Jump to content

புதிரான மனிதன்


Recommended Posts

புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான்
புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான்
புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான்
மர்மம் உடைக்கவே ஆறறிவில்
சிந்திக்கிறான்
தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான்
வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்!

தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான்
வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான்
ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான்
வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல்
வாழ்வை வாழ்ந்தோமென
வாழ்த்துச் சொல்கிறான்
யார் யாரோ நடத்திய வழியில்
எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்!

வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான்
உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான்
பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான்
தனிமை மட்டுமே உறவாய்
கொள்கிறான்
எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான்
கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான்

முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான்
கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான்
இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை
புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை
பயந்தவன் அதனை இறை என்கிறான்
வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

-தமிழ்நிலா.












Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 21:55, தமிழ்நிலா said:

புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான்
புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான்
புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான்
மர்மம் உடைக்கவே ஆறறிவில்
சிந்திக்கிறான்
தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான்
வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்!

தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான்
வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான்
ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான்
வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல்
வாழ்வை வாழ்ந்தோமென
வாழ்த்துச் சொல்கிறான்
யார் யாரோ நடத்திய வழியில்
எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்!

வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான்
உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான்
பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான்
தனிமை மட்டுமே உறவாய்
கொள்கிறான்
எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான்
கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான்

முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான்
கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான்
இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை
புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை
பயந்தவன் அதனை இறை என்கிறான்
வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

-தமிழ்நிலா.











 

அருமையான வரிகள் பகிர்வதற்கு நன்றிகள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 11:25, தமிழ்நிலா said:

வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

 

இதற்கு முன் எத்தனை எத்தனை ஆட்டங்கள்.

Link to comment
Share on other sites

31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான வரிகள் பகிர்வதற்கு நன்றிகள்.👍

மிக்க நன்றிகள் 🙏

20 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்கு முன் எத்தனை எத்தனை ஆட்டங்கள்.

உண்மை தான்...மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதச்செயல்களின் மர்மம் விளக்கும் கவிதை ........பாராட்டுக்கள் தமிழ்நிலா ......!  🌹

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

மனிதச்செயல்களின் மர்மம் விளக்கும் கவிதை ........பாராட்டுக்கள் தமிழ்நிலா ......!  🌹

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.