Jump to content

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.
 
கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/காங்கேசன்துறைக்கு-சொகுசு-ரயில்-சேவை/175-288933

Link to comment
Share on other sites

அன்று வடபகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதிசென்று பணியாற்றினார்கள். அவர்களாலேயே ரயில்வே திணைக்களம் இழப்பின்றி இலாபத்தில் இயங்கியதாக செய்திகளும் வந்தன. இன்று வெகுசிலரே அங்கு சென்று பணியாற்றும் நிலையை இனவாதம் ஏற்படுத்தியுள்ளதால், இந்தச் சேவை நட்டத்தில் இயங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.🤔 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

அன்று வடபகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதிசென்று பணியாற்றினார்கள். அவர்களாலேயே ரயில்வே திணைக்களம் இழப்பின்றி இலாபத்தில் இயங்கியதாக செய்திகளும் வந்தன. இன்று வெகுசிலரே அங்கு சென்று பணியாற்றும் நிலையை இனவாதம் ஏற்படுத்தியுள்ளதால், இந்தச் சேவை நட்டத்தில் இயங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.🤔 

இப்போ…. தமிழ்ப் பகுதிகளில், பல புதிய விகாரைகள் இருப்பதால்….
புனித யாத்திரை மேற்கொள்ளும் சிங்களவர் மூலம்,
இந்த ரயில் சேவை… நல்ல வருமானம் ஈட்டித்தர, வாய்ப்புகள் அதிகம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Paanch said:

அன்று வடபகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதிசென்று பணியாற்றினார்கள். அவர்களாலேயே ரயில்வே திணைக்களம் இழப்பின்றி இலாபத்தில் இயங்கியதாக செய்திகளும் வந்தன. இன்று வெகுசிலரே அங்கு சென்று பணியாற்றும் நிலையை இனவாதம் ஏற்படுத்தியுள்ளதால், இந்தச் சேவை நட்டத்தில் இயங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.🤔 

 

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

கட்டுநாயக்க ஏர் போர்ட்டில்  இருந்து யாழுக்கு ரெயில் சேவை இருக்கின்றதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நானறிந்தவரை இப்போதும் (கொவிட்முன்) ஆதிக வருமானம் ஈட்டும் சேவை வடக்கு சேவைதான். மிக விரைவாக நாளுக்கு 1 என்பதில் இருந்து நாளுக்கு 5 வரை சேவையை உயர்த்தினார்கள் என நியாபகம்.

அப்படி இருந்தும் சிலசமயம் டிக்கெட் கஸ்டம் எடுப்பது.

அந்த ரயிலுக்கு 🚅🚄🚝சிங்கள சகோதரர்கள்….   அனுராதபுரம், மதவாச்சியில்…
கல்லு எறியாமல் விட்டார்கள் என்றால், இன்னும் கூடச் சனம் போகும். 🤣 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய புலம்பெயர் தமிழர்கள் போகினம். அதுதான் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வெப்பநிலை 30 பாகை செல்சிஸாம். அதுதான் குளிரூட்டி சொகுசு வண்டி விட்டு சம்பாதிக்குது சிங்களம். எங்கடை ஆக்கள் போற இடத்தில வெக்க தாங்க மாட்டினம் எல்லோ..!! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

நிறைய புலம்பெயர் தமிழர்கள் போகினம். அதுதான் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் வெப்பநிலை 30 பாகை செல்சிஸாம். அதுதான் குளிரூட்டி சொகுசு வண்டி விட்டு சம்பாதிக்குது சிங்களம். எங்கடை ஆக்கள் போற இடத்தில வெக்க தாங்க மாட்டினம் எல்லோ..!! 🤣

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே. 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமக்கள் சாப்பிடவே வழியில்லை, இதில சொகுசு ரயிலில் பயணம்? இந்தியாவின் கடன் உதவி ரயில், இன்னும் வரும் இந்தியாவில் தேங்கிக்கிடக்கும் உற்பத்திகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே.

நல்லா கிணறுகள் முட்டிக்கிடக்குதாம். அள்ளி நாலு தரம் குளிக்க வெக்க.. பிசி பிசுப்பு எல்லாம் பறந்திடும். போற வெள்ளையளே.. பிசு பிசுக்குது என்று அழேல்ல.. இவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

 

அதையும் கடனுக்குத்தான் வாங்கி இருக்கானுவ.. இந்த மானங்கெட்ட ரெயில்ல போறதுக்கு நடந்தே கொழும்புக்கு போவலாம்..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் தரம் எப்படி இருந்தாலும், ரயில் பாதை தரம் சரியில்லையே....

தூக்கி, தூக்கி எறிவதால், கொழும்பு முதல், வவுனியா வரை.... slow வா தான் போகுது. 25mph.

வவுனியாவுக்கு பிறகு 40 - 45 mph 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கட்டுநாயக்க ஏர் போர்ட்டில்  இருந்து யாழுக்கு ரெயில் சேவை இருக்கின்றதா ?

ஓம் இருக்கு. என்ன கட்டுநாயக்க-இராகம shuttle bus இல் போய் அங்கால ரயில் எப்படி வசதி 🤣.

சீரியசாக - ஒரு ஒற்றை ரயில் பாதை கோட்டை-கட்டுநாயக்க இடையே உண்டு. நாளுக்கு இரெண்டு தரம் ரயில் வரும் 🤣.

52 minutes ago, தமிழ் சிறி said:

“வின்ரர்” நாட்டிலை வாழ்ந்து விட்டு….  டக்கெண்டு, வெக்கை நாட்டுக்கு போகேக்கை…
உடம்பெல்லாம்… „பிசு பிசு“ என்று, வேர்த்தால்…. அசிங்கம் தானே. 😂 🤣

போறதில 90% ஆரெண்டு பாத்தால் வலு சத்தமா வெளிநாட்டில் “புறக்கணி சிறிலங்கா” எண்டு கத்திற ஆக்கள்தான் 🤣.

ஆனாலும் மிக தீவிரமான தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலர், சிங்களவனுக்கு ஒரு சதமும் கொடுக்க கூடாது (வீசா fees ஆருக்கு எண்டு கேக்கப்படாது) என்பதால், கொழும்பில் ஷொப்பிங் செய்யாமல், கொப்பேகடுவ சந்தி வரை ஒரு பிளேன் டி கூட குடியாமல், யாழுக்கு கட்டு நாயக்கவில் இருந்து நடந்தே போவதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

ஓம் இருக்கு. என்ன கட்டுநாயக்க-இராகம shuttle bus இல் போய் அங்கால ரயில் எப்படி வசதி 🤣.

சீரியசாக - ஒரு ஒற்றை ரயில் பாதை கோட்டை-கட்டுநாயக்க இடையே உண்டு. நாளுக்கு இரெண்டு தரம் ரயில் வரும் 🤣.

https://train-time.in/srilanka-stations/katunayake

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

ரயில் தரம் எப்படி இருந்தாலும், ரயில் பாதை தரம் சரியில்லையே....

தூக்கி, தூக்கி எறிவதால், கொழும்பு முதல், வவுனியா வரை.... slow வா தான் போகுது. 25mph.

வவுனியாவுக்கு பிறகு 40 - 45 mph 

நீங்கள் சொல்வது சரிதான். பொல்காவல வரை மித வேகம். பின் ஓமந்தை வரை மந்தம். பின் கூடிய வேகம்.

ஆனால் நீங்கள் சொல்லும் mph கணக்கு யாழ் தேவிக்கு என நினைக்கிறேன்.  

Intercity அண்ணளவாக 220 மைல் தூரத்தை ஏழரை மணத்தியாலத்தில் கடந்ததா நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உத நம்பி ஏமாற வேண்டாம் நாதம். பிறகு பெட்டி படுக்கையோட கட்டுநாயக்க ரயில் நிலையத்யில நிக்க வேண்டி வரும் 🤣.

நான் 2015 இல் கோட்டையில் விசாரித்த போது 2 ரயில் என்றார்கள். இப்போ அவர்களின் வெப்சைட்டே ஒண்டும் இல்லை என்கிறது.

large.B2D9D671-A404-403D-833A-42E350260679.jpeg.5e5b85f0a55ecf90acb90913c68925c5.jpeg

https://eservices.railway.gov.lk/schedule/searchTrain.action?lang=en

பிற்சேர்க்கை

நாதம் நீங்கள் தந்திருப்பது கட்டுநாயக்க நகர ரயில் நிலையத்துக்கானது. 

கட்டு நாயக்க ஏர்போட் ஸ்டேசனுக்கு நாளைக்கு 2 ரயில் ஓடியது. இப்போ அதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டு நாயக்க ஏர்போட்டில் இருந்து கட்டுநாயக்க நகர பஸ் நிலையத்துக்கு இலவச shuttle bus உண்டு. அதில் ஏறி நகரத்துக்கு போய், அங்கே இருந்து நகர ரயில் நிலையம் போய், கொழும்பு போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனாலும் மிக தீவிரமான தமிழ் தேசிய உணர்வாளர்கள் சிலர், சிங்களவனுக்கு ஒரு சதமும் கொடுக்க கூடாது (வீசா fees ஆருக்கு எண்டு கேக்கப்படாது) என்பதால், கொழும்பில் ஷொப்பிங் செய்யாமல், கொப்பேகடுவ சந்தி வரை ஒரு பிளேன் டி கூட குடியாமல், யாழுக்கு கட்டு நாயக்கவில் இருந்து நடந்தே போவதும் உண்டு.

அப்படியானவர்களை ஊக்குவிக்கும் முகமாக… 📺
ஏன்… ஒரு,  தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் பேட்டி கண்டு ஒளிபரப்பவில்லை. 😎

அப்படி நடந்து போகும் போது…. எத்தனை மணித்தியாலம் எடுக்கும்?
சுற்றுலா முடிந்து… திரும்ப கட்டுநாயக்கா வரும் போதும், நடராஜா தானா…. 🚶🏻🚶‍♂️🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஒரு தகவலை திட்டமிட்டு தவிர்துள்ளது🤣.

அது:

இந்த ரயிலின் பெயர் ஸ்ரீதேவி என்பதாகும்.

#மயிலு பெயரில் ரயிலு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அப்படியானவர்களை ஊக்குவிக்கும் முகமாக… 📺
ஏன்… ஒரு,  தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் பேட்டி கண்டு ஒளிபரப்பவில்லை. 😎

அப்படி நடந்து போகும் போது…. எத்தனை மணித்தியாலம் எடுக்கும்?
சுற்றுலா முடிந்து… திரும்ப கட்டுநாயக்கா வரும் போதும், நடராஜா தானா…. 🚶🏻🚶‍♂️🤣
 

ஓம் 3 நாள் போக, 3 நாள் வர 🤣.

Rambling holidays in Sri Lanka led by an expert guide என்று வெள்ளையளின் தலையில் தாளிச்சு கொஞ்ச பேரையும் கூட்டிப்போனால் நல்ல காசும் பாக்கலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொகுசு ரயில் சேவை வருடக்கணக்காக உள்ளது. முன்னர்  5 ரயில் பெட்டிகளுடன் இயங்கியது. தற்போது 8 பெட்டிகளாக மாற்றிவிட்டு மக்களின் காதில் 🌼🌼🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் சொகுசு ரயில் கேட்டுத்தான்  அழுதார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வடக்கு மக்கள் சொகுசு ரயில் கேட்டுத்தான்  அழுதார்களாம்.

அதான.. ஏற்கனவே முழுசனமும் மூண்டாவது கிளாசிலதான் போகுது… சாமான் விக்குர விலைக்கு இன்னும் குறைஞ்ச விலைக்கு நாலாவது கிளாஸ் இருந்தா அதிலும் போக ரெடி..

உது பிள்ளைக்கு பால் வாங்க வீட்டில காசு இல்ல ஆட்டக்காரிக்கு ஐநூறு ரூவா.. எண்ட கதைதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/1/2022 at 22:48, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான். பொல்காவல வரை மித வேகம். பின் ஓமந்தை வரை மந்தம். பின் கூடிய வேகம்.

ஆனால் நீங்கள் சொல்லும் mph கணக்கு யாழ் தேவிக்கு என நினைக்கிறேன்.  

Intercity அண்ணளவாக 220 மைல் தூரத்தை ஏழரை மணத்தியாலத்தில் கடந்ததா நினைவு.

எப்படிப்பார்த்தாலும் சராசரி வேகம் 30 mph தானே வருது கோஷான்?? அதுவும் intercity க்கே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொகுசு ரயிலை கொடுத்தவங்க எரிபொருளையும் அனுப்புவாங்களா? இல்லையெண்டா  கொண்டுபோய் மூலையில் தள்ள வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.