Jump to content

நம்பிக்கை - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

காலச்சுவடு -2
KALACHUVDU - 2
*
நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன்.
*
நம்பிக்கை..
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
காலச்சுவடு -2
KALACHUVDU - 2
*
நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன்.
*
நம்பிக்கை..
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.May be an image of 2 people, military uniform and outdoors
துணை பிரிந்த குயில் ஒன்றின்
சோகம்போல்
மெல்ல மெல்லக் கசிகிறது
ஆற்று வெள்ளம்.
காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் வரால் மீன்கள்.
ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது.
.
என்னருகே
வெம் மணலில்
ஆலம் பழக் கோதும்
ஐந்தாறு சிறு வித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கின்றேன்.
என்றாலும்
எங்கோ வெகு தொலைவில்
இனிய குரல் எடுத்து
மாரிதனைப் பாடுகிறான்
வன்னிச் சிறான் ஒருவன்.
.
1968 (வன்னி.இலங்கை)
 

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

 

.
துணை பிரிந்த குயில் ஒன்றின்
சோகம்போல்
மெல்ல மெல்லக் கசிகிறது
ஆற்று வெள்ளம்.
 
 

 

பிறவிக் கவிஞனால் மட்டுமே இப்படி குயில் ஒன்றின் சோகத்தை கசியும் ஆற்று வெள்ளத்துடன் ஒப்பிட முடியும்!

அருமை கவிஞனே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஐயா .....1968 ல் உங்களின் மனதில் உதித்த நம்பிக்கை இன்று சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறதே.....அதுவும் உங்கள் கண்முன்னே ...........!   

Link to comment
Share on other sites

காட்டை குறை சொல்லாதீர்கள். நான் காட்டை நம்பினேன். காடு கைவிடவில்லை. காட்டைவிட்டு நம்மை வெளியே வரச்செய்ய சிலநாடுகள்  (கெரிலா யுத்தபயிற்ச்சிகளுக்குப்பதிலாக ) நேரடி யுத்தப் பயிற்ச்சி தந்தார்கள். பாரிய ஆயுதங்கள் கிடைக்கச் செய்தார்கள்.  காட்டைவிட்டு வெளியே வந்தோம். காட்டுக்குள் எதிரி வந்தான். முழுமையாக காட்டை விட்டால் முழுமையாக  வெளிநாடுகளுக்கு பின்னே நிற்க்கவேணும் இல்லையென்றால் காட்டையும்  (கெரிலா மூல உபாயம் Strategy )  வெளிநாட்டை சார்தலையும் (நேரடி இராணுவ தந்திரோபாயம் Tactics)  உகந்த வீதத்தில் கலக்கவேண்டும்.  (என என்னால் உயிரை பணயம் வைக்கவும் கத்தவும் மட்டுமே முடியும்). 1987 - 1990 காலக்கட்டத்தில் (காடு+ கொழும்பு)  இந்த கலவைதான் காப்பாற்றியது. 2006-2009 காலக்கட்டத்தில் நாம் கெரிலா வல்லமையை துறந்து முழுமையாக நேரடி இராணுவத்தை தெரிவுசெய்யும்வரை ஆயுதக் கப்பல்களை அனுமதித்தார்கள்.  கெரிலா போரை நாம் முற்றாக கைவிட்டதும் எஞ்சிய நேரடி இராணுவ வல்லமையை வெட்ட ஆயுத கப்பல்களை அழித்தார்கள், பணியாத வீரம் சுத்த தங்கம் மாதிரி. காடும் வெளிநாட்டு உறவும் கலக்காமல் சுத்த தங்கத்தில் எது செய்தாலும் நிலைக்காது. என் பிள்ளைகளுக்கு நான் விட்டுச் செல்லும் வார்த்தைகள் இவைதான். . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.