Jump to content

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

(ஆர்.யசி)

தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் 16 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபவுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 'தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்' என்ற பெயரில் தயாரித்துள்ள கடிதத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாளையத்தில் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச தரப்பில் இதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகிக்கொண்டுள்ளன. 

இந்நிலையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு குறித்த செயற்பாடுகளை கண்டித்துள்ளதுடன் அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய இலங்கை  ஒப்பந்ததின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 13ம் திருத்தச்சட்டத்தின் கீழ் தமிழர்களின் இருப்பை இல்லாமல் ஆக்குவதற்கான கடிதம் ஒன்றில் தமிழ் அரசியல் வாதிகள் கையெழுத்திட்டுள்ளதாகவும்,  மிகக்குறிப்பாக இந்திய பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், 13ம் திருத்தச்சட்டத்தை அமுல் படுத்தக்கோரியும் ஒற்றையாட்சிக்குள் தாம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை இந்திய அரசிடம் அடகு வைத்திருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,

கடிதத்தின் இறுதியில் தாம் இந்தியாவிடம் 13ம் திருத்தச்சட்டத்திற்கான அழுத்தத்தை வழங்க கோருவதாகவும்  ஒற்றைசிக்குள்ளான பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள்ளேயே தாம் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் மக்களை பிராந்திய சிறுபான்மையினர் என்கின்ற வகையிலான வாசகங்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தமிழ் மக்களையும் அவர்கள் இதுவரை இழந்த பேரிழப்புக்களையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவிடம் அடகு வைத்து தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்திருக்கின்றனர்  

இவர்களின் கோரிக்கைபோல புதிய அரசியலமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டால் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான ஒரு இறுதித்தீர்வாகவே சர்வதேசம் இதை எடுத்தக்கொள்ளும் அதன்பின் எமது குரலின் நீதி சாகடிக்கப்பட்டு நாம் ஏதிலிகளாக காலம் முழுதும் வாழ்ந்து சாகவேண்டிய பெரும் துயர நிலை எமக்கு ஏற்படும். 

ஆகவே தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 11 மணிக்கு லண்டனில் இலக்கம் 10 டவ்லிங் வீதிக்கு முன்பாக தாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 
 

https://www.virakesari.lk/article/120727

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.