Jump to content

2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்!

spacer.png

50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா.

கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது.

புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாத சூழல் தமிழ் சினிமாவில் நிலவுகிறது. 2022 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது

ரஜினிகாந்த் நடிக்கும் படம், இந்த வருடம் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதுவரை எந்த நிறுவனமும் அவர் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பை வெளியிடவில்லை.

மற்ற வியாபார முக்கியத்துவம் உள்ள கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி, சிலம்பரசன், ஜெயம் ரவி ஆகியோர் நடித்து கொண்டிருக்கும் படங்கள் இந்த வருடம் முழுமையும் வெளியாகக் கூடும்.

தெலுங்குத் திரையுலகம் தற்போது இந்திய படம் என்று சொல்லுமளவுக்கு இந்திப் படங்களுடன் போட்டி போட ஆரம்பித்துவிட்டது. சென்னை தென்னிந்திய சினிமாக்களின் பிறப்பிடமாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பின்பு தெலுங்கு மொழி சினிமா உள்கட்டமைப்பு, படத்தின் பட்ஜெட், வியாபாரம் இவற்றில் தமிழ் சினிமாவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமாவைக் காட்டிலும் பின்தங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. 2022ஆம் ஆண்டில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள சில பெரிய படங்கள் அதை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன்

spacer.png

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மறைந்த எம்ஜிஆர் உள்ளிட்ட பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று கைவிட்டனர். அதை லைகா நிறுவனத்தின் உதவியுடன் மணிரத்னம் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார். ஒரு காலத்தில் தமிழில் வந்த சரித்திரப் படங்கள் சாதனைப் படங்களாக இடம்பிடித்தன. பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னம் என்கிற ஐகான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் இணைந்து நடிக்க வைத்துள்ளது. இம்மாபெரும் படைப்புக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

விக்ரம்

spacer.png

நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இவருடன் கமல்ஹாசன் இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 'மாநகரம், கைதி, மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை நிச்சயம் மாறுபட்ட விதத்தில் காட்டுவார் என்று படத்தின் அறிமுக வீடியோ உணர்த்தியது. விஜய் சேதுபதி, பகத் பாசில் எனச் சிறந்த நடிகர்கள் படத்தில் இருப்பதும் சிறப்பு. என்ன மாதிரியான ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

பீஸ்ட்

spacer.png

முன்னணி நடிகர்கள் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிவது காலத்தின் கட்டாயம். அந்த விதத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் விஜய் இணைந்திருக்கும் படம் இது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவருகிறது. ஏப்ரல் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையுடன் கூடிய த்ரில்லர் படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வலிமை

spacer.png

அஜித் குமார் நடித்த படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகி விட்டன. மீண்டும் வினோத், அஜித் குமார் கூட்டணி என்ற அறிவிப்பு வந்தபோதே எதிர்பார்ப்பு எகிறியது. சமீபத்தில் வெளிவந்த டிரெய்லர் அதை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பெரிய படம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளிவர இருந்தது. இரண்டு வருடங்களாக அஜித் குமார் படத்துக்காகக் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் சரியான கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளியீட்டு தேதியை மறு தேதி குறிப்பிடாமல் வலிமை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்

எதற்கும் துணிந்தவன்

spacer.png

பாண்டிராஜ், சூர்யா கூட்டணி 'பசங்க 2' படத்தில் இணைந்தது. அந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. பசங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். இந்தப் படத்தில் இருவரது கூட்டணியும் முழுமையாக இணைந்துள்ளது. கமர்ஷியல் படமா, வித்தியாசமான படமா என்பது படம் வரும்போதுதான் தெரியும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் சம்பந்தமான படம் எனக் கூறப்பட்டாலும் அதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம், திட்டமிட்ட அடிப்படையில் வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மகான்

spacer.png

இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ், இசை - சந்தோஷ் நாராயணன், நடிப்பு - விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், அப்பா விக்ரம், மகன் துருவ் முதன்முறை இணைந்துள்ள படம். இப்படி சில முதன்முறை கூட்டணி இருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 'ஜகமே தந்திரம்' படத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்த கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விக்ரம் படம் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தில் மகனும் இணைந்துள்ளதால், இருவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்க வாய்ப்புள்ளது.

கோப்ரா

spacer.png

இயக்கம் - அஜய் ஞானமுத்து, இசை - ஏ.ஆர்.ரஹ்மான், நடிப்பு - விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்.

படம் தொடங்கி இரண்டு வருடங்களாகி விட்டாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. கடந்த வருடத் தொடக்கத்தில் டீசர் வந்தபோது அது இன்னும் அதிகமாகியது. இன்றைய சூழலில் கோப்ரா தியேட்டரா, ஓடிடியிலா என்கிற குழப்பம் நிலவுகிறது

மாறன்

spacer.png

தனுஷ் நடித்து கடந்த வருடம் தியேட்டர்களில் வெளிவந்த 'கர்ணன்' மாறுபட்ட படமாக அமைந்தது. அதேநேரம் ஓடிடியில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்' ரசிகர்களை ஏமாற்றியது. அதனால், இந்த 'மாறன்' படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தன் முதல் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த கார்த்திக் நரேன் இந்தப் படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். படம் ஓடிடி வெளியீடு எனக் கூறப்பட்டாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

திருச்சிற்றம்பலம்

spacer.png

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இருவரும் இணைந்த படங்கள் சுவாரஸ்யமான படங்களாக அமைந்தது போலவே இந்தப் படமும் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வெந்து தணிந்தது காடு

spacer.png

கவுதம் மேனன், சிலம்பரசன் கூட்டணி என்றாலே வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் இருவரும் முதன்முறை இணைந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஒரு எவர்கிரீன் காதல் படமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. அவர்கள் கூட்டணியில் அடுத்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' தோல்வியைத் தழுவினாலும் 'வெந்து தணிந்தது காடு' அறிவிப்பு வந்ததிலிருந்தே ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த 'மாநாடு' படத்தின் வெற்றி சிலம்பரசன் படத்துக்கான வர்த்தக மதிப்பை அதிகரித்துள்ளது

டான்

spacer.png

'டாக்டர்' பட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகன் நடித்து வெளிவர உள்ள படம். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்ன மாதிரியான படமாக இதைக் கொடுக்கப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது. கல்லூரிக் கதை என்பது மட்டும் தெரிந்த விஷயம். சீக்கிரமே இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான்

spacer.png

ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் படம். கொரோனா பெரும் தொற்றுக்கு முன்பு தொடங்கிய இந்தப் படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக இசையமைத்திருக்கிறார். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பு. தாமதமானாலும் தரமான படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

காத்து வாக்குல ரெண்டு காதல்

spacer.png

'நானும் ரௌடிதான்' படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன், அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். கூடுதலாக இந்தப் படத்தில் புஷ்பா புகழ் சமந்தா. படத்தின் டைட்டிலே இது காதல் படம்தான் என்று சொல்லிவிட்டது. எந்த மாதிரியான காதல் படம் என்பதுதான் எதிர்பார்ப்பே. 'ரௌடி' கூட்டணி எப்படியும் ஏமாற்றாது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

விடுதலை

spacer.png

நகைச்சுவை நடிகரான சூரி முதன்முறையாக நாயகனாக நடிக்கும் படம். வெற்றி மாறன் இயக்கத்தில், இசை இளையராஜா என ஆரம்பத்திலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.

இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தப் படம், எப்போது வெளியாகும் என்பதை தற்போதைய சூழ்நிலையில் உறுதிபட கூற முடியாது.
 

 

 

https://minnambalam.com/entertainment/2022/01/10/9/expected-movies-in-2022

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.