Jump to content

ஏதிலி நாவல் - எப்போது விடுதலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது விடுதலை?

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ அகதிகள் பற்றியது. எஸ்.ஏ.உதயன் எழுதிய ‘தெம்மாடுகள்’ நாவலும், தொ.பத்தினாதன் எழுதிய ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில், அ.சி.விஜிதரன் எழுதி ‘சிந்தன் புக்ஸ்’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஏதிலி’, தமிழக முகாம்களின் சகல பரிமாணங்களையும் பேசும் முக்கியமான நாவல்.

e0ae8fe0aea4e0aebfe0aeb2e0aebf.jpg?w=549

 

 

நாவல்களில் அனுபவங்கள் மட்டும் ஒரு ஆவணம்போல பதிவுசெய்யப்படுவதை விமர்சகர்கள் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நேரத்தில், இதுவரை இலக்கியம் கண்டிராத வாழ்க்கையை முதன்முறையாகப் பேசும்போது முதலில் அந்த வாழ்க்கையை விலாவாரியாகச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் படைப்பாளிக்கு வந்துவிடுகிறது. தமிழக அகதி முகாம்கள் அதிகமும் இலக்கியமானதில்லை என்பதோடு, அவர்களைப் பற்றிய எந்தச் சித்திரமும் அவர்களின் அருகிலேயே வாழும் தமிழகத்தவர்களுக்குத் தெரியாது எனும்போது அப்படியான நிர்ப்பந்தம் விஜிதரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஆனால், நாவலில் முகாம் வாழ்க்கை குறித்த வர்ணனைகள் ஏதுமில்லாமலேயே முகாம் வாழ்க்கையின் முழுச் சித்திரத்தையும் உருவாக்கும் லாகவம் விஜிதரனுக்கு வாய்த்திருக்கிறது. மேலும், இந்நாவலானது முகாம் வாழ்க்கையோடு மட்டும் மட்டுப்பட்டுவிடாமல், வேறு பல விஷயங்களையும் நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது எனும் வகையில் தனித்துவமான படைப்பாகவும் ஆகிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இந்த நாற்பது ஆண்டுகளில் சிதறுண்டு போயிருக்கிறது. குடும்பம், உறவு, சமூகம், நாடு என ஒவ்வொரு அடுக்கிலும் சிதைந்துபோயிருக்கிறது. இப்படியான சிதைந்துபோன வாழ்க்கையைச் சொல்வதற்காக இந்நாவலிலும் சிதறுண்ட உத்தியையே விஜிதரன் கையாண்டிருக்கிறார். பதினான்கு கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். எல்லாம் ஈழ அகதிகள் என்ற மையத்தில் இணைகின்றன.

கண்ணியமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கோழிக்கூண்டுகளைக் கிடத்தி வைத்ததுபோல வீடுகள், இப்படிப்பட்ட கட்டமைப்புகளால் குடும்பங்களுக்குள் உருவாகும் மனநெருக்கடிகள், எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டிய நிலை, மழை பெய்தால் வீடுகளுக்குள் புகுந்துவிடும் குப்பைக்கூளங்கள், அரசியல்வாதிகளின் அபத்தக் கோஷங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூத்துகள், தனிநபர் பிரச்சினைகளை ஒட்டுமொத்த அகதிகளின் அடையாளத்தோடு அணுகும் போக்கு, இதுதான் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்று இயல்பாகக் கடந்துபோகும் வாழ்க்கைமுறை; இவையெல்லாம் வாழ்வனுபவங்களாகப் பதிவாகாமல் கேள்விகள்போல வாசகர்களிடம் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய எந்தப் பிரச்சினை குறித்து அவர்கள் யோசித்தாலும் அது கடந்த காலத்தில் போய் நிற்கிறது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடந்த காலச் சுமையிலிருந்து மீள வழியில்லாமல் திரிய வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களில் உருவான ஆயிரம் மாணவர்களில் பத்துப் பேர்தான் தேறுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் கூலிகள் ஆகிறார்கள். வெறும் கூலிகளை மட்டுமே உருவாக்கும் சமூகம் எப்படி இருக்கும்?

நிலம் உயிர்களைத் தாங்கும் வழக்கத்துக்கு மாறாக இவர்கள் நிலத்தை மனதில் தாங்கி நடைபோடுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறும் பொருட்டுப் படகில் ஏறியதும் அது பாடையில் ஏறியதுபோல அமுதாவுக்குத் தோன்றுகிறது. பெருவெளிகளின் நிசப்த இருட்டுக்குள் தன்னை உருக்கி விளக்காக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் ஷாமினி. முகாமில் பிறந்து, முகாமில் வளர்ந்து, மீண்டும் முகாம் வாழ்க்கையாகவே ஒரு வட்டச் சுழிக்குள் பெண்களின் வாழ்க்கை சிக்கிக்கொள்கிறது. அனுபவங்கள் உருவாக்கிக்கொடுக்கும் மொழிக்குக் கூடுதல் பலம் வந்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்குத் தஞ்சமடையத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுச்சொச்சம் அகதிகள் முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. நிச்சயம், இது சொற்பமான எண்ணிக்கை அல்ல! அவர்களுக்குக் குடும்ப அட்டை இருக்கிறது, ஆதார் அட்டையும்கூட இருக்கிறது; ஆனால், குடியுரிமை கிடையாது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட காவல் துறையிடமும் வட்டாட்சியரிடமும் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம். அகதிகளுடைய பிரச்சினைகள் குறித்து அபூர்வமாக ஊடகக் கவனம் கிடைக்கும்போது, தாங்கள் திறந்தவெளிச் சிறையில் வாழ்வதாகத் தவறாமல் சொல்வார்கள். ‘ஏதிலி’ நாவலிலும் வெவ்வேறு இடங்களில் இந்த வார்த்தைகள் வருகின்றன. 80 ஆயிரம் குடும்பங்களின் சிறைவாசத்துக்கு எப்போது விடுதலை? ஈழ அகதிகளின் இன்றைய நிலைக்கு ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு என்று எப்போது தமிழகம் உணர்கிறதோ, அப்போதுதான். அந்தப் பொறுப்புணர்வை ‘ஏதிலி’ விதைக்கிறது.

ஏதிலி
அ.சி.விஜிதரன்
சிந்தன் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.250

 

https://saabakkaadu.wordpress.com/2020/07/26/yethili/

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமின் வாழ்வியலை பேசும் ஏதிலி நாவல்!

-பீட்டர் துரைராஜ்

 

FB_IMG_1649166919079-1.jpg

தமிழ்நாட்டின்  அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன!

தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ?  எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ஏதிலி. இதனை ஏதிலியான ஒருவர் எழுதும் போது, அதற்கு உயிர்ப்பு வந்து விடுகிறது.

ஈழத்து வாழ்வியலை,  இராணுவத்தோடு, அரசோடு மக்களுக்கு ஏற்பட்ட மோதலை முன் வைத்து பல படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தியாவில் அகதிகளாக வாழும், ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் இது வித்தியாசமானது. இதன்  நூலாசிரியரான அ.சி.விஜிதரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். முகாமில் வளர்ந்தவர். எனவே தனது சக பயணிகளின் வாழ்க்கை இவரை சலனப்படுத்தியிருக்கும். அதன் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவில் நடக்கும் தொழிலாளர் புரட்சியை வைத்து ஜாக் லண்டன் எழுதிய ‘இரும்புக் குதிகால்’ என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். ‘குருதி வழியும் பாடல்’, என்ற கவிதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.

இந்த நாவல் அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகிறது. தனி ஈழம் அமைவதற்காக ஆதரவு அளித்த தமிழகம், அதன்  அகதிகளுக்காக அதே அளவு ஆதரவளிக்கிறதா ! குடியுரிமை, வேலைவாய்ப்பு, கல்வி உரிமை போன்ற உரிமைகளை அகதிகள் பெற இயலும். அதனைப் பெறுகிறார்களா ! அதற்காக ஆதரவுக் குரலையாவது நாம் எழுப்புகிறோமா! அகதிகள் உரிமை பற்றிய பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது குறித்த சட்டம் எதையும் இந்திய அரசு இயற்றி இருக்கிறதா ! அகதிகள் என்பதற்காகவே, நம் தயவில் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஆதிக்க மனோபாவம் இல்லையா !

585734.jpg

தன் நிலத்தை விட்டு, ஒரு கால் இழந்த கணவனோடும், சிறுவனோடும் இலங்கையில் பேருந்திலும், பிறகு படகிலும்  பயணிக்கும் அமுதா இந்தியா வருகிறாள். காலிழந்த அவன் புலியாக இருப்பதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. கள்ளத்தோணியில் முன்னாள் போராளிகளை வெளியே அனுப்புவதாக பிடிபட்டால் அவ்வளவுதான். இவர்களின் படபடப்பும், வேதனையும், மனக்கிலேசமும் வாசகனையும்  பற்றிக்கொள்கின்றன. ஒரு வழியாக தமிழ்நாட்டில் அகதி முகாமை அடைந்து, விசாரணையை எதிர்கொள்ளும் போது சாதி என்னவென்று கேட்கிறார்கள். வெள்ளாளர் என்று சொல்கிறாள். எல்லாருமே ‘வெள்ளாளர்’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். இப்படி இந்த நாவல், அரசியல் பார்வையோடு விரிவடைகிறது. இதுபோன்று ரசிக்கும் பல இடங்களை நாவல் நெடுகிலும் காண இயலும்.

முகாம்வாசி என்பதால் குற்றவாளியாக நடத்தப்படுவதை சகிக்க முடியாமல் சுயமரியாதையோடு காத்திரமாக வெளிப்படும் ஒரு கதாபாத்திரம், வாழ்வின் பல கொடூரங்களை கண்ட நிலையில் யாரிடம், எதற்காகவும் சார்ந்து வாழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வெளிப்படும் ஒரு இளம் பெண் கதாபாத்திரம், ஈழத் தமிழர்கள் துன்பத்தைப் பேசி, பிரபாகரனுடன் இருந்த நெருக்கத்தை பேசி பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்.. என பலர் நம்முள் பதிந்து விடுகின்றனர்!

‘என்ன நடந்தது/ எனது நகரம் எரிக்கப்பட்டது/எனது மக்கள் முகங்கள் இழந்தனர்/எனது நிலம், எனது காற்று/எல்லாவற்றிலும்/ அந்நியப் பதிவு’ என்பது சேரன் எழுதிய கவிதை. இதைப் போன்ற பல பொருத்தமான, கவிதைகளை ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பும் ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். கதையானது, முகாமிற்கு காலம் கடந்து வரும் கடிதங்கள் வாயிலாக, நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கும் குறிப்புகள் வழியாக , உண்ணாவிரத உரை போல, முகாம் அறிவிப்பு போல,   கேள்வி-பதில் போல பல வடிவங்களில்  சொல்லப்பட்டுள்ளது. ஆரம்பம் இல்லை; முடிவும் இல்லை. வழக்கமான புத்தக அளவும் இல்லை; அளவு குறைவாக, படிக்க இலகுவாக உள்ளது.

முகாமில் படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் இலகுவான தொழில் பெயிண்டிங்தான். அதை வைத்துதான் வாழ முடியும். முகாமிலேயே பிறந்து, வளர்ந்த தலைமுறையும் அங்கு வளர்கிறது. அவர்களுடைய  பிரச்சினை  என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

mcms-4.jpg

வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு போனார்கள். இல்லாதவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஒரு மாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு 350 சதுர அடி வேண்டும். அப்படியென்றால், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு இடம் வேண்டும் ? 13 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலை ஆய்வு செய்ய வரும் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வி இது. முகாம் என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பது அவளுடைய கணிப்பு.

தலைமைக்கு வரும் முகாம் பொறுப்பாளர்கள், அவர்களது நடத்தைகள், கியூ பிரிவு போலீசாருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, முகாமில் உருவாகும் கோவில்கள் –  வேத கோவில்கள், காதல் – அதை எதிர் கொள்ளும் பெற்றோர் என நாம் சாதாரணமாக காணும் பல சம்பவங்கள் வந்து செல்கின்றன.

சைவ மத பெருமையைப் பேசும் ஆறுமுக நாவலார் கனவில் வருகிறார். அவரை ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான். மறுபடியும் இலங்கையில் குடியேறச் செய்யும் ஒரு என்.ஜி.ஓ வின் அரசியல் தோலுரிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓர் அகதி முகாமிற்கு சென்று வந்த உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.

மக்கள் சிவில் உரிமைகள் கழக செயற்பாட்டாளர் ச.பாலமுருகன் முன்னுரை எழுதியுள்ளார்.’ ஈழத் தமிழர்கள் நமது பொதுப் பதிவில், இலக்கியங்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் வாழும் இடத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்’ என்கிறார். ‘இயல்பாக எல்லா ஏதிலியர்களும் எதிர் கொள்ளும், பாதுகாப்பின்மை, அவமானம், இயலாமை, அடங்கிப் போதல் அதன் நீட்சியாய் எழும் மனப் பிறழ்வு போன்ற பாதிப்புகளைத் தாங்கிய பல மனிதர்கள் நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்கிறார்.

எளிய வார்த்தைகளில் வெகு இயல்பாக எழுதப்பட்டுள்ள கதை இது. ஓரிரு தினங்களில் இலகுவாகப் படித்துவிடலாம். நாவல் என்பதால் கதைக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதாக யாரும் எண்ண வேண்டாம். 14 அத்தியாயங்களில், 14 குடும்பங்கள் வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருப்பதால் நாவல் வடிவம் பெறுகிறது. கதாபாத்திரங்களின் வழியே உண்மையைப் பேசுவதால், படைப்புக்கு ஒரு உன்னதம் வந்து விடுகிறது. இதைப் படிக்க வேண்டிய அவசியமும் நமக்கு வந்து விடுகிறது.

நூல் விமர்சனம்;  பீட்டர் துரைராஜ்

நூல்; ஏதிலி

ஆசிரியர்; அ.சி.விஜிதரன்

பக்கங்கள்; 305, விலை; ரூ.250

வெளியீடு; சிந்தன் புக்ஸ்,

கோபாலபுரம், சென்னை – 600086

தொடர்புக்கு: 9445123164/

 

https://aramonline.in/8586/yeheli-a-c-vijidharan-novel-refugee/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.