Jump to content

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வரிசை கட்டிய காளைகள் vs அடக்கத் துடிக்கும் இளைஞர்கள் - கள படங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

 

படக்குறிப்பு,

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு 2022

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என்று சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி எழுத்தாளர் சு வெங்கடேசன் உட்பட பலரும் அவனியாபுர ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

கோலாகலமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் படங்கள் இதோ..

 

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரானபழனிவேல் தியாகராஜன், கொடியசைத்து புகழ்பெற்ற மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

 

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்கும் இளைஞர்

மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டில், வாடிவாசலில் இருந்து திமிறி வரும் காளையை, பாய்ந்து அடக்க முயலும் இளைஞர்.

 

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

 

படக்குறிப்பு,

வாடிவாசலில் இருந்து மாடு பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி

வாடிவாசலில் இருந்து காளை பாய்ந்து வரும் போது ஒருவர் மட்டுமே மாட்டைப் பிடிக்க வேண்டும் என்கிற விதியின் படி ஒருவர் மட்டுமே ஏறு தழுவும் காட்சி இதோ.

 

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

 

படக்குறிப்பு,

அடங்க மறுக்கும் காளை, அடக்க முனையும் இளைஞர் படை

ஒருபக்கம் அடங்க மறுக்கும் காளைகள், மறுபக்கம் அடக்க முனையும் இளைஞர் படை. ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி இரு தரப்பு.

 

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

 

படக்குறிப்பு,

மக்கள் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையிலிருந்து திமிறி வரும் காளை

ஜல்லிக்கட்டை காண, குறைவான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், காளைகளின் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சமில்லை.

இருப்பினும் குறைவில்லாத மக்களின் ஆரவாரத்தோடு, இளைஞர்கள் வலையில் சிக்காமல் திமிறி வரும் காளை.

 

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

 

படக்குறிப்பு,

தொட்டுப் பார்... என தெறிக்கவிடும் கம்பீரத்தோடு வீரநடைபோடும் காளை

திமில் திமிற, உடலில் வலு புடைக்க தொட்டுப் பார் என தெறிக்க விடும் கம்பீரத்தோடு, எவரும் தொடவில்லை என்கிற திமிரோடு வீரநடைபோடும் காளை.

 

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்தும் முனைப்பில் காவல் துறையினர்.

 

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

 

படக்குறிப்பு,

வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை

மாட்டைப் பிடிக்க சூழ்ந்திருக்கும் இளைஞர்களுக்கு சவால்விடும் பாணியில், வாடிவாசலிலிருந்து வந்த வேகத்தில், கால்களைக் கொண்டு மண்ணைக் கோரி இளைஞர்களுக்கு சவால்விடும் வீரக் காளை.

 

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

 

படக்குறிப்பு,

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் முனைப்பில் விவரங்களைச் சரிபார்க்கும் காவல் துறை அதிகாரிகள்.

 

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள் & மாடு வளர்ப்பவர்கள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி காளைகளை விட காத்திருக்கும் காளை மாடுகள்

மாதக் கணக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார் செய்த தங்கள் காளைகளை, வாடிவாசல் வழி போட்டிக்கு அனுப்ப வரிசையில் நிற்கும் காளைகள் மற்றும் காளை வளர்ப்பவர்கள்.

ஜல்லிக்கட்டை விறுவிறுப்பாக்கும் வர்ணனையாளர் மைக் சரவணன் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

ஜல்லிக்கட்டில் 'கெட்டவன்' - அதிரடிக்கு பெயர் பெற்ற மதுரை காளை - காணொளி

காணொளிக் குறிப்பு,

காளையின் பெயர் 'கெட்டவன்' - பல ஜல்லிக்கட்டில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்திய மாஸ் காளை

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண் - காணொளி

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் 17 வயது இளம் தமிழ்ப் பெண்

https://www.bbc.com/tamil/india-59990577

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய்  இருக்கும், நேரில் பார்த்ததில்லை......!  👍

நன்றி ஏராளன் .....! 

Link to comment
Share on other sites

அருமையான பதிவு. இளம் தமிழ்ப் பெண் கட்டப்பொம்மன் காலத்து வெள்ளையம்மாளை நினைவூட்டுகிறாள்.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்.

சிலிர்ப்பூட்டும்படி இருக்கும்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்

4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.தலா ஒரு மணி நேர சுற்றில் 30 வீரர்கள் என்கிற கணக்கில் மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் 729 காளைகள் போட்டியில் பங்கெடுத்தன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். நான்காவது சுற்றில் களத்துக்கு வந்த்து 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு, சிறந்த காளைக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டார். இவர் 11 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வானார்.

முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அவிழ்த்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

பிரபாகரன், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் - பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர்

 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

கார்த்திக் ராஜா, இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரர்

தமிழ்நாட்டையே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டுப் படங்கள் இதோ.

 

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

 

படக்குறிப்பு,

திமிலைப் பிடிப்போரை, உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை

பாலமேடு ஜல்லிக்கட்டில், தன் திமிலைப் பிடிக்கும் வீரர்களை எல்லாம், உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை.

 

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

 

படக்குறிப்பு,

போட்டியில் பங்கு பெற காத்திருக்கும் காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்துவிட காத்திருக்கும் காளை மாட்டு உரிமையாளர்கள்.

 

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

 

படக்குறிப்பு,

ஒருவரை உதறவிட்டு, மற்றொருவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முனையும் காளை

ஒருவரின் பிடியை உதறவிட்டு, மற்றொருவரின் பிடியிலிருந்து விடுபட துள்ளிக் குதிக்கும் வலிமையான காளை.

 

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

 

படக்குறிப்பு,

மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடும் காளைக்கு ஈடு கொடுத்தோடும் இளைஞர்கள்

வாடிவாசலிலிருந்து வெளி வந்த காலை மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடுகிறது. மறுபக்கம் காளைக்கு ஈடு கொடுத்து திமிலை அணைத்த படி ஒரு இளைஞரும் ஓடுகிறார்.

 

ஒரு காளை, ஒரு இளைஞர்

 

படக்குறிப்பு,

ஒரு காளை, ஒரு இளைஞர்

ஒரு காளை, ஒரு இளைஞர், திமிலோடு மோதி விளையாடி ஜல்லிக்கட்டுப் போட்டியை சூடேற்றிய தருணம்.

காணொளிக் குறிப்பு,

ஜல்லிக்கட்டை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும் வர்ணனையாளர் மைக் சரவணன்

 

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

 

படக்குறிப்பு,

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க வந்த பார்வையாளர்கள்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்.

 

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

 

படக்குறிப்பு,

பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் காளை

வாடிவாசலில் இருந்து வந்தது தான் தெரியும், பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் அற்புக் காளை.

 

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

 

படக்குறிப்பு,

விடாபிடியாய் காளையைத் துரத்தும் இளைஞர், கண்ணில் வேகத்தோடு பாய்ந்தோடும் காளை

பிடித்த பிடியை விடாத இளைஞர், பிடியை பிரிக்கும் நோக்கில் கண்ணில் வேகத்தோடு திமிறித் தெறித்தோடும் காளை.

 

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

 

படக்குறிப்பு,

வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை

வாடிவாசலிலிருந்து புறப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை.

 

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

 

படக்குறிப்பு,

வாடிவாசல் வழி களம் காண, தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழி களம் கண்டு இளைஞர்களைத் தெறிக்க விட, தங்கள் உரிமையாளர்களோடு காத்திருந்த காளைகள்.

https://www.bbc.com/tamil/india-60008769

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசை ஏன் மறுத்தேன்?' - 16 வயது மதுரை மாணவி யோகதர்ஷினி பேட்டி

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜல்லிக்கட்டு

 

படக்குறிப்பு,

யோகதர்ஷினி

"மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அவ்வாறே என்னைப் பாருங்கள். நான் ஒரு பெண் என்பதால் என்னை மட்டும் ஏன் தனியாக பார்க்கிறீர்கள்? அனைவருக்கும் பின்பற்றப்படும் விதிமுறைகளைத்தான் எனக்கும் பின்பற்றப்பட வேண்டும். பெண் பிள்ளை என்று என்னைத் தனித்துப் பார்க்க வேண்டாம்," என்று ஜல்லிக்கட்டில் தன் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷினி கூறுகிறார்.

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி. 16 வயதே ஆகும் இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக யோகதர்ஷிணி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளைகளைக் களமிறக்கி வருகிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 'வடமுகத்து கருப்பு' என்று பெயரிடப்பட்ட அவரது காளை பங்கேற்றது. காளை வாடிவாசலிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதும், மாணவி யோகதர்ஷினியின் காளையை இருவர் சேர்ந்து பிடித்தனர். இருவர் சேர்ந்து ஒரு காளையைப் பிடிப்பது விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காளையைப் பிடிமாடு என்று அறிவித்த ஒருங்கிணைப்புக் குழு, அந்த பரிசு விழா குழுவைச் சேரும் என்று அறிவித்தனர். மேலும் காளையைக் கட்டவிழ்த்த யோகதர்ஷிணிக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக விழா குழு தெரிவித்தது.

இதனை யோகதர்ஷிணி வேண்டாம் என்று நிராகரித்துச் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் இதே போன்று அறிவித்த பரிசை நிராகரித்தார்.

எங்கள் வீட்டில் பாரம்பரியமாக காளை வளர்க்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக நான் ஜல்லிக்கட்டுக்குக் காளையைக்‌ கொண்டு செல்கிறேன். அதேபோன்று இந்த ஆண்டும் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையை அழைத்துச் சென்றேன் என்று பிபிசி தமிழிடம் யோகதர்ஷினி தெரிவித்தார்.

"நான் அழைத்துச் சென்ற காளை புதியது. அது இதுவரை வாடிவாசலைப் பார்த்ததில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாகக் களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இருவர் காளையைக் கட்டியதால், பிடிமாடு என்று அறிவித்தனர். அப்போது அறிவித்த ஆறுதல் பரிசை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்," என்கிறார் அவர். முந்தைய ஆண்டுகளில் இவரது வேறு ஒரு காளை ஜல்லிக்கட்டில் நான்கு முறை வென்றுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டு, அதைத் தாம் மறுத்ததாகக் கூறுகிறார் மாணவி யோகதர்ஷினி.

"கடந்த ஆண்டு ஒருவர் காளையைப் பிடித்தார். அப்போது ஆறுதல் பரிசாகப் பட்டு சேலை வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தனர். அதனை வேண்டாம் என்று மறுத்தேன். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் இரண்டு பேர் காளையை பிடித்தும், அதைப் பிடிமாடு என்று அறிவித்தனர். இப்போதும் எனக்கு ஆறுதல் பரிசாக தங்கக் காசு வழங்குவதாக அறிவித்தனர். அதை வேண்டாம் கூறிவிட்டு வந்தேன்."

 

BBC

"ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் எந்த காளைகளும் அவை பிடிக்கப்பட்டால் ஆறுதல் பரிசு வழங்க மாட்டார்கள். காளை வென்றால் காளை உரிமையாளருக்கு பரிசு, காளை பிடிக்கப்பட்டால் வீரருக்கு பரிசு. இவைதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்துதான் மாட்டை அவிழ்க்கிறேன். இதில் நான் பெண் பிள்ளையாக மாட்டைக் கட்டவிழ்க்கிறேன், நான் துவண்டு விடக்கூடாது என்பதற்காக ஆறுதல் பரிசு அறிவித்தனர். எனக்கு அது வேண்டாம்.

எப்பொழுதும் போல மற்றவர்களுக்கு என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவை எனக்கும் பொருந்தும். அதே விதிமுறையை என்னிடமும் பின்பற்றுங்கள். என் மாடு வென்றால் பரிசை ஏற்கிறேன்," என்றார் அவர்.

தாம் ஒரு பெண்ணாக மாட்டை அவிழ்ப்பதால் மட்டுமே எனக்கு ஆறுதல் பரிசு அளிப்பதாக கூறுகிறார் யோகதர்ஷினி.

"என்னை மட்டும் ஏன் தனித்துப் பார்க்கிறீர்கள்? நானும் அனைவரையும் போல்தான் காளையை விடுகிறேன். என் காளை வென்றால் நான் வாங்கும் பரிசில் ஒரு நியாயம் உள்ளது, என் காளை பிடிமாடாக ஆகிவிட்டதால் எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்," எனத் தெரிவித்தார் யோகதர்ஷினி.

https://www.bbc.com/tamil/india-60021982

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.