கையாண்டுதான் மீண்டும் நம்ம கூட சேர்க்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்ன செய்வது ஒரு பைத்தியகார வீட்டில் நம்ம தங்கச்சி (கிழக்கு தமிழர்) வாழ்க்கை பட்டிருக்கே, நிதானமாக கையாண்டுதான் மீண்டும் நம்ம கூட சேர்க்கணும்.

இவர்களுக்காக காத்திருந்து நம்மையும் இழந்து விடுவோமோ என்கிற பயம், முதல் நம்மை காப்போம். அவர்கள் விழவேண்டும், வலியை அனுபவிக்க வேண்டும், அந்த வலி அவர்களுக்கு உண்மையை உணரவைக்கும்.நாங்கள் வலி அனுபவிக்குமட்டும் அவர்களுக்கு கொண்டாட்டமே! இவர்கள் நம்மை விட்டுப்போக மாட்டார்கள் என்கிற தெனாவெட்டில் அங்கும் இங்கும் சுற்றி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.                    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

இவர்களுக்காக காத்திருந்து நம்மையும் இழந்து விடுவோமோ என்கிற பயம், முதல் நம்மை காப்போம். அவர்கள் விழவேண்டும், வலியை அனுபவிக்க வேண்டும், அந்த வலி அவர்களுக்கு உண்மையை உணரவைக்கும்.நாங்கள் வலி அனுபவிக்குமட்டும் அவர்களுக்கு கொண்டாட்டமே! இவர்கள் நம்மை விட்டுப்போக மாட்டார்கள் என்கிற தெனாவெட்டில் அங்கும் இங்கும் சுற்றி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.                    

யாரை சொல்கிறீர்கள் கிழக்கு தமிழர்களையா? முஸ்லீம்களையா?

இவர்களை என்பது

முஸ்லீம்களை என்றால்- நாம் காத்திருப்பது அவர்களுக்கக அல்ல. அவர்களுடன் ஒரு டீலுக்கு போய் (இப்போதே) கிழக்கில் எஞ்சியுள்ள தமிழ் மக்களையும், நிலத்தையும் வடக்குடன் இணைத்து மொத்தமாக பாதுகாக்க வேண்டும். 

கிழக்கு தமிழரை என்றால் - (அப்படி இல்லை என நினைக்கிறேன்).

அவர்களுக்கும் வடக்கு தமிழருக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. இரெண்டு இடத்திலும் தமிழ் தேசிந்யத்துக்கும் வட-கிழக்கு இணைப்புக்கும் மக்கள் மத்தியில் சம ஆதரவே உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கோடு இணைய மாட்டோம் தனித்து சிங்களத்துக்கு சேவகம் செய்வோம் என்று நினைக்கும் எல்லோரையுந்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் களத்தில் தெந்தமிழீழ உறவுகளும் இருந்தால் இந்த தலைப்பில் விரிவாக நாம் உரையாடலாம்.

அல்லது யாருக்கேனும் அம்மக்களோடு நேரடி தொடர்பிருந்தால் அவற்றைக் கேட்டாவது எழுதலாம்.

மற்றும்படி இங்கு நாம் எழுதுவதெல்லாம் அவர்கள் பற்றி எடைபோடும் கணிப்புகளேயன்றி வேறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வடக்கோடு இணைய மாட்டோம் தனித்து சிங்களத்துக்கு சேவகம் செய்வோம் என்று நினைக்கும் எல்லோரையுந்தான். 

ஒரு கணக்கு சொல்லுறன் பாருங்கோ.

வடக்கில் தமிழர் வெல்ல கூடிய எம்பிகள் - 11.

அதில் வென்ற தமிழ் தேசிய எம்பிகள் 8.

ஆக தமிழ் தேசியத்துக்கு வாக்கு போடாத வடக்கு தமிழர் அண்ணளவாக 27.27%

கிழக்கில் தமிழர் வெல்ல கூடிய எம்பிகள் - 6.

அதில் வென்ற தமிழ் தேசிய எம்பிகள் 4.

ஆக தமிழ் தேசியத்துக்கு வாக்கு போடாத கிழக்கு தமிழர் அண்ணளவாக 33.33%

இப்ப சொல்லுங்கோ -

வடக்கை விட தமிழர் பலம் மிகவும் குறைவாக இருந்தும், கிழக்கில் 6% மக்கள்தான் வடக்கை விட அதிகமாக “சிங்களத்துக்கு சேவகம் செய்ய” நினைத்துள்ளாகள்.

33.33% கிழக்கு தமிழ் மக்களுக்காக ஒட்டு மொத்த கிழக்கு தமிழரையும் எப்படி வெட்டி விட முடியும் ?

முதலில் நாம் யார் அவர்களை வெட்டி விட?

அப்படி  வெட்டி விடுவதாயின் 27.27% வடக்கு மக்கள்  அரசை ஆதரித்தார்கள் என்பதால் - வடக்குகும் தீர்வு தேவையில்லை. அவர்களும் “அனுபவிக்கட்டும்” என விட்டு விடாலம் தானே?

தயவு செய்து வியாழேந்திரனின், சந்திரகாந்தனின் அரசியலை வைத்து கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசை இதுதான் என முடிவு கட்டாதீர்கள்.

அதே எடுகோளை கொண்டு வடக்கு மக்களின் அபிலாசையையும் தீர்வே தேவையில்லை என சொல்வதாக தீர்மானிக்கலாம்.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் இணைந்த வடக்கு-கிழக்கு அடிப்படையிலான ஒரு தீர்வு வேண்டும் என்ற அபிலாசையே மேலோங்கி நிற்கிறது. என்றும் நின்றது.

அதை எப்படி நடை முறை சாத்தியம் ஆக்கலாம் என்றே நாம் சிந்திக்க வேண்டும்.

27 minutes ago, நன்னிச் சோழன் said:

யாழ் களத்தில் தெந்தமிழீழ உறவுகளும் இருந்தால் இந்த தலைப்பில் விரிவாக நாம் உரையாடலாம்.

அல்லது யாருக்கேனும் அம்மக்களோடு நேரடி தொடர்பிருந்தால் அவற்றைக் கேட்டாவது எழுதலாம்.

மற்றும்படி இங்கு நாம் எழுதுவதெல்லாம் அவர்கள் பற்றி எடைபோடும் கணிப்புகளேயன்றி வேறில்லை. 

தேர்தல் முடிவுகள் பொய் சொல்வதில்லை நன்னி.

90% க்கு மேற்பட்ட தமிழர் நிலமான வடக்குக்கு அண்ணளவு சரிசமனாக 35% சதவீத தமிழர், இரு முனை தாக்குதலுக்கு முகம் கொடுத்தபடி தமிழ் தேசியத்துக்கு வாக்கு போடுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் வடக்கை விட கிழக்கில்தான் வடக்கு-கிழக்கு இணைப்பு, தமிழ் தேசிய உணர்வு ஆழமாக உள்ளது என்பது என் அனுபவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த. தே. கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நமது பிரச்சனைகளை இனங்கண்டு போராடினால் எல்லோரும் திசை திரும்புவார்கள். ஆனால் இவர்களோ ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் விழுத்துவதும், கேலி பண்ணுவதும், வீம்புக்கு எதிர்மறையாய் செயற்படுவதுமே நமது வீழ்ச்சிக்கும் எதிரியின் எழுச்சிக்கும் காரணம். மக்கள் தேசியத்தின் மேல் உள்ள பற்றினால் வாக்களிக்கிறார்களேயொழிய இவர்கள் சாமத்தியர்கள், நமக்கு விடிவு தேடித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் அல்ல. ஆனால் இதுவும் நிரந்தரமல்ல.                 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கைப் போன்றே வடக்கிலும் சலுகைகளுக்காக விலைபோன, அரசுடன் நிற்கும் தமிழர் நலன்களுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிறு குழுவினரின் செயற்பாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பினை பாதிக்கக் கூடிய முடிவுகளுக்கு நாம் வருவது தவறு.

தாயகவிடுதலைப் போராட்டத்தின் மூலம் அடக்கப்பட்டுப் போயிருந்த பிரதேசவாதப் பேய்க்கு மீண்டும் உயிரூட்ட கருணா, பிள்ளையான் போன்றோர் முயன்றபோதும்கூட அது கிழக்கில் எதிர்பார்த்த அளவிற்கு எடுபடாமலேயே போய்விட்டது. பிள்ளையானுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த 54000 வாக்குகள் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது கிழக்குத் தமிழ் மக்கள் கொண்ட அதிருப்தியே காரணம் என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசுடன் இணைந்திருக்கும் பிள்ளையானுக்குப் போடப்பட்ட வாக்குகள் அவர் வடக்குத் தமிழரை எதிர்த்துச் சண்டையிட்டார் என்பதற்காக அல்லாமல், அவரைப் பாவித்து கிழக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களையாவது செய்து மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றலாமா என்று பார்க்கிறோம், அவரும் சரியில்லையென்றால், அவரையும் தூக்கியெறியத் தயங்கமாட்டோம் என்று இத தளத்தில் அக்னியெஷ்த்ரா கூறியதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கிழக்குத் தமிழர்களை அடிமைப்படுத்தவே வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமிழ்த் தேசியவாதிகள் துடிக்கிறார்கள் எனும் அரைவேக்காட்டுத்தனாமான கருத்துக்களை இங்கு கக்கிவரும் அறிவற்றவர்களின் குப்பைகளைக் கடந்து எமது பூர்வீகத் தாயகம் இணைவது தொடர்பாக நாம் செயலாற்ற வேண்டும்.

வடக்குடன் கிழக்கு இணைந்திருக்கவேண்டுமா இல்லையா என்பதை கிழக்கில் மட்டுமே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்புமூலம் தீர்மானிக்க வேண்டும் என்று சிங்களம் புத்திசாதுரியமாக ஒரு பொறியினை இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தில் வைத்திருக்கிறது. சனத்தொகை விகிதாசாரத்தில் வெறும் 30 வீதம் மட்டுமே உள்ள தமிழர்கள் அனைவருமே ( இதில் கிழக்குத் தமிழர்களை அடிமையாக்க வடக்குத் தேசியவாதிகள் முயல்கிறார்கள் என்று கூழைக் கூப்பாடுபோடும் அறிவிலிகளைத் தவிர்த்து) வாக்களித்தாலும்கூட நிச்சயமாக நாம் கிழக்கை நிரந்தரமாகவே இழந்துவிடுவோம். ஆகவே, முஸ்லீம்களின் ஆதரவும் நிச்சயமாக எமக்கு வேண்டும் கிழக்கினைத் தக்கவைத்துக்கொள்ள. ஆகவே, முஸ்லீம்களை ஒரு இனமாக (மதமாக மட்டும் அல்லாமல்) நாம் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கான பெரும்பான்மைப் பிரதேசங்களை ஏற்றுக்கொண்டு, இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, அவர்களை இவ்வாக்களிப்பில் எமக்காதரவாக வக்களிக்கப்பண்ணுவதன் மூலம் மட்டுமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்கினைப் பெறுவது சாத்தியமாகும். 

வீம்பிற்கு முஸ்லீம்களை எதிர்த்து கிழக்கை இழக்காமல், அவர்களை உள்வாங்கிக் கிழக்கினைத் தக்கவைத்துக்கொள்ளுதலே நாம் செய்ய வேண்டியது.

வடக்குப் போல், கிழக்கும் எனது தாயகமே. எனக்காகவும், எனது இனத்திற்காகவும் போரிட்டு மடிந்த ஆயிரமாயிரம் உறவுகளைப் பெற்ற அந்தப் பூமியை அவ்வளவு இலகுவில் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. இன்னமும் அங்குவாழும் என் உறவுகளுக்காகவாவது நாம் இதனைச் செய்யவேண்டும். 

இக்களத்தில் எழுதும் சிலரின் ஆத்திரமூட்டும் அசிங்கமான கருத்துக்களை நாம் கிழக்குத் தமிழரின் உணர்வுகளாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, மொத்த இனத்தினதும் நலன் கருதிச் செயற்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

த. தே. கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நமது பிரச்சனைகளை இனங்கண்டு போராடினால் எல்லோரும் திசை திரும்புவார்கள். ஆனால் இவர்களோ ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் விழுத்துவதும், கேலி பண்ணுவதும், வீம்புக்கு எதிர்மறையாய் செயற்படுவதுமே நமது வீழ்ச்சிக்கும் எதிரியின் எழுச்சிக்கும் காரணம். மக்கள் தேசியத்தின் மேல் உள்ள பற்றினால் வாக்களிக்கிறார்களேயொழிய இவர்கள் சாமத்தியர்கள், நமக்கு விடிவு தேடித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் அல்ல. ஆனால் இதுவும் நிரந்தரமல்ல.           

இதுதான் பிரச்சினையே.

2009 இற்கு முன்னர்வரை எம்மிடமிருந்த ஒற்றைத்தலைமையும், அத் தலைமையின்கீழான எமது விடுதலைப் போராட்டமும் எம்மை ஒன்றிணைத்திருந்தது போன்ற ஒரு நிலை இன்று இல்லை. ஜனநாயகத்தின் பெறுபேறுகளில் ஒன்றான ஒவ்வொருவரும் தமக்குச் சரியானதை யோசித்தல் அல்லது செய்தல் என்பதற்கமைவாகவே ஒவ்வொரு கட்சியினரும் தம்பங்கிற்கு ஒவ்வொரு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு இருப்பினும், முடிவு தமிழர்களின் நலன்குறித்தே அமையவேண்டும் என்பதுதான் அனைவரினதும் அவா. அதனை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே. தமிழரின் போராட்டம் பற்றியும், அது இனிமேல் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுபற்றியும், எவ்வாறான தீர்வுநோக்கி நாம் நகரவேண்டும் என்பதுபற்றியும் இக்கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்து நிலவாதவரை ஒரு திசையில் பயணிப்பதென்பது கடிணமானது. 

கட்சிகளுக்கிடையேயும், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இருக்கும் நான் பெரிது, நீ பெரிது எனும் மமதைகளை களையப்பட்டு, நாடு பெரிது எனும் நிலை உருவாகி, தமிழ் மக்கள் நலன்சார்ந்து அனைவரும் சிந்தித்துச் செயலாற்றினாலேயன்றி தீர்வு சாத்தியமில்லை. 

Link to comment
Share on other sites

தனித்து மட்டகளப்பு மாவட்டத்தையோ அம்பாறை மாவட்டத்தையோ அல்லது திருகோண மலை மாவட்டத்தையோ எடுத்து தமிழ் முஸ்லிம் இனங்களின் காணிப் பகிர்வு பிரச்சினையை ஆராய்வது குருடர்கள் யானை பார்த்த கதையாகவே முடியும். மட்டக்களப்பில் முஸ்லிம்களும் அம்பாறையில் தமிழர்களும் எதிரும் புதிருமாக ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். திருமலையில் இரண்டு தரப்புக்கும் பரஸ்பரம் அச்சமும் கோரிக்கைகளும்  உள்ளது. அதனால் கிழக்கின் மூன்று மாவட்ட பிரச்சினைகளையும் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டும்தான் தெளிவும் நீதியும்கிட்டும். அல்லது வீண ஒரு இனமுறுகலை தூண்டிவிடுகிற முயற்ச்சியாகவே முடியும்.

இந்தியாவ்வும் அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் சீனாவின் வடகிழக்கு நகர்வு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கை அரசுக்கு தீர்வு தொடர்பான அழுத்தம் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனைக் குழப்ப அரசு தரப்பு எடுக்கும் முயற்ச்சிகளுக்கு பலியாகிவிடக்கூடாது. குறிப்பாக தமிழர் தரப்பு மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் நடக்க வேண்டிய தருணமிது.  தமிழ் முஸ்லிம் ஐக்கியம் ஏற்படாவிட்டால் இணைப்பை கைவிடுதல் அல்லது கிழக்கின் நிலத்தொடர்பற்ற  தமிழ் அலகுகள் வடக்குடன் இணைதல் என்கிற நடைமுறைச் சிக்கலான சூழலே உருவாகும். 

எனவே எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் மட்டுமோ தமிழரும் முஸ்லிம்களும் கலந்துகொள்ள வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இவர்களுக்காக காத்திருந்து நம்மையும் இழந்து விடுவோமோ என்கிற பயம், முதல் நம்மை காப்போம். அவர்கள் விழவேண்டும், வலியை அனுபவிக்க வேண்டும், அந்த வலி அவர்களுக்கு உண்மையை உணரவைக்கும்.நாங்கள் வலி அனுபவிக்குமட்டும் அவர்களுக்கு கொண்டாட்டமே! இவர்கள் நம்மை விட்டுப்போக மாட்டார்கள் என்கிற தெனாவெட்டில் அங்கும் இங்கும் சுற்றி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.                    

நீங்கள் முஸ்லீம்களை இங்கே குறிக்கவில்லையென்று நான் நினைக்கிறேன். அப்படியானால், நீங்கள் குறிப்பிடுவது கிழக்குத் தமிழர்களையே.

நாம் பட்ட அழிவுகள் என்று வடக்கினை மட்டுமே வைத்துக் கூறுவது தவறு. போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களில் கிட்டத்தட்ட 50 வீதமான மாவீரர்கள் கிழக்கினைச் சேர்ந்தவர்கள். அத்துடன் 2006 இல் கிழக்கிலிருந்தே பேரினவாதம் இனவழிப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில் ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் கருணா குழுவினராலும், பின்னர் நேரடியாகவே ராணூவத்தாலும் கிழக்குத் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். வாகரை மீதான ஆக்கிரமிப்பில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவையெல்லாவாற்றிற்கும் மேலாக கிழக்கு மாகாணம் வடக்கினைப் போன்று புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் ஒருபோதுமே இருக்காததால் தினம் தினம் விசேட அதிரடிப்படையினராலும், ராணூவத்தாலும், இவர்களின் உதிரிகளான மோகன் குழு, ராசிக் குழு ஆகியவற்றாலும் கிழக்குத் தமிழர்கள் அழிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், சின்ன ஊரணி, கொக்கட்டிச் சோலை, தம்பிலுவில், திரியாய், இருதயபுரம், தம்பலகாமம், மயிலந்தனை, பாலையடிவெட்டை, வண்ணாத்தியாறு, குமரபுரம் உட்பட பல தமிழ்க் கிராமங்களில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். ஆக, கிழக்குத் தமிழர்கள் போரினால் உயிர்களை இழக்காது வாழத் தொடங்கிய காலம் 2007 இன் பின்னர்தான். ஆனாலும், கிழக்கின் தங்குதடையின்றிய சிங்கள ஆக்கிரமிப்பு இதன் பின்னரே முடுக்கிவிடப்பட்டிருந்தது. ஆகவே, அழிவு வடக்கிற்கு மட்டும்தான் என்று கூறுவது சரியானதல்ல.

மேலும், அழிவுகள் என்று பார்த்தால் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாடு 1995 இன்பின்னர் நேரடியான யுத்தம் ஒன்றையோ (2000 இல் அரியாலை வரை புலிகள் முன்னேறிவந்த காலப்பகுதியைத் தவிர்த்து) பாரியளவிலான உயிரிழப்புக்களையோ ( செம்மணி போன்ற தனியான கொலைகளையும், செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களையும் தவிர்த்து) அழிவுகளையோ அவர்கள் சந்திக்கவில்லை. 1995 இற்குப் பின்னர் யாழ்க்குடா வன்னியோடும், கிழக்கோடும் ஒப்பிடும்பொழுது அழிவுகள் குறைந்ததாகவே இருந்தது. கிழக்கின் சிலர் பேசும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கண்டு விசனப்படும் நாம், 2008 - 2009 காலப்பகுதியில் வன்னிப் போர்க்களத்தின் பரந்தன் பகுதிவரை இனக்கொலை ராணுவம் முன்னேறிவந்த நாட்களில் ராணுவத்தை ஆதரித்து யாழ்நகர பேக்கரி உரிமையாளர்கள், சில்லறை வியாபாரிகள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னால் நின்றது டக்கிளஸும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் என்று எமக்குத் தெரிந்தாலும்கூட, இது யாழ் மக்களின் புலிகளுக்கெதிரான நிலைப்பாடாகவே அன்று செய்தியாக்கப்பட்டது. அப்படியானால், இதே தமிழர்களுக்காகவும் நாம் தமிழர் நலன் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட முடியுமா? என்னைப்பொறுத்தவரை டக்கிளஸ், அங்கஜன், திலீபன், சித்தார்த் ( ஈ பி டி பி) போன்ற வடக்கின் அரச பிணாமிகளுக்கும், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களுக்கும் இடையே துளியளவு வேறுபாடும் இல்லை. அன்று டக்கிளஸின் பின்னணியுடன் போராடியவர்களுக்கும் இன்று கிழக்கினை வடக்கர்கள் அடிமைப்படுத்தவே துடிக்கிறார்கள் என்பவர்களுக்கும் இடையே எதுவித வேறுபாடும் இல்லை. 

இவர்களுக்காக எமது பூர்வீக தாயகத்தை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் முஸ்லீம்களை இங்கே குறிக்கவில்லையென்று நான் நினைக்கிறேன். அப்படியானால், நீங்கள் குறிப்பிடுவது கிழக்குத் தமிழர்களையே.

நாம் பட்ட அழிவுகள் என்று வடக்கினை மட்டுமே வைத்துக் கூறுவது தவறு. போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களில் கிட்டத்தட்ட 50 வீதமான மாவீரர்கள் கிழக்கினைச் சேர்ந்தவர்கள். அத்துடன் 2006 இல் கிழக்கிலிருந்தே பேரினவாதம் இனவழிப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில் ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் கருணா குழுவினராலும், பின்னர் நேரடியாகவே ராணூவத்தாலும் கிழக்குத் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள். வாகரை மீதான ஆக்கிரமிப்பில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவையெல்லாவாற்றிற்கும் மேலாக கிழக்கு மாகாணம் வடக்கினைப் போன்று புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் ஒருபோதுமே இருக்காததால் தினம் தினம் விசேட அதிரடிப்படையினராலும், ராணூவத்தாலும், இவர்களின் உதிரிகளான மோகன் குழு, ராசிக் குழு ஆகியவற்றாலும் கிழக்குத் தமிழர்கள் அழிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், சின்ன ஊரணி, கொக்கட்டிச் சோலை, தம்பிலுவில், திரியாய், இருதயபுரம், தம்பலகாமம், மயிலந்தனை, பாலையடிவெட்டை, வண்ணாத்தியாறு, குமரபுரம் உட்பட பல தமிழ்க் கிராமங்களில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். ஆக, கிழக்குத் தமிழர்கள் போரினால் உயிர்களை இழக்காது வாழத் தொடங்கிய காலம் 2007 இன் பின்னர்தான். ஆனாலும், கிழக்கின் தங்குதடையின்றிய சிங்கள ஆக்கிரமிப்பு இதன் பின்னரே முடுக்கிவிடப்பட்டிருந்தது. ஆகவே, அழிவு வடக்கிற்கு மட்டும்தான் என்று கூறுவது சரியானதல்ல.

மேலும், அழிவுகள் என்று பார்த்தால் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாடு 1995 இன்பின்னர் நேரடியான யுத்தம் ஒன்றையோ (2000 இல் அரியாலை வரை புலிகள் முன்னேறிவந்த காலப்பகுதியைத் தவிர்த்து) பாரியளவிலான உயிரிழப்புக்களையோ ( செம்மணி போன்ற தனியான கொலைகளையும், செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களையும் தவிர்த்து) அழிவுகளையோ அவர்கள் சந்திக்கவில்லை. 1995 இற்குப் பின்னர் யாழ்க்குடா வன்னியோடும், கிழக்கோடும் ஒப்பிடும்பொழுது அழிவுகள் குறைந்ததாகவே இருந்தது. கிழக்கின் சிலர் பேசும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கண்டு விசனப்படும் நாம், 2008 - 2009 காலப்பகுதியில் வன்னிப் போர்க்களத்தின் பரந்தன் பகுதிவரை இனக்கொலை ராணுவம் முன்னேறிவந்த நாட்களில் ராணுவத்தை ஆதரித்து யாழ்நகர பேக்கரி உரிமையாளர்கள், சில்லறை வியாபாரிகள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னால் நின்றது டக்கிளஸும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் என்று எமக்குத் தெரிந்தாலும்கூட, இது யாழ் மக்களின் புலிகளுக்கெதிரான நிலைப்பாடாகவே அன்று செய்தியாக்கப்பட்டது. அப்படியானால், இதே தமிழர்களுக்காகவும் நாம் தமிழர் நலன் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட முடியுமா? என்னைப்பொறுத்தவரை டக்கிளஸ், அங்கஜன், திலீபன், சித்தார்த் ( ஈ பி டி பி) போன்ற வடக்கின் அரச பிணாமிகளுக்கும், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களுக்கும் இடையே துளியளவு வேறுபாடும் இல்லை. அன்று டக்கிளஸின் பின்னணியுடன் போராடியவர்களுக்கும் இன்று கிழக்கினை வடக்கர்கள் அடிமைப்படுத்தவே துடிக்கிறார்கள் என்பவர்களுக்கும் இடையே எதுவித வேறுபாடும் இல்லை. 

இவர்களுக்காக எமது பூர்வீக தாயகத்தை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. 

ரஞ்சித், சட்டன் சொன்னது முஸ்லீம்களை என்றுநினைக்கிறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.