Jump to content

தை புத்தாண்டா? இல்லையா? பொங்கல் பை சொல்லும் செய்தி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தை புத்தாண்டா? இல்லையா? பொங்கல் பை சொல்லும் செய்தி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுதும் இன்று முதல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

முதல்வர் வழங்கிய இந்த பொங்கல் பையில், திமுகவின் கொள்கையான, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. பொங்கல் என்ற வார்த்தை கூட இடம்பெறவில்லை. பொங்கல் பையின் ஒரு பக்கத்தில்,

’தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்’ என்று அச்சிடப்பட்டு, அதன் கீழே, ’மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்- மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கத்தில் பொங்கல் கொண்டாடும் சித்திரம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்ப் புத்தாண்டு தை 1 என்ற திமுகவின் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டதோ அரசு என்ற விவாதங்கள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.

முன்னதாக... ஒரு மாதத்திற்கு முன்பு, 2.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான திட்டத்தை அரசு வெளியிட்டது.அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ’தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்’ தெரிவித்ததாகவே சமூக தளப் பக்கத்தில் படங்கள் பரவின. ஆனால், 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்த தமிழக அரசு, சித்திரை 1 (ஏப்ரல் 14, 2022) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை என அறிவித்தது. ஜனவரி 14 அதாவது தை முதல் தேதியை பொங்கல் பண்டிகை என்றுதான் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. அப்போதே தமிழக அரசு இதில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற கேள்விகள்

ஆனால் இப்போது அந்த பரிசுப் பை வழங்கும்போது தமிழ்ப் புத்தாண்டு என்றும் இல்லை, பொங்கல் என்றும் இல்லை. தமிழர் திருநாள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதி அல்ல தை முதல் தேதிதான் என்று குறிப்பிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டார். ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை முதல் தேதிதான் என்று அறிவித்தார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு என்று கூறினார்கள்.

spacer.png

இதற்கிடையே மூத்த அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் 17ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது அவர் நீட் விவகாரம் குறித்து ஆளுநரோடு பேசியதாக கூறப்பட்டாலும்... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் அரசாணை தொடர்பாக விவாதித்தாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அரசின் இந்த முயற்சிக்கு ஆளுநர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து மின்னம்பலத்தில், தை புத்தாண்டு: முதல்வர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று வழங்கப்படும் பொங்கல் பைகளில் தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்றே இடம்பெற்றுள்ளது. எனினும் ஆளுங்கட்சி தரப்பில் நம்மிடம் பேசிய சிலர், “இந்த பரிசுப்பைகள் இரு வேறு வகைகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு என்றும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன” என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன, தை தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு நாளை (ஜனவரி 5) தொடங்க இருக்கும் சட்டமன்றத்தில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

https://minnambalam.com/politics/2022/01/04/20/mkstalin-chief-minister-thai-new-year-pongal-bags

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக…. ஒவ்வொரு பொங்கலுக்கும் வருகின்ற குழப்பம். 😎
வாற பொங்கலுக்கும்… ஏன் அதற்கடுத்த பொங்கலுக்கும் இந்தக் குழப்பம் வரும். 🤪
நாம் தான்… மனதை திடப் படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். 😂
இல்லாட்டி… பைத்தியம் பிடிச்சிடும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வழக்கமாக…. ஒவ்வொரு பொங்கலுக்கும் வருகின்ற குழப்பம். 😎
வாற பொங்கலுக்கும்… ஏன் அதற்கடுத்த பொங்கலுக்கும் இந்தக் குழப்பம் வரும். 🤪
நாம் தான்… மனதை திடப் படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். 😂
இல்லாட்டி… பைத்தியம் பிடிச்சிடும். 🤣

ஆரிய - திராவிட தொல்லை வேண்டாம் ; ரெண்டுக்குமே பரிசு பொதியும் கொண்டாட ரூ2000 பணமும் கொடுத்து விடுக.😊

  -தமிழ்நாட்டு குடிமகன்கள்-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.