Jump to content

ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா

spacer.png
 

நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார்.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை.

இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.ஆனபோதும் ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிட முடிவெடுத்து அதற்காக திமுக, காங்கிரஸ், அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏழு எம்பிக்கள் திமுக மக்களவை குழுத் தலைவர் டி. ஆர்.பாலு தலைமையில் முயற்சித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வராஜ், முஸ்லிம் லீக் உறுப்பினர் நவாஸ் கனி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்ற இந்த குழுவினர், டிசம்பர் கடைசி வாரத்தில் டெல்லி சென்றனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடியாமல், தங்களது கோரிக்கை மனுக்களைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது செயலாளரிடம் கொடுத்தனர்

இதுதொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய, கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் தரப்பிடம் கொடுக்கப்பட்ட பிறகு அன்று இரவே பதில் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், இதன் மற்றொரு நகல் உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக எனது இல்லத்தில் நேற்று காத்திருந்தோம். ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து அவரது உதவியாளர் தொடர்புகொண்டு திட்டமிட்ட 12 மணிக்கு வராதீர்கள். வேறு ஒரு நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் நேரம் எதுவும் சொல்லவில்லை. அன்று இரவு 9.15 மணி வரை காத்திருந்தோம். பின்னர் இருமுறை வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினோம். ஆனால் இதற்கு இதுவரை பதில் இல்லை. எப்போது சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவார் என தெரியவில்லை.

உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஏனென்றால் நானும் அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால் தேதி இல்லை என்றோ, நேரம் இல்லை என்றோ சொல்ல முடியாது. அவர் சாதாரண ஆள் இல்லை. திறமையானவர். மாநில அரசின் கோரிக்கையை அவரிடம் வலியுறுத்தத் தேதி கொடுப்பார். அவரை சந்திக்கத் தேதி கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம்”என்று குறிப்பிட்டார்.

அதன் பின் டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது அவர்கள் ஸ்டாலினிடம் முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

’டெல்லியின் சிறப்பே கட்சிப் பாகுபாடின்றி தனி ஒரு எம்பி கூட ஒன்றிய அமைச்சர்களிடம் நேரம் கேட்டு சென்று பார்க்க முடியும். அதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவுக்கு அந்த உரிமையும் பொறுப்பும் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆனால் நம்மாலேயே உள்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்பது டெல்லியில் நமக்கு இமேஜ் குறைவை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தலுக்காக விடிய விடிய ஆலோசனைகளை நடத்தும் அமித் ஷா இந்தியாவில் முக்கியமான உற்பத்தி மாநிலமாக விளங்கக் கூடிய தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை சந்திக்க மறுப்பது என்பது குரூரமான அரசியலாக இருக்கிறது. இதற்கு நாம் நிச்சயம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக மெரினா கடற்கரையில் நடக்கும் குடியரசு தினத்தில் பங்கேற்று ஆளுநர்தான் கொடியேற்றுவார். இந்த முறை அந்த மரபை நாம் உடைப்போம். நீங்களே (ஸ்டாலின்) மாநில முதல்வர் என்ற முறையில் கொடியேற்றுங்கள். ஆளுநரை நாம் அந்த விழாவுக்கு அழைக்க வேண்டாம். அவர் ஆளுநர் மாளிகையில் தனியாக கொடியேற்றிக் கொள்ளட்டும்.

இது முன்பு நடக்காத நடைமுறை அல்ல. ஜெயலலிதா தனது 91-96 முதல் ஆட்சி காலத்தில் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தபோது அவரை குடியரசு தினத்துக்கு அழைக்காமல் தானே முதல்வராக இருந்து கொடியேற்றியிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் குடியரசு தின கொடியேற்றினார். அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநிலத்தின் முழு நேர ஆளுநராக இருந்தார். அதனால் அவர் ஜனவரி 26 ஆம் தேதி கொடியேற்ற மும்பைக்கு சென்றுவிட்டார். ஆளுநர் வரவில்லை என்பதால் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்து கொடியேற்றினார்.

ஜெயலலிதா ஆளுநருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் போக்கினால் குடியரசு தின விழாவுக்கு ஆளுநரை அழைக்காமல் தானே தேசியக் கொடியை ஏற்றினார். ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் வராததால் ஜனவரி 26 ஆம் தேத் தேசியக் கொடியை ஏற்றினார். ஆனால் இப்போது நாம் அப்படி அல்ல, தமிழ்நாட்டின் உரிமைக்காக மாநிலத்தின் சட்டமன்றத்தின் இறையாண்மைக்காக குடியரசு விழாவை நாமே நடத்துவோம். ஆளுநரை அழைக்காமல் முதல்வரே கொடியேற்றினீர்கள் என்றால் இந்தியா முழுதும் இது பேசப்படும்’என்று முதல்வரிடம் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். தன் மீசையை சொரிந்தபடி முதல்வர் இதை ஆர்வமாகக் கேட்டுவிட்டு, ‘இதுபத்தி நாம யோசிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகுதான் சட்டமன்றத்தில். ‘தமிழக எம்பிக்களை சந்திக்காத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று கடுமையாக சாடினார் முதல்வர். அதன் பின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில்... ’ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்து கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம்’என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைக்காமல் முதல்வரே கொடியேற்றுவது என்ற தமிழகத்தில் நடந்த ஆலோசனைகள் உளவுத்துறை மூலமாக டெல்லிக்கும் சென்றிருக்கிறது. மேலும், ‘நீட் தேர்வில் பாஜகவுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதேநேரம் எம்பிக்கள் குழுவினரை சந்திக்க மறுப்பது என்பது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அரசியலை மேலும் கூர்மைப்படுத்துவதாக இருக்கிறது’ என்றும் தகவல்கள் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளன.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து தமிழக எம்பிக்களை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படியே வரும் 17ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்கிறது.

அமித் ஷாவை சந்திக்கும் குழுவில் இடபெற்றுள்ள காங்கிரஸ் எம்பி ஜெயக்குமாரிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆமாம் சார். தமிழக எம்பிக்கள் குழுவை சந்திக்க வரும் 17 ஆம் தேதி உள்துறை அமைச்சர் தேதி கொடுத்திருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது’ என்று கூறினார்.

அமித் ஷா தமிழக எம்.பிக்களை சந்திக்க தேதி கொடுத்துவிட்டாலும்... குடியரசுதின விழாவில் ஆளுநரை அழைக்காமல் தானே கொடியேற்றலாமா என்ற திட்டம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக மூத்த முன்னோடிகள்.

 

https://minnambalam.com/politics/2022/01/11/28/stalin-republic-day-plan-amit sha-meet-tamilnadu-mps-neet

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்!"   "அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"   "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்!"   "அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!"   "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்!"   "அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: VISHNU 16 APR, 2024 | 07:48 PM   முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார். பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார். https://www.virakesari.lk/article/181258
    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.