Jump to content

பொங்கல் 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் 2022

எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த

செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன்

நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும்

நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி

தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப்

பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால்

மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில்

காயமெனும்  எமது காற்றடைத்த பையினிலே

உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம்

வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி

அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு

நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி

உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும்

விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும்

நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர் செய்ததைப் பின்

பற்றி இறைஞ்சுகிறோம் பாருலகு நன்மைபெற.

இற்றைக்கெம் வாழ்வை இருள்சூழ்ந்திருந்தாலும்

எற்றைக்கும் வாழோம் இழிந்து.

 

C:\Users\Karu\OneDrive\Desktop 

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/posts/10159775912671950?comment_id=10159779052766950&notif_id=1642155597814146&notif_t=feed_comment&ref=notif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அருமை karu .....கவிதையில் ஒரு பாரதியை காண்கின்றேன் ........!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2022 at 11:41, suvy said:

ஆஹா அருமை karu .....கவிதையில் ஒரு பாரதியை காண்கின்றேன் ........!  🌹

மிக்க நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/1/2022 at 12:46, karu said:

பொங்கல் 2022

எங்கிருந்தோ தோன்றி எம்மை உயிர்ப்பித்த

செங்கதிரே உன்றன் திருவருளைப் போற்றுகிறேன்

நீயின்றி நானில்லை நீயே எனை இயக்கும்

நேயப் பெருஞ்சக்தி நித்தியமாம் பொற்சோதி

தாயாய் இஞ்ஞாலத்தைத் தன்மகவாய் ஏற்று ஓளிப்

பாயத்தை எங்கும் பரவவிட்ட பேரருளால்

மாய வெளியினிலோர் மண்துகளாம் பூமிதனில்

காயமெனும்  எமது காற்றடைத்த பையினிலே

உள்ளம், உணர்வு, உயிர்ப்பெல்லாம் பெற்றுவிட்டோம்

வெள்ளமெனப் பொலியும் நின்னருளைக் கண்டுருகி

அன்பால் மகிழ்ந்து ஆரமுதப் பொங்கலிட்டு

நின்பால் எம் நன்றியினால் நேர்த்திக் கடன்செலுத்தி

உடலால் வயலுழுது உண்ணவும் பாலளிக்கும்

விடையையும் ஆவினையும் மேன்மையுறப் போற்றும்

நற்றமிழர் பண்பாட்டை நம்முன்னோர் செய்ததைப் பின்

பற்றி இறைஞ்சுகிறோம் பாருலகு நன்மைபெற.

இற்றைக்கெம் வாழ்வை இருள்சூழ்ந்திருந்தாலும்

எற்றைக்கும் வாழோம் இழிந்து.

 

C:\Users\Karu\OneDrive\Desktop 

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/posts/10159775912671950?comment_id=10159779052766950&notif_id=1642155597814146&notif_t=feed_comment&ref=notif

நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, theeya said:

மிகச் சிறப்பு 

மிக்க நன்றி தீயா.

On 18/1/2022 at 16:39, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்றிகள் தோழர்..💐

தங்கள் அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி தமிழ்த்தேசியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.