Jump to content

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை

January 12, 2022
spacer.png
 

வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது.

இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது, வழக்கின் தீர்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி, சட்டமா அதிபரினால், கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில், 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும், 8 கைதிகளின் படுகொலை தொடர்பிலேயே சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர போதிய சாட்சிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.ilakku.org/welikada-prison-massacre-former-prisons-commissioner-sentenced-to-death/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

சிறையில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்றால் அதிகாரிக்கு மரணதண்டனை. அதேவேளை கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்றால் அதிகாரிக்குப் பதவி உயர்வும், சிங்களத் தேசியத்தின் பாதுகாவலன்  என்கிற பட்டமும்.

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

கண்ணை புடுங்கிய இனம் அண்ணா. உலகின் முன் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் அதே உலகுக்கு தாம் கொலை செய்யவில்லை என் கிறார்கள். யாரில் தவறு அண்ணா?

 

1 hour ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

Link to comment
Share on other sites

42 minutes ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தனது கண்ணை தான் இறந்த பின் தானம்  கொடுக்க  நினைப்பது பாரிய குற்றமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏதாவது செய்தார்களா?

இன்று வரைக்கும் யாராவது  பதில் சொன்னார்களா என்றால் இல்லவே இல்லை.
மாறாக இன்று வரைக்கும்   விடுதலைப்புலிகள் மீது    குறை குற்றங்களை சுமத்திய வண்ணமேயுள்ளனர்.

அண்ணை, இருக்கிற எல்லாப்பிரச்சினைக்கும் புலிகளைக் குற்றஞ்சாட்டுறதில சிலருக்கு அலாதிப் பிரியம் கண்டியளோ. இதில கனகாலமாய் புலியெதிர்ப்புச் செய்யிற ஆக்களும், புதிசா சேந்த ஆக்களும் இருக்கினம். தங்கள நடுநிலைவாதிகளாக, கனவான்களாக, தாங்கள் “விசிலடிச்சான் குஞ்சுகள்” இல்லையெண்டு  காட்ட,  தாங்கள் இந்தப் படிக்காத கூட்டத்திலிருந்து “வேறுபட்டவர்கள்” என்று காட்ட அவர்களுக்கு இந்தப் புலியெதிர்ப்பு தேவையாய் இருக்கு. 

ஆனால், எங்களால அது ஏலாது. எங்களுக்காக, எங்கட தாய் நாட்டின் விடுதலைக்காக, எங்கள் மொழி, கலாசார, பண்பாட்டு விடுதலைக்காக தங்கட வாழ்க்கையை அர்ப்பணிச்ச அந்த ஜீவன்களை எங்களால மறக்கேலாது அண்ணை. நாங்கள் உயிரோடு இருக்குமட்டும் அவர்களைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருப்போம். அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுதான் இருப்போம். ஆம், நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள்தான், நாங்கள் அறிவற்றவர்கள்தான், ஆம் நாங்கள் புலிவால்கள்தான். ஆனால், அதற்காக வெட்கப்படப்போவதில்லை. 

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

16 hours ago, விசுகு said:

இறந்தவர்கள் தமிழர்களாக  இல்லைப்போலும்???

இதே நாட்டில்

இதே  சிறையில்

83 யூலை இழப்புக்கு?????

ஒரே  சட்டம்  ஒரே நாடு

நம்புங்கள்

1983 வெலிக்கடையில் சிறைக்காவலர்களாலும், சிங்களக் கைதிகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் 53. 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் சிறையதிகாரிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் 26. 

இதற்கும் புலிகளைக் குற்றஞ்சாட்ட தமிழ்க் “கனவான்கள்” இங்கே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

16 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

 

16 hours ago, விசுகு said:

மொட்டையில  உரோமம்  புடுங்குபவர்களுக்கு  தென்படலாம்.....????

தமது தவறுகளை அடையாளம் கண்டு திருந்த முடியாதவர்கள் இல்லாமல் போனது மக்களுக்கு நன்மையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஏனென்றால், எங்களின் அடையாலமே அவர்கள்தான்.

சிறப்பு. இதைவிட விளத்தமாகக் கூறுதல் கடினம். அதற்காக எல்லோரும் விளங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

தலைவரின் கனடா பயணம் போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

எல்லோரும் தான் தம்பி  நுணா

சமாதானம்  என்று  வந்தோர்

இணைத்தலைமை  என்று மூக்கை  நுளைத்தோர்

அயல்நாடு  என்று  விசத்தை விதைத்தோர்

இவர்கள்  அழிந்ததும்  ஈழம்  தருவோம் அல்லது ஆகக்கூடிய தீர்வை தருவோம் என்றோர்

இவர்கள் வழிவிட்டால்  ஈழத்தை வாங்கித்தருவோம்  என்றோர்

எல்லாம் இணைந்து  வந்தபோது தமக்கென்று  தனி  அலகு  கேட்டோர்

யாரைச்சொல்ல???

எதனை  நோக???

காலம் பதில் தரும் என்ற  நம்பிக்கையை  தவிர?????

 

19 hours ago, கற்பகதரு said:

 

ம்….. உங்களில் தவறில்லை என்கிறீர்கள், அப்படியா?

எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

24 minutes ago, குமாரசாமி said:

 

எல்லாமே தவறு என்று சொல்லித்தானே போன பாதையில் குறுக்கால்   வந்து அடித்து அழித்தீர்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செவ்வனே சகலதையும் செய்வோம் என்று உறுதி பூண்டு அழித்தீர்கள்?
அதற்காகத்தானே விசுகர் அந்த கருத்தை சொன்னார்.

12 வருடங்களாகி விட்டது இன்னும் ஒழுங்கான  பதில் சொல்ல வக்கில்லை என்றால் வாடகை வாயை மூடிக்கொண்டிருங்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் கூற்றம் கூறியே எமது ஈழத்தமிழினத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

ஞானம் ஒரு புறம் இருக்கட்டும்.

சொன்னது செய்ய ஏன் தடை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாட்களுக்கு பிறகு கற்பகதருவ கண்டது மகிழ்ச்சி.. அடிக்கடி எழுதுங்கோ அப்பதான் மற்றாக்களும் எழுதுவாங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

திண்ணையில் நின்று  உரு வந்து ஆடுபவர்களும் மேடைக்கு வந்து ஆடலாம்.

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இன்னமும் பழைய அடக்குமுறை சண்டித்தனம் போகவில்லையா? அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்று திருந்த மறுத்ததால் அழிந்தார்கள். இவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என்று சொன்னார்கள் என்பது அடித்த அடியில் கலங்கிய மூளையில் உதித்த ஞானம். 

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

மேடைக்கு வந்து ஆடவுமல்லோ தெரிய வேணும்.😀

ஒரு இடத்தில் விடயங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. யதார்த்தங்கள் அதி முக்கியம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

இதுதான் உண்மை. விழுந்த அடியில மூளை கலங்கி புலிகளை முழு மனதோடு ஆதரித்தவர் ஒரு இரவிற்குள் புலிகளை முழு மனதோடு எதிர்க்கத்தொடங்கியது மட்டுமல்லாமல் சிங்களத்தோடு ஐக்கியமாகி தமிழ் அடையாளத்தைத் துறப்போம் என்று திருவாய் மலர்ந்தவர். இப்ப தன்னைச் சிங்களவனாகவே (மதவாச்சியில் யாழ்தேவிக்குள் ஏறித் தமிழர்களைக் கொன்ற கொள்ளையடித்த சிங்களவர்களில் தன்னையும் ஒருவனாக அடையாளப்படுத்திக்கொண்டு)  பார்க்கத் தொடங்கிவிட்டவர்.

 

இதுபோதும் என்று நினைக்கிறேன் மூளை யாருக்குக் கலங்கியிருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு!

9 hours ago, விசுகு said:

 

அடித்த அடியில் மண்டை  கலங்கியது உங்களுக்கும்தான்

அதாவது  தமிழ்  மக்களுக்கு...

இதில்  பெருமை  கொள்ளும் ஒருவன் மனிதனாக  இருக்கவே  முடியாது

அப்புறம்  எப்படி  இனமாக....????

அவர்தான் தன்னைச் சிங்களவனாக வரிந்துகொண்டிருக்கிறாரே அண்ணை, அப்ப புலிகளை அழித்ததுகுறித்து அவர் சந்தோசப்படுவது சாதாரணம்தானே?

அதற்காக 2009 இற்கு முன்னர்வரை என்ன செய்துகொண்டிருந்தார் எண்டெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.

 

அது வேற வாயி, இது நாறவாயி !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!

எமது தேசியத்தலைவர்  அவர்கள் சிங்களத்துடன் பேசிப்பயனில்லை என்று  அன்றே  சாத்திரம் போல் சொன்னார். அதை  இன்று நிரூபணமாக்கியுள்ளது  சிங்கள இனவாதம். 

சிங்களத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம். சண்டை சச்சரவுகள் தேவையில்லை என்று சொன்னவர்களையும் சமூகம் ஒதுக்கி வைத்துள்ளது.

அப்படியிருக்க.....இங்கே குறுக்கும் மறுக்குமாக ஒன்றிரண்டு....

அண்ணை, பிரபாகரனுக்குக் கொடுக்கமுடியாது என்று சொன்ன தீர்வை வேறு எந்த நாய்க்கும்   கொடுக்கமாட்டேன் என்று போர் வெற்றியின் பின் பெளத்த பேரினவாதம் கூறிவிட்டது. ஆனால் இன்னமும் சிலர் சுமந்திரனும் சாணக்கியனும் தீர்வு எடுத்துத் தருவார்கள் என்று நம்புகிறார்கள். அதனாலேயே புலிகள் அழிக்கப்பட்டதில் இன்புற்றிருக்கிறார்கள்.

 

ஆனால், இவர்களுக்கும் இதுவரை தான் படிப்பித்த அதே பழைய பாடத்தை சிங்களப் பயங்கரவாதம் படிப்பிக்கும். அப்போது புலிகளின் பாதையே சரியென்று உணர்வார்கள். ஆனால்,  தீர்விற்கான தேவை அப்போது இருக்காது. முழுத் தமிழர்தாயகமும்  ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களத்துடன் ஐக்கியமாகியிருக்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.