Jump to content

சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன?

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச்சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. 

கொரோனா காலத்தில் சீனாவின் உதவிகளுக்காக ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு வரக்கிடைத்தமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன வௌிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்றவகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச்செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

image_61f7e7b86f.jpg
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/சீன-அமைச்சருடன்-ஜனாதிபதி-பேசியது-என்ன/175-288929

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை  விஜம், இலங்கை சனாதிபதி சீனா விஜயம், அடுத்து சீன பிரதமர் இலங்கை  விஜயம...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை தள்ளுபடி செய்வதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை தள்ளுபடி செய்வதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

👌

ஜானதிபதி….   சீன அமைச்சரை,   கூப்பிட்டு வைச்சு,
நைசாக…. அலுவல் பார்த்திருக்கிறார்.
இது தான்…. ராசதந்திரத்தின் உச்ச கட்டம். 🤣

பங்களாதேஷ், இந்தியா பக்கம் இருந்து…
இனி ஒரு அமைச்சரும்… சிலோன் பக்கம் எட்டியும் பாக்க மாட்டாங்கள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம் - பேச்சுவார்த்தையில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் கோட்டாபய ராஜபக்ச

பட மூலாதாரம்,PMD

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சில திட்டங்களையும் திறந்து வைத்தார்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு தொடங்கி, 65 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், சீன வெளிவிவகார அமைச்சர், நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சரை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.

இவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கொழும்பு துறைமுக நகரில் சில திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நடைபாதை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

500 மீட்டர் நீளத்தை கொண்ட, கடலுக்கு நடுவில் இந்த உடற்பயிற்சி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

 

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் கோட்டாபய ராஜபக்ச

பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSHA

இது நாளை முதல் மக்கள் பார்வைக்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறு படகு பிரிவும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளின் பின்னர், சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

பிரதமருடனான சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிற்கும் இடையிலான சந்திப்பு, அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

சீனாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள், மீண்டும் அங்கு செல்வதறான வசதிகளை செய்து தருமாறு பிரதமர், சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் மஹிந்த ராஜபக்ச

பட மூலாதாரம்,POM

தமது கல்வியை நிறைவு செய்வதற்காக இந்த மாணவர்கள் காத்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி, அதற்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு, சீன வெளிவிவகார அமைச்சர், கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சீனாவில் இறுதி ஆண்டு மருத்துவ கல்வியை தொடரும் 400 மாணவர்கள் உள்ளடங்களாக 1,200 மருத்துவ மாணவர்கள் சீனாவிற்கு செல்ல காத்திருக்கின்றனர்.

கோவிட் பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால், இந்த மாணவர்கள் சீனா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

கூட்டம்

பட மூலாதாரம்,POM

அத்துடன், கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றமை, துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான முதலீடுகளை செய்கின்றமை, சீனா - இலங்கை நாடுகளுக்கு இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்கின்றமை, இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில், பௌத்த மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான்கு உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

  • பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை
  • கொழும்பில் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கான நிவாரண வீட்டுத் திட்டம் தொடர்பிலான பரிமாற்றுக் கடிதம்.
  • பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்.
  • சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்.

இலங்கைக்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்க சீனா தொடர்ந்து செயற்படும் என சீன வெளிவிவகார அமைச்சர், பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிற்கும் இடையிலான சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

 

சந்திப்பு

பட மூலாதாரம்,PMD

கோவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்காக சீனாவினால், பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டமைக்கு ஜனாதிபதி, சீன வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சீனாவின் நெருங்கிய நட்பு நாடு இலங்கை என நினைவுப்படுத்தி சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறைக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி, சீன சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பது குறித்து அவதானம் செலுத்த இயலுமானால், அது நாட்டிற்கு பாரிய பங்களிப்பாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

அத்துடன், சீனாவினால் முன்னெடுக்கப்படும் இறக்குமதி நடவடிக்கைகளின் போது, நிவாரண அடிப்படையிலான வர்த்தக கடன் நடைமுறையொன்றை பெற்றுக்கொள்ள முடியுமாயின், தடையின்றி தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல அது உதவியாக இருக்கும் என ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-59929898

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

பங்களாதேஷ், இந்தியா பக்கம் இருந்து…
இனி ஒரு அமைச்சரும்… சிலோன் பக்கம் எட்டியும் பாக்க மாட்டாங்கள்.😂

என்னது
கொடுத்ததை வாங்காமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை ஹிந்தியாவாலும் மேற்காலும் ரசிக்கக் கூடிய காட்சிகள் அல்ல என்பது மட்டும் தெளிவு. இவர் என்னத்தைப் பேசினாலும் சீனாவுடன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை தள்ளுபடி செய்வதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

👌

நல்ல விடயம். இந்தியனிடம் கேட்டால் கோமியம்தான் பரிசாகக் கிடைக்கும். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

இவை ஹிந்தியாவாலும் மேற்காலும் ரசிக்கக் கூடிய காட்சிகள் அல்ல என்பது மட்டும் தெளிவு. இவர் என்னத்தைப் பேசினாலும் சீனாவுடன். 

எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ஊன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தால் இப்படித்தான் நடக்கும். 2009 வரைக்கும் ஒரு பயல் சிறிலங்காவின் வடகிழக்குக்கு மட்டுமல்ல தென்பகுதியைக் கூட எட்டியும் பார்க்கவிலை;. புலிகளையும் தமிழரையும் அழிக்ககும் போது வேடிக்கைபார்த்ததுமட்டுமல்லாவில் அதற்கு உதவியும் செய்தவர்கள் தலைக்கே இப்போது ஆபத்து வந்துள்ளது.அது மட்டுமல்ல அழித்த சிங்களவர்களே பட்டினியால் அழியும் நிலை வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:

எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ஊன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தால் இப்படித்தான் நடக்கும். 2009 வரைக்கும் ஒரு பயல் சிறிலங்காவின் வடகிழக்குக்கு மட்டுமல்ல தென்பகுதியைக் கூட எட்டியும் பார்க்கவிலை;. புலிகளையும் தமிழரையும் அழிக்ககும் போது வேடிக்கைபார்த்ததுமட்டுமல்லாவில் அதற்கு உதவியும் செய்தவர்கள் தலைக்கே இப்போது ஆபத்து வந்துள்ளது.அது மட்டுமல்ல அழித்த சிங்களவர்களே பட்டினியால் அழியும் நிலை வந்துள்ளது.

இப்போது… நாங்கள், அவர்களை உன்னிப்பாக அவதானிக்கும் நேரம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு வாய்ந்த நட்புறவை இலங்கையும் சீனாவும் மீண்டும் உறுதிப்படுத்தல்

Published by J Anojan on 2022-01-10 17:33:05

 
 

அலரி மாளிகையில் நேற்யை தினம் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் அரச  அவை உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஆரோக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த நட்புறவு மற்றும் பலதரப்பட்ட பங்காளித்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தனது ஆரம்ப உரையில் எடுத்துரைத்தார்.

KUMA8498-600x355.jpg

வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர் அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65 ஆவது ஆண்டு நிறைவையும் குறிக்கும் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் வாங் யீ  இலங்கைக்கு சுருக்கமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் கருத்துக்களை வெளியிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம், சீனாவிடமிருந்து முழு அளவிலான ஆதரவு எப்போதும் கிடைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். 

இந்த சூழலில், நன்கொடையாக வழங்கப்பட்ட 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் உள்ளடங்கலாக, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சீனாவின் தன்னிச்சையான மற்றும் தாராளமான ஆதரவிற்காக வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கு அமைச்சர் உண்மையான நன்றிகளையும், ஆழ்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், இலங்கை மத்திய வங்கிக்கு 1.5 பில்லியன்  அமெரிக்க டொலர் நாணய மாற்று வசதியை வழங்குவதன் மூலம் சீனாவின் சரியான நேரத்திலான உதவி, நாட்டின் நாணய இருப்புக்களை அதிகரிக்க உதவியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலையான நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இருதரப்புக் கலந்துரையாடலின் போது, தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசித் திட்டத்திற்கான மேலதிக ஆதரவு, சீனாவில் இருந்து கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு முதலீடுகளை ஈர்த்தல், சீனாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாவை அதிகரித்தல், சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே பௌத்த உறவுகளை வளர்ப்பதில் கலாச்சார ஒத்துழைப்பை ஊக்குவித்தல்  ஆகியன உள்ளிட்ட இருதரப்பு ஆர்வமுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சரின் கருத்துக்களுக்கு அன்புடன் பிரதிபலித்த சீனாவின் அரச அவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, சீனா இலங்கையை காலத்தால் இணைந்த நண்பராகக் கருதுவதாகக் குறிப்பிட்டதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு விஷேட நினைவு நாணயத்தை வெளியிட்டமைக்காக இலங்கைக்கு  நன்றிகளைத் தெரிவித்தார். 1952ல் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் அரிசி ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என அவர் பாராட்டினார். பல ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச அரங்குகளிலான இரு நாடுகளினதும் வலுவான மற்றும் நிலையான ஆதரவையும் அவர் எடுத்துரைத்தார்.

கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு வெளிநாட்டு  அமைச்சர்களினதும் முன்னிலையில், இரு தூதுக்குழுவினரும் பின்வரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்:

  • பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
  • கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கான மானியத்துடன் கூடிய  வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்
  • பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கான தொழில்நுட்ப  ஒத்துழைப்புத் திட்டத்தின் கையளிப்பு சான்றிதழ்
  • நடமாடும் சிறுநீரக நோய் கண்டறிதல் அம்புலன்ஸ் வாகனங்களுக்கான தொழில்நுட்ப  ஒத்துழைப்புத் திட்டத்தின் சான்றிதழ்களை ஒப்படைத்தல்

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், வர்த்தகப் பிரதி அமைச்சர் கியான் கெமிங், உதவி வெளிவிவகார அமைச்சரான தூதுவர் வூ  ஜியாங்ஹாவ் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ஆகியோரும் முறையே இலங்கை மற்றும் சீனத் தூதுக்குழுக்களில் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு வாய்ந்த நட்புறவை இலங்கையும் சீனாவும் மீண்டும் உறுதிப்படுத்தல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இப்போது… நாங்கள், அவர்களை உன்னிப்பாக அவதானிக்கும் நேரம். 🙂

சேர்ந்து எல்லாநாசவேலையும் செய்தவங்கள் சும்மா விடமாட்டாங்கள்நாங்களும் ஒரு ஓரமாநிக்கிறம் என்டு அடம்பிடிப்பாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரதேசங்களில் இன்று வரைக்கும் தேனும் பாலும் ஓடவில்லை. எம்மை அழித்தவர்களை பழிவாங்கவாவது சீனா வரட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.