Jump to content

புதிரான மனிதன்


Recommended Posts

புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான்
புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான்
புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான்
மர்மம் உடைக்கவே ஆறறிவில்
சிந்திக்கிறான்
தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான்
வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்!

தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான்
வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான்
ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான்
வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல்
வாழ்வை வாழ்ந்தோமென
வாழ்த்துச் சொல்கிறான்
யார் யாரோ நடத்திய வழியில்
எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்!

வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான்
உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான்
பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான்
தனிமை மட்டுமே உறவாய்
கொள்கிறான்
எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான்
கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான்

முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான்
கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான்
இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை
புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை
பயந்தவன் அதனை இறை என்கிறான்
வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

-தமிழ்நிலா.












Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 21:55, தமிழ்நிலா said:

புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான்
புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான்
புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான்
மர்மம் உடைக்கவே ஆறறிவில்
சிந்திக்கிறான்
தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான்
வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்!

தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான்
வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான்
ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான்
வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல்
வாழ்வை வாழ்ந்தோமென
வாழ்த்துச் சொல்கிறான்
யார் யாரோ நடத்திய வழியில்
எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்!

வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான்
உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான்
பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான்
தனிமை மட்டுமே உறவாய்
கொள்கிறான்
எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான்
கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான்

முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான்
கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான்
இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை
புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை
பயந்தவன் அதனை இறை என்கிறான்
வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

-தமிழ்நிலா.











 

அருமையான வரிகள் பகிர்வதற்கு நன்றிகள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 11:25, தமிழ்நிலா said:

வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

 

இதற்கு முன் எத்தனை எத்தனை ஆட்டங்கள்.

Link to comment
Share on other sites

31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமையான வரிகள் பகிர்வதற்கு நன்றிகள்.👍

மிக்க நன்றிகள் 🙏

20 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்கு முன் எத்தனை எத்தனை ஆட்டங்கள்.

உண்மை தான்...மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதச்செயல்களின் மர்மம் விளக்கும் கவிதை ........பாராட்டுக்கள் தமிழ்நிலா ......!  🌹

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

மனிதச்செயல்களின் மர்மம் விளக்கும் கவிதை ........பாராட்டுக்கள் தமிழ்நிலா ......!  🌹

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.