Jump to content

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை!

spacer.png

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.

தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்ட போது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
 

https://athavannews.com/2022/1260818

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியின்ரை… கட்சியும், உடைஞ்சுட்டுதா?  🧐
ஆர்… உடைச்சது? அவருக்கு… ஆயிரம் பொற்காசுகளை, பரிசளியுங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி இன்னும் இருக்கா.. தமிழர் விடுதலைக் கூட்டணின்னு ஒரு கட்சியும் இருக்கா.. சொல்லவே இல்லை.

சங்கரிக்கு தமிழனுக்கு எதிரா எதிரிகளை நோக்கி பெட்டிசக் கடிதம் எழுதுவதை விட வேற எதுவுமே தெரியாது. மற்றும்படி தெரிந்ததெல்லாம்.. கிளிநொச்சி அந்தப்புர வாழ்க்கை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய தவிகூ, தமிழர் மத்தியில் மிக பிரபல்யம் மிக்க ஒரு கட்சி தான்.

ஆனாலும், தந்தை செல்வா மரணத்தின் பின்னர், வந்த தலைவர் அமிர், சிவசிதம்பரம் போன்றோர், தம்மை கவிட்டு விடலாம் என, தலைமைப்பதவி தொடர்பில் ஒரு விதி மாறுதலை செய்வித்தார். அதாவது தலைவர் ராஜினாமா அல்லது மரணித்தால் மட்டுமே, பதவி வெற்றிடம் ஆகும்.

அமிர் பின்னர், சிவசிதம்பரம் மரணிக்கும் வரை தலைவர். பின்னர் வந்தவர், சங்கரியார்.

மனிசன், தானும் தின்னார், தள்ளியும் இரார் நிலையில் கட்சியை தனது பாக்கெட்டில் போட்டு விட்டார்.

ஆக, அவர் விரும்பினால் அன்றி பொதுக்குழு கூடாது. கூடாத படியால், தலைமைப்பதவி தொடர்பான விதி மாறாது.

இவரது காலத்துக்கு பின்னர், பொதுக்குழு புதிய தலைவரை தேடும் போது, விதியும் மாறலாம். ஆனாலும், கவுண்டமணி ஜோக் மாதிரி, அதுக்குபுறம, மாத்தினால் என்ன, மாத்தா விட்டால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

Link to comment
Share on other sites

32 minutes ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

தமிழ் தேசியக்கட்சிகளின் கூட்டமைப்பில் மேலும் ஒரு கட்சி இணைய வழிபிறந்துள்ளதே!🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

கூவத்தூர் ரிசார்ட் புக் பண்றம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தமிழ் தேசியக்கட்சிகளின் கூட்டமைப்பில் மேலும் ஒரு கட்சி இணைய வழிபிறந்துள்ளதே!🤩

அப்ப நாங்கள் இலங்கையில் ஆட்சியே அமைக்கலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

 

3 hours ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

கடத்தி கொண்டு போய் கருணாவின் கொட்டேலில் வையுங்க.

அங்கையும் கொஞ்சநாள காஞ்சு போய் கிடக்காம்.

தேவையானபோது ரதி மூலமா பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லெட்டர் பாட்டை தூக்கிட்டு ஓடிவந்தால்… நீங்கதான் கட்சி தலைவர்…🤣

5 hours ago, goshan_che said:

கூவத்தூர் ரிசார்ட் புக் பண்றம்🤣.

இவங்களுக்கு கூவர்தூர் ரிசாட் ரெம்ப ஜாஸ்தி.. மாங்குளம் காட்டுக்கை கண்ணக்கட்டி இறக்கிவிட்டா.. திசை தெரியாமல் வெளிய வரமாட்டானுவள்..😂😂

5 hours ago, goshan_che said:

அப்ப நாங்கள் இலங்கையில் ஆட்சியே அமைக்கலாம்🤣.

கடன கட்ட சொல்லி சீனக்காரனும் வங்காளியும் அடிப்பானுவள்… ஓகேயா..?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவங்களுக்கு கூவர்தூர் ரிசாட் ரெம்ப ஜாஸ்தி.. மாங்குளம் காட்டுக்கை கண்ணக்கட்டி இறக்கிவிட்டா.. திசை தெரியாமல் வெளிய வரமாட்டானுவள்..

அடி சக்கை. ஆனந்த சங்கரி இருந்தா கொக்காவிலுக்காள பழைய கண்டி ரோட்ட பிடிச்சி வந்திருவார். இவையள் கதி அதோ கதிதான்🤣.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கடன கட்ட சொல்லி சீனக்காரனும் வங்காளியும் அடிப்பானுவள்… ஓகேயா..?😂

இஞ்ச பார்கிளேசும், நட்வெஸ்டும் அடிக்கிற அடிக்கு அது பரவாயில்லை. ஆக மிஞ்சினால் அம்பாந்தோட்டைல ஒரு அரை கிணறை எழுதி கொடுத்து தப்பிக்கலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு சங்கரி பல்லைக் கடிச்சுக்கொண்டு சின்னத்தை விட்டுக்குடுத்திருந்தா இயங்காமல் இருந்த தமிழரசுக்கட்சியும்>வுpட்டுச்சின்னமும் அதோ கதிதான் சங்கரிதான் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராய் இருந்திருப்பார். சம்பந்தர் லைலைத்தூக்கிக் கொண்டு பின்னால் அலைஞ்சிருப்பார். சம்பந்தரின் நலலகாலம்  சங்கரியின் கெட்டகாலம் சங்கரிளய அப்படியொரு முடிவை எடுக்க வைத்து விட்டது. சந்தர்பம் ஒருமுறைதான் வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.