Jump to content

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன்

January 4, 2022
 

கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா

 

இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பதை இலங்கை தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி சர்வதேச அரங்கில் ஆவணங்கள் அனுப்புவது எதிர்காலத்தில் எமது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம். சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்துமூல ஆவணமாக அனுப்பபடவேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது என்பது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் ஏன் இலங்கை தமிழரசு கட்சி பின்னடிக்கிறது என ஊடகவியாளர் கேட்டபோது அது தொடர்பாக மேலும் கருத்துக்கூறியபோது.

இலங்கையில் கடந்த 1956ல் இருந்து 2009, மே மாதம் வரை இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த இனம் தமிழர்கள் மட்டுமே, சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஆயிரக்கணக்கானவர்களும், முஷ்லிம்களை பொறுத்தவை நூற்றுக்கணக்கானவர்களுமே போராட்டத்தால் மாண்டுள்ளனர் என்பதே உண்மை.

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சனை என்பதையே இலங்கையின் இனப்பிரச்சனை என கடந்த 73,வருடங்களாக பேசும் பொருளாக இருந்து வருகிறது அதற்கான் அரசியல் தீர்வுக்காக இன்றுவரை மூன்றரை இலட்சம் மக்களை பலிகொடுத்தும் ஐம்பதாயிரம் போராட்ட இளைஞர்களை பலிகொடுத்தும் அதற்கான எந்த ஒரு தீர்வும் இன்றி வாழும் ஒரு இனமாக உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமே.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே தந்தை செல்வா கடந்த 1949,டிசம்பர்,18,ல் இலங்கைத்தமிழரசு கட்சியை ஆரம்பித்தார்.

அந்த கட்சியின்ஊடாக பல அகிம்சைரீதியிலான போராட்டங்களும் ஓப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை அனைத்தையும் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த ஐக்கியதேசிய கட்சி அரசாங்கமும்,ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமும் ஏமாற்றி தட்டிக்கழித்தமையால்தான் 1976,மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமீழீழ அரசை நிறுவும் தீர்மானத்தை தந்தை செல்வா தலைமையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதும் அதன்பின்னர் 36, விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டதும் அதனால் திம்பு பேச்சு வார்த்தை இடம்பெற்று 1987,யூலை,29,ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13,வது அரசியலமைப்பு தோற்றம் பெற்று மாகாணசபை முறை ஏற்படுத்தப்பட்டது எல்லாமே வரலாறுகள்.

இந்த 13,வது அதிகாரப்பரவலில் தமிழ்மக்களுக்கான நியாயமான அதிகாரங்கள் இல்லை என்று அப்போதய தமிழர் விடுதலைகூட்டணி, தமீழீழ விடுதலை இயக்கம், தமீழீழ விடுதலைப்புலிகள் எல்லாம் முதலாவது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தலை புறக்கணித்ததும் ஆனால் இந்திய அமைதிப்படையின் தூண்டுதலால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை (ஈபீஆர்எல்எவ்) முன்னணியும், ஈழம் தேசிய ஜனநாயகமுன்னணியும் (ஈஎன்டீஎல்எவ்)மட்டும் தமிழர் தரப்பாகவும் ஏனய தேசிய கட்சிகள்,ஶ்ரீலங்கா முஷ்லிம் ஹாங்கிரஷ் எல்லாம் அந்த தேர்தலில் போட்டியிட்டு இந்தியப்படையால் ஈபீஆர்எல் எவ் வெல்லவைக்கப்பட்டு வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கியதும் அவரும் சரியாக ஒருவருடம் மூன்று மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக பதவியில் இருந்து பின்னர் தமிழீழ பிரகடணத்தை உதட்டால் உச்சரித்து விட்டு இந்திய அமைதிப்படையின் கப்பலில் ஏறி இந்தியாவில் வாழ்ந்த வரலாறுகள் எல்லாம் தமிழின அரசியலில் உண்டு.

அதன்பின்னர் 1987,யூலை,29, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் 2009,மே,18,வரை தமீழீழ விடுதலைப்புலிகள் மட்டும் ஆயுதப்போராட்டம் மேற்கொண்டு மௌனித்தபின்னர் தற்போது 12,வருடங்களாக ஆட்சியாளர்களுடனும், பாரதப்பிரதமருடனும், சர்வதேச நாடுகளுடனும் பலதரப்பட்ட பேச்சுவார்தைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனய தமிழ்தேசிய கட்சிகள், புலம்பெயர் உறவுகள் எல்லாம் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனநாய ரீதியாக 2009,க்குப்பின்னரும் 2010, 2015,2020, ஆகிய பொதுத்தேர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்தி வடக்கு கிழக்கு மக்களிடம் வாக்குகளை பெற்ற கட்சியாக வடக்கு கிழக்கில் அதிகூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சியாக இன்றுவரை உள்ளது.

அந்த கொள்கையுடன் பயணிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியாக உள்ள இலங்கைத்தமிழரசுக்கட்சி தற்போது பல தமிழ்கட்சிகள் இணைந்து பாரதப்பிரதமர் மோடிக்கு எழுத்துமூல ஆவணம் ஒன்றை வழங்கும்போது அடிப்படை கொள்கையைவிட்டு அதில் யாரையும் திருப்திப்படுவதற்காக முக்கிய விடயங்களை நீக்கிவிட்டு ஆவணங்களை தயாரிப்பது தவறு என்பதே இலங்கை தமிழரசுகட்சியின் நிலைப்பாடு ஆனால் அந்த ஆவணம் தற்காலிகமானதாக இருப்பினும் அதில் நிலந்தர தீர்வையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் என மேலும் கூறினார்.

https://www.ilakku.org/அடிப்படை-கொள்கையை-நீக்கி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.