பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஒமிக்ரான்? விஞ்ஞானிகளின் கணிப்பும், விளக்கமும்!
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மே 9 சம்பவம் குறித்து... ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை, நியமிக்குமாறு கோரிக்கை! கொழும்பு – கொள்ளுப்பிட்டி மற்று காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் அடக்குமுறை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட களங்கம் மிகவும் வலுவானவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அதற்குக் கட்டளையிட்டவர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் அதைச் செய்தவர்கள் யார் என்பதை நாட்டின் முன் அம்பலப்படுத்த வேண்டும் என அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர. இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே இரத்தின தேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். https://athavannews.com/2022/1283662 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய... சுமார் 500 கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை திறந்த கணக்கு முறையின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். திறந்த கணக்கு முறைக்கு உணவினை இறக்குமதி செய்வது கடந்த 6ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283650 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர்... இராஜினாமா இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க அமைச்சர் உத்தேசித்துள்ள நிலையில், அபிவிருத்திகளை மீளாய்வு செய்வதற்கும், பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மே 21 மற்றும் 23 திகதிகளில் அமைச்சர் நிர்ணயித்த இரண்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில், நாட்டிற்கு மிக விரைவான வருவாயை ஈட்டித் தரும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1283635 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை, ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்! இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார். அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் சீனா சேர்க்கப்படவில்லை. சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை எதிராகவே இந்த கட்டமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே விநியோகச் சங்கிலி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவை சார்ந்து இந்த கட்டமைப்பு செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283553 -
By தமிழ் சிறி · Posted
ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று அம்மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார். 13 குழந்தைகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருப்பினும் செல்லும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பல தசாப்தங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் 19,350 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த ஆண்டு இதுவரை 212 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. https://athavannews.com/2022/1283677
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.