Jump to content

நரேந்திர மோதி பாதுகாப்பில் குளறுபடி: "உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்" - புதிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி பாதுகாப்பில் குளறுபடி: "உயிருடன் திரும்பியதாக முதல்வரிடம் சொல்லுங்கள்" - புதிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

PM's convoy on a flyover in Punjab

பட மூலாதாரம்,ANI

 

படக்குறிப்பு,

ஃபெரோஸ்பூர் அருகே மேம்பாலத்தில் போராட்டம் காரணமாக சிக்கிக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வாகன தொடர் இதனால் மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் சிக்கிக் கொண்ட நிகழ்வு, கடுமையான பாதுகாப்புக் குறைபாடு என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோதி, "என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு மாநில அரசே காரணம் என்றும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. பஞ்சாபில் இன்று என்ன நடந்தது?

பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்.

வானிலையால் பயணத்தில் திடீர் மாற்றம்

மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருந்தார்.

ஆனால், வானிலை சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்படடது. பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தபோது, சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கிக் கொண்டன. இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி 18 கி.மீ தூரத்தில் உள்ளது.

இது குறித்து இந்திய உள்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி. பிரதமரின் அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜித் மிஸ்ரா சென்ற வாகன தொடரணியை மறிக்கும் நோக்குடன் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்கள் மீது வாகனத்தை ஏற்றிய சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளதால் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அரசியலாகும் விவகாரம்

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது காங்கிரசின் சதி என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் பல ட்வீட்களை செய்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

அதில், பஞ்சாபின் காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு எதிரானது, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. போராட்டக்காரர்கள் பிரதமரின் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் பஞ்சாப் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைக்கு வழி பாதுகாப்பானது என்று உறுதியளித்தனர். பஞ்சாப் முதல்வர் சன்னி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகவோ, இந்தப் பிரச்னை குறித்து எந்த விவாதத்திற்காகவோ போனைக்கூட எடுக்கவில்லை என்று நட்டா கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, "காங்கிரஸின் மோசமான நோக்கங்கள் தோல்வியடைந்து விட்டன. காங்கிரஸ் மோதியை வெறுப்பதாக நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், இந்திய பிரதமருடன் மோத வேண்டாம். உங்களுடைய செயல்பாடுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்," என்று கூறினார்.மேலும் அவர், "பிரதமரின் பாதுகாப்புப் படையினரிடம் சாலை பயணத்தை மேற்கொள்ளலாம் என வேண்டுமென்றே பொய் கூறப்பட்டதா? பிரதமரின் வாகனங்கள் முழுவதையும் நிறுத்த முயற்சி நடந்தது, பிரதமரின் பாதுகாப்பை 20 நிமிடங்களுக்கு நிறுத்த வைக்கும் வகையில் அங்கு அவர்களை அழைத்துச் சென்றது யார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விளக்கம்

ஆனால், இந்த விவகாரம் தொடர்பான முழு விவரத்தை விளக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இனறு மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரதமரின் வருகையின்போது அதற்கு எதிராக சிலர் சாலை மறியல் செய்ததால் பிரதமர் திரும்பியதற்காக வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.

 

பஞ்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சரண்ஜித் சிங் சன்னி

மோசமான வானிலை மற்றும் எதிர்ப்பு போரட்டங்கள் காரணமாக பயணத்தை நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்திடம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டோம். பிரதமரின் திடீர் பாதை மாற்றம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

"திடீரென சிலர் அங்கு சென்று போராட்டம் நடத்தினார்கள்.இதில் சதி இருந்தால் முழு விசாரணை நடத்தப்படும். பஞ்சாப் மண்ணில் பிரதமரை வரவேற்கிறோம். பிரதமர் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இதில் பஞ்சாப் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, வழியில் ஒருவர் வந்து அமர்ந்தபோது, மற்றவர்களும் திடீரென வந்து அமர்ந்து விட்டனர். அதை பாதுகாப்பு அச்சுறுத்தலோடு இணைப்பது அரசியலாக இருக்கலாம்," என்று சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

விவசாயிகளால் டெல்லியில் ஓராண்டு போராட்டத்தில் இருக்க முடியும் என்றால், அங்கு அவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா? எதிர்ப்பாளர்கள் செல்லும் வழியில் அமர்ந்திருப்பதாக பாதுகாப்புப்படையினரிடம் கூறியதாகவும், பிரதமரேதான் திரும்பிச் செல்ல முடிவு செய்ததாகவும் சன்னி கூறினார்.

"இதில் பாதுகாப்பு பிரச்னை இல்லை. இனி வரும் காலங்களில் நல்ல ஏற்பாடு செய்வேன் . பிரதமர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்," என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

நடந்தது குளறுபடியா?

பிரதமர் ஃபெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக பிரதமர் போன்ற மிக, முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையின்போது எல்லா வித மாற்றுப்பாதைகளுக்கான திட்டம் முன்பே போடப்படும். அதற்கான ஒத்திகையையும் மாநில காவல்துறை செய்யும். அதை சிறப்புப் பாதுகாப்பு படையின் முன்பாதுகாப்பு ஆய்வுக் குழுவும் மேற்பார்வை செய்திருக்கும்.

அதன்படியே பிரதமர் சாலை வழியாக செல்ல முடிவு செய்யப்பட்டபோது, அதற்கான இசைவு மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபடுவார்கள் என்பது யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவமாக கருதப்படுகிறது.

 

மோதி அரசு

பட மூலாதாரம்,@HARPALSSANGHA

எனினும், பிரதமரின் வருகைக்கு எதிராக ஒரு சில விவசாயிகள் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பதுதான் களத்தில் இருந்த உண்மை.

ஃபெரோஸ்பூர் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹுசைனிவாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு 30 கிலோமீட்டர் முன்னதாகவே பிரதமரின் வாகன தொடரணி மேம்பாலத்தை அடைந்தது, அங்கு போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனாலேயே பிரதமரின் வாகனம் 15-20 நிமிடங்கள் அங்கேயே சிக்கிக் கொண்டது. அப்போது பிரதமர் இருந்த வாகனத்தை அவரது படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு கண்காணித்தனர்.

விவசாயிகள் சங்கம் என்ன சொல்கிறது?

இந்த சம்பவம் குறித்து கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகையில், மோதியை நிராகரித்த விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே மோதி தமது பேரணிய ரத்து செய்து விட்டு திரும்பியிருக்கிறார். அதை மறைக்கவே இப்படி நாடகமாடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மோதியின் பேரணியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையிலேயே கூட்டம் வந்ததாகவும் அதில் பங்கேற்றவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் கிசான் ஏக்தா மோர்ச்சா கூறுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பிறகு 3 கேள்விகளை அம்மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் எழுப்புகிறார்.

பதிண்டாவில் இருந்து ஹெலிகாப்டருக்குப் பதிலாக சாலை மார்க்கமாக மோதி சென்று கொண்டிருக்கிறார் என்ற திட்டம் பஞ்சாப் காவல்துறை மட்டுமே தெரியும். அது எப்படி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தரப்புக்கு தெரிய வந்தது என்று அவர் கேட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

மோதியின் பாதையில் நின்ற விவசாயிகளை பஞ்சாப் காவல்துறை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தாதது ஏன்? மோதியின் பாதையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் நகரத் தயாராக இல்லை என்றால், பிரதமரின் பாதையை ஏன் மாற்றவில்லை? பஞ்சாப் மாநிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7

Twitter பதிவின் முடிவு, 7

ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல், "பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதை நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். மாநிலத்தை நடத்த தற்போதைய முதல்வர் திறமையற்றவர்," என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-59884825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதியின் பாதுகாப்பு: கோட்டை விட்டது யார்? ப்ளூ புக் விதிமீறலை எப்படி அறிவது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,SPG

பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஃபெரோஸ்பூர் அருகே உள்ள நிகழ்ச்சிப் பகுதிக்கு சாலை வழியாக பிரதமர் செல்லும் பாதையில் போராட்டக்குழுவினர் இருப்பார்கள் என உளவுத்துறை எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பிய பிறகும், பஞ்சாப் மாநில காவல்துறை 'ப்ளூ புக்' எனப்படும் பிரதமரின் பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிகளைப் பின்பற்றவில்லை என்று இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரதமரின் வருகைக்கான தற்செயல் பாதை திட்டம் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் வட்டாரத்தில் பிரதமரின் வாகனம், அவரது பாதுகாப்பு தொடரணி வாகனங்களுடன் சுமார் 15-20 நிமிடங்கள்வரை பஞ்சாப் மாநில எல்லை மாவட்ட மேம்பாலம் ஒன்றில் சாலைமறியல் செய்த போராட்டக்கார்ரகள் குழுவுக்கு மத்தியில் சிக்கியிருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த புதன்கிழமை "மோசமான வானிலை காரணமாக, பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்திலிருந்து பிரதமரின் வாகன தொடர் அணி (கான்வாய்) சாலை வழியாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குப் புறப்பட்டது.

பிரதமர் மோதியின் வாகனம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்திற்கு வந்தபோது, அந்த பாதையில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார். பிறகு வேறு வழியின்றி நரேந்திர மோதி குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.

இது பிரதமர் மோதியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும் என்று இந்திய உள்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்தது.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், இது பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 'கொலைத் திட்டம்' என்று கடுமையாகக் குற்றம்சாட்டினர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களும், "பிரதமர் பங்கேற்கவிருந்த பேரணிக்கு கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் அதில் அவர் கொள்ளாமல் திரும்பிச் செல்ல மேம்பால சாலை மறியல் பிரச்னையை குறிப்பிடுகின்றனர்," என்று தெரிவித்தனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை." என்று தெரிவித்தார்.

 

மோதி

பட மூலாதாரம்,ANI

இருப்பினும், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இது ஒரு பாதுகாப்புக் குறைபாடுதான் என்றே கருதுகின்றனர்.

குறிப்பாக அந்த பகுதி பாகிஸ்தான் எல்லையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு பிரதமர் ஒரே இடத்தில் 15 - 20 நிமிடங்கள் வரை நின்றிருப்பது ஆபத்தாகியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில், இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப் அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் பொறுப்பானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டது குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்றை அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அமைத்திருக்கிறார்.

விவாதிக்கப்படும் ப்ளூ புக் விதிகள்

இந்த விவகாரத்தில் இந்திய பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வகுக்கப்பட்ட ப்ளூ புக் விதிகள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.

இந்த ப்ளூ புக் எனப்படும் ஆவணம், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அவரது பாதுகாப்பிற்கென பிரத்யேகமான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது.

 

எஸ்பிஜி

பட மூலாதாரம்,SPG

"ப்ளூ புக் விதிகளின்படி, பிரதமரின் வருகையின் போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான தற்செயல் பாதையை மாநில காவல்துறை தயார் செய்ய வேண்டும்" என்று உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக பஞ்சாப் மாநில காவல்துறையுடன் அவர்கள் இடைவிடாது தொடர்பில் இருந்ததாகவும் போராட்டக்காரர்களின் நடமாட்டம் குறித்து அவர்களை எச்சரித்தபோது, பிரதமருக்கு முழு பாதுகாப்பு தருவதாக மாநில காவல் உயரதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) வீரர்கள், பிரதமரின் தனி பாதுகாப்பை அவரது அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள். மீதமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு கவனித்துக்கொள்கிறது.

இதில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட ஏதுவாக குறைந்தது மூன்று முதல் ஒரு வாரத்துக்கு முன்பே பிரதமரின் பாதுகாப்பு குழுவினரின் முன்பாதுகாப்பு குழு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும், பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான கூட்டங்களை நடத்தும்.

இந்த கூட்டங்களில் மாநில உள்துறை செயலாளர், மாநில காவல்துறை தலைமை இயக்குநர், மாநில காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரி, மத்திய, மாநில உளவுத்துறைகளின் தலைமை அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்பர்.

அந்த கூட்டத்தில்தான் பிரதமரின் பயண நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்கப்படும். மாற்றுத் திட்டங்களும் இந்த கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சோதனை ஒத்திகையும் நடத்தப்படும். இவை எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களையும் நடைமுறைகளையும்தான் ப்ளூ புக் விதிகள் கொண்டிருக்கும்.

இதன் தீவிரம் என்ன?

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யஷோவர்தன் ஆசாத், பிரதமர் வாகன அணிவகுப்பு எல்லைப் பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கியது 'மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு' என்று பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "எல்லையோர மாநிலத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒரு மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் தடைபட்டு நின்றால், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது ஒரு தீவிரமான விஷயம். இது ஒரு பெரிய தவறு. ஏனென்றால், பிரதமர் எங்கு சென்றாலும், அவரது நெருக்கமான பாதுகாப்பை மட்டுமே எஸ்பிஜி மேற்கொள்கிறது. மற்றபடி பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்துக்கு முன்பே ஒரு குழு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மற்றபடி அவரது பயணத்துக்கான பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநில அரசிடமே உள்ளது" என்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா தனது ட்வீட் ஒன்றில் பிரதமர் தனது அசல் திட்டத்தில் இல்லாதவகையில் சாலை வழியாகச் செல்ல முடிவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், பிரதமரின் வாகன அணிவகுப்புக்கு ஒரு நிலையான பாதை எப்போதும் இருந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பதிண்டாவில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு இடையிலான தூரம் சுமார் 110 கி.மீ. பதிண்டா விமான நிலையத்தை அடைந்த பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் வான் பயணம் மேற்கொள்வதாகத் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்தது. சிறிது நேரம் வானிலை சரியாகிவிடும் என்று காத்திருந்தார், ஆனால் அதன் பிறகு சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

"இதுபோன்ற நேரத்தில் மாற்றுப்பாதை திட்டம் என்பது எப்போதுமே வழக்கத்தில் கையாளப்படக் கூடியதுதான்" என்று யஷோவர்தன் கூறுகிறார்.

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிரதமரின் சாலை வழியாகச் செல்வதற்கான பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அந்த வழியைத் தடையற்றதாக்கியிருக்க வேண்டியது மாநில காவல் துறையின் பொறுப்பு," என்று ஆசாத் கூறுகிறார்.

தமிழக காவல்துறையில் டிஜிபி ஆக பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "வான் வழி திட்டமிடப்பட்ட பயணங்கள் வானிலை காரணமாக மேற்கொள்ளப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டரின் பைலட் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவும் சமீபத்தில் தமிழகத்தின் சூலூரில் பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்துக்குப் பிறகு இந்த விஷயத்தில் பாதுகாப்புப் படையினர் மிகத் தீவிரமாகவே உள்ளனர்," என்கிறார்.

"பஞ்சாப் சம்பவத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேர பயண தூரத்தில் வழி நெடுகிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செல்ல முடிந்துள்ளது. ஆனால், நிகழ்ச்சிப் பகுதிக்கு 30 நிமிட பயண தூரத்தில்தான் அவர் சென்ற பாதை குறுக்கே சிலர் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் திரண்டபோதும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது மாநில காவல்துறையின் பொறுப்பே," என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

"ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது பிரதமர் செல்லும் வழியில் சாலை மறியல் செய்து வெளிப்படுத்தப்படும் என்றால் அதை தேச பாதுகாப்புடன் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் எழும். அது பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி, வேறு கட்சி ஆளும் அரசின் பிரதமரானாலும் சரி - இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் பாதுகாப்பு ஏற்பட்ட அச்சுறுத்தலாக மட்டுமே கருத வேண்டும்," என்கிறார் அந்த உயரதிகாரி.

பிரதமரின் பாதுகாப்பில் பலத்த குளறுபடிகள் நடந்துள்ளதாக உத்தரபிரதேச முன்னாள் டிஜிபி விக்ரம் சிங்கும் கூறுகிறார்.

"இது ஒரு தவறல்ல, ஒரு பெரிய அலட்சியம். திடீரென பயண பாதை மாற்றியதாக கூறினாலும், அதற்கும் முன்கூட்டியே தயாராகவே திட்டம் இருந்திருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் திடீரென்று திரண்டிருக்கவில்லை, அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். உளவு அமைப்புகள் மூலம் தகவலறிந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடுக்கப்படவில்லை. அதுதான் தவறு" என்கிறார் விக்ரம் சிங்.

மோதியே விதிமீறிய சம்பவம்

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,NARENDRA MODI

2017ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தில் பங்கெடுக்க அங்கு சென்றார் பிரதமர் மோதி.

அந்த நேரத்தில் சாலை வழியாக பிரதமர் திட்டமிட்டிருந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தது. இதனால், இந்த கடல் பயண வாய்ப்பை மோதி பயன்படுத்திக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

தமது பயணத்தின் அங்கமாக ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து வடக்கு குஜராத்தில் உள்ள தரோய் அணைக்கு கடல் விமானத்தில் பயணம் செய்தார். அதற்கு முன்பாக விமானத்துக்கு வெளியே அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்படி அவர் செய்வது பயண திட்டத்தில் இல்லாத செயல்பாடு.

அந்த பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிரதமர் மோதி ரசித்தபோதும், அவரது செயல்பாடு தங்களுடைய ப்ளூ புக் விதிகளை 'பாதுகாக்கப்படும் நபரே' மீறிய நிகழ்வாக எஸ்பிஜி கருதியது.

ப்ளூ புக் மீறல் மட்டுமின்றி, எஸ்பிஜி பாதுகாப்பை பெறுவோர் குறிப்பிட்ட செயல்பாட்டுத் தரத்தைக் கொண்ட விமானங்களில் மட்டுமே பறக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்துத்துறையின் விதியை மீறி ஒற்றை எஞ்சினைக் கொண்ட கடல் விமானத்தில் மோதி பறந்ததும் அதுவரை நடக்காத நிகழ்வாக கருதப்படுகிறது.

இனி என்ன நடக்கும்?

சிறப்புப் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்படும் நபருக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் இதுபோன்ற பாதுகாப்பு அலட்சிய குற்றச்சாட்டு எழுந்தால், அதற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு உடனடியாக அழைக்க உள்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கடிதம் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அனுப்பும்.

அவர்களின் செயல்பாடு குறித்து விளக்கம் கோரவும் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அல்லது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் தீவிரம் அல்லது அரசு நியமிக்கும் விசாரணைக் குழு தரும் அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதுவே, மத்திய பணியில் இருக்கும் காவல்துறை அல்லது உளவுப்பிரிவு அல்லது எஸ்பிஜி உயரதிகாரியின் அலட்சியம் என கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக பணி இடைநீக்கம் அல்லது சம்பந்தப்பட்ட பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

பஞ்சாப் பயண ஏற்பாடு குளறுபடி விவகாரத்தில் மாநில அரசு ஏற்கெனவே உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதே சமயம், மத்திய உள்துறையும் ஒரு விசாரணை குழுவை அமைத்து எங்கு பிரச்னை நடந்தது என்பதை கண்டறிந்து அறிக்கை தர உத்தரவிட்டிருக்கிறது.

எஸ் பி ஜி என்பது என்ன?

 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,SPG

பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிறப்புப் பாதுகாப்புக் குழு 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு 1985இல் எஸ் பி ஜி உருவாக்கப்பட்டது.

இந்தப் படையின் ஆண்டு பட்ஜெட் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும், மேலும் இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் வலுவான மிக, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அமைப்பாக கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-59894778

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப் ஆயிட்டாண்டா சிங்கன்!!!

சீனாவும் பாக்கிஸ்த்தானும் வெள்ளிபார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. வாகன நெரிசலில் ஒரு மேம்பாளத்தின்மீது பல நிமிடங்கள் மோடியின் வாகனத் தொடரணி மாட்டுப்பட்டி நின்றிருக்கிறது.

 

இனிமேல் இப்படியொரு சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.