Jump to content

யாழில் “மிஸ் கோல் காதல்” ! நகை பணத்துடன் சென்ற யுவதி காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published by T Yuwaraj on 2022-01-12 16:51:47

 
 

 

யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். 

 

Rape2.jpg

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும்  பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, 

தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. 

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் , அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார். 

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக , வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து  சென்றுள்ளார். 

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி , உறவு கொண்டுள்ளார். பின்னர் , தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார். 

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்துள்ளனர். 

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் , முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர். 

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர். 

அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றையதினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“மிஸ் கோல் காதல்” ! நகை பணத்துடன் சென்ற யுவதி காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட வயது வரை..

48114090.cms

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

Published by T Yuwaraj on 2022-01-12 16:51:47

 
 

 

யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். 

 

Rape2.jpg

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும்  பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, 

தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. 

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் , அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார். 

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். 

அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக , வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து  சென்றுள்ளார். 

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி , உறவு கொண்டுள்ளார். பின்னர் , தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார். 

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்துள்ளனர். 

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் , முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர். 

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர். 

அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றையதினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“மிஸ் கோல் காதல்” ! நகை பணத்துடன் சென்ற யுவதி காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு | Virakesari.lk

இதுகள் எப்ப திருந்தப் போகுதுகள்

Link to comment
Share on other sites

பாலியல் வன்கொடுமை ஒரு மோசமான வன்முறை, அதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான வன்முறை. இதைச் செய்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆயினும் இதை வாசிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் மேல் அனுதாபம் வருவதற்கு பதிலாக கோபம் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம & பருவ வயசுகளில் வரும் பாலியல் மயக்கங்கள் ராணுவத்தை போட்டு தடுத்தாலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, தொடர் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு கட்டுக்குள் இருக்க வாய்ப்புண்டு.

புலிகள் காலத்திலும் காதல் பின்பு   திருமணத்திற்கு முந்திய பாலியல் உறவுகள் என்று பல நடந்துள்ளன. மாட்டுப்பட்டவர்கள் அல்லது ஏமாற்ற நினைத்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள், அதில் ஒரு சிலர் திருமணம் ஒப்புக்கு செய்துவிட்டு வெளிநாடுபோகிறோம் என்று சொல்லி அப்படியே எஸ்கேப் ஆனவர்களும் உண்டு.

ஆனால் கூட்டு பாலியல் நடந்ததாக நினைவில் இல்லை அப்படி ஒரு சம்பவத்தை எவரும் நினைத்தும் பார்ப்பதில்லை என்பதுதான் பொருத்தம்.

மற்றும்படி மனக்கட்டுப்பாடு எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு தவிர வேறு எதனாலும் இதுபோன்ற சம்பவங்களை எக்காலத்திலும் தடுக்கமுடியாது என்பதே மனதில் தோன்றும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

பாலியல் வன்கொடுமை ஒரு மோசமான வன்முறை, அதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான வன்முறை. இதைச் செய்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆயினும் இதை வாசிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் மேல் அனுதாபம் வருவதற்கு பதிலாக கோபம் தான் வருகின்றது.

நல்ல வேளை,  எனது பெண்கள் இருவரும் யாழ் கள  உறுப்பினர்கள் அல்ல; 

இருந்திருந்தால்,  உந்த கருத்துக்கு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நிழலி  அவர்கள்   பிச்சுக் கொண்டு ஓடும் வரை குத்தி குதறி இருப்பார்கள். 

முத்தாய்ப்பாக Male Chauvinist  என்று பட்டமும் சூட்டியிருப்பார்கள். 

அது சரி , அந்த பையன்கள் மீது,  இந்த பெண் மீது வந்த கோபத்தை விட மிகப் பல மடங்கு கோபம் வந்தது தானே. 

அப்ப ஏன் அதை சொல்லவில்லை.....🤫

Link to comment
Share on other sites

53 minutes ago, சாமானியன் said:

நல்ல வேளை,  எனது பெண்கள் இருவரும் யாழ் கள  உறுப்பினர்கள் அல்ல; 

இருந்திருந்தால்,  உந்த கருத்துக்கு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நிழலி  அவர்கள்   பிச்சுக் கொண்டு ஓடும் வரை குத்தி குதறி இருப்பார்கள். 

முத்தாய்ப்பாக Male Chauvinist  என்று பட்டமும் சூட்டியிருப்பார்கள். 

அது சரி , அந்த பையன்கள் மீது,  இந்த பெண் மீது வந்த கோபத்தை விட மிகப் பல மடங்கு கோபம் வந்தது தானே. 

அப்ப ஏன் அதை சொல்லவில்லை.....🤫

நல்ல வேளை நான் தப்பித்தேன்.

ஆயினும் வெறும் தவறான அழைப்பினூடாக தொடர்பை பேணி காதல் கொண்ட பெண் ஒருவர், ஒரு போதும் நேரில் சந்திக்காத ஒருவருக்காக, அவர் தன்னை கலியாணம் கட்டுவார் என்ற நம்பிக்கையுடன்,அப்பா அம்மாவுக்கும் தெரியாமல் நகை பணம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு போன ஒரு படு முட்டாள் என உங்கள் இரு பெண்களும் புரிந்து கொண்ட பின்பும் அந்தப் பெண் மீது கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதை நம்ப கடினமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வு வீடியோ.

செய்தியுடன் தொடர்புள்ளதாக கருதுவதால் இணைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

பெண்கள் இதனை  ஒரு படிப்பினையாக எடுத்தாலே மேற்படி சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்.
சமூக கட்டுப்பாடுகள் இல்லாமல் போகும் போது இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்கள் பல ஏற்கனவே நடைபெற்று வெளி வராமல் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. 

தொடர்புடைய ஆட்களை உள்ளே போட்டு நறுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ பெண்ணோ

பிள்ளைகளிடம்  தொலைபேசியை கொடுப்பதற்கு முன்னர்

யாருடன் பேசணும்

யாருடன்  பேசக்கூடாது என்பதை  சொல்லுங்கள்

தவறு பெற்றோர்  மீதே......😭

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

சமூக கட்டுப்பாடுகள் இல்லாமல் போகும் போது இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. 

எதற்காகத் தமிழீழம் கேட்டுப் போராடினோம்..? சிங்களத்தின் தொல்லையின்றி வாழ்வதற்கு மட்டுமா...?? சமூகக் கட்டுப்பாட்டுடனும், பண்புடனும் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்கும்தான்.

பிரபாகரன் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இப்படி ஒருசம்பவம் தமிழீழத்தில் நடந்ததுண்டா.? இன்று ஏன் நடக்கிறது..?? தவறு யாருடையது...???

Link to comment
Share on other sites

On 12/1/2022 at 19:36, நிழலி said:

பாலியல் வன்கொடுமை ஒரு மோசமான வன்முறை, அதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான வன்முறை. இதைச் செய்தவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆயினும் இதை வாசிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் மேல் அனுதாபம் வருவதற்கு பதிலாக கோபம் தான் வருகின்றது.

கோபிக்க ஒன்றும் இல்லை. அந்த பிள்ளை வெளி உலகம் அறியாத பிள்ளையாக இருந்திருக்கலாம். பெற்றோர் பொறுப்பாக இல்லையா என்று கேட்கலாம். பெற்றோர் இப்படி மகள் மனசை ஒரு காவாலி குலைத்திருப்பான் என்று புரிந்து கொண்டிருக்கமாட்டார்கள். அந்தக்காவாலியை ஏதோவொரு சினிமாவில் பார்த்த கதாநாயகனாக அவள் நம்பியிருப்பாள். 

இந்த வல்லுறவு அவள் வாழ்வு முழுவதும் அவளை மனச்சிதைவுக்கு உட்படுத்தியே கொல்லப்போகிறது. அதில் இருந்து அவளை மீட்பதே அந்தப் பெற்றோர் இனி செய்ய வேண்டும். 

உலகெங்கும் இத்தகைய கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு பல பெண்பிள்ளைகள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

நல்ல வேளை நான் தப்பித்தேன்.

ஆயினும் வெறும் தவறான அழைப்பினூடாக தொடர்பை பேணி காதல் கொண்ட பெண் ஒருவர், ஒரு போதும் நேரில் சந்திக்காத ஒருவருக்காக, அவர் தன்னை கலியாணம் கட்டுவார் என்ற நம்பிக்கையுடன்,அப்பா அம்மாவுக்கும் தெரியாமல் நகை பணம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு போன ஒரு படு முட்டாள் என உங்கள் இரு பெண்களும் புரிந்து கொண்ட பின்பும் அந்தப் பெண் மீது கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதை நம்ப கடினமாகவே உள்ளது.

பிழையான இடத்தில,

 பிழையான நேரத்தில,

 பிழையான மாதிரி இருக்கிறது

 வேறு எவருக்குமான-

கச்சை அவிழ்ப்பதற்கானான அனுமதி

இல்லை

என்பதனை

ஆண்  வர்க்கம் உணரும் வரை

மேலும் பல வெர்ஜினியாக்களும்

மண் கவ்வப்போகும் முடியரசுகளும்

தொடரப்  போகின்றன என்பது தான்

இங்கே  

தொக்கி நிற்பதுவும்

புரிந்து கொள்ளக் கூடியதும்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

எதற்காகத் தமிழீழம் கேட்டுப் போராடினோம்..? சிங்களத்தின் தொல்லையின்றி வாழ்வதற்கு மட்டுமா...?? சமூகக் கட்டுப்பாட்டுடனும், பண்புடனும் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்கும்தான்.

பிரபாகரன் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இப்படி ஒருசம்பவம் தமிழீழத்தில் நடந்ததுண்டா.? இன்று ஏன் நடக்கிறது..?? தவறு யாருடையது...???

புரட்சி நிறைவடைந்து ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் பிடல் காஸ்ட்ரோவிடம் சாதிப்பதற்கு மிகவும் கடினமான விடயம் எதுவென்று கேட்டதற்கு  

“ஊழியர்களிடம் இருந்துஅர்ப்பணிப்புடன் கூடிய எட்டு மணித்தியால வேலையைப் பெற்றுக் கொள்வது தான்”

என்று சொன்னாராம்.

 

எல்லாவிதமான வாழ்வியல் அம்சங்களிலும் இனவிடுதலைக்கான போராட்டத்தை கொண்டு வந்து செருகத் தான் வேண்டுமா…?

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

எல்லாவிதமான வாழ்வியல் அம்சங்களிலும் இனவிடுதலைக்கான போராட்டத்தை கொண்டு வந்து செருகத் தான் வேண்டுமா…?

போராட்டம் இனவிடுதலைக்கு மட்டுமானதல்ல அது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கும், அவை சந்ததியை உருவாக்குவதற்கும் இன்றியமையாதது. போராட்டமின்றி மனித இனம் உட்பட, சகல உயிரினங்களுக்கும் அடுத்த சந்ததி இல்லை. இருந்தும் அந்தப் போராட்டத்தில் ஒரு ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும். ஒழுங்கு முறைகளையும் அனேகமாக இயற்கையே அளித்துள்ளது மனிதனைத்தவிர. மனிதனுக்குமட்டும் சிந்திக்கும் அறிவாற்றலைக் கொடுத்து ஒழுங்கை நீயே அமைத்துக்கொள் என்று படைத்துள்ளது. இயற்கையின் படைப்பிலுள்ள உண்மைகளை உணராமல் அல்லது உதாசீனம் செய்து மீறிச்செல்ல முயன்றால், அழிவுதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.