Jump to content

சுசில் நீக்கப்பட்டமை குறித்து சிராந்தி மூலமே மஹிந்த அறிந்ததாகத் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுசில் நீக்கப்பட்டமை குறித்து சிராந்தி மூலமே மஹிந்த அறிந்ததாகத் தகவல்

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் போது, நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் தெரிவித்துள்ளார்.

77-300x168.jpg

சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Thinakkural.lk
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பக்சே பம்மாத்து......

இவர்களது கபடம் ஊருக்கே தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி துரத்தினது அண்ணனுக்கு தெரியாதாம். மகிந்த மகா நடிகன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

தம்பி துரத்தினது அண்ணனுக்கு தெரியாதாம். மகிந்த மகா நடிகன். 

சிராந்தி…. மகா நடிகை. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

சிராந்தி…. மகா நடிகை. 😂 🤣

இப்ப எல்லா டீலிங்கும் சிராந்தி தானாம்

Link to comment
Share on other sites

சுசில் பதவி நீக்கப்பட்டதை நியாயப்படுத்தினார் ஜனாதிபதி

 

 

 
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கப்பட்டதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியாயப்படுத்தியுள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் இராஜாங்க அமைச்சர் ஒருவரை நீக்கவேண்டிய நிலையேற்பட்டது,இந்த அரசாங்கம் தவறான விதத்தில் செயற்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார் என்றால் அவர் நானும் தவறிழைப்பதாக குற்றம்சாட்டுகின்றார் என்பதே அர்த்தம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
gotabaya-2022-300x200.jpg
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் இராஜாங்க அமைச்சருக்கும் அரசாங்கத்தை நோக்கி கூட்டு பொறுப்புள்ளது,- ஒருவர் மற்றவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என்றால் அவர் தனது திறமையின்மையை வெளிப்படுத்துகின்றார் என்பதே அதன் அர்த்தம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை பதவி நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் குறித்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்த தனது அரசாங்கம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார்,குறிப்பாக இரசாயன உர தடையை அவர் கடுமையாக சாடியிருந்தார்.
2000ம் ஆண்டு முதல் பல அமைச்சரவை பதவிகளை வகித்த சிரேஸ்ட அரசியல்வாதியான சுசில்பிரேமஜயந்த தான் புறக்கணிக்கப்படுவது குறித்தும் அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன் சட்டங்கள் வேறு எங்கோ இயற்றப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.
ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் தங்களை காப்பாற்ற முயல்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/159760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

சுசில் பிரேமஜயந்த தனது அரசாங்கம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார்,குறிப்பாக இரசாயன உர தடையை அவர் கடுமையாக சாடியிருந்தார்.

மாத்தையா உண்மையை ஏற்க மறுக்கிறார். சுசிலை தண்டிப்பதால் தனது தவறை எதிர்காலத்தில்  யாரும் சுட்டி காட்ட மாட்டார்கள் என்று கருதுகிறார் போலுள்ளது.  இனி பதவி ஏற்பவர்  பிழையை சுட்டிக்காட்டாமல் மக்களே விமர்சிக்கட்டும் என்று ஜாலியாய் அனுபவித்துக்கொண்டிருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.