Jump to content

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை

January 12, 2022
spacer.png
 

வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது.

இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது, வழக்கின் தீர்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி, சட்டமா அதிபரினால், கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில், 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும், 8 கைதிகளின் படுகொலை தொடர்பிலேயே சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர போதிய சாட்சிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.ilakku.org/welikada-prison-massacre-former-prisons-commissioner-sentenced-to-death/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

சிறையில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்றால் அதிகாரிக்கு மரணதண்டனை. அதேவேளை கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்றால் அதிகாரிக்குப் பதவி உயர்வும், சிங்களத் தேசியத்தின் பாதுகாவலன்  என்கிற பட்டமும்.

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

 

1 hour ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

Link to comment
Share on other sites

42 minutes ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தனது கண்ணை தான் இறந்த பின் தானம்  கொடுக்க  நினைப்பது பாரிய குற்றமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

அண்ணை, இருக்கிற எல்லாப்பிரச்சினைக்கும் புலிகளைக் குற்றஞ்சாட்டுறதில சிலருக்கு அலாதிப் பிரியம் கண்டியளோ. இதில கனகாலமாய் புலியெதிர்ப்புச் செய்யிற ஆக்களும், புதிசா சேந்த ஆக்களும் இருக்கினம். தங்கள நடுநிலைவாதிகளாக, கனவான்களாக, தாங்கள் “விசிலடிச்சான் குஞ்சுகள்” இல்லையெண்டு  காட்ட,  தாங்கள் இந்தப் படிக்காத கூட்டத்திலிருந்து “வேறுபட்டவர்கள்” என்று காட்ட அவர்களுக்கு இந்தப் புலியெதிர்ப்பு தேவையாய் இருக்கு. 

ஆனால், எங்களால அது ஏலாது. எங்களுக்காக, எங்கட தாய் நாட்டின் விடுதலைக்காக, எங்கள் மொழி, கலாசார, பண்பாட்டு விடுதலைக்காக தங்கட வாழ்க்கையை அர்ப்பணிச்ச அந்த ஜீவன்களை எங்களால மறக்கேலாது அண்ணை. நாங்கள் உயிரோடு இருக்குமட்டும் அவர்களைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருப்போம். அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருப்போம். ஆம், நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள்தான், நாங்கள் அறிவற்றவர்கள்தான், ஆம் நாங்கள் புலிவால்கள்தான். ஆனால், அதற்காக வெட்கப்படப்போவதில்லை. 

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

16 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

1983 வெலிக்கடையில் சிறைக்காவலர்களாலும், சிங்களக் கைதிகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் 53. 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் சிறையதிகாரிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் 26. 

இதற்கும் புலிகளைக் குற்றஞ்சாட்ட தமிழ்க் “கனவான்கள்” இங்கே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

16 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

 

16 hours ago, விசுகு said:

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

தமது தவறுகளை அடையாளம் கண்டு திருந்த முடியாதவர்கள் இல்லாமல் போனது மக்களுக்கு நன்மையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

சிறப்பு. இதைவிட விளத்தமாகக் கூறுதல் கடினம். அதற்காக எல்லோரும் விளங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தலைவரின் கனடா பயணம் போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

 

19 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

24 minutes ago, குமாரசாமி said:

 

எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

ஞானம் ஒரு புறம் இருக்கட்டும்.

சொன்னது செய்ய ஏன் தடை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாட்களுக்கு பிறகு கற்பகதருவ கண்டது மகிழ்ச்சி.. அடிக்கடி எழுதுங்கோ அப்பதான் மற்றாக்களும் எழுதுவாங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

ஒரு இடத்தில் விடயங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. யதார்த்தங்கள் அதி முக்கியம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

இதுதான் உண்மை. விழுந்த அடியில மூளை கலங்கி புலிகளை முழு மனதோடு ஆதரித்தவர் ஒரு இரவிற்குள் புலிகளை முழு மனதோடு எதிர்க்கத்தொடங்கியது மட்டுமல்லாமல் சிங்களத்தோடு ஐக்கியமாகி தமிழ் அடையாளத்தைத் துறப்போம் என்று திருவாய் மலர்ந்தவர். இப்ப தன்னைச் சிங்களவனாகவே (மதவாச்சியில் யாழ்தேவிக்குள் ஏறித் தமிழர்களைக் கொன்ற கொள்ளையடித்த சிங்களவர்களில் தன்னையும் ஒருவனாக அடையாளப்படுத்திக்கொண்டு)  பார்க்கத் தொடங்கிவிட்டவர்.

 

இதுபோதும் என்று நினைக்கிறேன் மூளை யாருக்குக் கலங்கியிருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு!

9 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

அவர்தான் தன்னைச் சிங்களவனாக வரிந்துகொண்டிருக்கிறாரே அண்ணை, அப்ப புலிகளை அழித்ததுகுறித்து அவர் சந்தோசப்படுவது சாதாரணம்தானே?

அதற்காக 2009 இற்கு முன்னர்வரை என்ன செய்துகொண்டிருந்தார் எண்டெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.

 

அது வேற வாயி, இது நாறவாயி !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

அண்ணை, பிரபாகரனுக்குக் கொடுக்கமுடியாது என்று சொன்ன தீர்வை வேறு எந்த நாய்க்கும்   கொடுக்கமாட்டேன் என்று போர் வெற்றியின் பின் பெளத்த பேரினவாதம் கூறிவிட்டது. ஆனால் இன்னமும் சிலர் சுமந்திரனும் சாணக்கியனும் தீர்வு எடுத்துத் தருவார்கள் என்று நம்புகிறார்கள். அதனாலேயே புலிகள் அழிக்கப்பட்டதில் இன்புற்றிருக்கிறார்கள்.

 

ஆனால், இவர்களுக்கும் இதுவரை தான் படிப்பித்த அதே பழைய பாடத்தை சிங்களப் பயங்கரவாதம் படிப்பிக்கும். அப்போது புலிகளின் பாதையே சரியென்று உணர்வார்கள். ஆனால்,  தீர்விற்கான தேவை அப்போது இருக்காது. முழுத் தமிழர்தாயகமும்  ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களத்துடன் ஐக்கியமாகியிருக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.