Jump to content

ஒட்டுசுட்டான்னில் விழுந்து வணங்கி கடமையேற்ற அதிபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக  சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது.

தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் .

சிறந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் செம்மொழிக்குரலோன், பண்டாரவன்னியன் விருது மற்றும் கம்பீரக்குரலோன் போன்ற இன்னுமின்னும் பற்பல விருதுகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image_e472efc41e.jpgimage_27e63de007.jpg

Tamilmirror Online || விழுந்து வணங்கி கடமையேற்ற அதிபர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்த பாடசாலைக்கே…. அதிபராக வருவது, மிக அரிதாக நடக்கும் செயல்.
அந்த அதிபர், ஆரம்ப நாளில்… பாடசாலைக்கு செய்த நன்றிக் கடனை,
நாமும் பாராட்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

image_27e63de007.jpg

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அதிபருக்கு.

21 minutes ago, தமிழ் சிறி said:

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 

முன்னாலை,புத்தரின் அரசமிலை புடைசூழ சிங்கம் கத்தியோடு நிக்குது.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமேலழகர் உரை

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் -

271240499_154721380220199_2283070794562193683_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=7nP5QRx5f-EAX_l-ZEu&_nc_ht=scontent-ham3-1.xx&oh=00_AT8-bxXGzHAwCPsatWGqLNJV0iBojnZncnoMYIFbmU-FCQ&oe=61D8F8F2

Ist möglicherweise ein Bild von 8 Personen und Personen, die stehen

Ist möglicherweise ein Bild von 6 Personen

அந்த பாடசாலை செய்த பலனை  நற்கணமே பெறுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபருக்கு வாழ்த்துக்கள்.. மிகவும் நெகிழ்ச்சியான தருணம்..

 

 

On 4/1/2022 at 16:35, தமிழ் சிறி said:

அதிபருக்கு….. பின்னாலை இருக்கிற சாமிப் படத்திலை,
புத்தரை காணேல்லை, அல்லாவை காணேல்லை, இயேசுவை காணேல்லை எண்டு….
சனம் இப்ப, சண்டைக்கு வரப் போகுது. 🤣
 

மதசின்னங்கள் ஏன் இல்லை என்று கேட்பதை விடுத்து பாடசாலையில் ஏன் மதசின்னங்கள் என்று கேட்க வைப்பதுதான் கல்வி..அரசின் கல்வி நிறுவனங்கள் மதசார்பு அற்ற கல்வியை வழங்கவேண்டும்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மதசின்னங்கள் ஏன் இல்லை என்று கேட்பதை விடுத்து பாடசாலையில் ஏன் மதசின்னங்கள் என்று கேட்க வைப்பதுதான் கல்வி..அரசின் கல்வி நிறுவனங்கள் மதசார்பு அற்ற கல்வியை வழங்கவேண்டும்…

ஶ்ரீலங்கா… பாடசாலைகளிருந்து,
புத்தர் படத்தை எடுப்பதிலிருந்து  ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா… பாடசாலைகளிருந்து,
புத்தர் படத்தை எடுப்பதிலிருந்து  ஆரம்பிக்க வேண்டும்.

உண்மை.. பெளத்த மதவெறிகொண்டுதான எங்களை அளிக்க நிக்குரான்.. முஸ்லீம் மதவெறி கொண்டுதான் உலகை அளிக்க நிக்குரான் அடிப்படை வாதி.. இந்து மதவெறிகொண்டுதான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ்.. ஆக மொத்தம் எந்த மதமா இருந்தாலும் மதவெறி கொடூரமானது.. மேற்கத்தைய நாடுகள் போல அரச கல்வி நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வி கொண்டுவந்தால் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய அழிவுகள் பாதியாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில் மதச் சார்பற்ற கல்வி?

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. பெளத்த மதவெறிகொண்டுதான எங்களை அளிக்க நிக்குரான்.. முஸ்லீம் மதவெறி கொண்டுதான் உலகை அளிக்க நிக்குரான் அடிப்படை வாதி.. இந்து மதவெறிகொண்டுதான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ்.. ஆக மொத்தம் எந்த மதமா இருந்தாலும் மதவெறி கொடூரமானது.. மேற்கத்தைய நாடுகள் போல அரச கல்வி நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வி கொண்டுவந்தால் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய அழிவுகள் பாதியாகும்..

https://www.gov.uk/national-curriculum/other-compulsory-subjects

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. பெளத்த மதவெறிகொண்டுதான எங்களை அளிக்க நிக்குரான்.. முஸ்லீம் மதவெறி கொண்டுதான் உலகை அளிக்க நிக்குரான் அடிப்படை வாதி.. இந்து மதவெறிகொண்டுதான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ்.. ஆக மொத்தம் எந்த மதமா இருந்தாலும் மதவெறி கொடூரமானது.. மேற்கத்தைய நாடுகள் போல அரச கல்வி நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வி கொண்டுவந்தால் மூன்றாம் உலக நாடுகளில் நிறைய அழிவுகள் பாதியாகும்..

நான் பள்ளிக்கூடம் போன நாள் தொடக்கம்.......பள்ளிக்கூடம் என்னை கழுத்தை புடிச்சு வெளியிலை தள்ளும் வரைக்கும் காலமை  தேவாரம் படிக்காமல் வகுப்புக்குள்ளை உள்ளுட்டதே கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

எந்த நாட்டில் மதச் சார்பற்ற கல்வி?

மதம் போதிக்கசப்படவில்லை.

மதம் பற்றிய கல்வி அறிவே புகட்டப்படுகிறது.

நிச்சயமாக, uk இன் அரச மற்றும் அரசு சார்ந்து இருக்கும் பாடசாலைகளில், எல்லா முக்கிய மதங்கள்  பற்றிய கல்வி அறிவு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

மதம் போதிக்கசப்படவில்லை.

மதம் பற்றிய கல்வி அறிவே புகட்டப்படுகிறது.

நிச்சயமாக, uk இன் அரச மற்றும் அரசு சார்ந்து இருக்கும் பாடசாலைகளில், எல்லா முக்கிய மதங்கள்  பற்றிய கல்வி அறிவு கிடைக்கும்.

U.K. இல் இஸ்லாமிய யூத கத்தோலிக்க( கத்தோலிக்கராக இருந்தால் மட்டுமே அனுமதி) பாடசாலைகள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

U.K. இல் இஸ்லாமிய யூத கத்தோலிக்க

அப்படியானவை, பொதுவாக முற்றாக அல்லது பகுதியாக  அரசு சாரதாவை.

அரசு சார்ந்து இருந்தால், national curriculam கட்டாயம் இருக்கவேண்டும்.

அதில் ஒன்று மதம் அல்லது சமயக்  கல்வி.

ஆயினும், தனிமனித சுதந்திரத்தை வைத்து, சில் இடங்களில் national  curruiculam இல் இருந்து விதி விலக்கு அளிக்கப்படும்.   

https://www.gov.uk/government/collections/national-curriculum

Link to comment
Share on other sites

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

நூறு வீதம் உண்மையான கருத்து.. எமது நாளாந்த வாழ்வில் செய்திகள் தொலைக்காட்சிகள் ஊடாக தினமும் அவதானிப்பதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கத்தோலிக்க பாடசாலைகள் என்றால் ஒழுக்கமாய் இருக்கும் என்று அதில் தங்கட பிள்ளைகளை சேர்ப்பதற்காய் மதம் மாறின தமிழர்களும் இருக்கிறார்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

உலகில் எங்கெல்லாம் அரசாங்கம் சமயத்துக்கு அனுசரணை வழங்குகின்றதோ, அங்கெல்லாம் வறுமையும், யுத்தமும், பாகுபாடும், பெண் அடிமைத்தனமும் அதிகமாக இருக்கும். 

ஏனுங்க சார் சீனா கியூபாவில எல்லாம் என்ன மாதிரி? அடிமைத்தனம் பாகுபாடு வஞ்சகம் பஞ்சம் ஏதுமே இல்லையா?

மதத்தை முன்னிலைப்படுத்தாத அல்பேனியாவில் பஞ்சமோ பஞ்சம்
ஜேர்மனியிலும் மதம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது
அமெரிக்காவிலும் இருக்கென்று நினைக்கின்றேன்...

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்க சார் சீனா கியூபாவில எல்லாம் என்ன மாதிரி? அடிமைத்தனம் பாகுபாடு வஞ்சகம் பஞ்சம் ஏதுமே இல்லையா?

மதத்தை முன்னிலைப்படுத்தாத அல்பேனியாவில் பஞ்சமோ பஞ்சம்
ஜேர்மனியிலும் மதம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது
அமெரிக்காவிலும் இருக்கென்று நினைக்கின்றேன்...

ஐயா தங்களுக்கு தமிழை  கிரகித்தலில் பிரச்சனைகள்  ஏதும் இருக்கின்றதா ?. அரசாங்கம், அதிகமாக என்பன எனது கருத்தின் முக்கிய வார்த்தைகள்( Key words) ஆகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

ஐயா தங்களுக்கு தமிழை  கிரகித்தலில் பிரச்சனைகள்  ஏதும் இருக்கின்றதா ?. அரசாங்கம், அதிகமாக என்பன எனது கருத்தின் முக்கிய வார்த்தைகள்( Key words) ஆகும்

ஓம்... எனக்கு கிரகித்தல்லை  பிரச்சனை இருக்கு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.