Jump to content

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை என்னவாகும்? - ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Sri Lanka Shape Animated On Stock Footage Video (100% Royalty-free)  16112128 | Shutterstock

அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். 

அந்த கட்டுரையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

நமது பூமிக்கு  கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள்  தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. 

டெக்டோனிக் தகடுகள்  மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன.  இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில்,  கிழக்கு ஆப்பிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் உட்பட) மற்றும் மடகாஸ்கர் ஆகியவை இந்தியாவின் மேல் எழும்பும் இது ‘இந்தியாவின் நவீன மேற்குக் கடற்கரையில் நீண்ட மலைத்தொடரை உருவாக்குவதற்கும்’ வழிவகுக்கும்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலய மலைகளால் மாற்றப்படும்.மும்பையில் கடல் இல்லாமல் போகும். கடல் இல்லாவிட்டாலும் மும்பை நன்றாக இருக்கும்.

டெல்லி "சோமாலயா மலைகள்" என்று அழைக்கப்படுவதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும். சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் தீவுகள் அனைத்தும் மேலே தள்ளப்பட்டு மும்பை சோமாலயா மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் என்று ஆய்வுக் குழு குறிப்பிட்டது. 

அது முழு கடலோரக் கோட்டையும் மாற்றும். மொகடிசுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும். கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்.

இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

இதுகுறித்து டாக்டர் வான் ஹின்ஸ்பர்கன்  கூறியதாவது:-

எதிர்கால மலைகள் மற்றும் கண்டங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான விடை தற்போது எங்களிடம் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் காணாமல் போன ஒரு கண்டம், தென்கிழக்கு ஆசியாவில் காணாமல் போன மற்றொரு பெரிய கண்டம், அதன் நினைவுச்சின்னங்கள் இந்தோனேசியா முழுவதும் காணப்படுகின்றன

தென்மேற்கு இந்தியா  திருவனந்தபுரத்திலிருந்து கராச்சி வரை ஒரு அழுத்தம் ஏற்படும். சோமாலியாவை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவின் மேல் பகுதி தென்மேற்கு இந்தியாவின் மீது மேலெழுந்து  பெரிய மலைப் பகுதியை உருவாக்கும் என்றார்.

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை என்னவாகும்? - ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

அப்பவும் அடுத்த தைமாதத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ் தலைமைகள் சொல்லிக் கொண்டு இருக்கும்.

அநேகமாக சம்பந்தர் தான் தலைவராக இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அப்பவும் அடுத்த தைமாதத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என்று தமிழ் தலைமைகள் சொல்லிக் கொண்டு இருக்கும்.

அநேகமாக சம்பந்தர் தான் தலைவராக இருப்பார்.

அப்ப சுமந்திரன் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

 

பாதி இலங்கை மறைந்து சைனாகூட சேர்ந்துட்டு.. மக்கள் மாண்டரின் படிக்கிறதுல பிசியா இருக்கிறார்கள்..இந்தியா ங்கே ன்னு  விட்டத்த பாத்துட்டு உக்காந்துருக்கு.. இவரு என்னடான்னா.. 200 மில்லியன் ஆண்டு எண்டு கத உடுராரு..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளை பாக்காமல் இந்தக்கட்டை வேகாது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவரும் தான்... 

தமிழினம் என்ன பாவம் செய்ததோ...... இறைவா!  இறைவனாலும் காப்பற்ற முடியாதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.