Jump to content

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு.

வட தமிழீழம் 

spacer.png

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன்,  தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக  பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில்  குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 

 

https://www.thaarakam.com/news/494a6b01-c486-46b8-8d48-469a727a0328

Link to comment
Share on other sites

முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை.  ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த  பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும்  கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம்.

2014ல் நான் கைது செய்யப்பட்டபோது  பயங்கரவாதத் தடைப்பிர் கையில்  புதைத்த தரப்பினர்   என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல்  கணக்கு வளக்குகள்  செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

முள்ளிவாய்காலில் சர்வதேச பிரிவினர் ஆவணங்களை புதைத்ததாக கேழ்விப்பட்டேன். கப்பல் வரவில்லை.  ஆனால் கஸ்றோவைவிட முக்கியமான பொறுப்பில் இருந்த  பொட்டம்மான் இறுதித் தருணத்தில் ஆவணங்கள் தொடர்பாக இராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாராம். அவர், போரில் தப்பிய போராளிகளின் ஆதரவாளர்களின் எதிர்காலம் பற்றிய மிகுந்த பொறுப்புணர்வுடன் தனது கட்டுப்பாடில் இருந்த ஏனைய அனைத்து ஆவணங்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும்  கேழ்விப்பட்டேன். போர் முடிந்ததுமே சில தொகுதி ஆவண புதையல்களை இராணுவம் கைபற்றியது. எஞ்சியவற்றுள் சில இப்ப கைபற்றபட்டிருக்கலாம்.

2014ல் நான் கைது செய்யப்பட்டபோது  பயங்கரவாதத் தடைப்பிர் கையில்  புதைத்த தரப்பினர்   என்னை எதிரியாக சித்தரித்த பதிவுகள் வெளிநாட்டில் இருந்துவந்த அத்தகைய சிடிக்கள் என்பவையே கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். கைப்பற்றப்பட்ட புதிய ஆவணங்களில் ஆசியா மற்றும் மேற்க்குநாட்டு கிளைகளின் வர்த்தகர்கள் பிரமுகர்களுடனான கொடுக்கல் வாங்கல்  கணக்கு வளக்குகள்  செயற்பாடுகள் பற்றிய சில ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு.  

இருக்கலாம்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு.

வட தமிழீழம் 

spacer.png

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

 மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன்,  தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக  பேரினவாத சிங்கள அரசுக்கான பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், நந்திக்கடல் களப்பு பகுதியில்  குறித்த ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 

 

https://www.thaarakam.com/news/494a6b01-c486-46b8-8d48-469a727a0328

ஆவணத்தை காணேல்ல.. கோல்சர் தான் தெரியுது.

அதென்னவோ.. மகிந்த மாமா.. பதவிக்கு வரேக்க மட்டும் மாதா மாதா இப்படி மீட்பு நடக்கும். பதவி உயர்வுக்கு நல்ல வழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி கவிழ்ப்பு என்கிற கதை அடிபடுகிறது. தாமே கதாநாயகர்கள், தம்மாலேயே நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியும் என்கிற ஒரு மாயை. அவ்வளவே......

 இனிமேல் இந்தப்பருப்பு வேகுமா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், புலிகளின் சொத்துக்களைக் காட்டிக்கொடுக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது. சிலவேளை சலுகைகளுக்காகவோ, அல்லது வேறு யாராவது தம்மைப் போட்டுக்குடுத்து விடுவார்களோ என்கிற பயத்தில் தாமே சொல்லிக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பில் வாழும் மக்கள் கூட்டம் இப்படி நடப்பதும் சாத்தியமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.