Jump to content

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

அண்மையில் ‘தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு’ இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல்’ தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செய்திக் குறிப்புகள் பதிவுசெய்திருந்த அதேவேளை, இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள், கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் இழுபறிகள் பற்றியும், நிறையப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் எனத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டங்களை ஒன்றிணைக்கும் வார்த்தையாக, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தை பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே, இங்கு ‘தமிழ் பேசும் கட்சிகள்’ என்ற பதம், மேற்சொன்ன மக்கள் கூட்டங்களை மையப்படுத்திய அரசியல் கட்சிகளைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் வந்திருக்க வேண்டிய, வந்திருக்கக்கூடிய கட்சிகள்தான் இவை. ‘தமிழர்’ என்ற பலமான ஒற்றை அடையாளம் இங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தால், அது, இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு, பலவழிகளில்  சாதகமாக அமைந்திருக்கும்.

அது நடக்காது போனது, பேரினவாதத்துக்குச் சாதகமாக அமைந்தது. இந்த இடத்தில், அது ஏன் நடக்காது போனது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தல் அவசியமாகிறது.

இந்நாட்டின் தமிழர்கள், தம்முள்ளே மதத்தால், பிரதேசத்தால், சாதியால் பிரிந்த அடையாளங்களைக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும், ஒரே காலகட்டத்திலும் ஒரே அடிப்படைகளிலும் ஏற்பட்ட சமூகப் பிரிவினைகள் அல்ல. வெவ்வேறு காலகட்டங்களில், இந்தப் பிரிவினைகள் மாற்றமடைந்தன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இவ்வாறு தம்முள் சமூகப் பிரிவுகளைக் கொண்டிருந்த தமிழர்களிடம், ஒரு சில பிரிவினரின் ஆதிக்கமும் மற்றைய பிரிவுகள் அந்த ஆதிக்கத்திடம் அடக்கு முறையையும் எதிர்கொண்டது. இந்த அடக்குமுறையிலிருந்து வௌிப்படுவதற்கு, மாற்றுப்பிரிவுகள் உருவாகின. ஆனால், தமக்குள் சமூகப் பிரிவுகளைக் கொண்டவர்களாகவே இந்நாட்டின் தமிழர்கள் தொடர்ந்தும் காணப்படுகிறார்கள்.

ஆனால், இதே சமூகப்பிரிவுகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் ‘தமிழர்கள்’ என்ற ஒற்றை அரசியல் அடையாளம் எழுப்பப்பட்டிருக்கிறதே என்று சிலர் வினவலாம்.

இந்திய அரசியலும் இந்திய அரசியல் கட்டமைப்பும் அங்கிருந்த பிரச்சினைகளும் அந்தத் தலைவர்களின் முன்னுரிமைகளும், இலங்கை விடயங்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை. இந்த ஒப்பீடு, ஒரு தனித்த ஆய்வாகவே நடத்தப்படக் கூடிய தலைப்பாகும்.

தென்னிந்தியாவின் தமிழ்த் தலைமைகள், ‘திராவிடக் கொள்கை’யைக் கையிலெடுத்தார்கள். அது சித்தாந்த அடிப்படையிலேனும், ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தை விடப் பரந்ததோர் அடையாளமாகும். இதற்கான உந்துணர்வாக, ‘ஆரிய எதிர்ப்புணர்வு’ அமைந்திருக்கலாம்.

இலங்கையின் தேசிய கட்டுமானத்தின் வரலாறு, வேறாக அமைந்தது. இங்கு, சிவில் தேச அரசு ஒன்று கட்டமைக்கப்பட முயற்சிக்கப்பட்டது. அதுவே, சுதந்திரத்துக்கு மிகவும் முற்பட்ட தமிழ்த் தலைமைகளின் அவாவாக இருந்தது.

ஆனால், பேரினவாதம், அந்த முயற்சியைக் கையகப்படுத்தி, சிவில் தேச அரசின் ஒற்றையரசு, ஒற்றைத் தேசிய சிந்தனை என்பவற்றைத் தனது பெரும்பான்மை இனத் தேசியத்தின் மேலிருத்தி, இலங்கையில் இனத் தேசிய முரண்பாட்டுக்கு வழிவகுத்தது.

எண்ணிக்கையில் பெரும்பான்மை இனம், தன்னை இனத் தேசிய அடிப்படையில் கட்டமைக்கத் தொடங்கிய போது, அதன் விளைவாக, எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவே, தற்காப்புத் தேசியமாக ‘தமிழ்த் தேசியம்’ இந்த மண்ணில் பிறந்தது.

ஆனால், ‘தமிழ்’ என்ற ஒற்றை அடையாளம், தமிழ் பேசும் மக்களை இணைக்கவில்லை. மதத்தாலும், வாழும் இடத்தாலும் பிரிக்கப்பட்டது. அவர்களுக்கான தனித்தனி அரசியலைத் தேடி, அவர்கள் பயணம் தனிவழிபோனது.

தமிழ்த் தேசிய அரசியல் பிறந்தபோது, அதில் ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்துக்குள் சேர்ந்திருந்தார்கள். ஆனால், அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரசியல் முன்னுரிமைகளில் வேறுபாடுகள் இருந்தன. தமக்கான தனிவழி அரசியலை, அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில், ‘இலங்கை தமிழர்’கள் என்போர், அவர்களுக்கான பலமான குரலாக இருக்கவில்லை. இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, வெறும் எழுத்திலான கோரிக்கையாகவே வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டது.

‘தனிநாடு’ என்ற பாதையில், அவை பயணிக்கத் தொடங்கிய போது, அந்தத் தனிநாட்டில், மலையகத்தில் செறிந்து வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலையைப் பற்றிய உறுதியானதும் சாத்தியமானதுமான நிலைப்பாடு எதுவுமே, வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படவில்லை.

ஆகவே, இங்கும் இருதரப்பின் அரசியல் முன்னுரிமைகள் வேறுபட்டிருந்தது. ஆகவே, இருதரப்பும் தம்வழியே தனிவழியெனப் பயணப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமான், தமிழ் ஐக்கிய முன்னணியிலிருந்து விலகவும் இதுவே காரணம் எனலாம்.

இன்றும் இந்த அரசியல் முன்னுரிமைகளின் வேறுபாட்டில், பெருமளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. வடக்கு-கிழக்கு தமிழர்களின் முன்னுரிமையாக, ‘தேசியம், தாயகம், சுயநிர்ணயம்’ என்ற ‘தமிழ்த் தேசிய அபிலாஷைகள் காணப்படுகின்றன. அதற்கே, அம்மக்கள் பெருவாரியாகத் தொடர்ந்தும் தமது அரசியல் அங்கிகாரத்தை வழங்கி வருகிறார்கள்.

 தம்மை ஒரு தனித்த ‘தேசமாக’ வடக்கு-கிழக்கு தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அரசியல் அதிகாரப் பகிர்வு, அவர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கையாக இருக்கிறது.

மறுபுறத்தில், தமிழ்பேசும் முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரையில், தம்மைத் தனித்த தேசமாக முன்னிறுத்துவதிலும், அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் அவை அக்கறை காட்டவில்லை. மாறாக, இந்நாட்டின் சிறுபான்மையினமாகத் தம்மை முன்னிறுத்துகின்றன.

சிறுபான்மையினருக்கான சமவுரிமை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இது சித்தாந்த அடிப்படையில், தமிழர்களின் ‘தனித்தேச’ நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது. வடக்கு-கிழக்கு தமிழர்கள், தம்மை வெறும் சிறுபான்மை இனமாக அடையாளப்படுத்தவில்லை.

மாறாக, இந்நாட்டில் வாழும் தனித் தேசமாக தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதேயொத்த வேறுபாட்டை, மலையகத் தமிழ் அரசியலுக்கும் வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலுக்கும் இடையில் நாம் காணலாம்.

மலையக தமிழ் அரசியலில், மலையகத் தமிழரை அல்லது இந்திய வம்சாவளித் தமிழரை, தனித்த தேசமாக அடையாளப்படுத்தும் மிகச் சில முயற்சிகளை நாம் அவதானித்தாலும், அது அவர்களின் அரசியல் முன்னரங்கில் இடம்பெறவில்லை என்பதோடு, அது சித்தாந்த ரீதியில் நிறுவக் கடினமானதொன்றாக அமைவதையும் அவதானிக்கலாம்.

 எது எவ்வாறாயினும், இம்மக்கள் கூட்டங்கள், அரசியலில் தம்மை வேறாக அடையாளப்படுத்துவதுடன், வேறுபட்ட அரசியல் அபிலாஷைகளையும், முன்னுரிமைகளையும் கொண்டிருக்கின்றன என்பது மிக நிதர்சனமானது.

ஆகவேதான், ‘தமிழ் பேசும் கட்சிகள்’ ஒன்றிணைவதில் இத்தனை வாதப்பிரதிவாதங்கள்; ஒரு பொது ஆவணம் தயாரிப்பதில் இத்தனை இழுபறிகள்.

வேறுபாடுகள் எப்படியானதாக இருப்பினும், குறைந்தபட்ச ஒற்றுமை என்பது சாத்தியம்தான்.

‘தமிழ் பேசும் கட்சி’களாக இவை இம்மக்கள் கூட்டங்கள், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பற்றி, ஒருமித்த குரலில் பேசுவதும் மற்றவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தார்மிக ஆதரவையேனும் வழங்குவதும் குறைந்த பட்ச ஒற்றுமையை வௌிப்படுத்துவதாக அமையும்.

இம்மக்கள் கூட்டங்கள், அரசியல் அபிலாஷைகளில் ஒன்றிணையும், ஒரு கூட்டமைப்பாக அரசியலில் இயங்கும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த முயற்சி, மேற்சொன்ன அடிப்படை வேறுபாடுகளின் காரணத்தால், யதார்த்தத்தில் சாத்தியப்படாது.

ஆனால், தமக்கிடையேயான தொடர் உரையாடல்களுக்கான ஒரு மேடையை, இவை கொண்டிருப்பது இம்மக்கள் கூட்டங்கள் அனைத்துக்கும்  சாதகமானதொன்றாகவே அமையும்.

இது எதிர்காலத்தில், இம்மக்கட் கூட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில், இவை ஒரு ‘கோகஸாக’ பாராளுமன்றத்தில் இயங்கவும் வழி வகுக்கலாம். ஆகவே, அந்த அடிப்படையில், இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டும்.

அடிப்படையிலேயே வேறுபட்ட அரசியல் முன்னுரிமைகளைக் கொண்டவர்கள்தான் இங்கு ஒன்றிணைவதால், அதற்குள் சிலரை அழைக்காது விடுவதும், தவிர்ப்பதும் அந்த மேடைக்கு அழகல்ல. 

அதேபோல, ஓர் உரையாடலுக்கான மேடையில் கூட ஒன்றிணையாது தவிர்ப்பதும் அழகல்ல. இதையுணர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சி’கள் இந்த மேடையை ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது உசிதமானது.

ஆனால், இந்த ஒற்றுமையின் பெயரை, எவரோ ஒருவரின் அல்லது ஏதோ ஒரு வௌிநாட்டின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்த விளைந்தால், அந்த முயற்சி தோல்வியில்தான் முடியும் என்ற வரலாற்றுப் பாடத்தையும் நினைவில் கொள்வது அவசியம்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-பேசும்-கட்சிகளின்-ஒன்றிணைவு/91-288695

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.