Jump to content

மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சுக்கு ஆஸி.க்குள் நுழைவதற்கான விசா இரத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சுக்கு ஆஸி.க்குள் நுழைவதற்கான விசா இரத்து

உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்டிருந்த விசா வியாழன் அன்று இரத்து செய்யப்பட்டது.

Novak Djokovic last year at the Australian Open.

இதனால் அவர் மெல்போர்னில் நடக்கும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான, அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காணவரும் ரசிகர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து வீரர்-வீராங்கனைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர். 

ஆனால் நம்பர்-1 வீரரும், 9 முறை அவுஸ்திரேலிய ஓபனை வென்றவருமான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தார். 

இதனால் அவர் அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தாமல் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார். 

இந் நிலையிலேயே மெல்போர்ன் சென்றடைந்த ஜோகோவிச்சின் அவுஸ்திரேலியா நுழைவுக்கான விசா வியாழக்கிழமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் போட்டியில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டு, வியத்தகு முறையில் நாடு கடத்தப்படுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/120315

 

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாக்காரன் விளையாட்டு என்று வந்தால், எந்த கீழ் நிலைக்கும் இறங்கி விளையாடுவான் என்பது யாம் அறிந்ததே, ஆனால் ஜோகோவிச்சு தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் அவர்கள் செய்தது சரிதான். சட்டம் யாவருக்கும் சமம் ஆனதே. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தடுப்பூசி செலுத்தாமல் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாட அனுமதி கிடைத்திருப்பதாக ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி உள்ளார். 

தடியை கொடுத்து அடியை வாங்கியிருக்கிறார்....

அலம்பறை பண்ணி வெளியே சொல்லாமல் இருந்த்திருந்தால் விளையாடி இருப்பார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

தடியை கொடுத்து அடியை வாங்கியிருக்கிறார்....

அலம்பறை பண்ணி வெளியே சொல்லாமல் இருந்த்திருந்தால் விளையாடி இருப்பார்.....

இவருக்கு தடுப்பூசி இல்லாமல் அவுஸ்ற்றேலியாவில் விளையாட அனுமதி என்ற செய்தியை பிபிசியில் வாசித்தபோதே நினைத்தேன் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்தான் ஆள் பார்த்து பெரிய இடம் எண்டா சலுகை குடுக்குறது சாத்தியம் வெள்ளைக்காரன் நாட்டில இது எப்படி சாத்தியம்… ரீவி பேப்பர்ல எல்லாம் வச்சு செஞ்சு விட்டுருவாங்களே அரசை எண்டு.. அவுஸ்ற்றேலியாகாரன் வேறமாரி ப்ளான் போட்டிருக்கான்.. ஊசியப்போட்டிட்டு வந்தாலும் வந்திடுவான்னு ஆளை விளையாட விடாமல் பண்ண கூப்பிட்டு வச்சு செஞ்சுட்டான் போல..

Link to comment
Share on other sites

அவர் ஊசி போட்டாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை.

சேபியா அதிபர் சேபிய நாடே உனக்கு பின்னால் உள்ளது என சொல்லி உள்ளார்.
நோவிக்கின் தந்தை தனது மகனை விளையாட விட வேண்டும் என சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் விளையாட பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் உள் நுழைவு அனுமதி விமான நிலையத்தில் மறுக்கப்பட்டு( விசா இரத்து அல்ல), தங்குமிடமொன்றில் வைத்திருக்கின்றனர். 

 

Link to comment
Share on other sites

நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்,
ஆனால் குடிவரவு அமைச்சர் மீண்டும் விசாவை ரத்து செய்ய பரிசீலிக்கிறார்.

https://www.theguardian.com/australia-news/2022/jan/10/novak-djokovic-wins-appeal-against-decision-to-cancel-his-australian-visa

அவுஸ்ரேலிக்காரர் சரியான அளாப்பிகள்.

 

Link to comment
Share on other sites

  • zuma changed the title to நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2022 at 10:45, zuma said:

நோவக் ஜோகோவிச் தனது ஆஸ்திரேலிய விசாவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்,
ஆனால் குடிவரவு அமைச்சர் மீண்டும் விசாவை ரத்து செய்ய பரிசீலிக்கிறார்.

https://www.theguardian.com/australia-news/2022/jan/10/novak-djokovic-wins-appeal-against-decision-to-cancel-his-australian-visa

அவுஸ்ரேலிக்காரர் சரியான அளாப்பிகள்.

 

ஜோகோவிச் தான் தவறான PCR Certificate கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. டிசம்பர் 16 திகதி கோவிட்  தொற்று அறியப்பட்டபின் 17, 18 திகதிகளில் பொதுவெளியில் மாஸ்க் இல்லாமல் ஆட்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். ஆஸ்திரேலியா நீதிபதிகளுக்கும் தலைக்குள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Getting COVID is not a qualifying reason for medical exemption.

Link to comment
Share on other sites

கோவிட் வக்சீன் அல்லது அதற்கு இணையான  treatment எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தி  அறிந்தேன். உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

. ஆஸ்திரேலியா நீதிபதிகளுக்கும் தலைக்குள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

Tennis Australia and the Victorian state governments medical panels அவர்கள் செய்த தவறான முடிவுகள்தான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

Tennis Australia and the Victorian state governments medical panels அவர்கள் செய்த தவறான முடிவுகள்தான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் .

 

 

https://www.bbc.com/news/world-australia-59935127

அவர்கள் மட்டுமல்ல. பிழையாக கொடுக்கப்பட்ட தரவுகளும்தான்.

Link to comment
Share on other sites

நோவக் ஜோக்கோவிச்சின் வீசா மீண்டும் இரத்து

நோவக் ஜோக்கோவிச்சின் வீசா மீண்டும் இரத்து

 

செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக இரத்து செய்துள்ளது.

போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி இவ்வாறு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.