Jump to content

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் - நாராயணி சுப்ரமணியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் - நாராயணி சுப்ரமணியன்

olaichuvadiJanuary 1, 2022
Ancient_Painting.jpg

சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்” என்று அழைப்பவர்களும் உண்டு. மிளகும் ஜாதிக்காயும் மணக்கும் பல புகழ்பெற்ற கப்பற்பயணங்களை இந்தக் கடற்பகுதி சந்தித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் வசிப்பதாக சொல்லப்படும் கடல்சார் தெய்வங்கள், ஜின்கள், கடற்கன்னிகள், மூதாதையரின் ஆன்மாக்கள் குறித்த நாட்டார் கதைகள் கடற்கரைதோறும் விரவியிருக்கின்றன. மாம்போஸா, சான்ஸிபார் போன்ற கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைப்பகுதிகளில் இன்றும் வெள்ளை நிறக் கட்டடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தூரத்துக் கப்பல்களுக்கும் துறைமுகங்கள் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக, கடற்கரையை ஒட்டிய கட்டடங்களை வெள்ளை நிற பவழப்பாறைகளால்  கட்டுமானம் செய்த இந்தியப் பெருங்கடல் மரபின் எச்சம் அது.

உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடலாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடல் கிட்டத்தட்ட ஏழு கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியாவைச் சுற்றி இதன் அங்கங்களான அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல்கள் சூழ்ந்திருக்கின்றன. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்தியப் பெருங்கடலின் ஆவணங்களைப் படித்தாலே ஐரோப்பிய காலனியாதிக்கத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும். இத்தனை முக்கியத்துவம் இருந்தாலும் இந்தக் கடலின் அறிவியல் பற்றி நாம் புரிந்துகொண்டது மிக சொற்பமே. உலகில் 20% கடல்நீரைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பகுதியின் ஆழ்கடல் பரப்பு பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை.

அறிவியல் போதாமைகளை நாம் உணர்ந்துகொண்டு சரிசெய்வதற்கு முன்பே வேறொரு ஆபத்து இந்தப் பகுதியை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டது. காலநிலை மாற்றம் என்ற உலகளாவிய அச்சுறுத்தலின் பின்னணியில் இந்தியப் பெருங்கடலை கவனிக்கும் அறிவியலாளர்கள், இங்கு உள்ள தனித்துவமான பாதிப்புகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

காலநிலை அச்சுறுத்தல்கள்

உலகில் உள்ள 90% கடற்பரப்போடு ஒப்பிடும்போது இந்தியப் பெருங்கடலின் வெப்ப நிலை அதிகரிப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று ஆகஸ்ட் 2021ல் வெளிவந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1996 முதல் இப்போதுவரை இந்தியப் பெருங்கடலுடைய பரப்பின் வெப்பநிலை 0.3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.  இந்த நூற்றாண்டின் இறுதியில் இது 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடலோடு ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகம். இந்தியப் பெருங்கடலின் சராசரி மட்டம், ஆண்டுக்கு 3.7 மில்லிமீட்டர் உயர்ந்துகொண்டிருக்கிறது.  பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை,  இந்த விகிதம் 12-13 மில்லிமீட்டர் வரை கூடுகிறது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள கடற்பகுதிகளில், காலநிலை மாற்றத்தால் மிகவும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய 17 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Climate Change hotspots). இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Ocean_Warming.jpg

கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக ஒரு கடற்பகுதியில் காலநிலை சார்ந்த பிரச்சனைகள் ஐந்து விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்:

  1. கடலின் சராசரி வெப்பநிலை உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் – பவழப்பாறைகள் நிறமிழத்தல், மீன்களின் வலசைப்பாதை மாறுவது, மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது
  2. பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பாதிப்பு
  3. கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்பு – கடலாமைகளின் முட்டையிடும் தளங்கள் பாதிக்கப்படுதல், கடலோர வாழிடங்கள் அழிதல், கடலோரக் குடிமக்களுக்கு ஏற்படும் இழப்புகள்.
  4. கடல் நீரோட்டம் மாறுபடுவதால் ஏற்படும் பாதிப்பு – மீன்களின் இனப்பெருக்கம், முட்டைகள்/லார்வாக்களின் பயணம் பாதிக்கப்படுவது
  5. கடலின் வேதிக்கூறுகள் மாறுபடுவதால் ஏற்படும் பாதிப்பு – கடல்நீர் அமிலமாதலால் ஓடு உள்ள விலங்குகள் வலுவிழப்பது போன்றவை

பனிக்கட்டி உருகுவதால் நேரடியாக இந்தியப் பெருங்கடல் பாதிக்கப்படுவதில்லை என்றாலும், அதனால் ஏற்படும் காலநிலை சுழற்சிகளின் சிக்கல்கள் ஒருகட்டத்தில் இந்தியப் பெருங்கடலையும் மறைமுகமாக பாதிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காலநிலை பாதிப்புகள் எல்லாம் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பருவமழையும் பெருங்கடலும்

இந்தியப் பெருங்கடலின் சராசரி வெப்பநிலை உயர்ந்துகொண்டிருப்பது பல தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பருவமழை பொய்த்துப்போவது, எதிர்பாராத நேரங்களில் கடும் மழை பெய்வது போன்ற சிக்கல்களுக்கும் இதற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஐம்பது வருடங்களில், வறண்ட நாட்களின் சராசரி எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் என்றால், 2001 தொடங்கி 2019ம் ஆண்டு வரையிலான இருபது ஆண்டு காலகட்டத்திற்குள், அரபிக் கடலில் புயற்சீற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. இதுபோன்ற பருவச் சிக்கல்கள் கடலில் மட்டுமல்லாமல் நிலத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பவழத்திட்டுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அதிகரித்துவரும் சராசரி வெப்பநிலை, கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கிறது.வெப்பம் அதிகரிக்கும்போது நுண்பாசிகளை இழந்து நிறமிழக்கும் பவழ உயிரிகள், அதிலிருந்து மீள முடியாமல் இறந்துவிடுகின்றன. 2040ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பவழத்திட்டுக்கள் அழியலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பவழத்திட்டுக்கள் அழியும்போது, அவற்றை வாழிடமாகக் கொண்டுள்ள மீன்கள் மற்றும் பிற உயிர்களும் அழியக்கூடும்.

Disasters.jpg

கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகள்

கடல்மட்டம் உயர்வதால் 2100க்குள் மும்பை, மங்களூரு, கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 இந்திய நகரங்கள் 3 அடி கடல்நீரால் சூழப்படும் என்று காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழுமம் தெரிவித்திருக்கிறது. கடல்கோள் என்பது எங்கோ படித்த ஒரு நிழல் நினைவாக இல்லாமல் நிஜமாகவே வரப்போகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காலநிலை மாற்றம் பற்றிய பல சமீபத்திய ஆய்வுகள், முந்தைய அறிக்கைகளை விட அச்சுறுத்தல் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது என்று உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், இந்த நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ 2100ம் ஆண்டு என்பதும் குறைந்து அடுத்த 60 ஆண்டுகளில் பாதிப்பு வரலாம் என்று புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்தாலோகூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடலோரப் பெருநகரங்களில் ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் நடத்தப்படும் சூழலியல் அத்துமீறல்கள், மோசமான நகர மேலாண்மை, சூழல் அநீதி போன்றவை இந்தப் பிரச்சனையை இடியாப்ப சிக்கலாக மாற்றியிருக்கின்றன. பூர்வகுடிகள் அப்புறப்படுத்தப்படுவது, மீனவர்களின் எதிர்ப்பையும் மீறிக் கடலுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டப்படுவது என பற்றியெரிகிற நெருப்பில் அடிக்கடி எண்ணெயும் ஊற்றப்படுகிறது.

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் கடல்மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் பேர் வாழ்விடத்தை இழந்து காலநிலை அகதிகளாக மாறப்போகிறார்கள் என்று அறிக்கைகள் கணித்திருக்கின்றன.  கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார இழப்பு காரணமாக, மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே புலம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர்.

இன்னொரு புறம் கடலுக்குள்ளும் கடல்மட்ட உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடலோர வாழிடங்களான அலையாத்திக்காடுகள், பவழப்பாறைகள் ஆகியவை இதை எப்படி எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை, அவை பாதிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். கடலாமைகளின் இனப்பெருக்கமும் முட்டையிடுதலும் இதனால் பாதிக்கப்படும்.

மீன்களுக்கு ஏற்படும் பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் மீன்கள் பாதிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்தான். ஆனால் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல மூன்றாம் உலக நாடுகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மீன்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சிதைப்பதாக இருக்கிறது. பெரும்பான்மை மீனவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளோடு மீனவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் பேசவேண்டும்.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், கடலில் உள்ள நுண்பாசிகள் சரியாக வளர்வதில்லை. கடந்த 60 ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலில் உள்ள நுண்பாசிகளின் (Phytoplankton) அளவு 20% குறைந்துவிட்டதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதைத் தவிர, கடலின் வெப்பநிலை மாறுபடுவதால், வெப்பநிலை சார்ந்து அடுக்குகள் உருவாகி (Stratification), சத்துள்ள நீரும் சத்துகள் இல்லாத நீரும் கலக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற காரணங்களால் கடலில் கிடைக்கும் உணவு பெருமளவில் சரிகிறது. உணவு கிடைக்காததாலும் வாழ்வதற்கு ஏற்ற வெப்பநிலை இல்லாததாலும் மீன்கள் பாதிக்கப்படுகின்றன.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலின் மொத்த சூரைமீன் பிடி (Total Tuna Catch) பாதி அளவு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கானாங்கத்தை மீனின் (Indian Mackerel) சராசரி அளவு குறைந்துவிட்டது. இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போவது குறைந்துவிட்டது. இந்தியாவின் பல இடங்களில், முகத்துவாரங்களில் மீன்வரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டதாக மீனவத் தொல்குடிகள் குறிப்பிடுகின்றனர். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒருவகைப் பாரைமீனின் (False Trevally) எண்ணிக்கை கடல்வெப்பமாதலால் குறைந்துவிட்டது என்று ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.

எண்ணெய் நிரம்பிய மத்திமீன் (Oil Sardine) அதனுடைய பொருளாதார முக்கியத்துவம் காரணமாகக் கேரளாவில் “குடும்பம் புலர்த்தி” என்று அழைக்கப்படுகிறது. சிறு/குறு மீனவர்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்த இந்த மீனின் வரத்து, கடந்த சில ஆண்டுகளாக எளிதில் கணிக்கமுடியாதபடி ஆட்டம் கண்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தி மற்றும் கானாங்கத்தை மீன்களின் எல்லை விரிந்திருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன,  புதிய பகுதிகளில் இந்த மீன்கள் என்னென்ன சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்துதான் பார்க்கவேண்டும். சில இடங்களில்,கானாங்கத்தை மீன்கள் காணப்படும் சராசரி ஆழம் அதிகரித்துள்ளது. ஆகவே, கானாங்கத்தை மீன்களைப் பிடிக்கவேண்டுமானால் ஆழ்கடல் வலைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளதாகவும், இந்த ஆழ்கடல் வலைகள் கடல் சூழலியலை சீர்குலைக்கும் எனவும் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கடல்வெப்பநிலை அதிகரிப்பதால், மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மீன் இனங்களுக்கு இனப்பெருக்க காலத்தின்போது சீரான வெப்பநிலையும் கடல் வேதிக்கூறுகளும் தேவை. கடல்நீர் வெப்பநிலை அதிகரித்திருப்பதால், சங்கரா மீன் இனங்களின் இனப்பெருக்க காலம் மாறுபட்டிருப்பதாகக் கூறுகின்றன சில முதற்கட்ட ஆய்வுகள். இதுபோன்ற மாற்றங்கள் பிற மீன் இனங்களில் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதுபற்றி ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்காள விரிகுடாவில் பல இடங்களில் மீன்களே இல்லாத “Dead zones” உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தினசரி நெருக்கடி, பெரிய விசைப்படகுகளுடன் போட்டி போட முடியாத தன்மை ஆகியவற்றால் ஏற்கனவே விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சிறு  மற்றும் குறு மீனவர்களுக்கே இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில், மீன் விற்பதையே மரபுசார் தொழிலாக செய்துவந்த பல பெண்கள், அதிலிருந்து வரும் வருமானம் போதாமல் ஏற்கனவே கூலி வேலைக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்கிறது ஒரு ஆய்வு.

article-image-1024x767.jpg

இந்தியப் பெருங்கடலில் உள்ள காலநிலை பாதிப்புகளை நாம் சரியாகப் புரிந்துகொள்வதில் மிகப்பெரிய தடையாக நிற்பவை தரவுகள்தான். சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் இந்தப் பகுதியில் தரவுகளுக்கான ஒரு பெரும் போதாமை இருக்கிறது. ஆனாலும் கிடைத்திருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து இந்தியப் பெருங்கடலின் எதிர்காலத்தை அனுமானித்தால்கூட அது அச்சத்தை வரவழைக்கிறது. ஒரு காலத்தில் உலகின் எல்லா நாட்டிலிருந்தும் பயணிகளை சுமந்த இந்த கடற்பகுதியும் அதன் ஓரங்களில் வசிக்கும் மக்களும் இப்போது ஆபத்திலிருக்கிறார்கள். உலக நாடுகள் விழித்துக்கொள்ளுமா என்பதுதான் நம் முன் நின்றுகொண்டிருக்கும் பிரம்மாண்டமான கேள்வி.

தரவுகள்

  1. Climate Change 2021: The Physical Science Basis, IPCC Report, August 2021
  2. Recent trends in Sea surface temperature and its impact on Oil Sardine, Vivekanandan et al, ICAR, 2009.
  3. Assessment of Climate Change over the Indian Region, Krishnan et al, Ministry of Earth Science Report, 2020
  4. A reduction in Marine primary productivity driven by rapid warming over tropical Indian ocean, Roxy et al, Geophy.Res.Lett, 2015.

https://olaichuvadi.in/article/climate-change-and-the-indian-ocean/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.