Jump to content

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்


Recommended Posts

 

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

 
Atrangi Re Movie Review and Rating
 

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

 

படக்குழு:

நடிகர்கள்: தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மற்றும் பலர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: பங்கஜ் குமார்

எடிட்டிங்: ஹேமல் கோதரி

தயாரிப்பு: டி-சீரிஸ், கலர் யெல்லோ ப்ரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ்.

இயக்கம்: ஆனந்த் L ராய்.

OTT – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

Atrangi Re Movie Review and Rating
g

கதைச்சுருக்கம்:

காலத்தின் சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் படத்தின் நாயகன் தனுஷ், நாயகி சாரா அலி கான். ஒருக்கட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் மனதளவில் சேரும் நேரத்தில் குறுக்கே வரும் ஒரு பெரிய பிரச்சனை. என்ன பிரச்சனை? இறுதியாக இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக் கதை.

Atrangi Re Movie Review and Rating
 

FC விமர்சனம்:

ராஞ்சனா படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்க, ஆனந்த் L ராய். இயக்கத்தில் ஹிந்தி படமாக உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. இப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. விமர்சனத்திற்குள் செல்வோம், நடிகர்களை பொறுத்தவரை தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மூவருமே தங்களுக்கான பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். குறும்புக்கார பையன், அதே நேரம் எமோஷனல் காட்சிகளிலும் நிறையவே ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். அவருக்கு சமமாக உண்மையில் ரசிக்க வைத்துள்ளார் நடிகை சாரா அலி கான். வித்தியாசமான கதாப்பாத்திரம் அதை கேஸ்வளாக செய்து காட்டியுள்ளார் அக்ஷய் குமார்.

Atrangi Re Movie Review and Rating
Atrangi Re Movie Review and Rating

பங்கஜ் குமாரின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வு தவிர்க்க முடியவில்லை. அதேபோல் சில காட்சிகள் சற்று புரியாமலும், சரியான பதில் இல்லாமலும் கடந்து செல்வது சிறு உறுத்தல். இறுதியாக படம் எப்படி என்றால், வித்தியாசமான கதை, கலர்ஃபுல் காட்சிகள், மனதை தொடும் இசை இதற்காக ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம் இந்த கலாட்டா கல்யாணத்தை… 

(பாராட்டுக்கள்: இசை, ஒளிப்பதிவு, தனுஷ், சாரா அலி கான்)

  Atrangi Re Movie FC Rating: 3 /5  

https://filmcrazy.in/atrangi-re-movie-review-and-rating/

Link to comment
Share on other sites

வருடக் கடைசியில் பார்த்த விசர் படம் இது. முக்கோணக் காதல் கதை என்று ஆரம்பித்து bipolar போன்ற ஒரு பிரச்சினை யை செருகி .... முடியல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.