Jump to content

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்! - வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

 

பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக , தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,   ” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே  அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,  ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.  இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2022/171500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் ஆளுநர்களுக்கும் இருந்திருப்பினம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

 

பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக , தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,   ” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே  அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,  ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.  இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2022/171500

உங்களை விமர்சித்தால் அது தேசத்துரோகமா ஆளுனரே? ஆளாளுக்கு தேசத்துரோகம் அது இதென்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு  உண்மையை பேச முடியவில்லை, அதை தவிர்ப்பதற்காக, பதவியை தக்க வைப்பதற்காக உண்மை பேசுபவரை குறை சொல்ல வேண்டியது. சொல்லுபவர் ஆளுநர் ஆச்சே. மூச்சு விடப்படாது. சர்வாதிகாரியின் நியமனம் வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள் இவரிடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிற காசுக்கு நல்லாவே கூவுறாங்க. இவங்க எல்லாம் இவ்வளவு காலமும் எங்க பதுங்கிக்கிடந்தாய்களோ. சிங்களத்தின் கண்களுக்கு மட்டும் தெரிந்திடுறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலவாதிகளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கிறது சிங்களம். இவர்களும் ஒட்டிக்கொள்வார்கள். இவர்களை வைத்து தன் காரியத்தை முடித்துக்கொள்வதோடு எங்களை  அடிபட வைத்து   நல்ல பெயரை பெற்றுக்கொள்ளும் சிங்களம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

சுயநலவாதிகளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கிறது சிங்களம். இவர்களும் ஒட்டிக்கொள்வார்கள். இவர்களை வைத்து தன் காரியத்தை முடித்துக்கொள்வதோடு எங்களை  அடிபட வைத்து   நல்ல பெயரை பெற்றுக்கொள்ளும் சிங்களம். 

சிங்கள அரசினது ஆளுணர் அப்படித்தான் பேசுவார். சிறிலங்காவில் சனநாயாக முகம்பூண்ட சர்வாதிகார அரசுகளே ஆட்சியை அலங்கரித்துவருகின்றன. அதனது அடிவருடிகள் அல்லது கைக்கூலிகளிடமிருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் சனாநாயகக் கட்டமைப்பின் ஒரு உயரதிகாரி அச்சுறுத்தும் வகையில் சனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் தமிழரது நியாயங்கள் அவருக்கு தேசத்துரோகமாகத் தெரிகிறது. திரு சிவாஜிலிங்கமவர்கள் ஒன்றும் கொழும்பிலே உள்ள குளத்தின் உரிமைபற்றிக் கதைக்கவில்லை என்பதை  அரசசேவகரான ஆளுணருக்கு விளங்காதிருப்பது ஏனோ?  

Link to comment
Share on other sites

On 7/1/2022 at 09:41, கிருபன் said:

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்!

January 7, 2022

spacer.png

th?id=OIP.t7C1SGQB6poP3bz_9Iiq5AAAAA&pid=Api&P=0&w=257&h=171

இவருடைய முகச்சாயல் அவருக்கும் உள்ளதுபோல் தெரிகிறதே...! முகச்சாயல் மட்டும்தானா...???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் இப்ப கொஞ்ச நாளாய் ஓவராய் சவுண்ட் குடுக்கிறார்.எல்லாம் மேலிடத்தின் அழுத்தமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மத நல்லிணக்கத்துக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. உங்கள் உங்கள் தனிப்பட்ட நல்லிணக்கத்தை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் ஏதும் சொல்லவில்லை. ஆனால் எங்கள் மீது திணிக்க வேண்டாம். அவர்கள் பூப்போட்டு கும்பிடட்டும் அது அவர்களின் விருப்பம், நாங்கள் வேண்டுகோள் வைக்கவில்லை. ஆனால் எங்கள் கோவில்களை கிளற வேண்டாம். எங்கள் பிரதேசத்தில் என்ன பாடல் ஒலிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் நாங்கள், நீங்களல்ல. வந்த வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள். நாங்கள் கும்பிடுற இடமெல்லாம் ஏன் உதுகளை கொண்டு வருகிறீர்கள்? நாங்கள் எங்காவது உரிமை கேட்டு வருகிறோமா? அடுத்த சுரேன் ராகவன் வந்திட்டார். தென் பகுதி எல்லாம் புத்த விகாரையும் கீதங்களும் ஒலிக்குது நாங்கள் கேட்டோமா எங்கள் மத கீதங்களும் ஒலிக்க வேண்டும் என்று? இந்தியாவில் அவர்கள் தங்கள் மத பாடலை ஒலிக்கிறார்கள், அது அவர்களின் பிரதேசம். ஏன் எங்கள் மீது வாறவன் எல்லாம் தங்கள் சேவகத்தை, இங்கு இல்லாததை  திணிக்கிறான்? 

நாட்டில் தீர்க்கப்படாம எத்தனையோ பிரச்சனை இருக்கு. இன்றைக்கு இப்படித்தான் ஆரம்பிப்பார்கள், நாளைக்கு உரிமை கொண்டாடி கிண்டுவார்கள். இதைத்தான் அபிவிருத்திக்கு முன் எங்கள் அரசியல் பிரச்சனையை தீருங்கள் என்று கேட்ப்பது. இல்லையெனில்  வாறஅடிமையெல்லாம் இப்படித்தான் வக்காலத்து வாங்கும்.

Link to comment
Share on other sites

எஜமானிடம் இருந்து எலும்பு துண்டுகளை எதிர்பார்க்கும் ஜீவன் தியாகராஜன் போன்றவர்களை கடிந்து எவ்வித பிரயோசனமும் இல்லை. இவர் போன்றவர்களின் பேச்சுக்கள் செயல்கள் வீடு, சைக்கிள் , மீன் என பிரிந்து இருக்கும் தமிழ் தேசியம் பால் அக்கறை உள்ளோர்களை ஒன்றிணைக்கும் என நம்புவோமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் முரண்பாட்டைவலிந்து  தோற்றுவித்துக்கொண்டு இருப்பது சிங்களம். இதுகூட தெரியாமல் பிழையான இடத்தில வந்து நின்றுகொண்டு சிண்டு முடியிறார். தன் கடமையை செய்ய திறமையில்லை அதுக்குள்ள இதை செருக முயற்சித்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.  வந்து இரண்டு மாதம் ஆகவில்லை தொடங்கிற்றார் எஜமான் விசுவாசத்தில். நான் சொல்லேல, நான் தமிழன், நான் இந்து என்று சொல்லிக்கொண்டு வேரறுக்கிறதுகளை தேடிக்கொண்டுவந்து காரியத்தை சிங்களம் முடிக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை Apr 14, 2024 20:04PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குமற்றும் அண்ணா நகர் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்   திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடிபறக்கவே  வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-dhayanidhi-maran-wins-central-chennai-dmdk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி? Apr 15, 2024 08:00AM IST  2024 மக்களவை தேர்தலுக்காக  தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.   இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்…  பொள்ளாச்சியில் யார்  ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்?  மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  பொள்ளாச்சி,  கிணத்துக்கடவு,  தொண்டாமுத்தூர்,  வால்பாறை (தனி),  உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார்  என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது . 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-eswarasamy-won-pollachi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது? Apr 15, 2024 09:00AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நமது மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி  சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். நாம் தமிழர்கட்சியின் சார்பில் இசை மதிவாணன் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது. தென்காசி களத்தின் நிலவரம் என்ன?   உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினைபரவலாக தென்காசி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தென்காசி,  கடையநல்லூர்,  இராஜபாளையம்,  சங்கரன்கோயில் (தனி),  வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்று தென்காசி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக கூட்டணியில்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக  கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்ஜான் பாண்டியன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தென்காசி தொகுதியில் இந்த முறை ராணி ஸ்ரீகுமாரை நோக்கியே வெற்றிச் சாரல் வீசுகிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-rani-sreekumar-won-tenkasi-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்? Apr 15, 2024 10:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில்கள் நிறைந்த என அரசியல், ஆன்மிகம் என இரு வகைகளிலும் முக்கியத்துவம் பெற்ற காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்? ஆய்வில் இறங்கினோம். இந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.சந்தோஷ்குமார் போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் சில கேள்விகளை  முன்வைத்தோம். இந்த மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வுசெய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்தகருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட   6 சட்டமன்றத் தொகுதிகளான  செங்கல்பட்டு,  திருப்போரூர்,  செய்யூர் (தனி),  மதுராந்தகம் (தனி),  காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகியவற்றில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வம் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும் காஞ்சிபுரம் தொகுதியில் முன் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, காஞ்சிபுரம் தொகுதியில் இந்த முறையும் செல்வம் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-kanchipuram-constituency-dmk-candidate-selvam-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்? Apr 15, 2024 11:49AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார். கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/kmdk-candidate-madheswaran-won-namakkal-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/
    • ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
    • வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து  இருக்கு. 😂
    • அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.