Jump to content

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! 

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். 

இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள். 

இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன. 
நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இவை மிகவும் தேவைப்பாடனதுமாகும்.  

இதில் எனக்கு ஏற்படும் விசனம் என்னவெனில், 
இந்தப் பண்ணைமுறைத் திட்டங்களை நாம் சரியான, தோதான இடங்களில் அமைக்க வேண்டும் என்பதுதான். 
உதாரணமாக வடக்கில் அட்டைப் பண்ணைகளை அமைக்கும் இடங்கள் சரியாகத் தேர்வு செய்யப் பட வேண்டும். 
ஏனெனில் வடக்கிலுள்ள கடல் நிலப்பரப்பானது பல ஆயிரம் களக்கடல் மீனவர்களின் ஆதாரங்களாகும். 
இந்தக் களக்கடலை நம்பித்தான் பல்லாயிரம் கரையோரக் குடும்பங்கள் வாழ்கின்றன. 

உதாரணத்துக்கு, 
எனது கிராமத்தை மட்டும் நான் இங்கே தரவுகளோடு முன் வைக்க நினைக்கின்றேன். 
மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் அட்டைவளர்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள களக்கடற் பரப்பானது முற்றிலும் தவறானது. 

பன்நெடுங்காலமாக இந்தப் "புறவாய்" என்று சொல்லப் படுகின்ற களக்கடலை நம்பித்தான் துறையூர், சுருவில், மெலிஞ்சிமுனை, ஊறுண்டி, பருத்தியடைப்பு ஆகிய கிராமங்களின் மீனவர்கள் வாழ்கிறார்கள். 
அதாவது நரையாம்பிட்டியிலிருந்து கிழக்காக வேலணை-புங்குடுதீவு வீதி வரை உள்ள பிரண்டையாற்றுச் சரிவு, மற்றும் நரையாம்பிட்டியிலிருந்து தெற்காக பல்லதீவு வரையுமுள்ள களக்கடல்கள். 

இந்த இடங்கள் தீவகக் குடாக்கடலின் உயிரினங்கள் மேய்ச்சலுக்காகவும், இனவிருத்திக்காகவும் விளங்கும் இடங்களாகும். 
இத்தகைய இயற்கை வளம் மிக்க சிறப்பான இடங்களை அடைத்து நாம் அட்டைப் பண்ணைகள் அமைப்போமானால் மேலே சொல்லப்பட்ட அத்தனை இயற்கை அம்சங்களும் தடைப்பட்டு, அற்றுப் போய்விடும். 

இந்த வளங்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பட்டினிச் சாவுக்குள் தள்ளப் படுவார்கள். 
மேற்படி அட்டைப் பண்ணை அமைப்பதற்கான மாற்றுத் திட்டங்களும் எம்மிடம் இல்லாமலில்லை. இருக்கிறது. 
கடந்த காலங்களில் தாணையமுறைத் தொழில், வாடிமுறை மீன்பிடி என தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன. 
குறிப்பாக, மெலிஞ்சிமுனைத் தொழிலாளர்கள் கடலட்டைத் தொழிலுக்காக கல்முனை, கவுதாரிமுனை, வலைப்பாடு, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, தேவன்பிட்டி, மண்டைக்கல்லாறு, குமுழமுனை, அரிப்புத்துறை, சிலாவத்துறை, பளுக்காத்துறை என பருவகாலத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்தவர்கள்தான். 

மேற்படி அட்டைப் பண்ணைகளை பாலைதீவு, கற்கடதீவு போன்ற ஆழ்கடலுக்கு நகர்த்துங்கள். அட்டையின் வளர்ச்சியும், நிறையும், தரமும்கூட இந்த இடங்களில் பண்ணைகள் அமைப்பதால் மிகவும் அதிகமானதாகவும் இருக்கும். 
மெலிஞ்சிமுனைக் களக்கடலில் வளர்த்தெடுக்கப்படும் அதே அட்டைகள் மேற்சொல்லப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்வோமானால் வருவாய் மூன்று மடங்காக ஆகுவதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு. 

ஏனெனில், கடலட்டையின் உணவு மண்தான். மெலிஞ்சிமுனைக் களக்கடலில் காணப்படுவது சதுப்பு நிலமும், கறுப்புச் சேறுமாகும். 
அதேவேளை, பாலைதீவு, கற்கடதீவு நிலப்பரப்பானது பெருமணலைக் கொண்டவையாகும். எப்போதும் பெருமணற்பரப்பில் காணப்படும் அட்டைகள் வைரமானதும், நிறையானதும், முதலாம் (SFO)தரமானதுமாகும். 

எனவே எனது மதிப்புக்குரி தோழரே, 
எமது மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை ஆழ்கடல் நோக்கி நகர்த்துங்கள். 
இந்தக் குடாக்கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு முற்றிலும் தோதானதல்ல. 
20தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ள முடியாது. 

தோழமையோடு இதனைப் புரிந்து கொண்டு, தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வீர்களென நம்புகின்றேன். 

என்றும் நாம் மக்களுக்கே! 
தோழமையுடன் தமயந்தி (குட்டி)

https://www.facebook.com/1319608745/posts/10221485697914732/?d=n

Link to comment
Share on other sites

தமயந்தி (குட்டி) அவர்கள் அத்தியடி குத்தியனை வரிக்கு வரி  தோழர் என அழைக்கின்றார், இவர் என்ன முன்னாள் ஈபீஆர்எல் உறுப்பினரா?.
டக்ளஸ் தேவானந்தா பற்றி தெரியாமல் கதைக்கின்றாரா அல்லது தெரிந்தும் அவருக்கு முட்டு கொடுக்கின்றாரா?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, zuma said:

தமயந்தி (குட்டி) அவர்கள் அத்தியடி குத்தியனை வரிக்கு வரி  தோழர் என அழைக்கின்றார், இவர் என்ன முன்னாள் ஈபீஆர்எல் உறுப்பினரா?.
டக்ளஸ் தேவானந்தா பற்றி தெரியாமல் கதைக்கின்றாரா அல்லது தெரிந்தும் அவருக்கு முட்டு கொடுக்கின்றாரா?. 

ஏதோ முன்னால் அமைப்பு ஒன்றின் உறுப்பினர் என்றுதான் நானும் நினைக்கிறேன்.. அவர் அவ்வளவு வாஞ்சையாக அழைப்பதிலையே தெரிகிறது.. நமக்கு எல்லாம் வாய்கூசும் அந்தாள எல்லாம் அப்படி கூப்பிட.. இவரது அமைப்பால் சுட்டு செத்துப்போன என் நண்பர்கள்தான் என் கண்முன்னே எப்போதும் வருகிறார்கள் இவரை பற்றி பேசும்போதெல்லாம்.. ஆறாவடுக்கள்.. விடயத்தில் உள்ள எம் தொழிலாளர் மக்களின் நலன்கருதி இணைத்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமயந்தி…  5 லட்ச ரூபாய் செலவில்… 20 நாளில், டக்ளஸ் கட்டும்….
பிரமாண்ட வெளிச்ச வீட்டைப் பற்றி, பாராட்டி எழுதாதது கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமயந்தி…  5 லட்ச ரூபாய் செலவில்… 20 நாளில், டக்ளஸ் கட்டும்….
பிரமாண்ட வெளிச்ச வீட்டைப் பற்றி, பாராட்டி எழுதாதது கவலையாக உள்ளது.

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்றும் நாம் மக்களுக்கே! 
தோழமையுடன் தமயந்தி (குட்டி)

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

உங்களுக்கு இப்படி சந்தேகம் வரக்கூடாது என்றுதான் முன்னுக்கு தமயந்தி இருக்கு. குட்டி பெட்டிக்குள் இருக்கு.......குட்டி என்றவுடன் நீங்கள் முன்னுக்கு பார்க்க தவறி விட்டீர்கள்.......!  😁

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வெளிச்ச வீட்டுக்கு முதலே எழுதியதால்த் தான் தவறவிடப்பட்டுள்ளது.

இந்தக்குட்டி ஆணா?பெண்ணா?

ஏதோ ஓமணகுட்டி மாதிரி இருக்கே?

271630739_10221485694434645_774275751450

Quote

ஓமணகுட்டி 

சில எழுத்துக்கள் குழம்பி உள்ளது அண்ணா  🤣

Northern fishermen switch to China-backed sea cucumber boom

ECONOMYNEXT – Over 600 fishermen in Sri Lanka’s former northern war zone have switched to sea cucumber farming, a booming trade, in the coastal belt of Jaffna and Kilinochchi where a Chinese firm started a hatchery five years ago.

China’s joint venture Gui Lan hatchery in Jaffna’s coastal village of Ariyalai was started when many northern fishermen were finding it harder to catch large fish which is blamed on outlawed bottom trawling employed by Indian vessels.

The fishermen were given one-month-old small sea cucumbers from the hatchery, which were grown in their usual fishing spots in the sea.

N Dhivakaran, president of Jaffna District Sea Cucumber Association, told EconomyNext that over 600 fishermen have now started sea cucumber farming after they saw the potential for a steady income in the new venture.

“There are investors for sea cucumber farming. Now the fisheries ministry also promotes sea cucumber farming through incentives,” said Dhivakaran.

Dhivakaran maintains a 10-acre farm near the Gui Lan hatchery in Ariyalai. He now sells between 2,000 and 3,000 sea cucumbers a month, earning between 60,000 and 90,000 rupees in revenue.

“We sell a sea cucumber once it reaches 300 grams in weight,” he said. “I started the farm with 40,000 small sea cucumbers and now the hatchery’s production is not enough. So I try to get additional sea cucumbers from other sea areas.”

A 300 gram sea cucumber is sold for around 400 rupees to local agents who export them to countries like Singapore and Hong Kong.

“We do not have the proper certification process to export them directly to China. Our sea cucumbers go through that certification process in Singapore and Hong Kong before they are exported to China. So we are losing some foreign exchange because we do not have the certification process.”

China had been long awaiting an entry into Sri Lanka’s former northern war zone to strengthen its foothold in Sri Lanka, analysts and government officials have said.

Gui Lan Hatchery was its first project in the North, a project that’s being touted as assistance to revive the livelihoods of northern fishermen. Some legislators in the North, however, have raised concern over growing Chinese presence in the former war zones where India has historically had held more sway given in strong cultural and religious ties.

But fishermen now appreciate the Chinese move mainly because of a lingering Indian bottom trawling issue that has hit their livelihoods hard.

“We have provided over 170,000 small sea cucumbers to fishermen in both Jaffna and Kilinochchi district,” Sri Ganeshan, the officer in charge at the Gui Lan hatchery told EconomyNext.

“There is a huge demand now and many people are waiting to register companies and start sea cucumber farming. The Chinese have been educating us on the technology to produce sea cucumbers and it has been helping a lot of people now.”

Sea cucumbers are considered a delicacy in the Far East, with a majority of consumers in markets like China, Hong Kong, Taiwan, Singapore, Korea, Japan and Malaysia. In China, high quality specimens can occasionally fetch over 3,000 US dollars per kilogram after being cooked.

Demand for sea cucumber in the international market is growing even though it is only now being popularized among the Sri Lankan community. The price of one kilogram of sea cucumber in the international market garners a value of Rs 20,000 to 30,000.

Gui Lan is the first hatchery in Sri Lanka to mass-produce high value sandfish sea cucumber for commercial farming. Most sandfish sea cucumbers are depleting due to overexploitation, and hatchery bred juveniles are given to farmers to grow in their respective farms.

These factors have boosted the drive to grow more sea cucumbers and people like Dhivakaran want to expand their farming because of the return.

“I am going to start breeding sea cucumbers separately from next month,” he said.

https://island.lk/northern-fishermen-switch-to-china-backed-sea-cucumber-boom/?fbclid=IwAR0-nFSLieQf0zvEgSO1Yct100qvGYacO3Z97LRjqqfQvdVKzl_C9X81UXw

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடல்வளங்களையும், மக்களையும் 
உண்மையாக நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும்! 
==================== 

இலங்கைத் தீவின் மொத்த கடற்பரப்பில் 74.3வீதமான கடற்பிரதேசங்களானது வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களிலேயே அமைந்துள்ளது. 
அதாவது இலங்கைத்தீவின் முக்கால்வாசிக் கடல்வளங்கள் தமிழ்ப் பிரதேசங்களில்தான் உள்ளடக்கி இருக்கின்றது. 

போருக்கு முன்னைய காலகட்டங்களில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதிகளிலிருந்து கருவாடாகவும், பச்சைமீனாகவும் வருடத்துக்கு பல்லாயிரம் மெற்றிக் தொன் கடலுணவுகள் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதெல்லாம் நாங்கள் அறிந்ததுதான்.
தவிரவும், கடலட்டை, சங்கு, நாவடம், சிங்கி, தாமரை, அலங்கார வண்ண மீன்கள் என ஏற்றுமதி கடற்திரவியங்களாலும் பெரும் வருமானத்தை எமது கடல்வளங்களிலிருந்து அறுவடை செய்திருக்கின்றோம். 

யுத்தத்திற்குப் பின்னான காலங்களில் மேற்படி தொழில்முறைகள் முற்றாக அற்றுப்போயின. 
கால்நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த யுத்த நெருக்கு வாரங்கள் காரணமாகவும், இடப்பெயர்வுகள் காரணமாகவும் ஒட்டுமொத்த தமிழ்ப் பிரதேசங்களிலும் கடலுடனான நெருங்கிய உறவு எமது மக்களுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டது மட்டுமல்லாது, ஒரு தலைமுறையினரே கடல் பற்றிய பூரணமான அறிதல் அற்றவர்களாகவும், பாரம்பரியத் தொழில்சார் நுட்பங்கள் அறியப் படாதவர்களாகவும் ஆக்கப் பட்டுக் காணப் படுகிறார்கள்.  

இந்த நிலையில், புதிய தொழில்முறைகள் அறிமுகமாகி வந்திருக்கின்றன. இவற்றிற் பல கடல்வளங்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மிகவும் பாதகமானவை என்ற புரிதலோடு அரசு தடை செய்திருந்தாலும்கூட, அவ்வகைத் தொழில்கள் நடக்கத்தான் செய்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஒரு மிகப் பெரிய தீர்வு ஏற்பட்டதாக, இன்றைய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது  முன்னெடுப்பில் பண்ணைமுறை அபிவிருத்தி பொருளாதாரத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப் பட்டு வருகின்றது. 

இந்தத் திட்டங்கள் எமது மக்களுக்கும், தேசத்துக்கும் இன்று மிகவும் பெரும் நன்மைகளைத் தரவல்லன. 
மேற்படி இத்தகைய பண்ணைமுறைத் திட்டங்களை நாம் வரவேற்கின்றோம். 

கடற்தொழில் அமைச்சர் மிகவும் நிதானத்தோடும், திட்டவட்டமான முறையிலும்தான் இதனை நடைமுறைப் படுத்த விரும்புகின்றார் என்பதை அவர் தொடர்ந்து பல ஊடகங்கள் மூலியமாக முன்வைத்து வருகின்றார். 
அதில் முக்கியமாக அவர் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுவது என்னவென்றால்;- 

"பாரம்பரிய தொழில்முறை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ, 
சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகம் ஏற்படும் வகையிலோ இந்தப் பண்ணைகள் செயற்படுத்தப்பட மாட்டாது" 

ஆனால், மெலிஞ்சிமுனை போன்ற சில இடங்களில் மேற்படி திட்டத்தை பொருத்தமற்ற இடங்களில் செயற்படுத்த முடிவெடுக்கப் பட்டிருக்கின்றது. 

மீண்டும் மீண்டும் கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்தும் விடையங்களுக்கு நேர் எதிர்மாறாகச் செயற் படுத்தப் படுகின்றது. 
இது தெரிந்தோ தெரியாமலோ கூட நிகழ்ந்ததாக இருக்கலாம். 
அதேவேளை விபரம் தெரிய வரும்போது நாம் அதில் அக்கறையுடன் செயற்பட வேண்டியது கடமையாகும்.  

இங்கே இணைத்துள்ள வரைபடத்தை சற்று நேரம் அர்ப்பணித்துப் பாருங்கள் உறவுகளே!   
---------------------- 

எமது அன்பார்ந்த உறவுகளே! 

தொன்றுதொட்ட காலங்களிலிருந்து எமது கிராமத்து மக்கள் கடற்தொழிலையே அதிபிரதான வாழ்வாதரமாகக் கொண்டு வாழ்கிறார்கள். 
அதிலும், எமது கடல்வளப் பிரதேசமானது சூழவும் ஏழு தீவுகள் அமையப்பெற்ற மிகவும் குறுகிய கடற்பரப்பாகும். 
இந்த மிகச்சிறிய கடற்பரப்பிலேயேதான் நாங்கள் உட்பட சூழவுமுள்ள தீவக சிறுதொழில், களக்கடல் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதரமும் அடங்கியுள்ளது.

யுத்தகாலங்களுக்கு முன்னைய காலங்களில் எமது கிராமத்திலிருந்து அட்டைத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்வதற்காக வன்னிப் பிரதேசக் கரைகளுக்குச் செல்லும் பாரம்பரியம் இருந்து வந்தது. இப்போ, கரையோரப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப் பட்டபின் அந்தத் தொழில்முறைகளும் இல்லாமல்ப் போய் விட்டன. 

சோளகக் காலங்களில் எமது கிராமத்திலிருந்து அனலைதீவில் பல தோணிகள் சென்று தங்கித் தொழில் செய்து வந்த முறைமைகளும் இருந்தன. மேற்படி சட்டத்தின் அடிப்படையில் இப்போ அந்த வழிகளும் அடைபட்டுப்போய் விட்டன. 
அதேவேளை 50ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்பரப்பில் தொழில் செய்துவந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போ நான்கு மடங்காகப் பெருக்கமடைந்தும் காணப் படுகின்றது. 

இந்தக் கடற்பரப்பு மிகவும் சிறியதாக இருந்தபோதும் இதன் வளங்களும், சிறப்புக்களும் தான் காலகாலமாக எம்மைக் காப்பாற்றி வருகின்றது. 

இந்தச் சுற்றாடலில் காணப்படும் களக்கடல் உயிரிகளான நிலமீன்கள் என்று சொல்லப்படுகின்ற கிளக்கன், திரளி, சல்லி, விளை, ஓரா கலவாய், கெடுத்தல், திருக்கை, சுங்கன், கிளிமீன் போன்ற இன்னும் பல இனங்களும்,  மேல்தள உயிரிகளான சிறையா, கயல், திருவன், அகழி, முரலினம், பாரையினம், பாலை போன்றவையும், கணவாய், நண்டு வகைகளும் தமது இனப்பெருக்கத்தை மேற்கொள்வதோடு, முட்டுவெள்ள நேரங்களில் மேய்ச்சலுக்காக ஏறியிறங்கும் இடங்களாகக் கருதப் படுபவை "புறவாய்" என்று சொல்லப் படுகின்ற நரையாம்பிட்டி மேற்குமுனங்கு, சுரிப் பாடுகளிலிருந்து, பெரியபிட்டி பெரியமுனங்கு, பல்லதீவு வரையுள்ள கடற்பரப்புகளாகும்.  

இவை தவிர, மேற்குத் தீவுகளை எடுத்துக் கொண்டால், எழுவைதீவு, பருத்தீவு, அனலைதீவு, புளியந்தீவுக் கிழக்குக் கரைகளான தாழங் கடற்பரப்புக்களாகும். 

தெற்கே குறிகாட்டுவான், நளவகளமும், வடக்கே கண்ணகைக்குடாவும் இந்த வளங்களை உள்ளடக்கிய கடல்களாகும். 

கெட்டில், சுருவில், மெலிஞ்சிமுனை, ஊறுண்டி, பருத்தியடைப்பு, எழுவைதீவு, அனலைதீவு, குறிகாட்டுவான், பல்லதீவு, ஊரதீவு ஆகிய இடங்களில் வாழும் அத்தனை மீனவர்களுக்குமான வாழ்வாதரமும் இந்தக் கரைகளை நம்பித்தான் இருக்கின்றன. 

தவிரவும், புறவாய்ப்பகுதியிலிருந்து பெரியபிட்டி முனங்குவரை சுமார் 42களங்கண்டிப் பாடுகள் உள்ளன. அத்தனை தொழிலாளர்களும் தொழில்களை அகற்றியாக வேண்டும். இவர்களுடைய வாழ்வாதாரத்தினை பலாத்காரமாக முற்றுமுழுதாகப் பறித்தெடுக்கும் நிலைக்கு ஆளாவோம். 

தவிரவும், 
தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ள மேற்படி கடற்பரப்பானதில் அட்டைப் பட்டிகள் அமைக்கப் படுமானால்..., எதிர்காலத்தில் எத்தகைய பாதகங்களும், இழப்புக்களும், அனர்த்தங்களும் ஏற்படும் என்பதைப்பற்றி நாம் சிந்திக்கத் தவறுபவர்களாக இருக்கிறோம். 
இந்த நடவடிக்கையை  நாம் நீண்டகாலச் சிந்தனையை முன் நிறுத்திப் பார்க்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது.  

Nara (தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) -The National Aquatic Resources Research and Development Agency- மேற்படி கடலட்டை வளர்ப்புக்குத் தகுந்த இடங்களெனத் தேர்வு செய்த இடங்கள் சில தவறான இடங்களாகும். 
அதிலொன்றுதான் எமது இந்த புறவாய்ப்பகுதி. 

இந்த Nara ஏஜென்சியானது, களக்கடல் இருக்கும் இடங்களை மட்டுமே கூகிள் படங்களை வைத்துப் பார்த்தார்களோ என்னவோ, இந்தப் பிரதேசங்களின் இயற்கை வளம், சூழற்பாதுகாப்பு, பின்விளைவுகள் போன்றவற்றைக் கொஞ்சம்கூட ஆய்வுக்கு உட்படுத்தவுமில்லை, கருத்திற் கொள்ளவுமில்லை என்பதே உண்மை. இதனை தெளிவான ஆய்வுரீதியாகவே நிரூபிக்க முடியும். 
(இவர்கள் எங்கிருந்து ஆய்வு செய்தார்கள்...? வானத்தில் இருந்தா, அல்லது கூகிள் வரைபடங்களைச் சுட்டெடுத்தா?)  

மேலே குறிப்பிட்டதுபோல, மேற்படி கடற்பரப்பினை அடைத்து ஏற்படுத்தப்படும் கடலட்டைப் பட்டிகளால் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி தடைபட்டு அழிந்து, மீன் வளங்கள் இல்லாமற் போவது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் எதிர் நோக்கக்கூடிய அனர்த்தங்கள், அழிவுகளும் பல உண்டு. அவற்றில் ஒருசிலவற்றையேனும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். 

குறிப்பிட்ட கடற்பிரதேசங்கள் இயற்கையாகவே அதிக கடற்தாவரங்களைக் கொண்ட வளம் மிக்கதாக அமைந்து விளங்குகின்றது. இதற்கான காரணம், மேற்குத் திசைகளிலிருக்கும் தீவுகளுக்கூடாக பிரண்டையாற்றை வந்தடையும் பன்முக புறங்கடல் நீரோட்டங்களானது புறவாய்ப்பகுதியை என்நேரமும் சதுப்பு நிலமாக வைத்திருப்பதாலும், இந்த நிலங்கள் களக்கடலாக இருப்பதால் சூரியவெப்பம் நேரடியாகவே நிலத்தடியைச் சென்று சூடாக வைத்திருப்பதாலும் அதிக விளைச்சலை உருவாக்குகின்றது. 

உணவுச்சங்கிலி. 
===========
இவ்வகை இயற்கை விளைசலால் வளரும் தாவரங்களின் இலைகளை உண்பதற்காக பூச்சி புழுக்கள் வந்து சேர்கின்றன. இந்தப் பூச்சி புழுக்களானவை அதிகமாகக் காணப் படுவதால்தான் அவற்றை வேட்டையாடுவதற்காக மீன்கள் இந்தப் பிரதேசங்களுக்கு அன்றாடம் வந்து செல்கின்றன.  இப்படி வந்து செல்லும் கடல்வாழ் உயிரிகளின் உறைவிடமாகவும், இனப்பெருக்கத்துக்கான திடலாகவும் இவை சிறப்புப் பெற்று விளங்குகின்றது. (மழைக்காலங்களில் கழிமுகத்து ஓடையால் பிரண்டையாற்றை வந்துசேரும் மழை நீரோடு நுண்ணுயிர்களும் கடலுக்குக் கடத்தப் படுகின்றன. இவை கடல்வாழ் உயிரினங்களுக்கான மேலதிக தீவனங்களாகும்.  

கடலட்டையின் உணவு மண்தான் என்பது எல்லோருமே அறிந்து வைத்திருக்கின்றோம். 
குறிப்பிட்ட, மிகக் குறுகிய நிலப்பரப்பில் அமைக்கப்படும் பட்டியில் இயற்கைக்கு மாறாக பல லட்சக்கணக்கான அட்டைகள் வளர்க்கப்படுவகின்றன, இதனால் அளவுக்கதிகமான மண்வளம் அட்டைக்கான தீனியாகி, அந்த நிலப்பரப்பின் மண்வளம் விரைவில் பலமிழந்து போகும். நிலவளம் பலமிழந்து போவதால் அதிலுள்ள இயற்கைத் தாவரங்கள் வேர்கள் மடிந்து காலக்கிரமத்தில் அழிந்துபோகும். 

தவிரவும், இந்த இடங்களை அட்டைப்பட்டிகளால் மறித்து அடைக்கும்போது, மேற்படி தாவரங்களை உண்ணும் பூச்சி புழுக்களை மீன்கள் வேட்டையாட முடியாமல் உணவு வலையம் தடைப்படும் நிலை உருவாகின்றது. இப்படியான நிலை உருவாகும்போது தாவரங்களின் இலைகளைக் காலக்கிரமத்தில் பூச்சி புழுக்கள் அரித்துத் தீர்த்துவிடும். 
ஆக, இந்த இயற்கைத் தாவரங்களின் வேரடியும் பட்டுப்போவதோடு, இலைகளும் அழிந்து போகின்றது. 

கடற்பாறை வளங்கள்:-
================= 
இந்த வரைபடத்தில் றோஸ்நிறத்தில் காணப்படும் பகுதிகளின் மத்தியில்தான் மிகப்பெரும் வளங்கள் உள்ளன. அதாவது;- 
கலவாய்க்கல், ஆமைப்பார், புளியம்பார், நாவட்டக்கல், சீராம்பார், சாட்டி, நடுவகல்  போன்ற மிகப்பெரிய ஏழு கடற்பாறைகளும், கோயிலுக்கல், கரைக்கல், பூண்டிவெள்ளைக்கல், கெட்டிலான்கல் போன்ற பாறைகளும், கண்ணகைக்குடாவுக்குள் பட்டசாட்டாமாறு என்ற அடர்த்தியான கற்தாவரங்களும் அமைந்துள்ளன.  
இவை தவிர புட்டியாறு, பிரண்டையாறு நீளத்துக்கும் உயர்ந்த பறைகளும், நிலப்பாறைகளும் தொடராக அமைந்திருக்கின்றன. 
இத்தனை வளங்களும் கல்மீன்களின் நிரந்தர உறைவிடமாகத் திகழ்பவை. 
இறுதியில் எஞ்சப் போவது எந்த வளங்களுமே அற்ற, அழிந்து உருக்குலைந்த வெறும் கட்டாந்தரை மட்டுமேயாகும். 

இந்த விளக்கங்களை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மூத்த கடலோடிகளிடம் கேட்டாலே சாதாரணமாக விளக்கம் தருவார்கள்.

எனவே எமது அன்பு உறவுகளே! 

எமது மூதாதையர் இந்த வளங்களைப் பாதுகாத்து எமக்குத் தந்ததுபோல், எமது அடுத்தடுத்த தலைமுறையின் கைகளில் இவற்றை பவுத்திரமாக ஒப்படைக்கும் கட்டாயமான கடமை எமது தலைமுறைக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  

எமது அடுத்த சந்ததிக்கு நாம் எதைக் கொடுத்து விட்டுப் போகப்போகிறோம் என்ற கேள்விக்கு அப்பால், இருக்கின்ற இயற்கை வரப்பிரசாதங்களையும் இல்லாமல் அழித்துக் கெடுத்துவிட்டுப் போகும் தலைமுறயாக நாம் இருக்கக்கூடாது.  

சிந்தியுங்கள் எமது நேசத்துக்குரிய உறவுகளே! 
-தமயந்தி.

//தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப் போவதில்லை// -கடற்தொழில் அமைச்சர்-

large.50B69186-805C-41F2-9CC5-C62E9A23781A.jpeg.d8d3a41eb9d7f7090ca8637deaf2ce8e.jpeg

 

https://www.facebook.com/1319608745/posts/10221572299039706/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.