Jump to content

வீரப்பனும் புலிகளும், இயக்குனர் கெளதமன் சொல்கிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, kalyani said:

யார் பக்கம்  வி.புலிகள் நின்று இருக்க வேண்டும். ஏன்?

இலங்கையில் தமது பிராந்திய வல்லாதிக்கத்தை நிறுவும் நோக்கில் வந்த மேற்கு நாடுகள் பக்கம். 

Link to comment
Share on other sites

8 minutes ago, kalyani said:

 

இனப்படுகொலையில் பங்கு வகித்த காங்கிரசுடன் கூட்டு வைத்து ஆட்சியை பிடித்த தி.மு.க பரவாயில்லை என் கிறீர்களா?

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு பிடித்திருக்கு போல.

மீண்டும் அரிவரியில் இருந்தா?. இதனைப் பற்றி பல  திரிகள் களத்தில் உள்ளன, அவற்றை மீளாய்வு செய்யவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இலங்கையில் தமது பிராந்திய வல்லாதிக்கத்தை நிறுவும் நோக்கில் வந்த மேற்கு நாடுகள் பக்கம். 

மேற்கு நாடுகள் தான் புலிகளை அழிக்க உதவின. கடைசியில் அமெரிக்கா தனது நெடு நாள் ஆசையான திரிகோணமலையிலும் காலடி வைத்து விட்டது. பிறகும் மேற்கு நாடா?

7 minutes ago, zuma said:

மீண்டும் அரிவரியில் இருந்தா?. இதனைப் பற்றி பல  திரிகள் களத்தில் உள்ளன, அவற்றை மீளாய்வு செய்யவும்.

எந்த வரி என்றாலும் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, kalyani said:

மேற்கு நாடுகள் தான் புலிகளை அழிக்க உதவின.

தமக்கு அடங்கமாட்டார்கள் என தெரிந்த பின்.

 

இதுவும் ஏற்கனவே அலசபட்ட விடயம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

 

இனப்படுகொலையில் பங்கு வகித்த காங்கிரசுடன் கூட்டு வைத்து ஆட்சியை பிடித்த தி.மு.க பரவாயில்லை என் கிறீர்களா?

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் உங்களுக்கு பிடித்திருக்கு போல.

எங்களுக்கு முதுகில் குத்தியதை 13 வருடங்கள் சென்றும் மறக்கமுடியவில்லை. இனப்படுகொலையை மறைக்க கூட முயற்சித்தார்கள். தமிழ் நாட்டு - ஈழ உறவு என்பது தொன்மையானது , இது எல்லா தமிழக கட்சிகளுக்கும் தெரியும். இந்த உறவில் ஏற் பட்ட விரிசல்களை நிவர்த்தி செய்யாமல் எந்த கட்சியும் நீண்ட காலங்கள் பயணிப்பது என்பது கேள்வி குறியே? 

மிக சிறந்த படைப்பாளிகளை கொண்ட தமிழகத்தில், எமது நெஞ்சங்களில் இடம் பிடிக்க விடயங்களா இல்லை?அண்மையில் சுழல் பந்து வீச்சாளரின் படத்தில் நடிக்க ஒரு நடிகர் ஒப்பு கொண்டார். அவரது முடிவை பலர் எதிர்த்தார்கள், முக்கியமாக ஈழ தமிழர்கள். இப்பொது அவர் உயரத்தில் இல்லை.   இப்ப நாம் அமைதியாக இருந்தால் கூட, எம்மை சுற்றி பிராந்திய, சர்வதேச அரசியல் நடந்து கொண்டே இருக்கும். எனவே எமது ஒற்றுமை மிக முக்கியம் - எமது நிலத்தை நாம் ஆழ!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே ஒரு கற்பனை தொடர்பை ஏற்படுத்தியது.. நக்கீரன் கோபாலும்.. ஹிந்திய றோவும் தான்.

முன்னர் இந்தியா ருடே கட்டுரை ஒன்றில்.. புலிகளே வீரப்பனுக்கு ஆயுதங்களை சப்பிளை செய்வதாக நடிகர் ராஜ்குமார் கடத்தலோடு எழுதி இருந்தார்கள்.. வாசிச்ச ஞாபகம் உள்ளது.

விடுதலைப்புலிகள் எப்போதுமே.. தமக்கு வீரப்பனுடன் தொடர்போ இல்லையோ.. அல்லது அவரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியோ கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்துக் காட்ட ஹிந்திய றோ.. ஹிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட கிட்டத்தட்ட நக்சல்கள்.. மாவோயிஸ்டுக்கள் மற்றும் வீரப்பனுடன்.. விடுதலைப்புலிகளை சேர்த்து சோடிச்சு றோ.. தன் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக ஹிந்தியாவின் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஹிந்திய மக்களிடம் நியாயம் கற்பிக்க விளைந்தமை தெரிந்ததே. 

ஹிந்தியா ஈழத்தில் செய்த படுமோசமான மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே சரியாகத் தெரியாத வகையில் றோ செயற்பட்டிருந்தது. 

சில வீரப்பன் ஆர்வலர்கள்.. விடுதலைப்புலிகளோடு அவரை சேர்த்துப் பேசுவது.. தமிழ் தேசியம் என்று நினைக்கக் கூடும். ஆனால்.. வீரப்பனை ஒரு பயங்கரமான மனிதனாகவே ஹிந்திய அரசும்.. தமிழக அரசுகளும் சித்தரித்து விட்டுள்ள நிலையில்.. விடுதலைப்புலிகள் மீது மேலும் மேலும் கரிபூசும் நிகழ்வாவே இந்த தொடர்புப் பேச்சுகள் போய் முடியும். தமிழ் தேசியத்திற்கு.. விடுதலைப் புலிகளின் தார்மீகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டவோ இது உதவாது. வீரப்பன் ஒரு நியாயவாதியாக.. நவீன ரொபின் கூட்டாகக் கூட இருப்பினும்.. அதிகார சக்திகளுக்கு வீரப்பனையும் புலிகளையும் பயங்கரமானவர்களாக சித்தரிக்க வேண்டிய தேவையே இன்றும் உள்ளதால்.. இது தொடர்பில் இப்படியான பேச்சுக்கள் தொடர்பில் அவதானம் முக்கியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் கடைசிக்காலங்களில் புலிகளிடம் சென்று சேரும் திட்டத்தில் இருந்தது உண்மைதான்.. ஆனால் விடுதலைப்புலிகள் பக்க நிலைப்பாடு யாருக்கும் தெரியாது.. வீரப்பனை கைது செய்ததே கூட இருந்தவர்கள் இலங்கைக்கு புலிகளிடம் கூட்டி செல்வதாக கூறித்தான்.. சும்மா எல்லாத்துக்கும் எதிர்க்கிறம் எண்டு நடந்தவைகளை ஆராயாமல் எழுதக்குடாது.. இது சீமானை எதிர்க்கும் டிசைனில் பலருக்கு உருவான நோய் ஒண்டு.. ஆமைக்கதையோ அரிசிக்கதையோ வீரப்பன் கதையோ.. எதுவோ அதை பொதுவெளியில் ஒருவர் சொல்லும்போது அதன் மூல அடிப்படையை ஆராயும்போது ஒரு உண்மைக்கதை அங்கு இருக்கும்.. அந்த மூல உண்மை அதை வெளிஉலகுக்கு சொல்லுபவர் கொஞ்சம் மெருகூட்டி சொல்வதால் மட்டும் அடிபட்டு நீர்த்து போகச்செய்யக்கூடாது.. உண்மையை ஆராயாமல் பகுத்தறிவை நம்புபவர்களும் எழுதுவது கவலைக்குரியது..🙁

வீரப்பனை வெளியே இழுத்து வந்த இலங்கை திட்டம்

  • By Staff
  • Published:October 23 2004, 5:30 [IST]

கண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றிவந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம்வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல்போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்பவைக்கதாகவும் பிட்டை போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்டதிட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக்கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள்செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான்சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராயஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள்ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம்மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழையகோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரைரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம்உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப்புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாகஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப்பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.-47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார்நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

Sentamaraikannanஇதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லிஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால்அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான்யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையைவெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில்கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்ததுஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்-அன்ட்-டெளன் 30 கி.மீ. தூரம்ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில்வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும்கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்தஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

Home secretery Sheelarani Sungath with STFகைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில்ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனைசூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனைகுறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும்வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படைடிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டைபோட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

https://tamil.oneindia.com/news/2004/10/23/cocoon.html?story=2

 

ஜபிஎஸ் அதிகாரி விஜகுமார் பேட்டி👇

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வீரப்பன் கடைசிக்காலங்களில் புலிகளிடம் சென்று சேரும் திட்டத்தில் இருந்தது உண்மைதான்.. ஆனால் விடுதலைப்புலிகள் பக்க நிலைப்பாடு யாருக்கும் தெரியாது.. வீரப்பனை கைது செய்ததே கூட இருந்தவர்கள் இலங்கைக்கு புலிகளிடம் கூட்டி செல்வதாக கூறித்தான்.. சும்மா எல்லாத்துக்கும் எதிர்க்கிறம் எண்டு நடந்தவைகளை ஆராயாமல் எழுதக்குடாது.. இது சீமானை எதிர்க்கும் டிசைனில் பலருக்கு உருவான நோய் ஒண்டு.. ஆமைக்கதையோ அரிசிக்கதையோ வீரப்பன் கதையோ.. எதுவோ அதை பொதுவெளியில் ஒருவர் சொல்லும்போது அதன் மூல அடிப்படையை ஆராயும்போது ஒரு உண்மைக்கதை அங்கு இருக்கும்.. அந்த மூல உண்மை அதை வெளிஉலகுக்கு சொல்லுபவர் கொஞ்சம் மெருகூட்டி சொல்வதால் மட்டும் அடிபட்டு நீர்த்து போகச்செய்யக்கூடாது.. உண்மையை ஆராயாமல் பகுத்தறிவை நம்புபவர்களும் எழுதுவது கவலைக்குரியது..🙁

வீரப்பனை வெளியே இழுத்து வந்த இலங்கை திட்டம்

  • By Staff
  • Published:October 23 2004, 5:30 [IST]

கண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றிவந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம்வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல்போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்பவைக்கதாகவும் பிட்டை போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்டதிட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக்கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள்செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான்சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராயஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள்ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம்மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழையகோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரைரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம்உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப்புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாகஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப்பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.-47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார்நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

Sentamaraikannanஇதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லிஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால்அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான்யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையைவெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில்கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்ததுஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்-அன்ட்-டெளன் 30 கி.மீ. தூரம்ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில்வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும்கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்தஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

Home secretery Sheelarani Sungath with STFகைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில்ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனைசூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனைகுறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும்வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படைடிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டைபோட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

https://tamil.oneindia.com/news/2004/10/23/cocoon.html?story=2

 

ஜபிஎஸ் அதிகாரி விஜகுமார் பேட்டி👇

 

 

எனக்கு என்னமோ சீமான் மீதான அதீத ஆதரவில் நீங்கள்தான் விடயத்தை சரியாக அணுகவில்கையோ என தோன்றுகிறது.

எனக்கும்தான் எப்படியாவது நித்யா மேனனிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கிறது 🤣.  

எனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதால், வெள்ளைதுரை அப்படி ஒரு ஆசையை காட்டி என்னை வலையில் விழுத்தினார் என்பதால் எனக்கும் நித்யா மேனனுக்கும் காதல் அவர் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என சொல்ல முடியாதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

தாங்கள் முள்ளிவாய்க்கால் என் ஏற்பட்டது என தெரியாமல் கதைக்கிறீர்களா? அல்லது அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனமில்லையா?.

என் நிலம் எமது மக்கள்.... நீதி நியாயங்கள் தேவையில்லை என்றிருந்தால்..... எப்படியும் வாழலாம் என்றிருந்தால் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடந்திருக்க சந்தர்ப்பமேயில்லை.

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் கடையை மூடிவிட்டு சிவனே என்று இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, zuma said:

 

எமது பிரச்சனையை தங்கள் அரசியல் லாபத்திற்காக கையில் எடுப்பது, அதை வைத்து பிழைப்பு நடத்துவதும் வேறுபட்டது.முதலாவதை எம்ஜிஆர்ரும், கருணாநிதியும் செய்தார்கள், இனிவரும் தலைவர்களும் செய்வார்கள், நாம் யாரையும் முழுமையாக நம்பக்கூடாது. இரண்டாவதை செய்பவர்கள் படு மோசமானவர்கள், வெளிப்பார்வைக்கு அவர்கள் எமது ஆதரவளராகவும், மீட்பர்களாகவும் தெரியம், ஆனால் அவர்களிடம் இருப்பது பிழைப்பு வாதமே 

உங்கள் வரிசையில் திருமாளவன்,வை கோ கோபாலசாமி,நெடுமாறன்,வேல்முருகன்,திருமுருகன் காந்தி,நடிகர் வடிவேலு;ராஜ்கீரண், திமுக ராஜீவ், ஜோர்ஜ் பெர்னாண்டேஜ்,ராமதாஸ்,விஜகாந்த்,ரி ராஜேந்தர்,கொளத்தூர் மணி எல்லோரும் வருவார்களா சார்!? :cool:

1 hour ago, goshan_che said:

எனக்கு என்னமோ சீமான் மீதான அதீத ஆதரவில் நீங்கள்தான் விடயத்தை சரியாக அணுகவில்கையோ என தோன்றுகிறது.

எனக்கும்தான் எப்படியாவது நித்யா மேனனிடம் போய் சேர்ந்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் இருக்கிறது 🤣.  

எனக்கு அப்படி ஒரு ஆசை இருப்பதால், வெள்ளைதுரை அப்படி ஒரு ஆசையை காட்டி என்னை வலையில் விழுத்தினார் என்பதால் எனக்கும் நித்யா மேனனுக்கும் காதல் அவர் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என சொல்ல முடியாதுதானே?

இங்கே வீரப்பன் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவில்லை என வாதாட வருகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இங்கே வீரப்பன் சூழ்ச்சிகளுக்கு ஆளாகவில்லை என வாதாட வருகின்றீர்கள்?

இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இல்லை.

உங்களுக்கு ஈழ விடுதலைப்போராட்டங்கள் பற்றி தெரியும்.
எனக்கும் தெரியும்.
உங்களுக்கு கள நிலவரங்கள் அதிகம் தெரிந்திருக்கும்.
என்னைப் போன்ற போன்றவர்களுக்கு கேள்வி ஞானங்கள் மட்டுமே.
உங்களுக்கு வீரப்பனைப்பற்றி தெரிந்திருக்கும்.
எனக்கும் அதேயளவு தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

வீரப்பனின் காடுபற்றிய அறிவுவு நாட்டுக்குத் தேவை என்கிற குரல் வீரப்பனுக்கு நேரெதிரான  கர்நாடக சூழலியலாளர்களிடமிருந்தும் வன படப்பிடிபாளர்களிடமிருந்தும் பலமாக எழுந்தது. என் நினைவுக்கு எட்டியவரை வீரப்பனும் புலிகளும் தொலைத்தொடர்பு வைத்திருந்ததாக இந்திய உளவுத் துறை ஒருபோதும் அறிவிக்கவில்லை. வீரப்பனுக்கு பொறிவைக்க தமிழக கர்நாடக உளவுத்துறைகள் கட்டுக் கதைகளை உருவாக்கினார்கள்.  வன்னித் தலமை வீரப்பனை வரவேற்பதான சேதிகளை போலியாக இட்டுக்கட்டி பயன்படுத்தினாகள். சீனா பேச்சுக்கு அழைத்தபோதே மறுத்த புலிகள் இந்தியாவுக்கு பின்வரும் சேதியை அனுப்பினார்கள்.   “இந்தியா எங்கள் கப்பல்களை தாக்க இலங்கைக்கு உதவுகிறது. இந்தியா இலங்கைக்கு எங்களை தக்கி அழிக்க தகவலும் தாய்க் கப்பலும் வளங்குகிறது. அதற்க்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது.  இருந்தும் நாம் இந்திய நட்ப்பை வேண்டி சீனாவின் சிங்கபூர் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்தோம்” எனஇந்தியாவுக்கு புலிகள் இரகசியமாக அறிவித்தார்கள். சீன உறவையே நிராகரித்த  பின்னணியில் வீரப்பன் விடயத்தில் இந்தியாவுடன் பகைவளர்க்க ஒருபோதும்  முற்பட்டிருக்க மாட்டார்கள். 1995 - 2006 காலக்கட்டத்தில் புலிகளுடனான உரையாடல்களில் இந்திய தரப்பு ஒருபோதும் வீரப்பன் தொடர்பாக குறிபிடவோ குற்றம் சாட்டவோ இல்லை.   வன்னிக்கு ரூர் போய்வந்த புலம்பெயர்ந்த தமிழர்களுள் ஒரு சிலர் தமிழக பிரபலங்களோடு தாம் புலிகளுக்கு நெருக்கமென  அறிமுகம் செய்து மிகையாக  உரையாடி இருக்கிறார்கள். அதுதான் புதிது புதிதாக கிழம்பும் கதைகளின் பின்னணி என நினைக்கிறேன் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.