Jump to content

மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம்

 

மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பதற்றமான நிலைஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த மாதம் ஊர் மக்களாலும் பாடசாலை பழைய மாணவர்களாலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அதன்போது சில ஆசிரியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன் பிரதிபலிப்பாக இன்றைய தினம் குறித்த போராட்டத்தை நடத்திய சில ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மிகவும் சிறந்த ஆசிரியர்கள் சிவானந்தா பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தங்களது கல்வி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கையை புறக்கணித்த போது யாருடைய அனுமதியும் இன்றி காத்தான்குடி வீதி போக்குவரத்து காவல்துறையினர் மாணவர்களை அடக்க முற்பட்ட போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் தங்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் போராடும் போது இவ்வாறான அரசியல் பழிவாங்கல் காரணமாக நல்ல ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர்கள் இன்றைய தினம் கல்வி நடவடிக்கையை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
48C1EA74-A32F-49DE-B084-57B8A0DEA8FB.jpe

AF79519D-58BF-4D36-B656-A507180C7358.jpe

D610830F-FA27-4007-BBDF-40340D15C388.jpe

https://www.meenagam.com/மட்டக்களப்பில்-பதற்றம்-2/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ இப்ப ஓடி வருவார். மாணவர்களுக்கெதிரான ஆதாரத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மக்கள்தான் பிள்ளையானை 54,000 வாக்குகளோடு பாராளுமன்றம் அனுப்பியவர்களும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote
On ‎08‎-‎01‎-‎2022 at 11:21, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

 

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

 

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

 

பிள்ளையான் நாடு வேண்டித்தரப் போராடப் போய்.. கடைசியில எங்க நாண்டுக்கிட்டு நிற்கிறார்..???! நீங்கள் நம்புகிறீர்களாக்கும்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...

போயி.......அப்புறம் என்ன செய்தாரு? ஏன் கருணாவுடன் சேர்திருக்க முடியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை

கிழக்கின்  விடிவெள்ளி

இனிமேல்  இவரை  நம்பித்தான்  அடுத்தலைமுறை  என்றநிலையை கொண்டு வந்த பின் 

மாணவர்கள்  போராடுவதா??

அதுவும்  இவருக்கு எதிராக??

அப்போ  அத்தனையும்  படமா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நம்ப முடியவில்லை

கிழக்கின்  விடிவெள்ளி

இனிமேல்  இவரை  நம்பித்தான்  அடுத்தலைமுறை  என்றநிலையை கொண்டு வந்த பின் 

மாணவர்கள்  போராடுவதா??

அதுவும்  இவருக்கு எதிராக??

அப்போ  அத்தனையும்  படமா???

 

இனி எதிர்த்து போராடியவர்கள் விபத்து தற்கொலைகள் போன்றவற்றில் மாட்டுப்படாமல் இருந்தால் நல்லது .

Link to comment
Share on other sites

On 8/1/2022 at 12:21, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

தேடினேன் வந்தது🤞

நாடினேன் தந்தது.👇

On 10/1/2022 at 12:25, ரதி said:

நீங்கள் படிக்க வேண்டும் .உங்களுக்கு நாடு வேண்டும் என்பதற்காக பிள்ளையான் படிக்க வேண்டிய வயசில் போராட போயிட்டார் ...படித்த உங்கள் அரசியல்வாதிகள் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் அடுக்குங்கள் பார்ப்போம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2022 at 16:51, nedukkalapoovan said:

பிள்ளையான் பள்ளிக்கூடப் பக்கமே ஒதுங்கினதில்ல. அதுக்கெல்லாம் வாக்குப் போட்டவையிட்ட தான் மாணவர்கள் நீதி கேட்கனும்.

எங்க எங்கட பள்ளிக்கூட ஆளைக் காணேல்ல. தனி மேடைக்கு வரவும். 

அழைப்பிற்கு நன்றி நெடுக்கு நீதி என்பது அதிபரையும்,ஓர் ஆசிரியரையும் பல முரண்பாடுகள் உள்ளவர் இடமாற்றம் செய்ய சொல்லியே ஆர்ப்பாட்டம். அதிபர் அவருக்கு உடந்தையாக.

வலயக்கல்வி பணிப்பாளரால் , கல்வி அமைச்சினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக ஆர்ப்பாட்ட த்திற்கு துணை போனார்கள் என்பதற்காக 6 ஆசிரியர்களுக்கு எதிராக இடமாற்றல் கடிதம் அதிபரினால்  வலயத்திற்கு கொடுக்கப்பட்டு வலயக்கல்வி பணிப்பாளர் அமைச்சுக்கு அதை அனுப்ப மாணவர்கள் அந்த 6 ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.இதில் மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்திக்கான தலைவர் பிள்ளையான் மீது வசை பாடப்பட்டது ஆனால் பிள்ளையானுக்கானது அல்ல.

தற்போது அமைச்சு வந்ததுள்ளது நேற்று என்ன நடவடிக்கைக்கை எடுத்தார்கள் என இன்னும் தெரியவில்லை.

அரசியல் செய்யக்கூடாது பள்ளிகளில் என்பார்கள் ஆனால் அரசியல் இல்லாத துறை  என்று ஒன்றும் இல்லை சிபாரிசு என்ற சொல்லின் சில்லறைத்தனங்கள் இவை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.