Jump to content

ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர்- மல்கம் ரஞ்சித்


Recommended Posts

ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர்- மல்கம் ரஞ்சித்

ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்க எவ்வாறு திட்டமிடப்பட்டது தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் எவ்வாறு தடுக்கப்பட்டனர் என்பது உட்பட பல விடயங்கள் விரைவில் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
Easter-Sunday-Attack-Bombings-1-300x150.
உண்மை வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டவன் உண்மையை வெளிப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சக்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்தே இதனை செய்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ரோ அமைப்பு வழங்கிய தகவல்களை சில உள்நோக்கம் கொண்ட சக்திகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்துள்ளன என்பதும் தெளிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுப்பதற்கு சில அதிகாரிகள் முயன்றார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பலவருடங்களாக நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன எரிகின்ற டயர்களிற்குள் மக்கள் வீசப்பட்டார்கள் என தெரிவித்துள்ள கர்தினால் தங்களின் இவ்வாறான நடவடிக்கைகள் எல்லா நாளும் சகித்துக்கொள்ளப்படும் என ஆட்சியாளர்கள் கருதுகின்றார்களா எனவும்; கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் அதனை ஆழமான புதைகுழிக்குள் தள்ளிவிட்டனர் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/160989

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.