Jump to content

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!

spacer.png

குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்து விசாரணைகள் மேற்கொண்டது.

தற்போது விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://athavannews.com/2022/1259698

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிபின் ராவத்

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் சூலூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த சம்பவம் தொடர்பாக முப்படைகளின் உயர்நிலைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். (இந்த பதவியை இவருக்காகவே பிரதமர் நரேந்திர மோதி அரசு உருவாக்கியிருந்தது.)

இந்த விபத்தில் பல அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

ஜெனரல் ராவத்தின் மனைவியும் ஹெலிகாப்டரில் இருந்ததால் அவரும் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில், "விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறோ, சதி அல்லது அலட்சியமோ அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை விசாரணைக்குழு ஆய்வு செய்துள்ளதாக இந்திய விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் நுழைந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

அந்த மேக கூட்டங்களுக்குள் சிக்காமல் விமானி ஹெலிகாப்டரின் திசையை மாற்றும் கட்டாயத்துக்கு வழிவகுத்தது என்றும் அதன் விளைவாக நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு விசையை கட்டுப்படுத்த வழியின்றி சம்பவம் நடந்ததாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

இதே சமயம், இந்த விசாரணைக்குழு எதிர்காலத்தில் இதுபோன்ற அசாதாரண நிலையில் எத்தகைய நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பான சில பரிந்துரைகளை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கியிருக்கிறது.

 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி

அவற்றின் விவரத்தை பாதுகாப்புத் துறையினர் வெளியிடவில்லை. இந்த குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

முன்னதாக, பிபின் ராவத் பறந்து சென்ற ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து விசாரிக்க ஏதுவாக தமிழக காவல்துறை ஆரம்பநிலை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. பிறகு இந்த சம்பவம் பற்றிய விசாரணையை பாதுகாப்புத்துறையே ஏற்றுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நிலைக்குழுவை அமைப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அறிவித்தார். அதன்படி விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

 

பிபின் ராவத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த 5ஆம் தேதியே அளி.க்கப்பட்டது. இந்த ரக ஹெலிகாப்டர்கள், மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பு வடிவமைப்பாகும்.

பிபன் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானபோது அதன் செயல் திறன் முழுமையாக சேவை செய்யக்கூடியதாகவே இருந்தது என பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

எனினும் தாழ்வாகப் பறந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர், வெலிங்டனில் தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன், மேக மூட்டத்தில் சிக்கியதால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கீழே விழுந்து நொறுங்கியிருப்பதாக விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

என்ன நடந்தது?

2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

 

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும், சூலூரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டறை, ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், மதியம் 12.08 மணிக்கு, ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது.இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை நிர்வகிக்கும் நெறிமுறைகள் அடங்கிய தனது பரிந்துரைகளை விசாரணைக்குழு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அவற்றை இந்திய விமானப்படை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mi-17V5 விபத்துக்குள்ளான நாளில் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) உரையாற்ற சென்றிருந்தார்.அந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராஜே சிங் ராவத், அவரது பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் செளஹான், Mi-17V5 விமானியான ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங், துணை விமானி. ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார் மற்றும் லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் இறந்தனர்.

அந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே குரூப் கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி தனது கடைசி மூச்சை இழுத்த பிறகு அவரது உயிர் பிரிந்தது.

https://www.bbc.com/tamil/india-60002443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ப சீனாகாரன் இல்லையா?

ஆஆஆ வடை போச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப சீனாகாரன் இல்லையா?

ஆஆஆ வடை போச்சே.

செய்தது சீனாக்காரனாய் இருந்தாலும்.....
செய்தது சீனாக்காரன் எண்டு வெளியிலை சொன்னால் கிந்தியனுக்கு மானங்கெட்ட வேலையெல்லோ? உளவுத்துறையின்ரை மூஞ்சையை எங்கை கொண்டு போய் வைக்கிறதாம்? 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.