Jump to content

சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-01-15 16:25:06

(செய்திப்பிரிவு)

 

ஆசிய கண்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக  இலங்கை இருப்பதாக உலக சுற்றுலா தாபனம் தெரிவித்துள்ளது. 

இது எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு கிடைத்த அங்கிகாரம் எக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை அதிகாரி கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த நாடு முழுமையாக திறக்கப்பட்டதன் பின்பு மூன்று மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடந்த 11 நாட்களில் மொத்தமாக 31,688 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22,771 காணப்பட்டதோடு நவம்பர் மாதம் 44,294 எண்ணிக்கையினரும் டிசம்பர் மாதம் அதன் எண்ணிக்கை 31,688 பதிவாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறைக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த 31,688 பயணிகளில்…. 31,000 பேர் புலம் பெயர் தேசத்திலிருந்து வந்திருப்பார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

வந்த 31,688 பயணிகளில்…. 31,000 பேர் புலம் பெயர் தேசத்திலிருந்து வந்திருப்பார்கள். 🤣

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?

முக நூல், யூ ரியூப்…. போன்றவற்றில் வரும் படங்களை பார்க்க,
வெளி நாட்டில் வாழுகின்ற, பெரும்பாலான  தமிழ்ச்சனம்   எல்லாம்,
ஊரிலை நிற்கிற மாதிரி தெரியுது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

முக நூல், யூ ரியூப்…. போன்றவற்றில் வரும் படங்களை பார்க்க,
வெளி நாட்டில் வாழுகின்ற, பெரும்பாலான  தமிழ்ச்சனம்   எல்லாம்,
ஊரிலை நிற்கிற மாதிரி தெரியுது. 😁

இருக்கலாம், அண்மையில் ஒரு ஆசிரியரோடு தொடர்புகொண்டபோது அவர் விடுமுறைக்கு தாயகம் செல்வதாக் கூறினார். இப்படி பலர் போயிருக்க வாய்ப்பள்ளது. ஒரு வாரம் போய்வருபவர்களே உள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nochchi said:

இருக்கலாம், அண்மையில் ஒரு ஆசிரியரோடு தொடர்புகொண்டபோது அவர் விடுமுறைக்கு தாயகம் செல்வதாக் கூறினார். இப்படி பலர் போயிருக்க வாய்ப்பள்ளது. ஒரு வாரம் போய்வருபவர்களே உள்ளார்கள்

அப்போ ...  அரசின் டொலர் பிரச்சனை பெரும்பாலும் தீர்ந்திடும் நம்ம தமிழ்ச்சனத்தால் என்று சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அப்போ ...  அரசின் டொலர் பிரச்சனை பெரும்பாலும் தீர்ந்திடும் நம்ம தமிழ்ச்சனத்தால் என்று சொல்லுங்கோ.

எங்கட ஆட்கள் உண்டியலில் அனுப்பி  செலவழிப்பினம், எப்படி டொலர் பிரச்சனை தீரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

எங்கட ஆட்கள் உண்டியலில் அனுப்பி  செலவழிப்பினம், எப்படி டொலர் பிரச்சனை தீரும்?

அநேகமான எங்கட ஆட்கள் பென்சன்காரர்கள். அன்றாடிகள். இவர்களால் அதிக பணத்தை உண்டியலில் அனுப்பி அனுபவிக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அநேகமான எங்கட ஆட்கள் பென்சன்காரர்கள். அன்றாடிகள். இவர்களால் அதிக பணத்தை உண்டியலில் அனுப்பி அனுபவிக்க முடியாது 

அண்ணா, இங்கிருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் உண்டியல் மூலம் அனுப்பி செல்வார்கள் அல்லது காசாக கொண்டு சென்று Black இல் மாற்றுவார்கள். இதனால் அரசிற்கு வருமானம் இல்லையே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அப்போ ...  அரசின் டொலர் பிரச்சனை பெரும்பாலும் தீர்ந்திடும் நம்ம தமிழ்ச்சனத்தால் என்று சொல்லுங்கோ.

 2009இன் முன் தென்பகுதியோடு நின்றவர்கள் வடபகுதிக்கும், அச்சத்தோடு இருந்தவர்களில் குறிப்பிட்ட அளவானவர்களும் பொருண்மிய உதவியை செய்துகொண்டே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அநேகமான எங்கட ஆட்கள் பென்சன்காரர்கள். அன்றாடிகள். இவர்களால் அதிக பணத்தை உண்டியலில் அனுப்பி அனுபவிக்க முடியாது 

அன்றாடிகள் என்றால் என்ன

Link to comment
Share on other sites

18 minutes ago, சுவைப்பிரியன் said:

அன்றாடிகள் என்றால் என்ன

அன்றாடம் உழைத்து உண்பவர்கள். சேமிப்பு இல்லாதவர்களாக இருக்குமென நினைக்கிறேன்.
எதுக்கும் விசுகண்ணாவிடம் அறிந்து விடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நாசமா போகவேண்டும் என்று முன்பொருகாலத்தில் எந்தவித குழப்பமுமின்றி ஆசைப்பட்டதுண்டு.

ஆனால் தற்போது தாயகத்தில் வெளிநாடுகளில் உறவுகளை கொண்டிருக்காத எம் ஏழ்மை நிலை மக்களை நினைக்கும்போதும் படித்துவிட்டு வேலையில்லாமல் பல்கி பெருகும் எம் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை நினைக்கும்போது,  அப்படி எண்ண தோன்றவில்லை.

வறுமைகோட்டின்கீழ் வாழும் எம் மக்களை இலங்கை பொருளாதாரம் பணவீக்கம்  ஒரு பக்கம் தாக்க , இருப்பதை கொண்டு வாழ முற்படுகிறவர்களை வெளிநாட்டு பணம் பண்டல் பண்டலா வைத்திருப்பவர்கள் மறு பக்கத்தால் தாக்குகிறார்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

வசதிபடைத்த நம்மவர்கள் கடைக்கு போனால் காசு திமிரில் கிடைக்கும் பொருட்களை விலைபற்றி கேட்காமலே அள்ளி செல்கிறார்களாம், மீன் வாங்கபோனால் கூடையோடு வாங்குகிறார்களாம்.

போதாக்குறைக்கு இதுபோன்ற இணையவழி மூலம்...

https://www.hi2world.com/

 

இங்கிருந்தே பொருட்களை பெருமளவில் கொள்வனவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி பால்மா உட்பட்ட சில பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்களாம்.

கால் கிலோ அரைகிலோ நூறு கிராம் வாங்கும் மக்கள் வசதிபடைத்த எம்மவர்கள் ஏற்படுத்தும் செயற்கை தட்டுப்பாட்டால் ஏக்க பெருமூச்சுடன் கடந்து செல்கிறார்களாம்.

இலங்கை பொருளாதாரத்தின் நெருக்கடிஎல்லோருக்கும் பெய்யும் மழைபோல எம்மவர்களையும் சேர்த்து தாக்கும்போது ஒரு பக்கம் சிங்கள தேசம் சரிவை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியாக இருந்தாலும் மறு பக்கம் அதனை நினைத்து ஒட்டுமொத்தமாக சந்தோஷபட முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அன்றாடிகள் என்றால் என்ன

அன்றாட காய்ச்சிகள் என்ற பதத்தின் வெளிப்பாடு. மாதத்தின் முடிவில் பூச்சியம் ஆகும் நிலை இந்த பென்சன்காரர்களுக்கு உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றன்று வரும் உழைப்பைக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். வேலைக்கு போனாலே அன்று வீட்டில்  உலை கொதிக்கும் எனும் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொண்டுவரும் டொலரை குறிப்பிட்ட அளவுக்குமேல் கொண்டு வந்ததாக பறிமுதல் செய்ய வாய்ப்புண்டு.   தங்கள் வங்கிகளிலேயே பணம்  மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுள்ளது. இது கொஞ்சம் கஷ்ரமான காரியம்தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.