Jump to content

வாழும் ஆசையால் - வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

வாழ ஆசை LUST FOR LIFE
*May be an illustration of one or more people and beard
பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால்  வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அதனால் எனக்கு வாய்திறக்க சந்தர்ப்பம் கிடைத்தது. “இங்ஸ்ஸ்பெக்டர் நான் இலகையன் தமிழன். எங்களை நீ நாய்போல சுடலாம். இவர் அமரிக்க பத்திரிகையாளர். அவருக்கு mechine gun நீட்டுகிறாய்,. நீ அவரை சுடமுடியாது” என கர்ச்சித்தேன். யந்திர துப்பாக்கியை நீட்டிய இங்ஸ்பெக்டரின் கை நடுங்கியது.
.
இப்படி வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத அதிஸ்ட்டம் என்னை காப்பாற்றியபடி தொடருகிறது. 2014ல் அம்மாவின் சமாதியை தரிசிக்க இலங்கை சென்றேன். தமிழ் சிங்கள் பத்திரிகைச் சந்திப்புகளில் அரசை காரசாரமாக விமர்சித்தேன். கோத்தபாய அவர்கள் என்னை இரகசியமாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாவின் சமாதிக்கு நான் சென்ற வழியில் இருந்த  காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். கார் காட்டுக்குள் நுழைந்த போது காரைத் திருப்பு என சொன்னேன். நேரமாகிவிட்டது என மறுத்த சாரதியிடம் “அம்மாவிம் வாழ்நாள் வேண்டுகோளான வன்னிவிழாங்குழம் அம்மன் கோவிலுக்கு விளக்கு வைக்க வேண்டும் திருப்பு” என கத்தினேன். அதனால் என்னை இரகசியமாக கைது செய்யும் வாய்ப்பை இராணுவம் இழந்தது. துரத்தி வந்த இராணுவம் எங்களை கோவிலுக்குமுன் மடக்கியது. மக்கள் கூடட்டும் என்பதால் இராணுவத்துடன் கர்ச்சித்து வாய்ச் சண்டை போட்டேன். எதிர்பார்த்தபடியே வீட்டு வேலிகளுள் மக்கள் கூடிவிட்டார்கள். வன்னிவிளான்குழத்திலிருந்து நோர்வே சுந்தரலிங்கம் லண்டன் பத்திரிகையாளர் குருபரன் போன்றோருக்கு கைபேசி சேதிகள் போனது. (வாற்ஸப் செயலிக்கு நன்றி.) இராணுவ தலைமையகத்தில் இருந்து என்ன நடக்குதுCNN, BBC டிவி யெல்லாம் வரிச்சேதி ஓடுது என பதட்டத்துடன் வாக்கி ரோக்கியில் கத்தினார்கள். இப்படித்தான் இப்படித்தான் லட்சக் கணக்கான உறவுகள் கொல்லபட்ட மண்ணில் நான் உயிர் தப்பி வாழ்கிறேன். இயக்கத் தலைவர் ஒருவர் “ஜெயபாலனை சுடுவதானால் வாய்திறக்குமுன் சுட்டால்தான் உண்டு” என கிண்டலாக சொல்வாராம். உண்மையாக இருக்கலாம்.
வாழுமாசையால் கவிதை என் வாழ்வின் கவிதையாகும்.
*
வாழும் ஆசையால்
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
----
ஒளியும் இருளும் உருள உருள
காலத்தேரின் கூரைப் பல்லியாய்
தசாப்தம் எழு தாண்டிவிட்டேன்.
விடிந்தால் தாமரை
பொழுதுபட்டால் முல்லையென
வழியெங்கும் தேன்சிந்துமே வாழ்வு.
இதுதான் என் ஞானம் தோழதோழியரே.
இது முது கடலின் இளமைமறாத அலை.
வாழும் ஆசையால் கல் வெடிப்பிலும்
வேரோடி மலர்கிறதே சிறு புல்.
*
1965ல் ஒருநாள்.
யாழ்ப்பாணத்து ராசவீதிகள் அதிர
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என
கர்சனையோடு செங்கொடிகள் உயர்ந்தது.
அதுவரை கண்டது கல்யாண ஊர்வலம் மட்டுமே.
வியர்வையும் மண்ணும் கந்தலுமாக
”நீயும் வாழ் எம்மையும் வாழவிடு” என
மண் தோய்ந்த மேனியராய்
மானுடம் எழுந்ததை அன்றுதான் கண்டேன்.
சூரியனும் நிலவும் மறுக்கப்பட்ட
இருவேறு உலகமா?
பதின்மவயசில் என் ஆன்மா அதிர்ந்தது.
*
அந்த அறியப்படாத யாழ்ப்பாணத்தில்
மாணவப் பருவத்தை பறிகொடுத்து
உயிர்த்த செம்மண் சேற்றுச் சிலைகளாய்
கழை பறிக்கும் சிறார்களைக் கண்டு
நானும் கொதித்தேன்.
சாதிவெறி பிடித்த தமிழருக்கெதிராய்
மீசை முளைக்கயில் ஆயுதம் தாங்கினேன்.
*
பின்னர் ஓர் இரவில்
எம் விடுதலைக் கனவின் கருவறையான
யாழ் நூலகத்தை
சிங்கள பெளத்த வெறிக்கூச்சலுடன்
படைகள் எரித்தன.
கவிஞன் ஒருவன் “புத்தகத்தோடு புத்தகமாக
புத்தனை எரித்தனர்” என்று வெகுண்டான்.
*
கோடைக் காற்று கோடான கோடி
கனலும் புத்தக கங்குகளோடு
”விரித்த கருங்குழலும்
கையில் சிலம்பும் கண்ணீருமாய்”
மதுரையை உலுப்பிய கண்ணகியாக
யாழ்பாணத்து தெருக்களில் அலைந்தது.
உளதோ உளதோ ”அல்லற்பட்டு
ஆற்றாது அழுத” மக்களின்
ஓர்மத்தை விடவுமோர் வலிய ஆயுதம்
*
கொடுங்கோல் வீழ்திய உலகப் புரட்சிகள்
நூலகங்களிலிருந்தே ஆரம்பமானது.
நாமோ நூலகச் சாம்பர் மேட்டில் இருந்து
விடுதலைக்காக ஆயுதம் தாங்கினோம்.
*
மீண்டும் மீண்டும்
சர்வதேச மாநுட அரங்கில்
சரிநிகராக வாழும் ஆசையால்தானே
ஆயுதம் தாங்கினோம்.
ஆலயம் மசூதி மட்டுமன்றி
தேயிலை மலைகளில்
எல்லைப் புறத்து விகாரையில்கூட
எல்லோரும் இன்புற்றிருக்கவே எழுந்தோம்.
*
இபடித்தான் தோழ தோழியரே
கல்லில் வளர்ந்த புல் பூத்ததுபோல
என் காதலும் வீரமும் கவிதையானது.
2021.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:
வாழ ஆசை LUST FOR LIFE
*May be an illustration of one or more people and beard
பதின்ம வயசில் சாதி ஒருக்குதலுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதால் சின்ன வயசிலேயே ஆயுத தாக்குதல் அபாயமும் உயிர்காக்கும் அதிஸ்ட்டமும் என்னை தொடர ஆரம்பித்துவிட்டது. உயர் சாதிக் கொடுமை எதிர்ப்பினால்  வீட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டேன். அதனால் அப்பா நெடும்பயணம் செல்லும் சமயங்களில்தான் எங்கள் வடகாட்டு பண்ணைவீட்டில் தங்குவேன். 1971 சிங்கள இளைஞர்களின் கிளற்ச்சியின் ஓராண்டு நிறைவு நாளில் பொலிசாருக்கு விசேட அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி 1972 ஏப்பிரல் 4 நள்ளிரவு என்னை சுட பொலிசார் என் வீட்டுக்குள் பாய்ந்தனர். அதிஸ்ட்டவசமாக அந்த இரவில் விவசாய கிழற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் அமரிக்க பத்திரிகையாளர் ஒருவர் என்னோடு பேசிக்கொண்டிருந்தார். அதனால் எனக்கு வாய்திறக்க சந்தர்ப்பம் கிடைத்தது. “இங்ஸ்ஸ்பெக்டர் நான் இலகையன் தமிழன். எங்களை நீ நாய்போல சுடலாம். இவர் அமரிக்க பத்திரிகையாளர். அவருக்கு mechine gun நீட்டுகிறாய்,. நீ அவரை சுடமுடியாது” என கர்ச்சித்தேன். யந்திர துப்பாக்கியை நீட்டிய இங்ஸ்பெக்டரின் கை நடுங்கியது.
.
இப்படி வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத அதிஸ்ட்டம் என்னை காப்பாற்றியபடி தொடருகிறது. 2014ல் அம்மாவின் சமாதியை தரிசிக்க இலங்கை சென்றேன். தமிழ் சிங்கள் பத்திரிகைச் சந்திப்புகளில் அரசை காரசாரமாக விமர்சித்தேன். கோத்தபாய அவர்கள் என்னை இரகசியமாக கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அம்மாவின் சமாதிக்கு நான் சென்ற வழியில் இருந்த  காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். கார் காட்டுக்குள் நுழைந்த போது காரைத் திருப்பு என சொன்னேன். நேரமாகிவிட்டது என மறுத்த சாரதியிடம் “அம்மாவிம் வாழ்நாள் வேண்டுகோளான வன்னிவிழாங்குழம் அம்மன் கோவிலுக்கு விளக்கு வைக்க வேண்டும் திருப்பு” என கத்தினேன். அதனால் என்னை இரகசியமாக கைது செய்யும் வாய்ப்பை இராணுவம் இழந்தது. துரத்தி வந்த இராணுவம் எங்களை கோவிலுக்குமுன் மடக்கியது. மக்கள் கூடட்டும் என்பதால் இராணுவத்துடன் கர்ச்சித்து வாய்ச் சண்டை போட்டேன். எதிர்பார்த்தபடியே வீட்டு வேலிகளுள் மக்கள் கூடிவிட்டார்கள். வன்னிவிளான்குழத்திலிருந்து நோர்வே சுந்தரலிங்கம் லண்டன் பத்திரிகையாளர் குருபரன் போன்றோருக்கு கைபேசி சேதிகள் போனது. (வாற்ஸப் செயலிக்கு நன்றி.) இராணுவ தலைமையகத்தில் இருந்து என்ன நடக்குதுCNN, BBC டிவி யெல்லாம் வரிச்சேதி ஓடுது என பதட்டத்துடன் வாக்கி ரோக்கியில் கத்தினார்கள். இப்படித்தான் இப்படித்தான் லட்சக் கணக்கான உறவுகள் கொல்லபட்ட மண்ணில் நான் உயிர் தப்பி வாழ்கிறேன். இயக்கத் தலைவர் ஒருவர் “ஜெயபாலனை சுடுவதானால் வாய்திறக்குமுன் சுட்டால்தான் உண்டு” என கிண்டலாக சொல்வாராம். உண்மையாக இருக்கலாம்.
வாழுமாசையால் கவிதை என் வாழ்வின் கவிதையாகும்.
*
வாழும் ஆசையால்
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
----
ஒளியும் இருளும் உருள உருள
காலத்தேரின் கூரைப் பல்லியாய்
தசாப்தம் எழு தாண்டிவிட்டேன்.
விடிந்தால் தாமரை
பொழுதுபட்டால் முல்லையென
வழியெங்கும் தேன்சிந்துமே வாழ்வு.
இதுதான் என் ஞானம் தோழதோழியரே.
இது முது கடலின் இளமைமறாத அலை.
வாழும் ஆசையால் கல் வெடிப்பிலும்
வேரோடி மலர்கிறதே சிறு புல்.
*
1965ல் ஒருநாள்.
யாழ்ப்பாணத்து ராசவீதிகள் அதிர
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என
கர்சனையோடு செங்கொடிகள் உயர்ந்தது.
அதுவரை கண்டது கல்யாண ஊர்வலம் மட்டுமே.
வியர்வையும் மண்ணும் கந்தலுமாக
”நீயும் வாழ் எம்மையும் வாழவிடு” என
மண் தோய்ந்த மேனியராய்
மானுடம் எழுந்ததை அன்றுதான் கண்டேன்.
சூரியனும் நிலவும் மறுக்கப்பட்ட
இருவேறு உலகமா?
பதின்மவயசில் என் ஆன்மா அதிர்ந்தது.
*
அந்த அறியப்படாத யாழ்ப்பாணத்தில்
மாணவப் பருவத்தை பறிகொடுத்து
உயிர்த்த செம்மண் சேற்றுச் சிலைகளாய்
கழை பறிக்கும் சிறார்களைக் கண்டு
நானும் கொதித்தேன்.
சாதிவெறி பிடித்த தமிழருக்கெதிராய்
மீசை முளைக்கயில் ஆயுதம் தாங்கினேன்.
*
பின்னர் ஓர் இரவில்
எம் விடுதலைக் கனவின் கருவறையான
யாழ் நூலகத்தை
சிங்கள பெளத்த வெறிக்கூச்சலுடன்
படைகள் எரித்தன.
கவிஞன் ஒருவன் “புத்தகத்தோடு புத்தகமாக
புத்தனை எரித்தனர்” என்று வெகுண்டான்.
*
கோடைக் காற்று கோடான கோடி
கனலும் புத்தக கங்குகளோடு
”விரித்த கருங்குழலும்
கையில் சிலம்பும் கண்ணீருமாய்”
மதுரையை உலுப்பிய கண்ணகியாக
யாழ்பாணத்து தெருக்களில் அலைந்தது.
உளதோ உளதோ ”அல்லற்பட்டு
ஆற்றாது அழுத” மக்களின்
ஓர்மத்தை விடவுமோர் வலிய ஆயுதம்
*
கொடுங்கோல் வீழ்திய உலகப் புரட்சிகள்
நூலகங்களிலிருந்தே ஆரம்பமானது.
நாமோ நூலகச் சாம்பர் மேட்டில் இருந்து
விடுதலைக்காக ஆயுதம் தாங்கினோம்.
*
மீண்டும் மீண்டும்
சர்வதேச மாநுட அரங்கில்
சரிநிகராக வாழும் ஆசையால்தானே
ஆயுதம் தாங்கினோம்.
ஆலயம் மசூதி மட்டுமன்றி
தேயிலை மலைகளில்
எல்லைப் புறத்து விகாரையில்கூட
எல்லோரும் இன்புற்றிருக்கவே எழுந்தோம்.
*
இபடித்தான் தோழ தோழியரே
கல்லில் வளர்ந்த புல் பூத்ததுபோல
என் காதலும் வீரமும் கவிதையானது.
2021.

நினைவுகளை கவிதையாய் வடித்தமைக்கு நன்றிகள் ஐயா..💐

Link to comment
Share on other sites

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நினைவுகளை கவிதையாய் வடித்தமைக்கு நன்றிகள் ஐயா..💐

மகிழ்ச்சி தோழரே. ஏழை என்னிடம் இருப்பது நினைவுகள் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளோடு கலைமகளும் கூட வருகிறாள்......நீங்கள் எங்களிடம் பகிரக்கூடிய அனுபவங்களை ஒரு திரி திறந்து நேரம் இருக்கும்போது அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் பகிரலாமே.......!  💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.