Jump to content

ஏதிலி நாவல் - எப்போது விடுதலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது விடுதலை?

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ அகதிகள் பற்றியது. எஸ்.ஏ.உதயன் எழுதிய ‘தெம்மாடுகள்’ நாவலும், தொ.பத்தினாதன் எழுதிய ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில், அ.சி.விஜிதரன் எழுதி ‘சிந்தன் புக்ஸ்’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஏதிலி’, தமிழக முகாம்களின் சகல பரிமாணங்களையும் பேசும் முக்கியமான நாவல்.

e0ae8fe0aea4e0aebfe0aeb2e0aebf.jpg?w=549

 

 

நாவல்களில் அனுபவங்கள் மட்டும் ஒரு ஆவணம்போல பதிவுசெய்யப்படுவதை விமர்சகர்கள் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நேரத்தில், இதுவரை இலக்கியம் கண்டிராத வாழ்க்கையை முதன்முறையாகப் பேசும்போது முதலில் அந்த வாழ்க்கையை விலாவாரியாகச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் படைப்பாளிக்கு வந்துவிடுகிறது. தமிழக அகதி முகாம்கள் அதிகமும் இலக்கியமானதில்லை என்பதோடு, அவர்களைப் பற்றிய எந்தச் சித்திரமும் அவர்களின் அருகிலேயே வாழும் தமிழகத்தவர்களுக்குத் தெரியாது எனும்போது அப்படியான நிர்ப்பந்தம் விஜிதரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஆனால், நாவலில் முகாம் வாழ்க்கை குறித்த வர்ணனைகள் ஏதுமில்லாமலேயே முகாம் வாழ்க்கையின் முழுச் சித்திரத்தையும் உருவாக்கும் லாகவம் விஜிதரனுக்கு வாய்த்திருக்கிறது. மேலும், இந்நாவலானது முகாம் வாழ்க்கையோடு மட்டும் மட்டுப்பட்டுவிடாமல், வேறு பல விஷயங்களையும் நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது எனும் வகையில் தனித்துவமான படைப்பாகவும் ஆகிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இந்த நாற்பது ஆண்டுகளில் சிதறுண்டு போயிருக்கிறது. குடும்பம், உறவு, சமூகம், நாடு என ஒவ்வொரு அடுக்கிலும் சிதைந்துபோயிருக்கிறது. இப்படியான சிதைந்துபோன வாழ்க்கையைச் சொல்வதற்காக இந்நாவலிலும் சிதறுண்ட உத்தியையே விஜிதரன் கையாண்டிருக்கிறார். பதினான்கு கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். எல்லாம் ஈழ அகதிகள் என்ற மையத்தில் இணைகின்றன.

கண்ணியமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கோழிக்கூண்டுகளைக் கிடத்தி வைத்ததுபோல வீடுகள், இப்படிப்பட்ட கட்டமைப்புகளால் குடும்பங்களுக்குள் உருவாகும் மனநெருக்கடிகள், எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டிய நிலை, மழை பெய்தால் வீடுகளுக்குள் புகுந்துவிடும் குப்பைக்கூளங்கள், அரசியல்வாதிகளின் அபத்தக் கோஷங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூத்துகள், தனிநபர் பிரச்சினைகளை ஒட்டுமொத்த அகதிகளின் அடையாளத்தோடு அணுகும் போக்கு, இதுதான் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்று இயல்பாகக் கடந்துபோகும் வாழ்க்கைமுறை; இவையெல்லாம் வாழ்வனுபவங்களாகப் பதிவாகாமல் கேள்விகள்போல வாசகர்களிடம் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய எந்தப் பிரச்சினை குறித்து அவர்கள் யோசித்தாலும் அது கடந்த காலத்தில் போய் நிற்கிறது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடந்த காலச் சுமையிலிருந்து மீள வழியில்லாமல் திரிய வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களில் உருவான ஆயிரம் மாணவர்களில் பத்துப் பேர்தான் தேறுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் கூலிகள் ஆகிறார்கள். வெறும் கூலிகளை மட்டுமே உருவாக்கும் சமூகம் எப்படி இருக்கும்?

நிலம் உயிர்களைத் தாங்கும் வழக்கத்துக்கு மாறாக இவர்கள் நிலத்தை மனதில் தாங்கி நடைபோடுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறும் பொருட்டுப் படகில் ஏறியதும் அது பாடையில் ஏறியதுபோல அமுதாவுக்குத் தோன்றுகிறது. பெருவெளிகளின் நிசப்த இருட்டுக்குள் தன்னை உருக்கி விளக்காக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் ஷாமினி. முகாமில் பிறந்து, முகாமில் வளர்ந்து, மீண்டும் முகாம் வாழ்க்கையாகவே ஒரு வட்டச் சுழிக்குள் பெண்களின் வாழ்க்கை சிக்கிக்கொள்கிறது. அனுபவங்கள் உருவாக்கிக்கொடுக்கும் மொழிக்குக் கூடுதல் பலம் வந்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்குத் தஞ்சமடையத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுச்சொச்சம் அகதிகள் முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. நிச்சயம், இது சொற்பமான எண்ணிக்கை அல்ல! அவர்களுக்குக் குடும்ப அட்டை இருக்கிறது, ஆதார் அட்டையும்கூட இருக்கிறது; ஆனால், குடியுரிமை கிடையாது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட காவல் துறையிடமும் வட்டாட்சியரிடமும் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம். அகதிகளுடைய பிரச்சினைகள் குறித்து அபூர்வமாக ஊடகக் கவனம் கிடைக்கும்போது, தாங்கள் திறந்தவெளிச் சிறையில் வாழ்வதாகத் தவறாமல் சொல்வார்கள். ‘ஏதிலி’ நாவலிலும் வெவ்வேறு இடங்களில் இந்த வார்த்தைகள் வருகின்றன. 80 ஆயிரம் குடும்பங்களின் சிறைவாசத்துக்கு எப்போது விடுதலை? ஈழ அகதிகளின் இன்றைய நிலைக்கு ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு என்று எப்போது தமிழகம் உணர்கிறதோ, அப்போதுதான். அந்தப் பொறுப்புணர்வை ‘ஏதிலி’ விதைக்கிறது.

ஏதிலி
அ.சி.விஜிதரன்
சிந்தன் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.250

 

https://saabakkaadu.wordpress.com/2020/07/26/yethili/

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமின் வாழ்வியலை பேசும் ஏதிலி நாவல்!

-பீட்டர் துரைராஜ்

 

FB_IMG_1649166919079-1.jpg

தமிழ்நாட்டின்  அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன!

தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ?  எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ஏதிலி. இதனை ஏதிலியான ஒருவர் எழுதும் போது, அதற்கு உயிர்ப்பு வந்து விடுகிறது.

ஈழத்து வாழ்வியலை,  இராணுவத்தோடு, அரசோடு மக்களுக்கு ஏற்பட்ட மோதலை முன் வைத்து பல படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தியாவில் அகதிகளாக வாழும், ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் இது வித்தியாசமானது. இதன்  நூலாசிரியரான அ.சி.விஜிதரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். முகாமில் வளர்ந்தவர். எனவே தனது சக பயணிகளின் வாழ்க்கை இவரை சலனப்படுத்தியிருக்கும். அதன் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவில் நடக்கும் தொழிலாளர் புரட்சியை வைத்து ஜாக் லண்டன் எழுதிய ‘இரும்புக் குதிகால்’ என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். ‘குருதி வழியும் பாடல்’, என்ற கவிதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.

இந்த நாவல் அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகிறது. தனி ஈழம் அமைவதற்காக ஆதரவு அளித்த தமிழகம், அதன்  அகதிகளுக்காக அதே அளவு ஆதரவளிக்கிறதா ! குடியுரிமை, வேலைவாய்ப்பு, கல்வி உரிமை போன்ற உரிமைகளை அகதிகள் பெற இயலும். அதனைப் பெறுகிறார்களா ! அதற்காக ஆதரவுக் குரலையாவது நாம் எழுப்புகிறோமா! அகதிகள் உரிமை பற்றிய பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது குறித்த சட்டம் எதையும் இந்திய அரசு இயற்றி இருக்கிறதா ! அகதிகள் என்பதற்காகவே, நம் தயவில் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஆதிக்க மனோபாவம் இல்லையா !

585734.jpg

தன் நிலத்தை விட்டு, ஒரு கால் இழந்த கணவனோடும், சிறுவனோடும் இலங்கையில் பேருந்திலும், பிறகு படகிலும்  பயணிக்கும் அமுதா இந்தியா வருகிறாள். காலிழந்த அவன் புலியாக இருப்பதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. கள்ளத்தோணியில் முன்னாள் போராளிகளை வெளியே அனுப்புவதாக பிடிபட்டால் அவ்வளவுதான். இவர்களின் படபடப்பும், வேதனையும், மனக்கிலேசமும் வாசகனையும்  பற்றிக்கொள்கின்றன. ஒரு வழியாக தமிழ்நாட்டில் அகதி முகாமை அடைந்து, விசாரணையை எதிர்கொள்ளும் போது சாதி என்னவென்று கேட்கிறார்கள். வெள்ளாளர் என்று சொல்கிறாள். எல்லாருமே ‘வெள்ளாளர்’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். இப்படி இந்த நாவல், அரசியல் பார்வையோடு விரிவடைகிறது. இதுபோன்று ரசிக்கும் பல இடங்களை நாவல் நெடுகிலும் காண இயலும்.

முகாம்வாசி என்பதால் குற்றவாளியாக நடத்தப்படுவதை சகிக்க முடியாமல் சுயமரியாதையோடு காத்திரமாக வெளிப்படும் ஒரு கதாபாத்திரம், வாழ்வின் பல கொடூரங்களை கண்ட நிலையில் யாரிடம், எதற்காகவும் சார்ந்து வாழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வெளிப்படும் ஒரு இளம் பெண் கதாபாத்திரம், ஈழத் தமிழர்கள் துன்பத்தைப் பேசி, பிரபாகரனுடன் இருந்த நெருக்கத்தை பேசி பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்.. என பலர் நம்முள் பதிந்து விடுகின்றனர்!

‘என்ன நடந்தது/ எனது நகரம் எரிக்கப்பட்டது/எனது மக்கள் முகங்கள் இழந்தனர்/எனது நிலம், எனது காற்று/எல்லாவற்றிலும்/ அந்நியப் பதிவு’ என்பது சேரன் எழுதிய கவிதை. இதைப் போன்ற பல பொருத்தமான, கவிதைகளை ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பும் ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். கதையானது, முகாமிற்கு காலம் கடந்து வரும் கடிதங்கள் வாயிலாக, நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கும் குறிப்புகள் வழியாக , உண்ணாவிரத உரை போல, முகாம் அறிவிப்பு போல,   கேள்வி-பதில் போல பல வடிவங்களில்  சொல்லப்பட்டுள்ளது. ஆரம்பம் இல்லை; முடிவும் இல்லை. வழக்கமான புத்தக அளவும் இல்லை; அளவு குறைவாக, படிக்க இலகுவாக உள்ளது.

முகாமில் படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் இலகுவான தொழில் பெயிண்டிங்தான். அதை வைத்துதான் வாழ முடியும். முகாமிலேயே பிறந்து, வளர்ந்த தலைமுறையும் அங்கு வளர்கிறது. அவர்களுடைய  பிரச்சினை  என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

mcms-4.jpg

வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு போனார்கள். இல்லாதவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஒரு மாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு 350 சதுர அடி வேண்டும். அப்படியென்றால், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு இடம் வேண்டும் ? 13 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலை ஆய்வு செய்ய வரும் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வி இது. முகாம் என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பது அவளுடைய கணிப்பு.

தலைமைக்கு வரும் முகாம் பொறுப்பாளர்கள், அவர்களது நடத்தைகள், கியூ பிரிவு போலீசாருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, முகாமில் உருவாகும் கோவில்கள் –  வேத கோவில்கள், காதல் – அதை எதிர் கொள்ளும் பெற்றோர் என நாம் சாதாரணமாக காணும் பல சம்பவங்கள் வந்து செல்கின்றன.

சைவ மத பெருமையைப் பேசும் ஆறுமுக நாவலார் கனவில் வருகிறார். அவரை ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான். மறுபடியும் இலங்கையில் குடியேறச் செய்யும் ஒரு என்.ஜி.ஓ வின் அரசியல் தோலுரிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓர் அகதி முகாமிற்கு சென்று வந்த உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.

மக்கள் சிவில் உரிமைகள் கழக செயற்பாட்டாளர் ச.பாலமுருகன் முன்னுரை எழுதியுள்ளார்.’ ஈழத் தமிழர்கள் நமது பொதுப் பதிவில், இலக்கியங்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் வாழும் இடத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்’ என்கிறார். ‘இயல்பாக எல்லா ஏதிலியர்களும் எதிர் கொள்ளும், பாதுகாப்பின்மை, அவமானம், இயலாமை, அடங்கிப் போதல் அதன் நீட்சியாய் எழும் மனப் பிறழ்வு போன்ற பாதிப்புகளைத் தாங்கிய பல மனிதர்கள் நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்கிறார்.

எளிய வார்த்தைகளில் வெகு இயல்பாக எழுதப்பட்டுள்ள கதை இது. ஓரிரு தினங்களில் இலகுவாகப் படித்துவிடலாம். நாவல் என்பதால் கதைக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதாக யாரும் எண்ண வேண்டாம். 14 அத்தியாயங்களில், 14 குடும்பங்கள் வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருப்பதால் நாவல் வடிவம் பெறுகிறது. கதாபாத்திரங்களின் வழியே உண்மையைப் பேசுவதால், படைப்புக்கு ஒரு உன்னதம் வந்து விடுகிறது. இதைப் படிக்க வேண்டிய அவசியமும் நமக்கு வந்து விடுகிறது.

நூல் விமர்சனம்;  பீட்டர் துரைராஜ்

நூல்; ஏதிலி

ஆசிரியர்; அ.சி.விஜிதரன்

பக்கங்கள்; 305, விலை; ரூ.250

வெளியீடு; சிந்தன் புக்ஸ்,

கோபாலபுரம், சென்னை – 600086

தொடர்புக்கு: 9445123164/

 

https://aramonline.in/8586/yeheli-a-c-vijidharan-novel-refugee/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.