Jump to content

ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது

ShanaJanuary 16, 2022
 

AVvXsEh9SzOq3yCta4AqIE6W7UYtH8O6CeYq-95oCWebo1sExwddb4NQWo7brElo9BEV9VmTUMcqUZubZpsZTQNKB3dPN3YoFey87KysEakujVcTc_QHEwoSjwT0BdAtuiJmmAKrCDSBmOSKqv2rereet9rwQnTQlSkTOL767zdwXibybmdQ1YKA3451T_o3Pw=s16000

(ரூத் ருத்ரா)

ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று வாகரை குஞ்சங் கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இன்று நடைபெற்றது.

  ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் பங்கு கொண்டு தங்களது கலாச்சார ரீதியில் மண் பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதன்போது சிறுவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்று போட்டி நிகழ்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 

நீண்ட காலத்திற்குப் பின்னர் மேற்படி கிராம மக்கள் இவ் பொங்கல் விழாவினை மகிழ்சியுடன் கொண்டாடினார்கள். குறித்த நிகழ்வினை லவன் உதவும் கரங்கள் நற்பணி மண்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் குருசுமுத்து வி.லவன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது ஆதிவாசிகள் எமது இனத்தின் மூத்த தமிழ் குடிமக்களாகும். இப் பகுதிகளில் இருந்து 3000 வருடங்களுக்கு முன்பு மன்னர் காலத்தின் அரச படைகளில் போர் வீராகளாக இருந்துள்ளனர்.

 

அப்போது அவர்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அவர்களின் மரணத்திற்கு பின்னர் மரணித்த போர் வீரர்களது உடலுடன் முதுமக்கள் காழிகளாகவும் ,நடுகை கற்கள், பண்பாடுகளாகவும் இன்று கூறப்படும் தொல் பொருட்களாகவும் இறுதி எச்சங்களாகும் இன்று காணப்படுகிறது. எனவே இவர்கள் எம்மவர்களால் போற்றப்படவேண்டும் இவர்களது காலச்சாரங்களும் பண்பாடுகளும் எம்மால் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.

 

AVvXsEgMZuB_JGYx___hc66b6t1q5gspGiYBGKjBcy6JejKG6iDwHgdkJcXf_8cFO96_UUMgkyUSYOFAGy2pGEU9x1Z97j38Ghvi3u-XHJKTcvHlB8ZSHJ9gvaJh3VVE2aJqiaXlsxeJcV6jLDWDTvI4xF6Lg1p7xoZXKjWE_N65IZeHt4Tfo4EoJgtQEweLng=s16000

 

AVvXsEiD3HrhxSdy9GFIkO3-3jOUXJ944pGcbAMP9acfFtdhyG3VVkTTI42px3DbLckz3ZSvCOQXiTM_5VsZlnFCyLZsb7zXQ96M9C7Ibsb_ZlmWOzQ5ZLWdP5AzgmZxr-hJPR8EuDNh0xUaeJ3UWWTgJ0T0h8i7wat89d3tfMELXtJgBQT5GB7c644YUivsUQ=s16000

 

AVvXsEhd9SCkMDmdLBD58nkBScjiiH5B1WVgVsdojHjZsGS16ovErLA76UM1bBZOHMNglcT1QdQq4VwGx0REJr4TnuEJYY0FLY40qorOdVJKd0VFJu3E2J9027hQxlQ83qXoYp3jKKNAj-5Uzio76vU7bL3St0jD-begN0mn7M4qTpQQYd_yfg4hRDj2uwqQrA=s16000

 

AVvXsEhSyicBFnhB76tpixf9y9TvpmaclAy3LkeKt4BFrRIeQUwGUTcGY6fbIYL-Bjyd2cBsbcnTxBkfU_ExpIC1bz-1K1PHFrywSffx71oOPYcdhDBGeM8iReDtuF2jq1BYTmcUX5shgeRN_FcCH-29y89qcggkLgkAnhkQLZ1Ax9dFVnPtXQcYdkDvyBna_w=s16000

 

AVvXsEgKSz-LvKmbDZfkKHAxeY1-k3_1QqPIPBN169975qPZL66J5yxaKIpbLL6f27DNM_fyPaYY9eq9MyjfGsaV2wKW21JQz2-D2kG_X7HlgSdGJXmATVOWoPFoDQIpWTPuM95O9ikRrX306IX3wnm9jekjRj3r3zscw3-KwV9dPYz-QrCztnutcAtCEgQDfw=s16000

 

AVvXsEjE_5Vgy5C3_muVmcHeQeBPZPpuLgQ-QHi6r3bpyCZBfEnmbOHdhiBlk2jKKIIV1yIZs_4C--tZeYYyWYfKRPv7jW18YVcuuhgYI7f1P_6H2BrZNiaAKeHB7cTTjXaIUqA-UUJ8QY6alWY1TN5givdTMdxb1JjotYqs8g9nz3EmzGLfyUvYKoWYUW8B6w=s16000

 

AVvXsEinX5YJy-CM3U5SDtLIIbzyELWcBhvWjOh2LB_pQbioMWBbhVAQNd-nJo1J4vbU0k3fqyiE9AgONJOB0QsJQsmY2iwa5lR3Pw8bfg1JQNrpRB6oO0y1uMoHNblKmnfb6lEcHKdmYYSDcrpcTtVqMQc0L556tHEIY5qeZafYY-j7fVcvJBKx69_64Y1rCg=s16000

 

AVvXsEi3xGVSeqmu3MXx_v1a9EWvBXBo4ASBzWBb9qPG-gu7jibhoz2pMuKbr13po8w_nUOAuE1RblL5rS7eMTB0_lAoFqKQ6FgFe3UxWFy8FKzK7Vf7ILQTo_Of1XhMxJi-_HsjI5HLtcu1cTQL0BcJ0TbgBctvpc1qExqZOdmQuwtQIZjXCKL4Afj2ShZQ8A=s16000

 

AVvXsEgr3Z9VELUXvTBZnegYkIThOWq9QmUZ69W9HMuf9ZaZjA9oTFx5hbUNEJhMDxzKyFA8YOPPMxrF2MD95G5IrwDRydQzKc_3pSUzEOuv4doX-J8Giu3JYfjbfn8J4aGKy6pymMQGytiT-qfxM9p1CQkxujIrlFSakBSjdRRnDNiXJVIlsey6TkhOC4WrZQ=s16000
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆதிவாசிகளோ .........எங்கன்ட அவுஸ்ரேலியா பூர்வீக குடிகள் மாதிரி இருக்கினம் ....டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்பவர்களும் முன்பு இங்கிருந்து போய் தமிழ் பேசினார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆசிவாசிகளை மகிந்தர் கூட்டி வைச்சுக் கொண்டாடினாரு..இப்ப என்னாச்சு.. இங்கால சேர்ந்திருக்காங்க. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.