Jump to content

இதயத்துக்கும் ஆணுறுப்பு விரைப்புத் தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம் பாலுறவு கொள்வதற்கும், பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கும் பலவிதமான மாத்திரைகளையும், மருந்துகளையும் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மருந்துகளும் இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் பாலுணர்வைத் தூண்டுவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் மருந்துகள் தேவையா, அத்தகைய ஏற்படும் பலன்கள், பக்க விளைவுகள் என்னென்ன? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம்.

பாலுணர்வைத் தூண்டுவதற்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன?

நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும், ஆர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாலியல் மாத்திரைகள், மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக மேம்பட்ட உடலுறவுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் சில மருந்துகள் உடல் ரீதியாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், பிளாசிபோ எனப்படும் போலி விளைவுகளைத் தரக்கூடியவையாக இருக்கலாம்.

 

தற்காலத்தில் பாலுணர்வைத் தூண்டுவதற்காக அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுவது ஆல்கஹால். மது குடிக்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற உணர்வு குறைவதால், பாலியல் ரீதியான ஆசை அதிகரிக்கிறது. இதற்காகவே பலரும் ஆல்ஹகாலை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகும்போது பாலுணர்வு குறைந்து போகிறது. ஆற்றலும் குறைகிறது.

அடுத்ததாக மிகவும் தவறாக இருக்கும் பழக்கம் கொகைன் போதை மருந்து. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாள்களில் பாலுணர்வுக்காக கொகைன் உள்ளிட்ட போதை மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கம்.

பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாமா?

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை மருத்துவர்களிடம் ஆலோசித்து அதற்கேற்ப மருந்துகளை எடுப்பது சிறந்த நடைமுறை. எந்தக் குறைபாடும் இல்லாதவர்களும், பாலியல் திறனை மேம்படுத்துவதற்காக மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் அதுவும் மருத்துவரின் ஆலோசனையின்படி இருப்பது நல்லது.

 
பாலியல்

புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதும் 38 சதவிகித ஆண்டுகளுக்கு ஆணுறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு இருக்கிறது. 41 சதவிகித பெண்களுக்கு பாலியல் பிரச்னைகள் இருக்கின்றன. இந்தக் குறைபாடுகளுக்காக மருத்துவர்களிடம் வரும்போது அவர்களது உடல் குறைபாடுக்கு ஏற்பட மருந்துகளும், உளவியில் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசனைகளையும் வழங்குவார்கள். அதனால் பிரத்யேகமாக பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அப்படியில்லாமல் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையே எடுத்துக் கொள்வது தவறு.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்?

சில அங்கீகரிக்கப்பட்ட மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே கடைகளில் வாங்கலாம். உதாரணத்துக்கு வயாக்ரா. இந்த மருந்து பாலியல் திறனை மேம்படுத்தும் என்பது பொதுவாக அறியப்பட்ட ஒன்று.

பலர் அங்கீகரிக்கப்படாத மருத்துவர்களையும், விளம்பரங்களையும் நம்பி பலவிதமான பொருள்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். மேலும் பலர் நேரடியாக கடைகளில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இவையும் பெரும்பாலும் பெரிய அளவிலான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. காரணம் அவை எந்த விதமான மாற்றத்தையும் உடலில் ஏற்படுத்தாததுதான்.

 
இதயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலுணர்வு ஆசை மற்றும் பாலியல் திறன் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இப்போது எந்த அளவு இருக்கிறது?

பாலியல் ரீதியிலான குறைபாடு இருப்பதற்குக் காரணமே அறியாமைதான். ஒரு காலத்தில் சுய இன்பம் செய்து கொள்வதே தவறு, அதனால் ஆண்மை பறிபோய்விடும் என்ற கருத்து இருந்து வந்தது. இப்போது அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

நாற்பது வயதை அடைந்து விட்டால், விரைப்புத் தன்மை குறையும்போது இனி எதுவும் செய்ய முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் விரைப்புத் தன்மைக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இதயப் பிரச்னைக்கான அறிகுறி இது. ஆணுறுப்புகச் செல்லும் ரத்தக் குழாயும், இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயும் நேரடியாகத் தொடர் கொண்டவை. அதனால் இதயத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஆணுறுப்பில் தெரிந்துவிடும். முன்னைவிட தற்காலத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

பாலியல் திறனை மேம்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னென்ன?

ஆண்களுக்கு பெரும்பாலும் வயாக்ரா. இதில் நான்கு கட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் உடல்நிலையைப் பரிசோதித்து அதற்கேற்ப மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கு சில பயிற்சி முறைகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த பேட்டியின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.